.

திங்கள், மே 05, 2014

உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்!


Aga Sivappu Thamizh - The Blog must read by every Tamil!

நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது இரண்டாம் ஆண்டில்!

ஆம்! முதன்முதலில் என் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 12.11.2012 அன்று அவர் கையால் நிறுவப்பட்ட இந்த வலைப்பூ, கடந்த ஆண்டு என் தம்பியின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 23 அன்று தன் முதல் பதிவை வெளியிட்டது.

அந்த இனிய நாளை இப்பொழுது நான் நினைவு கூர்கிறேன்.

அந்த வலைப்பூ வெளியீட்டு நிகழ்வையே ஒரு குட்டி நூல் வெளியீட்டு விழா போலத்தான் நாங்கள் அரங்கேற்றினோம்.

தளத்தின் முதல் பதிவை என் தம்பி ஜெயபாலாஜி வெளியிட, தளத்தின் தலையாய பகுதியான ‘பற்றி’ பக்கத்தை (About page) என் அப்பா இளங்கோவன் அவர்கள் வெளியிட்டார். தளத்தின் பெருமையைப் பறைசாற்றும் முதன்மை உறுப்பான பக்கப் பார்வைகள் செயலியை (Pageviews Widget) என் பாட்டி சொக்கம்மாள் அவர்கள் நிறுவ, தளத்தின் முதல் கருத்தைப் பதிவு செய்தார் என் அம்மா புவனேசுவரி அவர்கள். (ஆனால், அதற்குள்ளாகவே நண்பர் கிங் விஸ்வா முதல் ஆளாகக் கருத்திட்டு விட்டது மறக்க முடியாத நட்பின் இனிமை!).

‘பற்றி’ பக்கத்தில் தளம் குறித்து எழுதிய பாவைப் (poetry) பாராட்டி ‘எதிர்வினைகள்’ பட்டியில் (Reactions Bar) வாக்களித்ததன் மூலம் என் சித்தி குணலட்சுமி அவர்கள் முதல் ஆளாகத் தளத்துக்கு ‘விருப்பம்’ தெரிவிக்க, முதல் பதிவுக்கான வாக்கை அளித்துத் தளத்தின் இடுகைக்கான முதல் ‘விருப்ப’த்தைப் பதிவு செய்தார் சித்தப்பா மோகன்குமார் அவர்கள்.

அப்படித் தொடங்கிய இந்த வலைப்பூவுக்கு இந்த ஓராண்டில் நீங்கள் அளித்திருக்கும் வளர்ச்சி பற்றி இதோ உங்கள் மேலான பார்வைக்கு:

மொத்தப் பதிவுகள்: 30

மொத்தக் கருத்துக்கள்: 171 (என் பதில்கள் உட்பட | பிளாக்கர் கருத்துப்பெட்டி + முகநூல் கருத்துப்பெட்டி)

மொத்தப் பார்வைகள் (Total Pageviews): 24,000+ (சராசரியாக ஒரு நாளுக்கு 65 பார்வைகள்)

மொத்த அகத்தினர்கள் (Followers): 266 (சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து)

வருகையாளர்களை அழைத்து வருவதில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் தளங்கள்:


தளங்கள்
பார்வைகள்

3274

1394

787

578

477

399

210

160

144

114




உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:






‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:


நாடுகள்
பார்வைகள்
இந்தியா
12989
அமெரிக்கா
3352
இரசியா
1477
ஐக்கிய அரபு நாடுகள்
716
இலங்கை
546
சிங்கப்பூர்
497
இங்கிலாந்து
472
கனடா
463
ஆத்திரேலியா
366
பிரான்சு
292



நினைவில் கமழும் நிகழ்வுகள்!

Memories are fragrancing in the Heart Flower!

'தமிழ்மணம்' திரட்டியில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘அகச் சிவப்புத் தமிழ்’ 806ஆவது இடத்தைப் பிடித்தது அதன் வளர்ச்சி குறித்துக் கிடைத்த முதல் மகிழ்ச்சி! (தரவரிசையின் கடைசி எண் 1077).

அடுத்து, ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?’ பதிவு அடைந்த பெரும் வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. ஒரே நாளில் 250-க்கு மேல், ஒரே மாதத்தில் 1500-க்கு வாரத்தில் 3500-க்கு மேல் எனப் பக்கப் பார்வை எண்ணிக்கையில் எகிறியடித்த இந்தக் கட்டுரை. அந்த ஒரு வாரத்துக்குள் 591 முகநூல் விருப்பங்களையும் பெற்றது.* (கூகுள்+, கீச்சுப் பகிர்மான எண்ணிக்கைகள் தனி!). இன்றும் 4200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்வையிடப் பெற்று இந்தப் பதிவு முதலிடத்தில் இருக்கிறது! பார்வை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க, தமிழ் ஆர்வலர்கள் பலரின் பாராட்டுக்களையும் இக்கட்டுரை பெற்றதுதான் பெருமை தரும் நிகழ்வு.

அடுத்தது, நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞரும், முன்னோடிப் பதிவருமான ‘மாதவிப்பந்தல்கண்ணபிரான் (கே.ஆர்எஸ்) அவர்களே வந்து இழிவானதா இனப்பற்று? எனும் என் பதிவைப் படித்துவிட்டு ஆதரவாகக் கருத்தளித்தது. நான் இன்றும் நினைத்து மகிழும் நிகழ்வு அது!

இதற்கடுத்ததாக, என் வலைத்தொழில்நுட்ப ஆசான் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்களே வந்து முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்! என்கிற என் தொழில்நுட்பப் பதிவைப் பாராட்டி எழுதியது பெருமிதம் பொங்கிய தறுவாய்!

இதுவரை பார்த்த பதிவுகள் அளவுக்குப் பக்கப் பார்வைகளையோ, முன்னோடிகளின் பாராட்டையோ அவ்வளவாகப் பெறாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் என் உள்ளத்துக்கு மிக மிக நிறைவை அளித்தவை,

தமிழினப் படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசு சுமத்திய அபாண்டக் குற்றச்சாட்டை உடைக்கும் வகையிலான ஆணித்தரமான ஒரு வாதத்தை 2009இலிருந்தே நான் நண்பர்களிடம் கூறிக் கொண்டுதான் இருந்தேன். அதை ஒரு முறை ‘தோழமை’ மடலாடற்குழுவிலும் பதிவு செய்திருந்தேன். அதை மேற்கண்ட பதிவு மூலம் இணையத்தில் நிலையாகக் காட்சிக்கு வைத்தது, தமிழன் எனும் முறையில் நான் என் இனப் போராளிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஓரளவாவது நிறைவேற்றினேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தது.

சிறுவர் இலக்கியம் அழிந்தால் தமிழ் மொழியே அழியும் எனும் கருத்தை நான் வெகு காலமாகவே கூறி வருகிறேன். இது பற்றி நான் எழுதிக் கொடுத்த சொற்பொழிவைத் தோழர் பிரகாஷ் அவர்கள் மேடையேற்றியபொழுது அவர்தம் கல்லூரித் தமிழாசிரியர் அதைப் பாராட்டியது, அதே கருத்தைக் ‘கல்கி’ இதழ் ஆசிரியருக்கு எழுதி அனுப்பி, அவர்கள் நடத்தும் ‘கோகுலம்’ சிறுவர் இதழை முன்னேற்றச் சில நடவடிக்கைகள் எடுக்குமாறு நான் அளித்த பரிந்துரைகளை ஏற்று அவரும் அவற்றுள் சிலவற்றை முயன்று பார்த்தது ஆகியவையெல்லாம் அந்தக் கருத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிகள்! அப்படிப்பட்ட அந்த வெகுநாள் கருத்தை மேற்கண்ட இரண்டாவது இடுகை மூலம் நிலையாகப் பதிவு செய்தது, என் தாய்மொழிக்கு என்னாலான ஒரு சிறு தொண்டைப் புரிந்த நிறைவைத் தந்தது.

நன்றி!

Thanks!

இணையப் பெருஞ்சோலையில் நேற்று முளைத்த இந்தச் சிறு (வலைப்)பூவையும் பொருட்படுத்தி, இந்தச் சிறுவனின் கருத்துக்களைக் கூட மதித்து வந்து படித்த, வாக்களித்த, பகிர்ந்த அனைவர்க்கும் முதலில் வானளாவிய நன்றி!

தளத்தை வடிவமைக்கும்பொழுது மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களை அரும்பாடுபட்டுச் சரி செய்தளித்த நண்பர்கள் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா, ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித், ‘ஒன்லைன் பதில்!’ அப்துல் பாசித் ஆகியோருக்கு நன்றி!...

வலைப்பூ நடத்துவது பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத நான் இன்று மற்றவர்களுக்கு வலைப்பூ வடிவமைத்துத் தருமளவுக்கு முன்னேற இன்றியமையாக் காரணிகளாய் விளங்கிய பிளாக்கர் நண்பன், கற்போம், பொன்மலர், தங்கம்பழனி வலைத்தளம், வந்தேமாதரம் ஆகிய தளங்களுக்கு நன்றி!...

(முதலாமாண்டு நிறைவு பற்றிய இந்தப் பதிவை எப்படி எழுத வேண்டும் என்பது கூட ‘பிளாக்கர் நண்பன்’ தளம் பார்த்துக் கற்றதுதான்!)

வலைத்தளத்துக்கான இலச்சினை (Logo), பதாகை (Banner) இரண்டையும் வரைந்து கொடுத்த நண்பர் கண்ணதாசன் அவர்கள், அதற்கு இறுதி வடிவம் கொடுத்த, மைத்துனரும் பிறவித் தோழருமான பிரகாஷ் அவர்கள் இருவருக்கும் நன்றி!...

‘அகச் சிவப்புத் தமிழ்’ப் பதிவுகளைப் பார்த்து விட்டு முகநூல், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் என்னோடு இணைந்த புதிய நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக- ஒரு பதிவு விடாமல் படித்துப் பாராட்டியும், கருத்து தெரிவித்தும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் ந.சக்கரவர்த்தி, திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் நன்றி!...

முதன்முதலாகத் தன் தமிழ்விடுதூது வலைப்பூவில், படிக்க வேண்டிய தளங்கள் பட்டியலில் தமிழ் நூலகம், மாதவிப் பந்தல், முதலான போற்றுதலுக்குரிய தளங்களின் வரிசையில் ‘அகச் சிவப்புத் தமி’ழையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய, நான் கொஞ்சம் தளர்ந்து போன ஒரு நேரத்தில் தானே முன்வந்து ஆறுதலளித்த நண்பர் சக்திவேல் காந்தி அவர்களுக்கு நன்றி!...

நான் வலைப்பதிவு தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களில் தெறித்த தமிழுணர்வைப் பாராட்டி இணைய இதழ்களில் அவற்றை வெளியிட்டு ஊக்குவித்தவரும், கருத்துரீதியாக, தகவல்ரீதியாக நான் ஏதும் தவறு செய்தால் உடனுக்குடன் வழிகாட்டுபவருமான ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு நன்றி!...

வலைப்பூ தொடங்கியதாகச் சொன்ன உடனே ஓடோடி வந்து முதல் ஆளாகக் கருத்திட்ட நண்பரும், முன்னோடிப் பதிவருமான கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி!...

தொடங்கியவுடனே முதல் ஆட்களாக வந்து உறுப்பினர்களாகி நம்பிக்கையூட்டிய நண்பர்கள் ரமேஷ் கருப்பையா, வெற்றிப்பேரொளி சோழன், கார்த்திகைப் பாண்டியன், தமிழ்நாடன், யாழ்காந் தமிழீழம், அப்துல் பாசித் (பிளாக்கர் நண்பன்) ஆகியோருக்கு நன்றி!...

தளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூகவலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு நன்றி!...

தளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கு நன்றி!...

இடுகைகளுக்கான படங்களை வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு நன்றி!...

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாக்கருக்கு நன்றி!...

இன்று நான் இப்படி நான்கு பேர் படித்துப் பாராட்டும் அளவுக்கு எழுதக் கற்றிருக்கிறேன் என்றால் அதற்கு எல்லா வகையிலும் இன்றியமையாக் காரணிகளாகத் திகழும் என் குடும்பத்தினர், உறவினர்கள் எனும் சொல்லால் நான் குறிப்பிட விரும்பாத வீட்டுக்கு வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என்றே அழைக்க விரும்புகிற பெருமக்கள், நெஞ்சம் நிறைந்த நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் முத்தாய்ப்பான நன்றி!...

காணிக்கை

My Grandpa R.KulaSekaran

எனக்கு...

கண்ணதாசன் பாடல்களில் செறிந்த கவித்துவத்தை வரி வரியாக விளக்கி...

திராவிட இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பொதிந்திருந்த நியாயத்தைப் புரிய வைத்து...

வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைக் கதை கதையாக எடுத்துக் கூறி...

தமிழன் எனச் சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமிதத்தை உணர்வித்து...

எனது இன்றைய தாய்மொழிப்பற்று, இனப்பற்று, ரசனை, படைப்புணர்வு, சமூக அக்கறை அனைத்துக்கும் மூல முதற் காரணமான என் தாத்தா ஆர்.குலசேகரன் அவர்களுக்கு இந்த வலைப்பூவின் இந்த முதலாமாண்டுச் சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

பி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்! 

படங்கள்: நன்றி Fraja algerie, பூரியம்

*தகவல் பிழையும் விடுபாடும் பின்னர் அறிந்து திருத்தப்பட்டது. 

இந்தப் பதிவைக் கீழ்க்காணும் சமூக வலைத்தளங்களிலும், திரட்டிகளிலும் பகிர்வதன் மூலம் உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் பன்மடங்காகப் பெருகுமே!

வெள்ளி, ஏப்ரல் 11, 2014

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான தேர்தல் திட்டம் (இறுதிப் பகுதி)


Parliament Election-2014

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது பற்றி அலசும் இந்தத் தொடரில் தி.மு.க-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏன் வாக்களிக்கக்கூடாது என்பது பற்றிக் கடந்த பதிவில் பார்த்தோம். மிச்சக் கட்சிகள் பற்றி இந்த இறுதிப் பதிவில்...

தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரியா காங்கிரசு?
Avoid Congress!

காங்கிரசு எதிர்ப்பு என்பதே தமிழ்ப் பற்றின் காரணமாக எழுவதுதான் என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். தவறு! அதுவும் ஒரு காரணம்; அது மட்டுமே காரணமில்லை.

தமிழர்கள் மட்டுமில்லை, இந்தியாவில் எந்தப் பகுதியில் எத்தனை மக்கள் செத்தாலும் அது பற்றிக் காங்கிரசுக்கு எந்த வித அக்கறையும் கிடையாது என்பதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டுதான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதல். அது மட்டுமா?
See the Cruelty of Endosulfan!
கருவிலிருக்கும் குழந்தைகள் உட்பட வருங்காலத் தலைமுறையையே அழித்துவிடக்கூடிய எண்டோசல்பான் போன்ற தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக அரங்கில் குரல் கொடுப்பது, சொந்த நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது, அயல்நாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் சீரழிப்பது, அதைத் தட்டிக் கேட்கும் மக்களை இராணுவத்தை வைத்துக் கொல்வது, குப்பையில் தூக்கிப் போட வேண்டிய தரத்திலுள்ள போர்க் கப்பல்களையும், விமானங்களையும் வாங்கி அந்த இராணுவ வீரர்களையும் அழிப்பது எனக் காசு கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொடூரத்தையும் யாருக்கும் செய்யத் தயங்காத காங்கிரசு, தமிழர்களுக்கோ, இந்திய மக்களுக்கோ மட்டுமில்லை, மனித இனத்துக்கே, உலக உயிரினங்கள் அனைத்துக்குமே தீங்கு விளைவிக்கும் கட்சி!!

ராகுல் ஆட்சிக்கு வந்தால் நாட்டையே புரட்டிப் போட்டு விடுவார் என இங்கே சில இளைஞர்கள் எதிர்பார்க்கிறீர்கள். தமிழர் பிரச்சினைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் நினைப்பது போல் அவர் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கும் நல்லவர், வல்லவர் என்றே வைத்துக் கொள்வோம். ஒன்றா, இரண்டா, மூன்றா... கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய கட்சிதானே இங்கே ஆண்டது? புதிதாக என்ன செய்தார் அவர்? சிந்தித்தீர்களா? கேட்டால் அவர் கையிலா அதிகாரம் இருந்தது என்பீர்கள். அவர் அம்மாதானே நாட்டையே வழிநடத்தினார் இந்தப் பத்தாண்டுகளில்? பெற்ற தாயையே தன் வழிக்குக் கொண்டு வர முடியாதவர் நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணித் தலைவர்கள் அத்தனை பேரையும் தன் வழிக்குக் கொண்டு வந்து, தன் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றி ஒரு சிறப்பான நல்லாட்சியை வாரி வழங்கி விடுவார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 67 ஆண்டுக்கால இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மக்களைச் சீரழித்த, நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஓர் ஆட்சியை இந்தியா சந்தித்ததே கிடையாதே, அப்படிப்பட்ட இந்த ஆட்சியைத் திருத்தவோ, இதன் மனித விரோதப் போக்குக்கு எதிராகவோ ஒரு வார்த்தையாவது அவர் வாய் திறந்து இதுவரையில் பேசியதுண்டா? அப்படிப்பட்டவர் தான் ஆட்சிக்கு வந்தால் மட்டும் கிழித்துக் கீரை விதை நட்டு விடுவாரா? கொஞ்சமாவது சிந்தியுங்கள் நண்பர்களே!

“உங்களுக்குப் பிடித்த தலைவர் யார்எனக் கேட்டால் பெண் எனும் ஒரே காரணத்துக்காக சோனியாவின் பெயரைச் சொல்லும் இளம்பெண்களே! சோனியா என்ன செய்தார் என்பது தெரியுமா? ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது அவர் நடந்து கொண்ட விதம் உங்களுக்குத் தெரியுமா? ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்று கூறியபொழுது, “அதெல்லாம் அந்த நாட்டு உள்விவகாரம். அதில் நாம் என்ன செய்ய முடியும்?என்று கூறி விட்டு இரண்டாயிரம் கோடியையும், அளவற்ற இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து அந்தக் கொடுமை தொடர வழி செய்தவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஈழ இனப்படுகொலையை நிறுத்த அமெரிக்கா களமிறங்கத் தீர்மானித்தபொழுது ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுத்து நிறுத்தியவர் அவர் என்பது தெரியுமா? தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை வேடிக்கை பார்ப்பவர் அவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்கு எதிராகவும், மனிதநேயத்துக்கு எதிராகவும் இவ்வளவு கொடுமைகளைச் செய்த, செய்கிற ஒருவருக்குப் பெண் என்னும் ஒரே காரணத்துக்காக வாக்களிக்கப் போகிறீர்களா? சிந்தியுங்கள்!

தமிழர்கள் மட்டுமில்லை, ஆறாம் அறிவு கொண்ட எந்த மனிதப் பிறவியும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்!

பொதுவுடைமைக் கட்சிகள் (எ) காங்கிரசு! (Communists alias Congress)

Communism with Capitalism

நேர்மை, அர்ப்பணிப்பு, கொள்கையில் உறுதி, மக்களுக்காகக் களமிறங்கிப் போராடுதல் என இந்திய அரசியலில் வழக்கொழிந்து விட்ட அரிய குணங்களையெல்லாம் இன்றும் கடைப்பிடிப்பவர்கள் நம் சிவப்புத் துண்டுத் தோழர்கள்! ஈழத்து இனப்படுகொலையின்பொழுது கூட அதற்காக இங்கே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி இந்தியப் பொதுவுடைமைக் (இந்தியக் கம்யூனிஸ்டு) கட்சிதான் என்பது எக்காலத்திலும் தமிழர்கள் மறக்கக்கூடாத ஒன்று!

ஆனால், மூன்றாம் அணிக்கு வாக்களிப்பது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கிற ஒரே காரணம் அவர்களுடைய காங்கிரஸ் ஆதரவு!

மதச்சார்பின்மை எனும் ஒரே ஒரு காரணத்துக்காக, காங்கிரஸ் எப்பேர்ப்பட்ட மோசமான ஆட்சியை நடத்தினாலும் பொதுவுடைமைக் கட்சிகளின் (Communists) அவர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன!

2004 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான தொகுதிகளை வென்ற பொதுவுடைமைக் கட்சிகள், காங்கிரசோ பா.ஜ.க-வோ ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக மக்கள் தங்களுக்கு அளித்த அந்தப் பெரும் வெற்றியைக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவே பயன்படுத்தின.

ஆனாலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் மக்கள் இவர்களை நம்பி வாக்களித்தார்கள். ஆனால், மறுபடியும் பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவைக் காங்கிரசுக்குத்தான் வழங்கின. இதற்கு எதற்காக மூன்றாவது அணி? நேரடியாகக் காங்கிரசுக்கே வாக்களித்து விடலாமே?

இது விதயத்தில் தி.மு.க-வுக்கும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பதும் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் ஒன்றேதான். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாரும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு, மூன்றாவது அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்!

வாக்களிக்கலாமா ஆம் ஆத்மிக்கு?

தேசிய அளவில் பார்க்கும்பொழுது காங்கிரசு, பா.ஜ.க இரண்டுக்கும் சரியான மாற்று ஆம் ஆத்மிதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், எந்தத் தமிழ்க் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இந்தத் தேர்தலைச் சந்திக்கும் அவர்களுக்கு நாம் வாக்களித்தால், நாளை ஆட்சிக்கு வந்த பின், தமிழர் பிரச்சினைகளில் அவர்கள் தவறான போக்கைக் கையாண்டால் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது யார், தமிழர் சார்பாக அவர்களுடன் பேசுவது யார் என்பது பெரிதும் அச்சுறுத்துகிற கேள்வி.

இதையும் மீறி நாம் அவர்களுக்கு வாக்களித்தாலும், முதன்முறை நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிற அவர்கள், அதுவும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் நாடு முழுவதும் தனித்துப் போட்டியிடும் அவர்கள், தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றாவிட்டால் அவர்களை நம்பி வாக்களிக்கும் நம் நிலைமை?... ஈழப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழ் மீனவர் பிரச்சினை, வேளாண் நிலத்தில் எரிகுழாய் பதித்தல் எனத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் உச்சத்தில் இருக்கும் வேளையில் வெல்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத ஒரு கட்சிக்கு வாக்களித்து, நடுவணரசைக் கைப்பற்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடலாமா?

The two Musketeers!அதே நேரம், இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்!
தமிழர் பிரச்சினைகளில் மிக முக்கியமான, மேற்கண்ட பட்டியலில் இல்லாத ஒன்று ‘கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை!அதை வழிநடத்துகிற சுப.உதயகுமாரன் அவர்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதை நாம் மறக்கக்கூடாது!

இந்தியாவில் காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இந்த அளவுக்குக் கூடுதலான எண்ணிக்கையிலான மக்களை, இப்படி ஆண்டுக்கணக்காக ஒரே இலக்கை நோக்கிச் சிந்தாமல், சிதறாமல் அறப் போராட்டத்தில் ஈடுபட வைத்த மாமனிதர் சுப.உதயகுமாரனைத் தவிர வேறு யாரும் கிடையாது! ஆனால், மூன்றாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகும் அணுமின் நிலையத்தினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி நம் மக்களுக்குத் துளியும் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதுதான் வேதனை! பல் முளைக்காத பச்சைக் குழந்தை கூட ஒருமுறை சுட்டுக்கொண்டால் மறுபடியும் நெருப்பைத் தொடாது. ஆனால், செர்னோபில், புகுஷிமா என அடுத்தடுத்து அணு உலைகளின் கோர முகத்தைப் பார்த்த பின்னும் நாம் அணு உலைகள் பாதுகாப்பானவை என நம்புகிறோம் என்றால் என்ன சொல்வது!

“கூடங்குள அணுமின் நிலைய அணுஉலை ரியாக்டர்களில் நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. குளிரூட்டும் முறை பழுதடைந்தால் அதைச் சரி செய்துகொள்ளக்கூடிய பாதுகாப்புகள் முறையாக வடிவமைக்கப்படவில்லை. புக்குஷிமா அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கு இந்தக் குறைபாடுதான் முக்கிய காரணம். குளிரூட்டும் சாதனங்களின் முக்கிய கருவிகள் மிகவும் பலவீனமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமியதிர்வுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனத்தில் கொள்ளப்படாமல்தான் இந்த அணுஉலை வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நேர்ந்தால் தானாகவே செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இதில் இல்லை!” -  இப்படியெல்லாம் கூறுவது நான் இல்லை,

திங்கள், மார்ச் 31, 2014

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்!



Rare chance hss come!

வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.

தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்
குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக
Did not vote for Tamils but asking Tamils vote!
நாம் நடத்தி வரும் போராட்டங்களை இதுவரை செருப்பளவுக்காவது மதித்திருக்கிறதா இந்த இந்திய அரசு? இப்பொழுது கூட, இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக மூன்று முறைகளுக்கு மேல் திருத்தி விட்டு, அப்படியும் அந்த இற்றுப் போன தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூட விருப்பமில்லாமல் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் நம்மிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள் காங்கிரசார்!

இதை விட ஓர் இனத்தை அவமானப்படுத்த முடியுமா?

இப்படிப்பட்ட அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?

இனி தமிழர்களிடம் வம்பு வைத்துக் கொண்டால் நாம் இந்திய அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது எனும் பீதியை இந்தக் காங்கிரசுக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?

தமிழர்களைப் பகைத்துக் கொண்டதால் காங்கிரசு அடையவிருக்கும் படுதோல்வியைப் பார்த்து இனி வரும் இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களை எண்ணி மிரள வேண்டாமா?

மண்ணுலகிலேயே நரகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் மீள வேண்டாமா?

அப்படியானால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நம் வாக்குகளைத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்! அதற்கு ஒரு கூர்மையான திட்டத்தை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்!

யாருக்கு வாக்களிப்பது?

இத்தனை ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத்தான் ஆகி விட்டது தமிழ்நாட்டில்.

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதந்து வந்து காப்பாற்றுவார் என்று தமிழர்கள் நாம் காலங்காலமாய் நம்பிய கருணாநிதி, தமிழர்களையே பிணமாக்கிக் கட்டுக் கட்டாக அடுக்கிச் சிங்களர்கள் எரித்தபொழுதும் மரம் போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்பொழுது அந்தக் காங்கிரசைக் கழற்றி விட்டுத் தேர்தலைச் சந்திக்க வந்திருக்கிறார்.

அதே நேரம், ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, அதுவரை உலகில் யாருக்குமே தெரியாத பேருண்மையை () நமக்கு உணர்த்த முயன்ற ஜெயலலிதா இன்று அனைத்து விதங்களிலும் ஈழ ஆதரவாளராய் மாறி நிற்பதாகக் கூறுகிறார்!


சரி, தமிழர் பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடக்கக் காலம் முதல் போராடி வரும் வை.கோ அவர்களுக்கு வாக்களிக்கலாமா எனப் பார்த்தால் அவர் போட்டியிடுவதோ வெறும் எட்டே தொகுதிகள்!

ஆகவே, இவர்களில் யாரை நம்பி அல்லது யாரை எதிர்த்து எப்படியென வாக்களிப்பது என்பது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியிருப்பதில் வியப்பில்லை. இந்தக் குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு தெளிவாக வாக்களிக்க நமக்குத் தேவை ஒரு பன்னோக்குத் திட்டம் (Master Plan). ஏன், கட்சிகள் மட்டும்தான் கூட்டணி, வாக்கு வங்கி எனப் பலவற்றையும் பற்றி ஆராய்ந்து திட்டமிட்டுத் தேர்தலைச் சந்திக்க வேண்டுமா? வாக்காளர்களான நாமும் ஒவ்வொரு கட்சி, கூட்டணி பற்றியும் அவர்களின் நிலைப்பாடு, கொள்கை, உறுதிமொழி, குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவர்களின் கடந்த கால நடவடிக்கை, எதிர்காலப் போக்கு என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசி ஒரு முடிவுக்கு வரலாம் வாருங்கள்!

செவ்வாய், பிப்ரவரி 18, 2014

மூவர் தூக்குத் தண்டனைத் தள்ளுபடியும் தமிழர் கடமைகளும்!




வெற்றி!...


வெற்றி!...


வெற்றி!...


நீதியின் வெற்றி!


நேர்மையின் வெற்றி!


பொறுமையின் வெற்றி!


அறப் போராட்டத்தின் வெற்றி!


மறத் தமிழரின் வெற்றி!


முதுமையிலும் சாதிக்க


முடியும் எனக் காட்டியுள்ள


அற்புதம்மாளின் வெற்றி!


தாய் அவருக்குத் தோள் கொடுத்த


தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!


பல காலமாய்ப் போராடிய


தலைவர் வை.கோ-வின் வெற்றி!


இளந்தலைமுறையைத் தட்டியெழுப்பிய


அண்ணன் சீமானின் வெற்றி!


புதிய புயல்களாய்ப் புறப்பட்டுள்ள


இன்ன பிற தமிழ்த் தலைவர்களின் வெற்றி!


உலகெங்குமுள்ள


மனித உரிமை ஆர்வலர்களின் வெற்றி!


மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வெற்றி!

எல்லோருக்கும் மேலாய்

இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்

உயிர் விளக்கேற்றிய

ஈகி செங்கொடியின் வெற்றி இது!


இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை


உறுதிப்படுத்த முடிந்திருந்தால்


இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!




ஆனாலும் இது வெற்றிதான்!


ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!


கொண்டாடுவோம்!


கொண்டாடுவோம்!


தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...


காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...


தோழர்களை அணைத்து...


ஆனந்தக் கண்ணீர் உகுத்து...


பட்டாசுகள் வெடித்து...


தப்பட்டை அடித்து...


கொண்டாடுவோம் இன்று!


இது நம்


முதல் வெற்றி என்று!...




ஆம்...

திங்கள், பிப்ரவரி 03, 2014

இந்திய அரசின் விருதுகளை ஏற்பது பெருமையா இழிவா? - தமிழ் ஆளுமைகள், போராளிகள் பார்வைக்கு!

Tamils, Say No to Indian National Awards

விருது பெறுவதற்கு மட்டுமில்லை, வழங்குவதற்கும் தகுதி என்பது வேண்டும். ஆனால், நம் தமிழ் ஆளுமைகள் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. யார், என்ன விருது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

தமிழ் இனத்தையே அழித்தொழித்த இந்திய அரசு தரும் விருதுகளை ஏற்க வேண்டாம் என எவ்வளவுதான் சொன்னாலும் யாரும் இங்கு காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. அந்த வரிசையில் இப்பொழுது புதிதாகச் சேர இருக்கிறார்கள், காலமெல்லாம் “தமிழ்... தமிழ்... என்று பேசிக் கொண்டிருக்கிற கலைஞானியும் கவிப்பேரரசுவும்!

பத்மபூஷண் விருது அறிவிப்பு வந்த அதே நாளேட்டில், அந்தச் செய்தியை ஒட்டியே இவர்களின் நன்றி அறிவிப்பும் வருகிறது! அதுவும், அறிவிப்பில் ஓரிடத்தில் கூட நம் இனத்தையே கொடூரமாகப் பலி வாங்கியவர்களின் கைகளால் இந்த விருது பெற இருக்கிறோமே என்கிற வருத்தம் அணுவளவும் இல்லாமல்!

ஈழத்தில் இந்தியா செய்த அட்டூழியங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாதது இல்லை. ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட இந்திய அரசு, மாறாக அவர்களை அழிப்பதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்தது!

  • நேரடியாகவே பணமும் ராணுவத் தளவாடங்களும் வழங்கி உதவியது.
  • தரைப்படைத் தளபதியை அனுப்பிப் போர் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தது.
  • ரகசியமாக ஆயுதங்களும் அனுப்பியது.
  • இனப்படுகொலையை நிறுத்த ஐ.நா மூலமாக மேற்குலக நாடுகள் செய்த முயற்சிகளைத் தன் அரசியல் செல்வாக்கால் முறியடித்தது.
  • இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தோற்கடித்து இனப்படுகொலை நிற்காமல் தொடர வழிவகுத்தது.
  • எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, கடைசி நேரத்தில், முள்ளி வாய்க்கால் பேரழிப்புக்கு முன்பு அதைத் தடுக்க நேரடியாகவே அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கத் தீர்மானித்திருந்த நேரத்தில் அதையும் நிறைவேற விடாமல் தடுத்து ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள் மிகக் குரூரமாகச் சாக வகை செய்தது இந்தியா! (சான்று: விக்கிலீக்ஸ்).

இவ்வளவும் போதாதென்று, நடந்தது வெறும் போர் இல்லை. ஓர் இனத்தையே அழிப்பதற்காக நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று ஐ.நா விசாரணைக் குழு அறிவித்த பின்னும், இப்பொழுதும் தற்போதைய இந்திய அரசு இலங்கைக்குத்தான் ஆதரவாக நிற்கிறது! ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை பற்றி ஐ.நா பாதுகாப்பு அவையில் விவாதித்து அதன் பேரில் முடிவெடுக்கலாம் என்று உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதல் ஆளாக எதிர்ப்புத் தெரிவித்தது இந்திய அரசுதான்.

Kamalhaassan & Vairamuthu
தமிழர்களுக்கு எதிராக இத்தனை உலக மகா அக்கிரமங்களையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற இந்திய அரசின் கையால் தங்கள் தமிழ்சார் சாதனைகளுக்கான விருதைப் பெறுவதில் இவர்களுக்கு அப்படி என்ன பெருமை இருக்க முடியும் என எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை! சராசரி மனிதர்களை விடப் பல மடங்கு அறிவுக் கூர்மையும், திறமையும் படைத்த இவர்களுக்கு இந்த அடிப்படை முரண்பாடு கூடவா தெரியவில்லை? தாங்கள் செய்த தமிழ்ச் சேவைக்கான விருதைத் தமிழர்களையே அழித்தவர்களின் கையாலா பெறுவது என உள்ளத்தில் ஒரு சிறு வேதனை கூடவா இவர்களுக்கு எழவில்லை? என்ன வகையான மொழி உணர்வு இது?!

சிலர் கேட்கலாம், “இது தனிப்பட்ட முறையில் அவர்களின் திறமைகளைப் பாராட்டித் தரப்படும் விருதுதானே? இதற்கும் ஈழப் பிரச்சினைக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? ஏன் இவை இரண்டையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என.

அப்படியில்லை நண்பர்களே!

திங்கள், ஜனவரி 13, 2014

வெண்ணெய் திரளும் வேளையில் பானையை உடைத்துவிடாதீர்கள்! – தமிழினத் தலைவர்களுக்குக் கை கூப்பிய வேண்டுகோள்!

Obligation!


பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய, தமிழினத்தின் உண்மைத் தலைவர்களான வை.கோ, சீமான், பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், விடுதலை இராசேந்திரன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன், தோழர் தியாகு ஆகியோருக்கும் சேவ் தமிழ்சு இயக்கம், மே பதினேழு இயக்கம், தமிழீழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகியோருக்கும் நேசமிகு வணக்கங்கள்!

ஈழப் பிரச்சினை பற்றியும் தமிழினத்தின் இன்ன பிற பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் யாரும் நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உங்களில் சிலருடைய நடவடிக்கையும் பேச்சும் ஏற்படுத்தியுள்ள கவலையே இந்தக் கோரிக்கை மடலுக்குக் காரணம்! இது, ஞானப்பிரகாசன் எனும் தனி மனிதனின் வேண்டுகோள் இல்லை; தலைவர்களான உங்களிடம் உலகத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் முன்வைக்கப்படும் தேர்தல் நேரத்துப் பணிவார்ந்த விண்ணப்பம்! எனவே, கனிவு கூர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் பொன்னான நேரத்தைச் சற்று ஒதுக்கி இதை முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

ஒரு புறம் பார்த்தால், மேலே கண்டபடி, ஈழத் தமிழர்களுக்காகப் பல தலைவர்களும் அமைப்புகளும் இன்று உண்மையாகப் போராடி வரும் வேளையில், இவர்கள் யார் கருத்தையும் கேட்காமல் தலைவர் வை.கோ அவர்கள் தனியாகப் போய் பா.ஜ.க-வுடன் கூட்டணி பேசுகிறீர்கள்!

அவர் அங்கு போய்ச் சேர முதன்மைக் காரணராக விளங்கிய ஐயா தமிழருவி மணியன் அவர்களோ, மேற்கொண்டு அந்தக் கூட்டணியில் நீங்கள் சேர்க்க இருக்கும் கட்சிகள் பட்டியலில் மேற்படி உண்மைத் தமிழுணர்வுக் கட்சிகள் எதையுமே குறிப்பிடாமல், இன்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க அலையும் பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் போய்க் குறிப்பிடுகிறீர்கள்!

அண்ணன் சீமான் அவர்களோ, “காங்கிரசு, பா.ஜ.க ஆகியவற்றுடன் யார் கூட்டணி வைத்தாலும் துரத்தித் துரத்தித் தோற்கடிப்போம் எனச் சூளுரைக்கிறீர்கள்!

கருணாநிதியைத் தமிழினத் தலைவனாகக் காலங்காலமாக நம்பி இனத்தையே வாரிக் கொடுத்துவிட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு இந்தக் காட்சிகள் எந்த அளவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவையாக இருக்கின்றன என்பதைத் தலைவர்களே உங்களால் உணர முடிகிறதா?

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஓரினச் சேர்க்கை அங்கீகாரமும் பெண்ணியமும் - ஒரு புதிய கோணம்!

LGBT_flag
ஓரினச்சேர்க்கையாளர் குழுமக் கொடி
முன்னேற்றம் என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை, சமூகத்துக்கும் பொருந்தும்!

ஓரினச் சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு (அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.

அமெரிக்காவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...?

அகநானூறு முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல் நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால், அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.

ஒரு புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.

ஆணும் பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.

மறுபுறம், காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன! (எதிரெதிர் பாலினரோடுதான்!)

நம் பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன், ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப் பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல் அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு இல்லை.

இப்படி, பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாவா?

அதே நேரம், ‘இந்தியப் பண்பாடு எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள்! எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு! தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று இருக்கிறதா?

தமிழ்ப் பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு, மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள் இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப் பொய்!

பண்பாடு என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும், மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும் பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும்? கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம் இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு என்பார்கள். அதுவும் பொய்! ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது, கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும் ‘இந்துக்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி, ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும் அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள் இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும் உண்மையில்லாதது!

சரி, மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்!

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!

MDMK-BJP_alliance

பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் - திறந்திருக்கும் புதிய வாசல்!



kutramatra moovar

மூன்று தூக்குக் கயிறுகளுள் ஒன்றில் இப்பொழுது பற்றியிருக்கிறது உண்மைத் தீ!

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் அப்படி வாக்குமூலம் கொடுக்கவே இல்லை’ என்று 22 ஆண்டுகளுக்குப் பின் வாய் திறந்து கூறியுள்ளார், அந்த வாக்குமூலத்தைப் பெற்ற விசாரணை அலுவலர் தியாகராஜன் அவர்கள்.

‘சிவராசன் கேட்டுக்கொண்டபடி பற்றரிகளை (Batteries) வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொல்லத்தான் என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் பேரறிவாளன் வாக்குமூலம் தந்ததாகவும், ஆனால் அந்த இரண்டாவது வரியைத் (எதற்காகப் பயன்படப் போகிறது என்பது தெரியாது) தான் வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை எனவும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அவர்! இதை நீதிமன்றத்தில் சொல்லவும் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் பெருந்தன்மையோடு முன்வந்திருக்கிறார்!

Thiyagarajan CBI
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது உண்மையைத் தயங்காமல், அதுவும் இவ்வளவு உறுதியாக, தெளிவாக வெளியிட முன்வந்தமைக்காக, அதிலும் நீதிமன்றத்திலும் சொல்ல ஒப்புக்கொண்டமைக்காக முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.தியாகராஜன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி உரைத்தே ஆக வேண்டும்! எனினும், இன்னும் கொஞ்சம் முன்பாகவே அவர் இதை வெளியிட்டிருக்கலாம் என்பதே அனைவரின் ஆதங்கமும். சரி, இப்பொழுதாவது சொன்னாரே என ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

பெரிய சான்றுகளோ, ஐயம் திரிபற்ற உறுதிப்பாடுகளோ (Non questionable proof) இல்லாமல் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் இத்தனை நீதிமன்றங்களும் இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கினவோ, அந்த வாக்குமூலங்களில் ஒன்றே தவறானது என்று ஆகிவிட்ட நிலையில் இனி மற்றவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் மறு ஆய்வுக்குரியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்! இந்த மூவரின் உயிர் காக்கச் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஐயா பழ.நெடுமாறன் முதலானோர் இனியும் தாமதிக்காமல் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முழுமையாகத் தொடக்கத்திலிருந்து மறு விசாரணை செய்ய வேண்டி உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்! காரணம், இவர்கள் மூவரும் இந்தக் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பது இவர்களையும் இவர்கள் குடும்பத்தினரையும் மட்டும் பாதிக்கவில்லை; தமிழ் இனத்தையே பாதிக்கிறது!

இந்தக் கொலைப் பழி விடுதலைப்புலிகள் மீது விழுந்ததால்தான் அந்த இயக்கத்தின் மீது இந்தியா தடை போட்டது.

தங்கள் நாட்டு எல்லையைத் தாண்டி அயல்நாட்டில் இப்படி ஒரு தீவிரவாதச் செயலைச் செய்ததாகக் கூறி இந்தியா போட்ட அந்தத் தடைதான், ஒன்றுமறியாத தங்கள் அப்பாவி மக்களின் பாதுகாப்புக்காகத் தனிநாடு கோரிப் போராடிய விடுதலை இயக்கம் ஒன்றைப் பன்னாட்டுத் தீவிரவாத இயக்கமாக உருவகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்துதான், உலகின் மற்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது தடை போட்டு அதைப் பன்னாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தன. அதன் விளைவு, 2001ஆம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின், உலகின் எல்லா ஆயுதக் குழுக்களையும் ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற அமெரிக்காவின் முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கமும் பலியானது; அத்தோடு சேர்ந்து நம் இனமும் அழிந்தது.

ஆக, அனைத்துக்கும் மூலக் காரணம் ராஜீவ் காந்தி கொலை! அந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தவறான விசாரணை முறைகள்!

“அஃது எப்படி? பேரறிவாளன் ஒருவரின் வாக்குமூலம் தவறாகப் பதியப்பட்டதாலேயே இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற விடுதலைப்புலிகளின் பங்கு இல்லையென்றாகி விடுமா? விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லையென்றுதான் ஆகிவிடுமா?” எனக் கேள்வி எழலாம்.

Liberation Tigers of Tamil Eelamஇந்த ஒன்றை மட்டும் வைத்து அப்படிச் சொல்லமுடியாதுதான். ஆனால் எப்பொழுது, வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வாக்குமூலமே தவறாகப் பதியப்பட்டிருக்கிறது என்று தெரிந்துவிட்டதோ, இனி மொத்த வழக்கையுமே மறு விசாரணைக்கு உட்படுத்துவதுதான் முறை. அதுவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இது சிறிதும் மறுக்க முடியாதது! அப்படியொரு விசாரணை மேற்கொள்ளப்படும்பொழுது திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவரும் எனவும், அவற்றுள், விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்பதும் ஒன்றாக இருக்கும் எனவும்தான் பலரும் நம்புகிறார்கள்! அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

ராஜீவை விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்பதற்கான வாதங்கள்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்