.

திங்கள், டிசம்பர் 28, 2020

தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்

stalin invites suggestions from people for DMK manifesto 2021
டந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மக்களிடம் கேட்டிருந்தார் தி.மு.க., தலைவர்.
 
கடந்த முறை எழுதி அனுப்பியதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பிருந்ததால் இந்த முறையும் அனைத்துத் தரப்புத் தமிழ் மக்கள் சார்பாகவும் நான் சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளேன். வழக்கம் போல் இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல, இந்திய அரசின் புதிய வேளாண் சட்டம் போன்ற வல்லாதிக்கச் சட்டங்களைத் தவிடுபொடியாக்கி மக்களைக் காப்பதற்கான அதிரடித் திட்டங்கள்! சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள்! படித்துப் பாருங்கள்! உங்கள் ஆதரவைத் தாருங்கள்!

வெள்ளி, நவம்பர் 27, 2020

தமிழினத் தெய்வங்களே! - மாவீரர் திருநாள் அஞ்சலிப் பா

 Great Heroes' Day

இனம் காக்க
உயிர் ஈந்த
பெருந்தகைகளே!

உங்களுக்கு
நினைவொளி ஏற்றுவதில்
பிறவிப் பயன் எய்தும்
எம் இரு கைகளே!

வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைக்
கடவுளாகப் போற்றுவதுதான்
தமிழர் மதம்!

எனவே
தியாகிகள் என்பதல்ல
தெய்வங்கள் என்பதே
உங்களுக்குத் 
பொருத்தமான பதம்!

உலகத்தையே 
திரட்டி வந்து
உங்களைத் தோற்கடித்து விட்டதாய்
இறுமாப்பு கொண்டிருக்கிறது சிங்களம்

உலகமே
திரண்டு வந்ததால்தான்
வெல்ல இயன்றதென
சாவிலும் நீங்கள் படைத்த வரலாறு
அவர்களுக்குப் புரிவது எங்ஙனம்!

மக்களுக்காக
உயிர் வாழ்ந்தவர்கள்
உயிர் விட்டவர்கள்

இவர்கள்தாம்
தமிழ்க் குடும்பங்களின்
குலத் தெய்வங்கள்

அப்படியானால்
ஒட்டுமொத்த இனத்துக்காகவும்
உயிர் விட்ட நீங்கள்
எங்கள்
இனத் தெய்வங்கள் அல்லவா?...

இனி
கார்த்திகைதோறும்
ஒளிரும் விளக்குகள்

முருகனுக்காக மட்டுமல்ல
உங்களுக்காக
என்று தனியாய்ச்
சொல்லவா?

(நான் நவம்பர்27.நெட் இணையத்தளத்தில் 17.11.2011 அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்)

படம்: நன்றி உதயன்.

புதன், அக்டோபர் 21, 2020

வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்

போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக.

உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா?

ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன?

இது தமிழின் குறைபாடா இல்லையா?

இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு.

Tamil is not an worthless language! - counterlow for a linguistic maniac

என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப்படி எதிரடி அடித்தாலும், “எல்லா மொழிகளிலும் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் தமிழில் இல்லாதது ஒரு குறைதானே?” எனும் எண்ணம் நம்மவர்களுக்கே இங்கு இருக்கிறது என்பது உண்மையே!


அதுவும் அண்மைக்காலமாக இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழையும் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளில் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் நம் தாய்மொழியில் மட்டும் ஏன் இல்லை எனத் தோன்றத்தான் செய்யும். அதற்கு விடையளிக்க வேண்டியது நம் கடமை என்பதால் மட்டுமில்லை உண்மையில் இதற்கான விளக்கம் மிகச் சுவையானது! தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது! எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! பார்ப்போமா?
 

வியாழன், அக்டோபர் 08, 2020

Hathras Case: Not a Sexual Harassment but Genocide! - A Request to Indian Media

பட்டியலினப் பெண்ணாக வாழ்வது எளிதில்லை

No human with a heart will ever sleep after hearing the news of this Gang-rape in Hathras, Uttar Pradesh. A young girl was brutally gang-raped, her tongue was cut to stop her from exposing the real faces of the animals.

The reports are choking brutal for anyone to read. She was reported with a broken neck and a broken spinal cord. Before the subcontinent's tears disappear, we were suffocated with another two tragic rape cases in the very same state of Uttar Pradesh. It makes us wonder whether the state of Uttar Pradesh is habitable for Humans.

What's more pathetic is the way the State Govt of UP handles this particular case.

  • The corpse of the innocent girl was burnt right after the autopsy by the state police.
  • Access to the body was denied to the family, and cremation was over without a proper ritual for their beloved child.
  • Those humans who fight was justice are arrested, no media or leaders were allowed to meet the family, and they were all forcefully denied permission explicitly to meet the victim's family.
  • Over and above, it is reported the District collector was allegedly threatening the victim's father to re-phrase their statement against the culprits.

After seeing these incidents subsequently, any rational man would guess the entire Govt of UP and its executors are in favour of the accused than the victim's side.

It is quite common to assume people with power and influence involved in sexual crimes and the concerned govt covers them from being guilty. But all those were usually personal vendetta of some ruthless creatures that are exceptions from the whole system.But this time, its not one other story to cross by.

திங்கள், செப்டம்பர் 14, 2020

உயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய இளவல்களே! – இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள்!

Three students committed suicide due to NEET Examination
யிரை மாய்த்துக் கொண்ட என் இனிய தம்பிகளே, தங்கையே!

என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
என்ன முடிவு இது?
இதனால் நீங்கள் சாதித்தது என்ன?

இதோ உங்களைப் படாத பாடுபட்டுப் பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரைத் துடித்துத் துடித்துக் காலமெல்லாம் கண்ணீர் விடும்படி செய்திருக்கிறீர்கள். இதைத் தவிர நீங்கள் இந்தத் தற்கொலையால் வென்றது என்ன?

நீங்கள் மூன்று பேர் உயிர் விட்டு விட்டதால் இந்திய அரசு இனி மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வே (NEET) வேண்டா என நிறுத்தி விடப் போகிறதா?...

மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போர்க்கொடி உயர்த்தி நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றப் புது வழி கண்டு விடப் போகிறதா?...

உச்சநீதிமன்றம் தானாக வழக்கெடுத்து இப்படி மாணவர்களின் உயிரையே காவு வாங்கும் அளவுக்குக் கொடுமையான ஒரு தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பி விடப் போகிறதா?...

இப்படி எந்த ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. மாறாக, நடக்கப் போவதெல்லாம் என்னென்ன தெரியுமா?

உயிரின் மதிப்பு தெரியாத கோழைகள் என உங்களை உலகம் தூற்றப் போகிறது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்கள் என உங்கள் பெற்றோரைப் பழிக்கப் போகிறது. ஆம்! எந்தப் பெற்றோர் உங்கள் தேர்வுத் தோல்வியால் தலைகுனிந்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ அதே பெற்றோர் காலமெல்லாம் தலைகுனிந்து நிற்கத்தான் உங்களுடைய இந்த முடிவு வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமா?

“மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் வெல்லத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால்தான் அங்கு தொடர்ச்சியாக இத்தனை மாணவத் தற்கொலைகள்” என நாட்டின் மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன. நாட்டுக்கே மருத்துவத் தலைநகரமாய் விளங்கும் இம்மண்ணைப் பார்த்து அடிப்படை அளவில் கூட மருத்துவத்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் இப்படி ஏளனமாகச் சிரிக்கத்தான் உங்கள் தற்கொலை உதவியிருக்கிறது.

இது மட்டுமில்லை, “பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால் சாவதே மேல்” என்கிற ஒரு தவறான எடுத்துக்காட்டை நீங்கள் இதன் மூலம் முன்வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் மட்டுமின்றி இனி கலை, அறிவியல் என எல்லாப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எனச் சட்டம் வந்துவிட்ட நிலையில் உங்களுடைய இந்த முடிவு எத்தனை பேரைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

இப்படி நீங்களும் செத்து, பிறரையும் சாகத் தூண்டி, பெற்றோரையும் நடைபிணமாக்கி, பிறந்த மண்ணுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய உங்கள் தற்கொலை முடிவு சரியா? இதனால் யாருக்கு என்ன பயன்?

மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்பதால் உயிரையே அழித்துக் கொள்ளத் துணிந்த நீங்கள் அதே துணிச்சலுடன் இந்தக் கேடு கெட்ட தேர்வுமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருந்தால் அது பயனுள்ளதாய் இருந்திருக்கும்.

“ஒரு பாடத்திட்டத்தில் படித்த நான் வேறு பாடத்திட்டத்தில் அமைந்த தேர்வில் ஏனடா என் திறமையை உறுதிப்படுத்த வேண்டும்?” என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தால் அஃது உங்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

ஒருவேளை இப்படிப் போராடவெல்லாம் உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் மருத்துவக் கனவைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு துறையில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகப் பெரிய அளவில் சாதித்து மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்க முடியும்.

அப்படிப் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும் சராசரியாக எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட மருத்துவக் கனவில் தோல்யுற்றும் துவண்டு போகாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட தன்னம்பிக்கைச் சின்னமாக மற்றவர்களுக்கு நீங்கள் திகழ்ந்திருக்க இயலும்.

இப்படி எதையுமே செய்யாமல் வெறுமே உயிரைப் போக்கிக் கொண்டதன் மூலம் நீங்கள் நம் எதிரிகளுக்குத்தான் உதவி செய்திருக்கிறீர்கள், தெரியுமா?

நாட்டிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் நிறைந்தது நம் தமிழ்நாடு. நம் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப் பணத்தில் உருவான இந்த வளத்தை மற்ற மாநிலத்தவர்களுக்கு அலுங்காமல் அள்ளிக் கொடுப்பதற்குத்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு எனும் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்திய அரசு. இப்பேர்ப்பட்ட பகல் கொள்ளைக்கு எதிராகத் திமிறி எழ வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக இப்படிச் செத்து மடிந்தால், மாணவர்களே அது யாருக்கு ஆதாயம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே அன்பிற்கினிய என் தமிழ் உடன்பிறப்புகளே! உங்களை நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

எதற்காகவும் உயிரை மட்டும் விட்டுவிடாதீர்கள்!🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்கள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! அதுவே வெற்றிதான்! மாறாக, உங்கள் உயிரை உரமாக்கித் தமிழ்ப் பகைவர்களை வெற்றி அடையச் செய்யாதீர்கள்!

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

என் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்

Your E.Bhu.Gnaanapragaasan in YourQuote
லகத் தமிழ் உள்ளங்களே!

எப்படி இருக்கிறீர்கள் அனைவரும்?

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா?

இந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆம்! நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்! 💗

நிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம்! வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம்! அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.

இனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி நம் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம்.  ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.

இப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்! நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்!

இதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு! 👇

வியாழன், ஜூன் 11, 2020

அற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்! | #StandwithArputhamAmmal

#StandwithArputhamAmmal

தீர்ப்பு தவறென்று முறையிட வந்த பெண்ணுக்கு நீதியும் வழங்கி, தவறான தீர்ப்புக்கு வருந்தி மன்னன் தன் உயிரையும் விட்ட இதே கண்ணகி மண்ணில்தான் தன் மகனுக்கு அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புக்கு நீதி வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாய்ப் போராடி வருகிறார் இந்த ஈகத் தாய்



எந்தச் சட்டத்தின் கீழ் அந்த வாக்குமூலம் பெறப்பட்டதோ அந்தச் சட்டமே தவறு என்று திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது அரசு!...

தவறான சட்டத்தின் கீழ் கைது செய்து... பொய்யான வாக்குமூலத்தைப் பதிவு செய்து... பொருந்தாத குற்றச்சாட்டின்படி தண்டனை அளித்து... எத்தனை கொடுமைகள்!!!

இவ்வளவுக்கும் பின்னர் உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும் இவர்களை விடுவிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம் இல்லையா?

அந்தத் தாய் கேட்பதெல்லாம் என்ன? தன் கடைசி காலத்திலாவது சில ஆண்டுகள் மகனுடன் வாழ வேண்டும் என்பதுதானே? இத்தனை கொடுமைகளுக்கும் மாற்றாக இதையாவது செய்யக்கூடாதா இந்த அரசு?

பி.கு.: முப்பது ஆண்டுகளாகத் தன் மகனின் விடுதலைக்காகப் போராடி வரும் அற்புதம் அம்மாள் அவர்களின் குரலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் #StandWithArputhamAmmal எனும் சிட்டையின் கீழ் இன்று மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தமிழர் போராட்ட அமைப்பான மே பதினேழு இயக்கம் விடுத்த அழைப்புக்காக என் சிறிய பங்கு இது! 👆

படம்: நன்றி துவிட்டர்.

தொடர்புடைய பதிவு:

திங்கள், மே 18, 2020

பதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்

May-18-Tamil-genocide-day
மிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!

ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!

கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.

இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.

செவ்வாய், மே 05, 2020

ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு

Zha is in Danger because of the arbitrary decision of Unicode Consortium

மிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.

அப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)!

உண்மையாகத்தான் சொல்கிறேன் நண்பர்களே! இதோ கீழே பாருங்கள்!

திங்கள், ஏப்ரல் 27, 2020

ஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’


Seventh Birthday of Aga Sivappu Thamizh

நேசத் தமிழ் நெஞ்சங்களே!

இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!!

இந்தக் கொலைகார நோய் ஒழிய வேண்டும்! பூமியின் எந்த மூலையிலும் ஒற்றைத் தீநுண்மி (virus) கூட மிச்சமில்லாமல் இது அழிய வேண்டும்! வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பமோ மாறாப் புகழ் கொண்ட மரபு மருத்துவமோ ஏதாவது ஒன்று இதைச் சாதித்தே தீரும் எனும் நன்னம்பிக்கையுடன் இந்தப் பிறந்தநாள் பதிவைத் துவக்குகிறேன்.

முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்த ஏழு ஆண்டுகளில் எழுதப்பட்ட பதிவுகள், கருத்துக்கள், பார்வைகள், அகத்தினர்கள் (followers) எண்ணிக்கை பின்வருமாறு:

காலக்கட்டம்
பதிவுகள்
கருத்துகள்*
பார்வைகள்
அகத்தினர்கள்**
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
ஏப்ரல் 2019 -
ஏப்ரல் 2020
18
103
28298
17
மொத்தம்
143
1628
3,37,863+
2026
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.


தளத்தை அதிகம் படிக்கும் நாடுகள்:

நாடுகள்
பக்கக்காட்சிகள்
இந்தியா
138000
அமெரிக்கா
90400
இரசியா
14700
அறியப்படாத பகுதி
11900
பிரான்சு
8930
வழக்கமாக, புள்ளிவிவரங்களுக்குப் பின் அந்த ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடுவேன். ஆனால் முந்தைய ஆண்டில் அதிகப் பார்வைகளைப் பெற்ற அதே பதிவுகள்தாம் கடந்த ஆண்டும் முன்னணி வகித்திருக்கின்றன. தரநிலைதான் கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக மாறியிருக்கிறதே தவிர புதிதாக எந்தப் பதிவும் அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பதால் நேராக அடுத்த பகுதிக்குத் தாவுகிறேன்.


நினைவகத்தில் சில நிகழ்வுகள்

Some Events in my Memory
கடந்த ஆண்டின் பதிவுகளிலேயே முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்தது தாய்மொழி –சிறுகதை. பெரியவர்களுக்கான என் கதைகளில் முதன் முதலில் வெளியானது இதுதான். 24.10.2016 அன்று திண்ணை இதழில் வெளிவந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் இந்தித் திணிப்பை எதிர்த்து துவிட்டரில் #StopHindiImposition எனும் சிட்டை (tag) பெரும் சூறாவளியாய்ப் பரவியபொழுது அதுதான் சமயம் என்று இந்தக் கதையை வலைப்பூவில் வெளியிட்டு, குறிப்பிட்ட சிட்டையில் பகிர்ந்தேன். நல்ல வரவேற்பு!

தோழர்களும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். தவிர, நண்பரும் உறவினருமான சியாம் சுந்தர் அவர்கள் தன் நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து பலரும் தொடர்ந்து பாராட்டியபடி இருப்பதாகத் தெரிவித்தார். யாரிடம் இது சென்றடைய வேண்டும் என த்தனை நாள் காத்திருந்தேனோ அந்த இளைய தலைமுறையிடம் ஓரளவாவது கதை சென்று சேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.

முதன் முறையாகக் கடந்த ஆண்டு பகடிக் காணொலி (troll video) ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் எனும் தலைப்பிலான இந்தப் பகடி, நாட்டின் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவின் பொருட்டு ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட அறச்சீற்றத்தைத் தணித்துக் கொள்ள உதவியது. இதற்காக நான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப விதயங்கள் சுவையானவை என்பதால் எந்த வரவேற்பும் கிடைக்காவிட்டாலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பதிவுகளில் இதுவும் ஒன்று.


கடந்த ஆண்டுப் பதிவுகள் பலவற்றின் இறுதியில் தினச்செய்தி நாளிதழில் வெளியானது என்ற குறிப்பைப் பார்த்திருப்பீர்கள். என்னதான் இணையத்தில் விருப்பக்குறிகளும் பாராட்டுகளும் சுவைத்தாலும் அச்சு ஊடகத்தில் அதுவும் நாளிதழில் நம் படைப்புகளைப் பார்ப்பது தனி உணர்வுதான் நண்பர்களே! என்னை விட எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் நம் பதிவுலகில் இருக்கிறீர்கள். நான் பெற்ற அந்த இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

தினச்செய்திக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்! படிப்போர் (வாசகர்) பகுதிதான் என்றாலும் பார்க்க அப்படி இருக்காது. நடுப் பக்கத்தில், அதுவும் அறிஞர்கள், புகழாளர்கள் படைப்புகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்தும் இடம்பெறும். அது மட்டுமில்லை, மாநகரின் முக்கிய பகுதிகளில் உங்கள் கட்டுரை பற்றிய அறிவிப்பை உங்கள் பெயர் மற்றும் படத்துடன் சுவரொட்டியாக ஒட்டுவார்கள்! தவிர வெகுமதியும் உண்டு! அனுப்ப: editorial@dinacheithi.com.

தமிழர் வரலாற்றிலேயே மிகவும் பொன்னான ஆண்டு கடந்த 2019. காரணம் கீழடி! ஒரே நாளில் சங்கக் காலத்தின் தொன்மையை முந்நூறு ஆண்டுகள் முன்தள்ளி வைத்தன கடந்த ஆண்டு வெளிவந்த கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். உலகத் தமிழர்கள் அனைவரும் பெருங்களிப்பில் வான்முட்ட எகிறிக் குதிக்க வேண்டிய தறுவாய் அது. ஆனால் அப்பொழுதும் நம் மக்கள் திராவிட–தமிழ்த் தேசியச் சண்டையிட்டது சொற்களைத் தோற்கடிக்கும் வேதனையின் உச்சம்.

அந்தச் சர்ச்சையை முடித்து வைப்பது கண்டிப்பாக என்னால் முடியக் கூடியது இல்லை என்றாலும் எத்தனையோ கோடித் தமிழ் மக்களில் எங்கேயாவது யாரேனும் ஒருவரையாவது தொடட்டுமே எனும் எண்ணத்தில் கீழடி!– தமிழ் நாகரிகமா, திராவிடநாகரிகமா? எனும் கட்டுரையை எழுதினேன். எழுதியவன் மட்டும்தான் நான். ஆனால் முடித்த பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுதினால் இன்றைய தமிழ் அரசியல் சூழலில் இதற்கான எதிர்ப்பு எப்படி இருக்குமோ என நான் பெரிதும் தயங்கிய பொழுது எனக்கு இணையில்லாத் தெம்பூட்டி அதைத் தன் நாளிதழில் வெளியிட்டுத் தந்தவர் கனிவுமிகு மாமனிதரான தினச்செய்தி ஆசிரியர் இரியாசு அகமது அவர்கள்.

பின்னர் வலைப்பூவில் வெளியிட்ட பிறகும் இது பெரிய வெற்றி பெற்றது. துவிட்டர் தி.மு.க-வினர் அளித்த ஆதரவு அதற்கு இன்றியமையாக் காரணம் என்பதையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விடப் பதிவுலகில் கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்ததிலேயே மிக மிக முக்கியமானது பதிவுலகப் பெருமக்களின் நேசம்! ❤ ❤

கடந்த ஆண்டு நான் அமேசானின் கிண்டில் நடத்திய பென் டூ பப்ளிசு 2019 போட்டியில் கலந்து கொண்டு 13ஆம் உலகில் ஒரு காதல் எனும் புதினத்தை எழுதியிருந்தேன். அன்பிற்கினிய பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் என் நூலைப் படித்துப் பார்த்து அது பற்றி வலைப்பதிவும் எழுதியது கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன். என் முதல் நூலுக்குக் கிடைத்த முதல் மதிப்புரையாக (விமர்சனம்) அஃது அமைந்தது!

அதில் அவர் நூலைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் நான் அளவிலா நன்றிக்கடன் பட்டுள்ளேன். மாபெரும் தமிழ்த் தொண்டர்களையும் பேரறிஞர்களையும் பற்றித் தொடர்ந்து தன் வலைப்பூவில் எழுதி வந்தவர் மதிப்புரையின் இறுதியில் என்னையும் அறிமுகப்படுத்தி அதே பாணியில் எழுதியது எனக்குக் கிடைத்த பெரும் பேறு!

அந்தப் பதிவிலும், புதினத்தைப் படிக்க வருமாறு அழைத்து நான் இங்கு எழுதிய பதிவிலும் கருத்துரைப் பகுதியில் பதிவுலகத் தோழர்கள் எனக்கு அளித்த பாராட்டும் வாழ்த்தும் ஊக்கமும் என்னை உண்மையில் திக்குமுக்காடச் செய்து விட்டன. குறிப்பாக ஜோதிஜி அவர்கள் அளித்த பாராட்டெல்லாம் மறதி நோயே (amnesia) வந்தாலும் என்னால் மறக்க இயலாதவை! அன்புமிகுந்த அந்தப் பதிவுலக அன்பர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிரம்பித் ததும்பும் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்!

Wishes from blogger friends for my novel release

அடுத்து, பதிவுலகின் சிகரப்புகழ்ப் பதிவர்களில் ஒருவரும் சீரிய சிந்தனையாளருமான மது கஸ்தூரிரங்கன் அவர்களும் கதையைப் படித்து விட்டுத் தனக்கே உரிய பாணியில் அமர்க்களமான ஒரு திறனாய்வை வழங்கினார். வெறும் பாராட்டு மட்டுமின்றி நூலின் நிறைகள் குறைகள் என இரண்டையும் எடுத்துக்காட்டும் நல்லதொரு திறனாய்வாக அஃது இருந்தது. மது அவர்கள் எப்பேர்ப்பட்ட படிப்பாளி என்பதை நானறிவேன். அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது எனக்குக் கிடைத்த சிறந்த ஏற்பிசைவு (recognition).

ஆனால் அதை நான் உரிய நேரத்தில் பார்க்கத் தவறி, அளவு கடந்த தாமதமாகக் கடந்த வாரம்தான் பார்த்தேன். அதுவும் அவரே தெரிவித்த பிறகு. மிகவும் வெட்கமாகி விட்டது. அதனால் இந்த ஆண்டிலிருந்தாவது உங்கள் எல்லார் வலைப்பூக்களுக்கும் தவறாமல் வந்து விட உறுதி பூண்டுள்ளேன்!

கடந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகள் தொடர்பாகவும் பதிவுலகம் தொடர்பாகவும் நடந்த முக்கிய நிகழ்வுகளைத்தாம் இங்கே எழுதி வருகிறேன் என்றாலும் ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ நூலுக்குத் தேமொழி அவர்கள் தந்த மதிப்புரையையும் இதே தளத்தில் நான் வெளியிட்டிருந்தேன் எனும் வகையில் அதையும் இங்கே குறிப்பிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.

தமிழறிஞர்கள் மட்டத்தில் பெரும் புகழ் பெற்ற மடலாடற்குழுவான மின்தமிழின் உறுப்பினரும் எழுத்தாளருமான தேமொழி அவர்கள் என் புதினத்துக்கு அளித்திருந்த மதிப்புரை என்றென்றும் நான் நன்றியுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. கதையின் போக்கு, கதைமாந்தர்களின் குணநலன், உரையாடல், காட்சி அமைப்பு என நூலை எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி அவர் வழங்கியிருந்தது தரமான துறைசார் (professional) திறனாய்வு! அவர் அதில் என்னைப் பற்றி எழுதியிருந்த வரிகளுக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும் என்பது உறுதி! தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்துருகும் நன்றி!

இவ்வரிசையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு பதிவு, கடந்த மாதம் எழுதிய “மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? எனும் கட்டுரை. வெகுநாட்களாக நான் உள்ளத்தில் மட்டுமே வடித்து வைத்திருந்த இக்கட்டுரையைக் காதல் இணையர் இளமதி-செல்வன் பிரிக்கப்பட்டதை ஒட்டி எழுத்தாக்கினேன். காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுவது சங்கக் காலத்திலிருந்தே தமிழ் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறைதான் என வரலாற்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். கூடவே தூய்மையான சாதி உதிரம் என்பது இங்கு யார் உடம்பிலும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதையும் ஏரணத்துடன் (logic) விளக்கியிருந்தேன்.

ஆனால் இதைப் படிக்கக் கூடச் செய்யாமல் பேசுபுக்கில் சாதி வெறியர்கள் என்னைக் கழுவி ஊற்ற, மறுகையாக (பதிலுக்கு) என் தோழர்கள் அவர்களை வதக்கி எடுக்க, என் பேசுபுக்கு காலக்கோடு கலவரமானது. அதே நேரம், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களிடமும் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர்களிடமும் இக்கட்டுரை சிறந்த பாராட்டுக்களைப் பெறத் தவறவில்லை.

கடந்த ஆண்டின் பதிவுலகத் துயரம் ‘தமிழ்மணம்’ தன் சேவையை முற்றிலுமாக நிறுத்தியதுதான். தமிழ்ப் பதிவுலகுக்கே ஒரு பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ்மணம் திரட்டி, மாறி வரும் காலச் சூழல் காரணமாக ஏப்ரல் 2017-18 காலக்கட்டத்திலேயே தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தி விட்டது. அதற்கு மாற்றாக, தளத்துக்கு நேரிடையாகச் சென்றாவது பதிவுகளைப் பார்வைக்கு வைக்க வாய்ப்பளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சூலை 26, 2019-உடன் அந்தச் சேவையையும் தமிழ்மணம் நிறுத்தி விட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது.

ஒரு காலத்தில் தமிழ்ப் பதிவுலகம் என்பது ஒரு மாற்று ஊடகமாகவே திகழ்ந்தது என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். திரைப்படப் பாடலாசிரியர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இதழாளர்கள் என அன்று தனக்கென வலைப்பூ வைத்துக் கொள்ளாத ஆளே படைப்புலகில் இல்லை.

ஆனால் பேசுபுக்கு, துவிட்டர் எனச் சமுக ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய பிறகு எழுத்தார்வம் உள்ளவர்கள் கரை ஒதுங்கப் பதிவுலகம் மட்டுமே தேர்வு எனும் சூழல் மாறிப் போயிற்று. வலைப்பூ நடத்திய பெரும்புள்ளிகள் முதல் வலைப்பூ நடத்தியே பெரும்புள்ளி ஆனவர்கள் வரை எல்லாரும் அக்கரைக்குச் சென்ற பின் தமிழ்மணம் போன்ற ஆலமரங்களின் வீழ்ச்சியை எப்படித் தடுக்க முடியும்!

ஆனால் இது காலத்தின் மாற்றம்; ஏற்றுக் கொண்டுதானே      ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே “அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டா! ஓர் ஆலமரம் வீழ்ந்தால் என்ன? இந்தா, பிடித்துக் கொள் இன்னொன்று!” என்று பதிவுலகைத் தாங்க இன்னோர் அசத்தல் திரட்டியைப் படைத்திருக்கிறார்கள் தமிழ்ப் பதிவுலகின் தொழில்நுட்பப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்களும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களும் இணைந்து. பதிவுலகில் கடந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன்.
Tamilcharam

ஒரு தடவை நம் தளத்தை இணைத்தாலே தானாகவே ஒவ்வொரு தடவையும் நம் வலைப்பதிவுகளை இற்றைப்படுத்திக் கொள்ளும் (update) திறன், செயற்கை நுண்ணறிவால் (artificial intelligence) பதிவுகளைத் தானே வகை பிரித்துக் காட்டும் வசதி, கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளுக்கு உகந்த பயனர் இடைமுகம் (user interface) எனப் பல நுட்பங்களோடு வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளம் பதிவுலகில் புதுக் குருதி பாய்ச்சும் என நம்புவோம்.

மேலும் பிளாகர் அண்மையில் புதிய பயனர் இடைமுகத்தை (New User Interface) அறிமுகப்படுத்தியுள்ளது. எப்பொழுதிலிருந்து என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்திலும் இது பற்றித் தகவல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் நேற்றைக்கு முன்நாள்தான் தற்செயலாகக் கவனித்தேன். என்னென்ன மாற்றங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. புள்ளிவிவரங்கள் பகுதி மட்டும் மிகவும் புதுவிதமாக, அழகாக இருக்கிறது. அதிகத் தகவல்களையும் வழங்குகிறது. முக்கியமாக இது கைப்பேசியிலிருந்து பிளாகர் கணக்கை அணுக மிகவும் உகந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்களும் இந்தப் புதிய இடைமுகத்துக்கு மாற உங்கள் பிளாகர் கணக்குக்குள் சென்று இடப்பக்கப் பட்டியின் முடிவில் உள்ள ‘புதிய Bloggerஐப் பயன்படுத்து’ எனும் பொத்தானை அழுத்துங்கள். உதவிப் படம் கீழே: 

Blogger New User Interface Button loction

நனி நன்றி!

இணைய உலகமே சமுக ஊடகங்களை மையமாய்க் கொண்டு சுழலத் துவங்கி விட்ட இற்றை நாளிலும் பதிவுலகை மறவாமல் தமிழில் பதிவுகளை எழுதியும் படித்தும் வரும் தமிழார்வலர்களுக்கு…

இன்றளவும் என் தளத்தைப் படித்துப் பகிர்ந்து ஆதரவளிக்கும் அன்பு அகத்தினர்களுக்கு...

தங்கள் விருப்பத்துக்குரிய வலைப்பூக்களின் பட்டியலில் இந்தப் பூவையும் தொடுத்து உதவும் எனதருமைப் பதிவுலகப் பெருமக்களுக்கு...

தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், எழுதிய பின் அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறி என்னைச் செழுமைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல, தினச்செய்தி இதழ்களின் ஆசிரியர்களுக்கு...

வாழ்விலேயே முதன்முறையாக நாளிதழில், அதுவும் தொடர்ந்து எழுத அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, என் எழுத்துக்கும் பணமதிப்பு ஒன்று உண்டு என்பதைப் புரிய வைத்த, பெருமதிப்புக்கும் என் பேரன்புக்கும் உரிய திரைப்படைப்பாளி இயக்குநர் உயர்திரு.புகழேந்தி தங்கராசு அவர்களுக்கு…

என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு...

இப்படியெல்லாம் திட்டினால் இவன் இன்னும் இது போல் அதிகம் எழுதுவான் என்பது தெரியாமல் என்னை உசுப்பி விடும் என் அறிவுகெட்ட எதிரிகளுக்கு...

பதிவுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திரட்டிகள், முக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு...

வலைப்பூவின் ஓட்டமும் வாட்டமும் அறிந்து சீர் செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்களுக்கு (Data Analyzing Sites)...

பதிவுகளுக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்துக்கு...

பதிவுகளைக் கண்கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப் படங்களையும் இன்ன பிறவற்றையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு...

பதிவுகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட உரிய தகவல்களை வழங்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் போன்றவற்றுக்கு...

எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு...

என அனைவருக்கும்...

யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...
Thanks

காணிக்கை

என் உச்சக்கட்ட இயலுமைகளை
எனக்கே எடுத்துக்காட்டிய
பேராசான்

சுணங்கிப் படுக்கும் பொழுதெல்லாம்
எழுந்து ஓட வைக்கும்
எரிபொருள்

புதிய உயரங்களை நான் எட்ட
முதல் தூண்டுதலாய்த் திகழும்
பெருங்காரணன்

என் பிறவித் தோழன்
ஆருயிர் மைத்துனன்
பிரகாஷ் சங்கர் அவர்களுக்கு
இந்த ஆண்டின்
பதிவுலகப் பயணத்தைக்
காணிக்கையாக்குகிறேன்!
Hearty Friend Prakash Shankar
படங்கள்: நன்றி அனிமோகிராபி.நெட், ஆட்லிசேட்டிசுவையிங், தமிழ்ச்சரம், தமிழ் சுடேட்டசு டி.பி, சாண்டி போட்டோகிராபி.

முந்தைய ஆண்டுகளில்:
ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!
ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்