.

சனி, ஜனவரி 27, 2024

கனவின் இசைக்குறிப்பு - வாழ்த்துரை

Kanavin Isaikurippu - Book introductory function


அன்பின் சகா, கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் எழுதி, கடந்த 06.01.2024 அன்று சென்னையில் வெளியிடப் பெற்ற அவரது முதல் நூலான கனவின் இசைக்குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் என் சார்பாக மைத்துனர் ரசாக் வழங்கிய வாழ்த்துரையினைக் கவிஞர் வாழும் புதுகை மண்ணில் அந்நூல் அறிமுக விழாக் காணும் இந்நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

கைசால் தமிழ்ப் பெருமக்கள் நிறைந்த அவைக்குப் பணிவன்பான வணக்கம்!

நான் உங்கள் இ.பு.ஞானப்பிரகாசன். என் உடன்பிறப்பின் உதவியோடு உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளைக் களவாட இது ஒரு சிறு முயற்சி!

கனவின் இசைக்குறிப்பு - கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய பல்லாண்டுக் காலக் கனவின் அச்சு வழி அரங்கேற்றம்!

நம் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள் பதிப்புரையில் சொல்லியிருந்தார், இந்த அரங்கேற்றத்தைச் சாத்தியப்படுத்தியவனே நான்தான் என்று. ஆனால் எனக்கும் முன்னதாக இதற்கு அடிக்கல் நாட்டியவர் அவர்கள் மூத்த மகள் நிறைமதிவதனா.

“வெறுமே தாளில் வெளியிடுவதில் என்ன இருக்கிறது? இணைய வழியில் இக்கவிதைகள் உலகெங்கும் போகின்றனவே, போதாதா?” என்று நாங்கள் நினைத்திருந்த நேரத்தில், நிறைமதி வலியுறுத்திய பிறகுதான் இனி மைதிலி அவர்களின் கவிதைகளைத் தொகுப்பாக்குவது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தோம். அந்த வகையில் இந்தக் கவிமலர்கள் செண்டானதில் நிறைமதியின் பங்கு இன்றியமையாதது.

அடுத்து, இந்தத் தொகுப்பு வெளியீடு தள்ளிப் போகக் காரணம் தான்தான் என்றும் தோழர் கஸ்தூரிரங்கன் பதிப்புரையில் சொல்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும் இது இன்று இவ்வளவு வேகமாகப் புத்தக வடிவம் பெறக் காரணமும் அவர்தான்.

யார் யாரிடம் எந்தெந்த வேலையை ஒப்படைத்தால் விரைந்து முடிவடையும் என்பதைத் துல்லியமாகக் கணித்து ஒரே வாரத்தில் அவ்வளவு நேர்த்தியாக, அழகாக இதை நூலாய்க் கோத்து வாங்கி விட்டார் அவர்.

இக்கட்டான இறுதி மணித்துளிகளில் அவர் எடுத்த உடனடி முடிவுகள்தாம் இவ்வளவு எழில்மிகு புத்தகமாக இதை உருவாக்கியிருக்கின்றன.

இதுவரை அவரை ஒரு நல்ல ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்று தன் இணையருடன் கைகோத்துப் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கண்டிப்பாக அவர் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும்; மலர்த்தரு பதிப்பகத்தில் பூக்கும் புத்தக மலர்களின் மணம் தமிழுலகம் எங்கும் கமழ வேண்டும் என என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம் கவிஞர் யாழி கிரிதரன், எழுத்தாளர் லட்சுமி சிவகுமார் ஆகிய இருவர் மட்டும் இல்லாதிருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வெளியீடு சாத்தியமாகியிருக்காது.

பத்தாண்டுக் காலமாக இந்தத் துறையில் இருப்பவன், ஓரிரு பெரிய பதிப்பகங்களுக்குப் பணியாற்றியவன் எனும் சிறு தகுதியில் சொல்கிறேன், லட்சுமி சிவகுமார் அவர்களின் பணித்திறத்தைப் போல் இதுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. உண்மையிலேயே அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு! இந்தப் புத்தகத்தைப் பிழை திருத்தியவன் எனும் முறையில் இதை இங்கே பதிவு செய்வது என் கடமை.

அவருடைய இணையற்ற திறமையைத் தமிழுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப் படைப்பாளிகள் நிறைந்த இந்த அவையில் பணிவன்புடன் பரிந்துரைக்கிறேன்.

இன்னும் கூடப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டிய வியத்தகு பங்கேற்பாளர்கள் இந்த நூலாக்கத்தில் உண்டு. இருந்தாலும் அதை விழாநாயகி அவர்கள் செய்வதுதான் முறை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு இனி கவிஞர் பற்றியும் நூல் பற்றியும் சில சொற்கள்.

வானில் மேகங்கள்
வரையும் கோலங்கள்
ஒரு சமயம்
பாயும் புலியாகும்
மறுநொடியே
வீழும் துளியாகும்
ஒருமுறை
அசைகிற தேராகும்
மறுமுறை
விசையுறும் பந்தாகும்

இந்தப் படைப்புகளையெல்லாம்
மேகம் யாருக்காகச் செய்கிறது?
யார் பார்க்கவும் அல்ல!
அது மேகத்தின் தன்னியல்பு.

அப்படித்தான் நம் கவிஞரும். கவிதை எழுதுவது என்பது அவருடைய இயல்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும் கவிதை, சோகமாக இருந்தாலும் கவிதை, கல்வியைப் பற்றியும் கவிதை, தங்கையின் கம்மலைப் பற்றியும் கவிதை, பட்டாம்பூச்சிக்காகவும் கவிதை, பார்ப்பனியத்தை எதிர்த்தும் கவிதை என எதை வேண்டுமானாலும் கவிதை எனும் சிமிழுக்குள் அடைத்து விடுகிற அவருடைய மாயச்சாலம் ஒவ்வொரு தடவையும் வியக்க வைப்பது!

நானும் அவர்தம் பிற நண்பர்களும் அடிக்கடி கேட்போம். உங்களைப் போல் கவிதை எழுத எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று. அவர் எங்களுக்குக் குறியீடு, படிமம் போன்றவை பற்றி விளக்குவார். என்னைப் பொருத்த வரையில் அது அப்பொழுதுக்குப் புரியும். பின்னர் குழம்பி விடும்.

இப்பொழுது கவிஞரின் படைப்புகளையெல்லாம் தொகுத்து, மீண்டும் மொத்தமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தபொழுதுதான் புரிந்தது. கவிதை என்பது வெறும் இலக்கிய வடிவம் இல்லை; அது ஒரு தனி மொழி! தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்துக் கவிதை மொழியையும் அவர் கற்றிருக்கிறார். உண்மையில் அவர் கவிதையை எழுதவில்லை. தான் பார்க்கிற, சுவைக்கிற, தன்னைப் பாதிக்கிற அனைத்தையும் கவிதை எனும் மொழியில் மொழிபெயர்த்து வைக்கிறார், அவ்வளவுதான்.

இதை உணர்ந்த அந்த மணித்துளியில் ஓரிரு கவிதைகள் அவர் போலவே எழுத எனக்கும் கைவந்தது. சில நாட்கள் நானும் மீண்டும் கவிப்பித்துப் பிடித்துத் திரிந்தேன்.

ஆனால் இதுவே, மைதிலி அவர்களின் எளிய படைப்புகள் தொடர்பான என் அனுபவம் மட்டும்தான். மறுபுறம், சராசரி வாசகனுக்குப் புரியாத நுட்பமான கவிதைகளை எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர் என்பது நாம் அறிந்ததே! பெரிய கவிஞர்கள் பலர் அவருடைய அந்தக் கவிதைகளைக் குறிக்கலைப்பு (Decode) செய்து அந்தக் கவித்தமிழில் திளைத்து மகிழ்வதையும் நாம் பேசுபுக்கில் பார்த்திருக்கிறோம்.

இப்படி வாசகர்களையே கவிஞர்களாகவும் கவிஞர்களையே வாசகர்களாகவும் மாற்றிவிடும் இந்த ரசவாதத்தில் மூழ்கி முத்தெடுக்கப் படிப்போம், பரப்புவோம் இந்தக் கனவின் இசைக்குறிப்பை!

அனைவருக்கும் நனி நன்றி! நேச வணக்கம்!

Kanavin Isaikurippu

படம்: நன்றி மலர்த்தரு பதிப்பகம். 

ஞாயிறு, ஜனவரி 07, 2024

கனவின் இசைக்குறிப்பு - வாழ்வின் ஒரு முக்கியமான மாலைப்பொழுது

Poet Mythily Kasthurirengan's 'Kanavin Isaikurippu' Book Release

நூலை வெளியிடுபவர் சிந்துவெளி ஆய்வாளர்
முனைவர் பாலகிருட்டிணன் இ.ஆ.ப.,
முதல் நூல் பெற்றுக் கொள்பவர்
கவிஞரின் தமிழாசான் அண்ணா ரவி அவர்கள்
அருகில் கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள்
இடப்புறம் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்
வலப்புறம் ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் அவர்கள்

அன்பிற்கினிய பதிவர், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய கனவின் இசைக்குறிப்பு நூல் வெளியீடு நேற்று (2024, சனவரி 06) மனம் நெகிழ நிறைவேறியது.

இரண்டு இறக்கைகளிலும் கவிதைகளையே சிறகுகளாய்ச் சுமந்து இணைய வானில் உலவிக் கொண்டிருந்த ஒரு தமிழ்ப் பறவையின் கனவு நனவான அந்தச் சிறந்த நாள் உலகம் போற்றும் பெருங்கவிஞர் கலீல் கிப்ரானின் பிறந்தநாளாகவும் அமைந்தது காலம் செய்த வாணவேடிக்கை!

மாபெரும் படைப்புலகப் பயணத்தில் சகா மைதிலி அவர்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த முதல் அடிக்கு என்னாலும் உதவ முடிந்ததில் இந்தத் துறைக்குள் மீண்டும் வந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்!

என் அம்மா புவனேசுவரி அவர்களுக்கு சனவரி 1-இலிருந்தே கடுமையான கால்வலி. சகாவைத் தன் மகளாகவும் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களைத் தன் மகனாகவும் கருதுபவர் அவர். அவர்களும் அப்படித்தான். அப்படிப்பட்டவர் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகுமோ என்று கவலைப்பட்டேன். ஆனால் என்ன மாயமோ! ஐந்து நாள் மருந்துகள் சேர்த்து வைத்துப் பலனளித்தது போல் நேற்றுக் காலையிலிருந்தே அம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு தேறத் தொடங்கி விட்டது. மாலை, விழாவுக்குக் கிளம்பியே விட்டார்!

தவிர என் பாசத் தங்கை சிரீதேவி, நேச மைத்துனர் ரசாக், தம்பி மனைவி உமையாள், எங்கள் செல்லக்குட்டி மகிழினி, அப்பா இளங்கோவன், நான் மகனாகவே போற்றும் குட்டித்தம்பி சங்கர மகேசு, அன்புச் சித்தி குணலட்சுமி, சித்தப்பா மோகன்குமார் என எங்கள் குடும்பத்தில் சிலரைத் தவிர மற்ற எல்லாருமே கலந்து கொண்ட குடும்ப விழாவாகவே இது அமைந்தது.

புத்தகம் வெளியிடப்பட்ட அந்தக் கண்ணான காட்சியையும் கவிஞர் நெக்குருகி வழங்கிய ஏற்புரையையும் காணொளி அழைப்பில் காட்டி என்னையும் விழாவில் கலந்து கொள்ளச் செய்த தங்கை சிரீதேவிக்கும் என் வாழ்த்துரையைச் சிறப்பாக வாசித்துக் கைதட்டல்களைப் பெற்றுத் தந்த மைத்துனர் ரசாக் அவர்களுக்கும் என் அன்பு!

இந்தப் பத்தாண்டுக் கால நட்புறவில் ஒருபொழுதும் கவிஞர் என்னை ஒருமையில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக நேற்று ஏற்புரையில், "...என் நண்பன், இங்க வரலைன்னாலும் அவன் மனசெல்லாம் இங்கதான் இருக்கும்..." என்று பேசியபொழுது மதிப்பு எனும் கரையையெல்லாம் தகர்த்துக் கொண்டு பாய்ந்த நட்பு வெள்ளம் இருவர் கண்ணிலும் சற்றே எட்டிப் பார்த்தது!

நிகழ்ச்சி முடிந்ததும் இந்தப் புத்தகப் பதிப்புப் பணியைப் பொறுப்பேற்று முடித்துத் தந்த கவிஞர் யாழி கிரிதரன் அவர்கள் அழைத்துப் பேசி விழா இனிது நடந்ததாகத் தெரிவித்ததோடு "ஏன் வரவில்லை?" என்றும் கேட்டார். உடல்நிலை காரணமாக வர இயலவில்லை என்றதும் வருத்தப்பட்டதோடு பிறகு வந்து பார்ப்பதாகவும் சொன்னார். அவர் அன்பு கண்டு மகிழ்ச்சி!

தோழர் கஸ்தூரிரங்கன் அவர்களுடன் பேசியபொழுது பதிவர் மெக்னேசு திருமுருகன் அவர்களோடும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தற்பொழுது எழுதுவதில்லை என்றது வருத்தமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊக்கம் அவர் தூவலுக்கு மீண்டும் மையூற்றும் என நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்த அம்மா நிகழ்ச்சிக்குப் போன உடன் தன்னைக் கட்டியணைத்து வரவேற்ற கவிஞரின் மூத்த மகள் நிறைமதிவதனா, கடைசி வரை கூடவே இருந்து கலகலப்பூட்டிய அவர் இரண்டாவது மகள் மகிமா, தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள்தம் தங்கை வசுமதி அண்ணி, அங்குமிங்கும் ஓடிய குட்டித் தேவதையான அவர் மகள் பிரதன்யா, திரீ ரோசசு கவியணியின் இதர ரோசாக்கள் ரேவதி, கீதாஞ்சலி மஞ்சன் என அனைவரைப் பற்றியும் குதூகலமாகக் குறிப்பிட்டார். மேலும் தங்கள் இனிய அன்பை என்னிடம் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிய எழுத்தாளுமைத் தோழர்கள் யோகானந்தி, சிரீமலையப்பன், மேனகா ஆகியோரையும் அன்புடன் நினைவு கூர்ந்தார். தேடிப் போய்க் கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களுடன் தான் படமெடுத்துக் கொண்டதையும் தெரிவித்தார். தன் இணையருடன் கைகோத்து இதே மேடையில் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் தோழர் கஸ்தூரிரங்கன் நன்றியுரையில் என்னுடனான நட்பு பற்றிச் சொன்ன விதத்தையும் குறிப்பிட்டார். அது அவ்வளவு அன்பு தோய்ந்திருந்தது!

மறதி காரணமாய்ப் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து என் நட்பார்ந்த கைக்குலுக்கல்கள்!

இந்த விழா வெறும் முன்னோட்டம்தான் (Trailer), முழுப் படம் புதுகையில் என்றார் தோழர் கஸ்தூரிரங்கன்!

காத்திருப்போம்! அடுத்த கலக்கலுக்கு!! 😊🎆🎇🎉🎊

செவ்வாய், நவம்பர் 07, 2023

நேற்று தமிழீழம்... இன்று பாலத்தீனம்! - தீர்வுதான் என்ன?

Bombing at Israel-Palestine War

ஒரு சிக்கலுக்கான தீர்வு ஒரு முறையாவது நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத வரை
அதை மீண்டும் மீண்டும் முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அப்படி ஒரு நினைவூட்டல்தான் இது!

றுபடியும் இனப்படுகொலை! இந்த முறை தெருவில் ஓடுவது இசுலாமியர் உதிரம்! கொன்று குவித்து ஈன வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இசுரேல்! கூடச் சேர்ந்து ஆடுகிறது எப்பொழுதும் போல் அமெரிக்கா!

இசுரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் அப்படி என்னதான் சிக்கல்? ஏன் இந்தப் போர்? இப்படிக் கேட்பவர்கள் பேராசிரியர் ராசன் குறை எழுதியுள்ள “ஆரிய மாயையும், இசுரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்” எனும் கட்டுரையைப் படிக்கலாம். மற்றவர்கள் மேற்கொண்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம்.

சனி, அக்டோபர் 14, 2023

மீண்டும் 2009?...

Status of Gaza on 2023 attack

மீண்டும் 2009-க்கு வந்து
சிக்கிக் கொண்டது போல் இருக்கிறது!

மீண்டும் ஓர் இனப்படுகொலையின் அரங்கேற்றம்...

மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தின் மீது
தீவிரவாத இயக்கம் என முத்திரை...

மீண்டும் ஏதுமறியா மக்கள்
கொத்துக் கொத்தாகக் கொலை...

மீண்டும் கதறி அழும் குழந்தைகளின் புகைப்படங்கள்
இணையத்தில் உலா...

மீண்டும் குண்டுவீச்சு ஓசைகள்...

மீண்டும் படைவானூர்திகளின் இரைச்சல்கள்...

மீண்டும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்...

மீண்டும் ஒருமுறை உலகம்
தன் கண்களை இறுக மூடிக் கொள்ளப் போகிறதா?

அப்படி மூடிக் கொண்டால்
அந்தக் கண்கள்
மீண்டும் திறந்து பார்க்கையில்
காணாமல் போன பாலத்தீனியர்களுள்
நானும் ஒருவனாக இருக்கட்டும்!

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி தி கார்டியன் இதழ். 

புதன், ஆகஸ்ட் 30, 2023

மாவீரன் - திரைப்பட மதிப்புரை

Maaveeran motion poster

கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன்.

மிகப் புதுமையான திரைப்படம்!

‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது!

‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம்.

சனி, ஜூலை 15, 2023

இலக்குவனார் திருவள்ளுவனின் கலைச்சொல்லாக்க வழிகாட்டி! | 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை

chollAkkam - neRimuRaiyum vazhimuRaiyum
உலகத் தமிழ் நேசர்களே!

கடந்த வாரம் - அதாவது 2023 சூலை மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எனது கட்டுரை ஒன்றும் தேர்வாகியிருந்தது. எனக்கு மாறாக என் அம்மா புவனேசுவரி அவர்கள் கட்டுரையை முன்வைக்க தம்பி ஜெயபாலாஜி, சித்தி சியாமளா, தங்கை ஸ்ரீதேவி, மைத்துனர் ரசாக் ஆகியோர் உடன் இருந்தனர். வாழ்வில் முதன் முதலாக உலகளவிலான மாநாடு ஒன்றில் என் படைப்பு இடம்பெற்றது மிகவும் பூரிப்பாக இருந்தது! இந்த ஆய்வுக் கட்டுரையை எழுத ஊக்கமளித்து, முறையாக எப்படி அனுப்ப வேண்டும் என்பது வரை எனக்கு வழிகாட்டியாக விளங்கி இந்தப் பெருமைக்கு மூலக்காரணராக இருந்த உயர்திரு.இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியுடன் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக.

சனி, ஜனவரி 14, 2023

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு 2054 நல்வாழ்த்துக்கள்

Pongal and Tamil New Year 2054 wishes


கச் சிவப்புத் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

இன்று பிறந்திருக்கிறது தி.பி.2054!

தொற்றுநோய்கள் ஒழிய
போர்களெல்லாம் முடிய
உலகெங்கும்
நலமும் வளமும்
மட்டுமே நிறைய
வழியட்டும் பொங்கல்!

அனைவர்க்கும் அன்பு கமழ் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம்: நன்றி Image by Creative_hat - பிரீபிக்.

ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஏன் இவர்கள் மாவீரர்கள்?

Tamil Eelam Heroes Day

தமக்குப் பின்னால்

ஒரு நாடே இருக்கிறது

எனும் துணிவில் துப்பாக்கி தூக்குபவர்கள்

வீரர்கள்!

ஆனால்

இவர்கள்

தங்களை எதிர்த்து

மொத்த உலகமே நிற்கிறது

என்று தெரிந்தும்

துப்பாக்கியை இறக்காதவர்கள்!

அதனால்தான் இவர்கள்

மாவீரர்கள்!🫡

❀ ❀ ❀ ❀ ❀

திங்கள், அக்டோபர் 10, 2022

தாய்மொழி வழிக் கல்வி - மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவுக்கு எனது கோரிக்கை

Education in Mother Tongue medium

அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு!

நீங்களும் இது போல் உங்கள் கருத்துருவை அனுப்பி வைக்கத் தேவையான விவரங்கள் கட்டுரையின் முடிவில்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022

மகான் - திரைப்பட மதிப்புரை | Mahaan - Cinema Review

Mahaan - Cine Review

"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!  

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்