.
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 29, 2021

தில்லி உழவர் போராட்டத்தில் வன்முறை! - நாம் உணர வேண்டிய ஒரு முக்கியமான பாடம்!

violence in Delhi farmers protest
71ஆம் ஆண்டுக் குடியரசு நாளைக் குடிமக்களின் உதிரத்தைப் பன்னீராய்த் தெளித்துக் கொண்டாடியிருக்கிறது இந்தியா!

தில்லி உழவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை வேறெப்படிச் சொல்ல முடியும்?  கேட்டால், “போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவி விட்டார்கள். அவர்கள் நடத்திய வன்முறையால்தான்  காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டி வந்தது" என்கிறார்கள். 

செவ்வாய், ஜனவரி 14, 2020

இப்படியும் கொண்டாடலாம் காணும் பொங்கல்! – சமயவாதம் தகர்க்கும் ஒரு புது முயற்சி

Pongal Wishes gif

காணும் பொங்கல் - தமிழ் மக்களின் உறவுச் சங்கிலிக்கு உயவு (lubrication) கூட்டும் திருநாள்!

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், இந்நாளில் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்றோர் குடும்பத்துடன் நம் வீட்டுக்கு வருவார்கள். பொங்கல் பரிசாக அன்பளிப்புகள், தின்பண்டங்கள் போன்றவை தருவார்கள். பொங்கல் இனாம் எனும் பெயரில் செலவுக்குக் காசும் கொடுப்பார்கள். மாமா பிள்ளைகளுடனும் சித்திக் குழந்தைகளுடனும் கரும்பு கடித்தபடி குதூகலமாய் ஊர் சுற்றுவோம்.

சொந்தக்காரர்களுக்கு மட்டுமில்லாமல், வேளாண் கூலித் தொழிலாளிகள், அடிமட்டத் தொழில்கள் செய்யும் தோழர்கள் போன்றோருக்கும் இனாம் கொடுத்து மகிழ்விப்போம். தமிழ் இனத்தின் மூத்த முதுகுடிகளான மலைக் குறவர்கள் கூட இந்த நாளன்று மலையிலிருந்து இறங்கி வந்து விடுவார்கள். மலையில் தாங்கள் பிடித்துப் பழக்கிய கரடி போன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டிக் காசு கேட்பார்கள். நாம் காசு கொடுத்தால் அதைக் கூடச் சும்மா வாங்காமல் மறுகையாக மலைத்தேன், மூங்கிலரிசி என நாம் கொடுத்த காசை விடப் பன்மடங்கு மதிப்பு மிக்க பொருட்களை வழங்கிச் செல்வார்கள்.

இப்படிக் காணாதவற்றையெல்லாம் காணும் திருவிழாவாக இருந்ததால்தான் காணும் பொங்கல் எனப் பெற்றது இத்திருநாள். ஆனால் இவையெல்லாம் எண்பதுகள் வரையான கதை.

இன்றோ காணும் பொங்கல் என்றாலே கடற்கரைக்கும் திரைப்படத்துக்கும் பல்லடுக்கு வணிக வளாகங்களுக்கும் செல்வதுதான் என்றாகி விட்டது. காலத்துக்கேற்ப வழக்கங்களும் மரபுகளும் மாறுவது இயல்பே. அதுவும் பொங்கல் பண்டிகையே பழையன கழிதலும் புதியன புகுதலும்தாம் வளர்ச்சி எனும் பேருண்மையை உணர்த்துவதுதான்!

ஆனால் மாற்றம் என்பது தான், தன் குடும்பம் என்பதாகச் சுருங்காமல் பொதுநலன் சார்ந்ததாக விரிவடைந்தால் அது அந்தச் சமுகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். அப்படித் தமிழர் விழாவான காணும் பொங்கலிலும் இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது நம் பழைய தமிழ்நாடு. உழவர்கள் மட்டுமில்லாமல் எல்லாத் தொழிலாளர்களுமே பொழுதோடு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி மாலை முழுதும் குடும்பத்துடன் கழித்த நாட்கள் அவை. அதனால் பொங்கல் விடுமுறைகளையும் மொத்தமாகக் குடும்பத்துடனே கழிக்காமல் அதில் ஒரு நாளைச் சொந்தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்காக ஒதுக்கும் வழக்கம் தோன்றியது.

ஆனால் அன்றாடம் பணி முடிந்து வீடு திரும்பவே முன்னிரவாகி விடும் இன்றைய வாழ்க்கைமுறையில் கணவனும் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்குள் முகம் பார்த்துப் பழகுவதே இப்படிப்பட்ட விடுமுறை நாட்களில்தான். எனவே அந்தக் காலத்து அதே கொண்டாட்ட முறைகளை இன்று எதிர்பார்க்க முடியாதுதான்.

மேலும் ஊரகப் பொருளாதாரத்தின் ஆணி வேரான உழவுத்தொழிலும் அதைச் சார்ந்த பிற தொழில்களும் பெரிதும் நசிவடைந்து பிழைப்புக்காகப் பெரும்பாலானோர் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். ஆகவே காணும் பொங்கலுக்காக வெகு தொலைவில் இருக்கும் சொந்த ஊரில் வாழும் உறவுகளைத் தேடிச் சென்று கொண்டாடித் திரும்புவது இன்று அவ்வளவு எளிதில்லை.

ஆனால் உறவு என்றால் நம் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் மட்டும்தானா?

நம் அக்கம் பக்கத்தில் இசுலாமியம், கிறித்தவம், சமணம் எனப் பிற சமயங்களைச் சேர்ந்த உடன்பிறப்புகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு இந்நாளில் சென்று அவர்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தால் என்ன? காணும் பொங்கலை அவர்களோடு செலவிட்டால் என்ன? “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வழி வந்த நாம் அதை வெறும் வாய்ச்சொல்லாக இல்லாமல் வாழ்வியலாகவும் கடைப்பிடித்தால் என்ன?

சொல்லப் போனால், தமிழர்களுக்கு இது புதிது ஒன்றும் இல்லை!

காலம் காலமாகவே பொங்கலை நாம் சமய எல்லைகள் கடந்து அனைவரோடும் சேர்ந்துதான் கொண்டாடி வருகிறோம். காரணம் பலரும் நினைப்பது போல் இஃது இந்துச் சமயத்தைச் சார்ந்த விழா இல்லை. எந்தச் சமயமும் தமிழ் / இந்திய மண்ணுக்குள் காலடி வைக்கும் முன்பிருந்தே தமிழ் மக்கள் வெறும் இனக் குழுவாக வாழ்ந்த காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் அறுவடைத் திருவிழா.

உலகம் முழுவதும் இப்படி மொத்தம் 77 அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகக் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பட்டியலிடுகிறது. அவற்றுள் இந்தியாவில் மட்டுமே 25 விழாக்கள்! அவற்றில் பொங்கல் விழா பற்றி “இந்தியாவின் தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழா” என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர சமயத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் தென் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இசுலாமியர் வீடுகளில் பெரும்பொங்கல் அன்றைக்குச் சருக்கரைப் பொங்கலுடன் பதினாறு வகைக் காய்கறிகள் சமைத்துச் சிறப்பு விருந்தாகக் குடும்பத்தோடு உண்டு மகிழும் பழக்கம் உண்டு.

கிறித்தவர்களோ ‘சமத்துவப் பொங்கல்’ எனும் பெயரில் தேவாலயங்களிலேயே கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

கல்லூரிகளில் பொங்கல் விடுமுறை துவங்குவதற்கு முன் நாள் மாணவர்-மாணவியர் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமையாகச் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஒன்றாகக் கூடி உண்டு களிப்பதையும் நாம் ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். 

Equity Pongal in educational institutions

எல்லாவற்றுக்கும் மேலாக, தென் தமிழகத்தில் இசுலாமியத் தமிழர்களுக்கும் இந்து போன்ற பிற சமுகத் தமிழர்களுக்கும் இடையே மாமன் – மைத்துனன், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் எனக் குடும்ப உறவுமுறைகளே கூட இன்றும் உள்ளன! உலகில் வேறெங்குமே காண முடியாத, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இஃது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.

ஆக, தமிழர் திருநாளான பொங்கல் மட்டுமில்லை, தமிழர்களின் உறவுமுறைகளே கூடக் காலம் காலமாகச் சமய எல்லைகள் கடந்து கொண்டாடப்பட்டு வருபவைதாம்!

தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் இந்த உறவுமுறையைத் தமிழ்நாடு முழுவதுமே பரவலாக்க, உலகில் தமிழ் மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் தழைக்கச் செய்யக் காணும் பொங்கல் ஒரு சிறப்பான தேர்வு.

சொந்த ஊரில் வாழ்கிற உறவுகளைத் தேடிச் சென்று பார்க்க முடியவில்லை என்பதற்காகக் காணும் பொங்கலை வெறும் கேளிக்கைப் பூங்காக்களில் கழிக்காமல் அக்கம் பக்கத்திலுள்ள மற்ற சமயத்து மக்களோடு செலவிட்டால் தமிழ் மண்ணுக்கே உரிய இந்தச் சமயம் கடந்த உறவுமுறைப் பெருமை காலத்துக்கும் தொடரும்; தமிழர் தனிப்பெரும் விழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊறி என்றென்றும் நீடிக்கும்.

அதற்காக மட்டுமில்லை, எல்லாச் சமயத்தினரும் உதிரம் சிந்திப் பெற்றுத் தந்த விடுதலையை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது இந்நாடு; ஆனால் இந்து எனும் ஒற்றைச் சமயத்துக்கான நாடாக இதை மாற்ற இப்பொழுது முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நேரத்தில் சமயம் கடந்த இத்தகைய உறவுமுறைகளை நம் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதும் கட்டிக் காப்பதும் காலத்தின் கட்டாயம்!

எனவே இனியும் காணும் பொங்கலை வெறும் சொந்தங்களுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்கும் விழாவாக இல்லாமல் வழிவழியாக இங்கே சாதி – சமய எல்லைகள் கடந்து நிலவி வரும் உறவுமுறைகளை மீட்டெடுக்கும் விழாவாகக் கொண்டாடுவோம்! நாடெங்கும் பரப்பப்படும் சமயவாதப் பெருந்தீயை அன்பெனும் மாமழையால் அணைத்துக் காட்டுவோம்! 

அனைவர்க்கும் அன்பு கமழும் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு,
திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Kaanum Pongal - The celebration that lubricating the relationship chain of Tamils
(காணும் பொங்கலுக்காக நான் தினச்செய்தி நாளிதழில் எழுதியது).

படங்கள்: நன்றி Giphy.com, நியூசு 7.

தொடர்புடைய பதிவுகள்:

ஞாயிறு, ஜனவரி 13, 2019

சூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது!

Farmers are the Real Heroes
ம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் வெயில், மழை போன்ற இயற்கைக் கூறுகளை நம்பி உழவுத்தொழில் செய்தோம்; அதனால் அவற்றின் மூலம் கிடைத்த விளைச்சலைச் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினோம். ஆனால் இன்று நம் வேளாண்மை முழுக்க முழுக்கச் செயற்கைப் பாசன முறைகளை நம்பித்தான் இருக்கிறது. குறிப்பாக, காவிரி! அந்தக் காவிரி நீர் - காவிரி மேலாண்மை ஆணையம் - நமக்குக் கிடைக்கக் காரணம் நம் அய்யாக்கண்ணு ஐயா முதலான உழவர் பெருமக்களும் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும்தாம்.

செவ்வாய், ஜூன் 06, 2017

இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?

Cow Politics
ரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”

பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.

நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.

நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,

திங்கள், ஏப்ரல் 17, 2017

தமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம்! - யாருக்குத் தலைக்குனிவு?

எச்சரிக்கை!!!
இந்தப் பதிவு, இதிலுள்ள படங்கள், இணைப்புகள் ஆகியவை மனித உடலைக் காட்சிப்படுத்துதல் தொடர்பானவை. எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்கவோ பார்க்கவோ வேண்டா!

A Tamil Nadu Farmer in Naked Protest

ன்று பகல் நான் சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரெனத் தொலைக்காட்சியில் ஓடியது அந்தச் செய்தி - “பிரதமர் அலுவலகத்தின் முன்னால் தமிழ்நாட்டு உழவர்கள் முழு அம்மணப் போராட்டம்” என்று.

அப்படியே உறைந்து போய்விட்டேன்! இதற்கு மேலும் ஒரு போராட்டம் நடத்த முடியுமா? மானத்தை உயிரினும் மேலாய்ப் போற்றுபவர்கள் தமிழர்கள். ஆனால், இதோ எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றுவதற்காக அந்த மானத்தையும் இழந்தாகி விட்டது! இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது தமிழர்களிடம்?... இதற்கு மேலும் என்ன செய்தால் நியாயம் கிடைக்கும் நம் உழவர்களுக்கு?...

ஆனால், இவ்வளவும் நடந்த பிறகும், இன்றளவும், போராடுகிற வேளாண் பெருமக்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நல்லவர்கள் சிலர்.

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் போராட்டம் சரியா தவறா?

வெள்ளி, மார்ச் 10, 2017

நெடுவாசல்! – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்!

Save Neduvasal
நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நான் ‘கீற்று’ மின்னிதழில் எழுதிய கட்டுரை...
 மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை, நாட்டின் தலைவாசல் எடுத்திருக்கும் தவறான முடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது தமிழ்நாட்டின் எளிய சிற்றூரான நெடுவாசல்! 

H.Raja
பா.ஜ.க., சார்பில் பல அரிய கருத்துக் கருவூலங்களைத் தொடர்ந்து அள்ளி அள்ளி வழங்கி வரும் எச்.ராஜா, இந்தப் பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாரும் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்று. ஆனால், போராட்டக்காரர்களைப் பார்த்து அதே பா.ஜ.க-வினர் கேட்கும் கேள்வி என்னவெனில், “இந்த நீரகக் கரிமத் (Hydro Carbon) திட்டத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமா கொண்டு வருகிறோம்? இந்தியா முழுக்க 31 இடங்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுவது போல ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்பது.

பா.ஜ.க-வினரின் இந்தக் கேள்வியிலேயே எச்.ராஜாவின் குற்றச்சாட்டு எவ்வளவு தவறு என்பதற்கான சான்றும் அடங்கியுள்ளது.

திங்கள், ஜனவரி 09, 2017

இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?

Tanjore farmers in the clutches of death

ந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!

விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!

ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?

நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.

தமிழ்நாடு அரசே!...

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?

எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்