.
அ.தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.தி.மு.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2022

இது தமிழ் மக்களுக்கு அ.தி.மு.க., செய்யும் இரண்டகம் (Betrayal) - ஒரு போன்மி (meme)

ருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து (NEET) தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டமுன்வடிவை (bill) இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் தமிழ்நாட்டு மக்களின் அந்த ஒருமித்த எதிர்பார்ப்பையும் நலன்களையும் காலில் போட்டு மிதிக்கும் விதமாய் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். இது குறித்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முறையே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் சற்றும் கூச்சமே இல்லாமல் அதைப் புறக்கணிப்பதாக அறிவிக்கிறது அ.தி.மு.க. இந்த நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் பா.ச.க., கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் இதே நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஆளும் தி.மு.க., அரசு சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் ஆதரவளிப்பதாகச் சட்டமன்றத்தில் கூறிவிட்டு அ.தி.மு.க., இன்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வடிகட்டிய இரண்டகம் (betrayal)! எனக்கு இதைப் பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா? இதோ கீழே பாருங்கள்:-

ADMK & BJP refused to participate in all parties' conference on NEET exception bill

படம்: நன்றி மோகனா மூவீசு

புதன், மார்ச் 24, 2021

அதோ, அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்! - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை

Modi with Edappadi Palanisamy and O.Panneerselvam
ன்புத் தமிழ் நெஞ்சங்களே!
அதோ அவர்கள் வருகிறார்கள்!
நம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
யார் அவர்கள்?...
கொஞ்சம் நன்றாகப் பாருங்கள்!

திருவள்ளுவர் மீது காவிக்கறை பூசியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
பெரியார் சிலையின் தலையை உடைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் உயர்நீதி மன்றத்தையே மயிரென்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

சல்லிக்கட்டுப் போராட்டத்தில்
நம் பிள்ளைகளை அடித்து நொறுக்கியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை அனிதாவின்
தற்கொலையைக் கொச்சைப்படுத்தியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்குத்
தமிழகத்திலேயே தடை கேட்டவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“கேந்திரிய வித்தியாலயப் பள்ளிகளில்
தமிழுக்கு இடமில்லை” என்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

குழந்தை ஆசிபாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை சுனோலினை வாயில் சுட்டுக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
செய் சிரீராம் என்று சொல்ல மறுத்தவனை
உயிரோடு கொளுத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக
மனிதனை அடித்துக் கொன்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

“தமிழ்நாட்டை இருவேறு மாநிலங்களாகப் பிரித்துக் காட்டுவோம்” என்று
சூளுரைத்திருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழை விட சமற்கிருதமே மூத்தது” என்று
நாடாளுமன்றத்திலேயே நாக்கூசாமல் புளுகியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்” என்று
தமிழ் மண்ணிலேயே கொக்கரித்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி வளாகத்துக்குள்
குண்டு வீசுவோம் என்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இருமொழிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு
இந்தித் திணிப்புக்குப் பட்டுக் கம்பளம் விரித்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்து
நம் அரசுக் கல்லூரிகளில் நமக்கே இடமின்றிச் செய்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உச்சநீதி மன்றமே சொன்ன பின்னும்
ஏழு தமிழர் விடுதலையை வேண்டுமெனவே இழுத்தடிப்பவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
முகிலன், பியூஷ் மானுஷ் என்று
சூழல் காக்கப் போராடியவர்களையெல்லாம்
சித்திரவதை செய்து முடக்கியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

தேசியக் கல்விக் கொள்கை என்று சொல்லி
நம் குழந்தைகளின் கல்வியில்
மண்ணள்ளிப் போட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
ஒரே நாடு - ஒரே வரி என்று
ஒரேயடியாக நம் சிறு-குறு தொழில்களுக்கெல்லாம்
மூடுவிழா நடத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நமது மாநில அரசுப் பணியிடங்களையெல்லாம்
வடமாநிலத்தவர்களுக்கு வாரி இறைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இசுலாமிய உடன்பிறப்புகளையெல்லாம்
குழந்தை குட்டியோடு சிறையில் தள்ளக்
கட்டடம் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

ஊருக்கே சோறிட்ட உழவன் வீட்டுச் சோற்றுப் பானையை
எட்டு வழிச் சாலைக்காக எட்டி உதைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நாடாளுமன்றத்தின் முன் நம் வேளாண் பெருமக்களை
ஆடையின்றி ஓட விட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மொத்த நாட்டு விலைவாசியையும் தீர்மானிக்கும் உரிமையை
எண்ணெய் நிறுவனங்களுக்கே எழுதிக் கொடுத்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மூன்று வேளை உணவு கூட இனி
பணம் படைத்தவனுக்கே என்று
வேளாண் சட்டத்தைத் திருத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இவர்களுக்கு வாக்களிப்பதா?!
இன்னும் ஒரு வாய்ப்பளிப்பதா?!
தமிழ்நாட்டுப் பெருமக்களே!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
நாம் வாழ வேண்டுமானால்
இவர்களைத் தோற்கடிக்க வேண்டும்! – அதற்கு
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நான் சொல்லத் தேவையில்லை – ஏனெனில்
அஃது உங்களுக்குத் தெரியாததில்லை!

ஏப்ரல் 6, 2021-தான்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!...
வாக்குரிமையே வாழ்வுரிமை!
சிந்தித்துச் செயல்படுவோம்!
நம் பிள்ளைகள் எதிர்காலம்
இன்னும் நம் விரல்நுனியில்! 

 (நான் ‘கீற்று’ இதழில் 24.03.2021 அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி ஏ.என்.ஐ.

கவிதையின் கருத்து சரியானது எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளை அழுத்தி மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம் வரலாற்று முக்கியம் மிக்க இந்தத் தேர்தலில் நல்லாட்சி மலர உதவுங்கள்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

ஞாயிறு, மே 27, 2018

ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!

Sterlite Shoot out
ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

“வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது!

புதன், மே 31, 2017

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன? அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல்

Rajini's Political Speech
ஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.

எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால்,

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!



“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்!”

‘முதல்வன்’ திரைப்படத்தில் சுஜாதா அவர்கள் எழுதிய உரையாடல்! அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது!

ஞாயிறு, ஜனவரி 22, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!

Tamil-flag
லக உருண்டை சுழலத் தொடங்கிய நாள் தொட்டு இல்லாத புதுமையாக முதன் முறையாய்க் காளைகளைக் காப்பாற்றப் புலிகள் களமிறங்கியிருக்கின்றன தமிழ் மண்ணில்!

2017 சனவரி 8 அன்று சென்னை மெரினாவில் தொடங்கிய எழுச்சிப் பேரலை தமிழ்நாடு முழக்கப் பரவி, இப்பொழுது உலகம் முழவதும் ஆழிப் பேரலையாய் விண்ணைத் தொட்டு வீசிக் கொண்டிருக்கிறது! தமிழர்கள் மட்டுமில்லை மலையாளிகள், மகாராட்டிரர்கள், வெள்ளையர்கள், அராபியர்கள் எனப் பிற மாநிலத்தினர் முதல் வெளிநாட்டினர் வரை மனித இனம் மொத்தமும் இன்று தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்கிறது!


“இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசியதெல்லாம் அந்தக் காலம். ஆங்கில வழியில் படித்து, அயல்நாட்டுக்காக இங்கிருந்தே பணி செய்யும் உலகமயமாக்கல் காலக்கட்டம் இது. இனி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை” என்று ஆட்சியாளர்கள் இறுமாந்திருந்த வேளையில் அதுவரை இல்லாத பேரெழுச்சியாய் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் ஈழத்துக்காகப் போராடிய இளைஞர்கள்.

அது நடந்த மிகக் குறுகிய காலக்கட்டத்துக்குள், தமிழினப் படுகொலை போன்ற தலை போகிற பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல தமிழர்களின் ஒரு சிறு பண்பாட்டு அடையாளத்துக்கு ஊறு நேர்ந்தாலும் சரி, விட மாட்டோம் என இதோ களத்தில் வந்து நிற்கிறார்கள் தமிழ்ப் பிள்ளைகள்! இதுநாள் வரையில் நம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் போராடிய அத்தனை பேரும் நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொள்ள வேண்டிய தறுவாய் இது!

ஆனாலும் “நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் ஜல்லிக்கட்டுக்குப் போய் இவ்வளவு பெரிய போராட்டம் தேவையா?” என்கிற கேள்வி இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லாத் தளங்களிலும். முட்டாள்தனம்!

ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருப்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பால் அரசியல்! அதைக் குறி வைத்துத்தான் உயிர்கள் மீதான இரக்கம் எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன பீட்டா போன்ற முதலைகள். இந்தப் பிரச்சினை மட்டும் அவர்களுக்கு சாதகமாக முடிந்து விட்டால் நாட்டு மாடுகளின் இனமும் அவை தரும் பாலும் அழிந்து கலப்பினப் பசும்பால் மட்டுமே இங்கு கிடைக்கும் என்கிற சூழல் உருவாகும். அப்படி நடந்தால், நாளடைவில் மொத்தத் தமிழ்நாடும் நோய்களின் கூடாரமாக மாறி விடும்! இதை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மட்டும் சொல்லவில்லை, மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். கலப்பினப் பசுக்களின் பால் உண்மையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் நஞ்சு என அவர்கள் எச்சரிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, இதோ ஒரு விழியம்!

செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7

Jallikkattu - A Political Game

மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு!...

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!

"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத் 

திங்கள், ஜனவரி 09, 2017

இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?

Tanjore farmers in the clutches of death

ந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!

விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!

ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?

நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.

தமிழ்நாடு அரசே!...

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?

எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!

வியாழன், மே 26, 2016

மாற்று அரசியல் தோற்று விட்டதா? - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல்!


Is Alternate Politics Failed?

தேர்தல் - 2016 (பகுதி - 5) 

யிர் போகும் தறுவாயில் கிடைத்த சஞ்சீவினி மூலிகையைச் சுருட்டிப் ‘பீப்பீ’ ஊதியிருக்கிறார்கள் தமிழ் மக்கள்! மாற்று அரசியல் முயற்சிகளுக்கு மக்கள் அளித்த தோல்வியைத்தான் சொல்கிறேன்.

மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்பது ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்த அளவுக்கு இழிவான படுதோல்வியை அடையும் என்று யாருமே நினைக்கவில்லை. மேலும், புதிதாக யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், வழக்கம் போல அ.தி.மு.க தோற்றுத் தி.மு.க ஆட்சி அமையும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, முதன் முறையாக இந்தத் தடவை அரசியல் நோக்கர்களின் கணிப்பு பலித்துத் தொலைத்தது!

இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்ன? மக்களுக்கு உண்மையிலேயே கருணாநிதி, ஜெயலலிதா தவிர வேறு யாரையுமே பிடிக்கவில்லையா? அல்லது, மக்கள் நலக் கூட்டணியால் விளைந்த விபரீதமா இது? பார்க்கலாம் வாருங்கள்!

அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே தி.மு.க-தான்! தி.மு.க-காரரே வாய் தவறி ஒப்புக் கொண்ட உண்மை - விழியச் (video) சான்றுடன்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்