தி.மு.க., பற்றிய என் கருத்து என்ன என்பது என்னைத் தெரிந்தவர்களுக்கும் என் எழுத்துக்களை அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் "தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் மக்களும் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை முன்னேற்ற ஒரு வாய்ப்பு" என்கிற ஸ்டாலினின் அழைப்பைக் கண்டதும் எந்தத் தயக்கமும் இன்றி நான் உடனே தீர்மானித்து விட்டேன், என் எதிர்பார்ப்புகளையும் எழுதி அனுப்புவது என்று. தனித் தமிழீழத் திருநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பு என நான் முன்வைக்கும் இந்த அதிரடிப் பரிந்துரைகளையெல்லாம் தி.மு.க., ஏற்குமா இல்லையா என்பது அப்புறம். ஆனால் இதை மட்டும் நாம் செய்யாமல் விட்டுவிட்டால் நாளைக்கு இதே தி.மு.க-வினர் என்ன சொல்வார்கள் தெரியுமா நண்பர்களே?
"நாங்கள் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வடிவமைப்பையே மக்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் யாருமே தனி ஈழம் பற்றியோ, அது தொடர்பான இன்ன பிற கோரிக்கைகளையோ முன்வைக்கவில்லை" என்பார்கள். அதற்காகவாவது, அப்படி ஒரு சொல்லுக்கு இடமளித்து விடக்கூடாது என்பதற்காகவாவது, ஈழம் போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் தமிழ் மக்களுக்கு இருக்கும் அக்கறையைத் தி.மு.க-வுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவாவது அவர்களின் அழைப்பை ஏற்பது என்று முடிவெடுத்து எழுதியும் அனுப்பி விட்டேன். இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன்.
என்னுடைய இந்த முடிவு சரிதான் என உங்களுக்கும் தோன்றினால், அருள் கூர்ந்து இதே கோரிக்கைகளை நீங்களும் எழுதி dmkmanifesto2019@dmk.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்! அல்லது துவிட்டர் (twitter), பேசுபுக்கு (facebook) ஆகியவற்றில் உள்ள #DMKmanifesto2019 எனும் சிட்டையில் (hashtag) பகிருங்கள்! தமிழர் எதிர்காலத்துக்கான இந்த முயற்சிக்கு வலுச் சேர்த்து உதவுங்கள்! அதற்கு முன் இதோ என் பரிந்துரைகளைப் படித்து விடுங்கள்!
இதோ, எட்டாவது ஆண்டும் முடிந்து விட்டது! ஆனால், நடந்த அந்த மாபெரும் கொடுமைக்கான நீதியை நாம் இன்னும் எட்டியபாடில்லை.
தமிழர்களாகப் பிறந்தது தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத ஏதுமறியாப் பொதுமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாய்ச் செத்து மடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் முடிகின்றன. வியட்நாம் போரின்பொழுது, போரின் கொடுமையைக் காட்டும் விதமாக ஒரே ஒரு புகைப்படம் வெளிவந்ததற்கே கொதித்தெழுந்த உலக சமுதாயம், அதுபோல் எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களும் விழியங்களுமே (videos) வெளிவந்தும் இன்று வரை ஈழத் தமிழர்களின் நிலைமையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், என்ன?...
மேத்யூ லீ - ஈழத் தமிழர்களுக்காக ஐ.நா-வில் ஒலிக்கும்த்த குரல்!
பொதுவாக, நமக்கு ஈழப் பிரச்சினைக்காகப் போராடும் தமிழ்த் தலைவர்களைத்தான் தெரியும். ஆனால் ஐ.நா, மனித உரிமை ஆணையம் போன்ற, இதற்கான தொடர்புடைய இடங்களில் குரல் கொடுக்கும் வெளிநாட்டு மனிதநேயர்கள் பலரை நமக்குத் தெரியாது.
அப்படி, ஐ.நா-வுக்கு உள்ளே இருந்தபடியே ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மனிதநேயரும், ஊடகப் போராளியுமான மேத்யூ லீ அவர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்கிறது ஐ.நா!
இன்னர் சிட்டி பிரசு எனும் இணைய இதழை நடத்தி வந்த மேத்யூ லீ அவர்கள் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமின்றி ஆப்பிரிக்கா, ஐதி, புருண்டி, சூடான், ஏமன் என உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தவர்.
இவரைப் பற்றி இனியொரு தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில், ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் தலைமை மேலாண் (நிர்வாக) அலுவலராகச் செயல்பட்டவரான விஜய் நம்பியார் நடத்திய சரணடைவு நாடகத்தை உலகத்திற்கு வெளிப்படுத்தியவர் மேத்யூ லீ என்றும், ஐக்கிய நாடுகள் அவை இலங்கையில் நடத்திய போர்க்குற்ற விசாரணை என்ற ஏமாற்று வித்தையை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்து, அதற்காகப் பல ஆபத்துக்களைச் சந்தித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சேனல் 4-ஐ விடக் கூடுதலான தகவல்களை மேத்யூ லீ ஊடகங்களுக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளது.
“போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கி நேரடியாக நடத்தியவர்களில் ஒருவனுமான சவேந்திர சில்வாவுக்கு இலங்கையின் உதவி வாழ்விடப் பிரதிநிதிப் பதவியை ஐ.நா அளித்தபொழுது ஐ.நா-வின் இதயத்தில் மிதித்துக் கேள்வி கேட்டவர் மேத்தியூ லீ. ஐக்கிய நாடுகள் அவையின் உள்ளேயே அவர் கேள்விகளால் வேள்வி செய்தார். பான் கீ மூன் முதற்கொண்டு அனைவரும் மேத்தியூ லீ-ஐக் கண்டு அஞ்சினர். ஐ.நா-வின் உள்ளே அநீதிகளுக்கு எதிராக நெருப்பாக எரிந்தவர் அவர். இன்றைக்கு வன்னிப் படுகொலைகள் போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் சான்றுகளோடு பேச முடிகிறது என்றால் அதற்கு முதன்மையான பங்காற்றியவர்களில் மேத்தியூ லீ-யும் ஒருவர்” எனத் தொடர்கிறது அந்தக் கட்டுரை. (கட்டுரையை முழுமையாகப் படிக்க: ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த மத்தியூ லீயை ஐ.நா பலவந்தமாக வெளியேற்றியது!)
ஐ.நா-வின் முதன்மையான அலுவலர்களுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் உள்ள தொடர்பு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் ஐ.நா-வில் திட்டமிட்டு நடத்தி வந்த சூழ்ச்சிகள், ஐ.நா-வின் உயர்மட்ட ஊழல்கள் போன்றவற்றுக்கு எதிராக மேத்யூ லீ தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்ததை எதிர்கொள்ள முடியாத ஐ.நா அலுவலகம் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கடந்த மாதம் (பிப்ரவரி) 19ஆம் நாளன்று அவரை ஐ.நா-வை விட்டே வெளியேற்றியுள்ளது. இதனால் அவருடைய இன்னர் சிட்டி இதழும் முடக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நா-வின் உள்ளேயே அலுவலகம் வைத்திருக்கவும், ஐ.நா அலுவலகத்தின் உள்ளகத் தகவல்களைத் திரட்டவும் உரிமை அளிக்கப்பட்டிருந்த அவரை அங்கியைக் கழற்றி, அடையாள அட்டையைப் பறித்து மிகவும் தரக்குறைவான முறையில் வெளியேற்றியிருக்கிறது ஐக்கிய நாடுகள் அவை. ஆம்! உலக நாடுகளில் மனித உரிமையை நிலைநாட்டவே பிறப்பெடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் அதே ஐ.நா-தான் மனித உரிமைகளுக்குத் தோள் கொடுத்ததற்காக ஒருவர் மீது இப்படி மனித உரிமைகளுக்கும் நாகரிகத்துக்கும் புறம்பான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களே! தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து இன்று தன் அங்கீகாரத்தையே இழந்து நிற்கும் இவருக்குத் துணை நிற்க வேண்டியது நம் கடமை இல்லையா? தமிழர் உரிமை பற்றிக் கேள்வி எழுப்பியதற்காகத் தன்னுடைய உரிமைகளை இழந்து மானக்கேட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிற்கும் இவருக்கு உதவி புரிய வேண்டிய நன்றிக்கடன் நமக்கு உள்ளது இல்லையா?
இதோ, உலகப் பிரச்சினைகள் பலவற்றுக்காகவும் கையொப்ப இயக்கம் நடத்தும் சேஞ்சு இணையத்தளத்தில், மேத்யூ லீக்காகவும் ஒரு கையொப்ப இயக்கம். அவரையும் அவருடைய ஊடகத்தையும் மீண்டும் இயங்க விடுமாறு ஐ.நா தலைமையைக் கோரும் ஒரு விண்ணப்பம்தான் இது, வேறொன்றுமில்லை! இதில் கையொப்பம் இடுவீர்களா? தமிழர்க்காக இயங்கிய அந்த மனிதநேயருக்குக் கை கொடுப்பீர்களா? சொல்லப் போனால், இது நாம் அவருக்குச் செய்யும் உதவியில்லை; தமிழர்களாகிய நாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி! அது கூட இல்லை, உலகின் எந்த மூலையில் மனித உரிமை மீறப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவதையே குறியாக கொண்ட மேத்தியூ லீக்காக நாம் இடும் இந்தக் கையொப்பம் உலகெங்கும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி!
ஆம்! இதில் கையொப்பமிட நீங்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; வெறும் மனிதராக இருந்தால் கூடப் போதும்! உலகெங்கும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுக் கண்ணீரும் செந்நீரும் சிந்தும் பல்லாயிரக்கணக்கான சக மனிதர்களின் பெயரால் கேட்கிறேன், இதைச் செய்கிறீர்களா நண்பர்களே?! இதோ அதற்கான இணைப்பு கீழே:
‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!
-
2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை
தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது
என்பதெல்லாம் தனிக்...
பதிவுகளை இமெயிலில் பெற
-
வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய
முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை
எனில் தயவ...
அழகே! அழகே! பாரதத்தின் தென் கோடி அழகே - 3
-
*கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile -
பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என்
கருத்துகளின் கீழ்...
அட! இப்படியும் எழுதலாமா?
-
தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி
நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ...
பயம் பிடிச்சிருக்கு விஜய்
-
*நீங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த டெம்ப்ளேட்டை எந்த பதிவிற்கும்
பயன்படுத்தவேயில்லை. உங்களுக்கே அது பயன்படும் என்றும் எதிர்பார்க்கவில்லை.*
*உங்கள் ஆட...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
Is Hindi India's National language?
-
*Written in Tamil by: C. Saravanakarthikeyan*
*Translated to English by: S. Vijaya Kumar *
Some of my colleagues, especially north Indians in the IT secto...
Solve Gaminator loading problem step by step
-
fjoeze Solve Gaminator loading problem step by step– No Tricks! free
daily (Updated) 🎁[tuvwxy] ✅ Unlock Free Coins with Gaminator Bonus Codes
If you’re a...
2458. சங்கீத சங்கதிகள் - 350
-
*கானமும் காட்சியும் - 4*
*“நீலம்” *
*‘சுதேசமித்திரனில்’ 1944-இல் வந்தது இந்தக் கட்டுரை. சென்னையில் மாம்பலத்தில்
உள்ள தியாகப் பிரும்ம கான சபையின் முதல்...
எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….
-
ஒரு முன்குறிப்பு : ========= தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய
தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம்
உங்களோடு க...