நண்பர்களே, தமிழுக்கு ஆட்சென்சு சேவை வந்து விட்ட செய்தி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். சரியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் நாள் அந்த இனிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையொட்டி ஆண்டுதோறும் ‘கூகுள் பார் தமிழ்’ எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது கூகுள் நிறுவனம். போன மாதம் 30ஆம் நாள் இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திலிருந்து கைலாஷ் என்பவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் திரைச்சொட்டு (Screenshot) இதோ!
நண்பர்களே! ‘கூகுள் பார் தமிழ்’ என்பது இணையத்தில் தமிழ் ஆக்கங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் அதன் மூலம் பொருள் ஈட்டவும் உதவுவதற்காக கூகுள் மேற்கொண்டுள்ள ஒரு சீரிய முயற்சி!
எங்கோ அமெரிக்காவில் உள்ள ஆங்கில நிறுவனம் ஒன்று தமிழுக்காக இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும்பொழுது குறைந்தது அதில் கலந்து கொள்வதன் மூலமாவது அவர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அதனால்தான், இதோ இந்தப் பதிவு மூலம் உங்களுக்கும் இது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது பற்றிக் கைலாஷ் அவர்களிடம் நான் பேசியில் சற்று முன் உரையாடியபொழுது, இதில் கூகுள் ஆட்சென்சு பயனர்கள் மட்டுமின்றி பிளாகர் மூலம் வலைப்பூவோ (blog) இணையத்தளமோ (website) தமிழில் நடத்தும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
எனவே வாய்ப்பிருக்கும் அனைவரும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தத் தமிழ்சால் முயற்சியை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். படிவத்தின் இணைப்பு: https://forms.gle/MTMF4mSvqmTihUXc9
இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
முக்கியமான செய்தி! மேற்கண்ட இணைப்பு இன்று வரை மட்டுமே செயல்படும்! எனவே உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்! நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்!
இற்றைப்படுத்தல் (Update): மேற்கண்ட இணைப்பு தொடர்ந்து செயல்பட்டே வருகிறது. விரும்புபவர்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.
நண்பர்களே! ‘கூகுள் பார் தமிழ்’ என்பது இணையத்தில் தமிழ் ஆக்கங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் அதன் மூலம் பொருள் ஈட்டவும் உதவுவதற்காக கூகுள் மேற்கொண்டுள்ள ஒரு சீரிய முயற்சி!
எங்கோ அமெரிக்காவில் உள்ள ஆங்கில நிறுவனம் ஒன்று தமிழுக்காக இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும்பொழுது குறைந்தது அதில் கலந்து கொள்வதன் மூலமாவது அவர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை இல்லையா? அதனால்தான், இதோ இந்தப் பதிவு மூலம் உங்களுக்கும் இது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது பற்றிக் கைலாஷ் அவர்களிடம் நான் பேசியில் சற்று முன் உரையாடியபொழுது, இதில் கூகுள் ஆட்சென்சு பயனர்கள் மட்டுமின்றி பிளாகர் மூலம் வலைப்பூவோ (blog) இணையத்தளமோ (website) தமிழில் நடத்தும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
எனவே வாய்ப்பிருக்கும் அனைவரும் தவறாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தத் தமிழ்சால் முயற்சியை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். படிவத்தின் இணைப்பு: https://forms.gle/MTMF4mSvqmTihUXc9
இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
இற்றைப்படுத்தல் (Update): மேற்கண்ட இணைப்பு தொடர்ந்து செயல்பட்டே வருகிறது. விரும்புபவர்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.
❀ ❀ ❀ ❀ ❀























