.

வெள்ளி, மே 18, 2018

தமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும்

The land which is made up of blood is seems by the light of sacrifice
ம்! இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை, இழந்த உறவுகளுக்காக இரு விழிக் கண்ணீர் வடிக்கக் கூட உரிமையில்லாத இனமாய் நாம் ஒடுக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் கூட!

தமிழினத்தின் மீது காங்கிரசுக்கு இருப்பது போல் தனிப்பட்ட பகை எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை என்று நாம் நினைத்தோம். ஆகவே அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அளவுக்கு முன்வராவிட்டாலும் குறைந்தது, தமிழர்கள் நாம் குரல் கொடுக்கும்பொழுது நம் குரல்வளையை நெரிக்காமலாவது இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், பா.ஜ.க-வோ காங்கிரசை விட ஒரு படி மேலே போய், அழிக்கப்பட்ட நம் மக்களுக்காக நாம் அஞ்சலி கூடச் செலுத்தக்கூடாது என்று நம்மைக் கழுத்தைப் பிடித்து சிறையில் தள்ளியது கடந்த ஆண்டு! 


Arrest of Thirumurugan Gandhi, the founder of May 17 organization, for conduct a memorial event for the Tamil genocide and the condemn of the general secretary of Tamil Thesiya Periyakkam for the arrest

அதுவரையில், வெறும் நினைவுகூரல் சடங்குகளில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை; அதனால்தான் ஒவ்வோர் ஆண்டு இனப்படுகொலை நினைவஞ்சலி நாள் பதிவிலும் அஞ்சலி செலுத்துதல் குறித்து மட்டுமில்லாமல், நம் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஏதேனும் ஒரு திட்டத்தை முன்வைத்து எழுதுவேன்.

ஆனால், எப்பொழுது நடந்த இனப்படுகொலையை நாம் நினைவு கூர்வதே இவர்களுக்கு அச்சத்தை அளித்ததோ அப்பொழுதே புரிந்து விட்டது, நினைவேந்தல் என்பது வெறும் சடங்கு இல்லை என்று!

எப்பொழுது நாம் அந்த ஒரு மெழுகுத்திரியை ஏற்றுவது கூட இவர்களுக்குப் பொறுக்கவில்லையோ அப்பொழுதே தெரிந்து விட்டது அந்த வெப்பத்தை இவர்களால் பொறுக்க முடியவில்லை என்று!

ஏனெனில், இனப்படுகொலை நினைவு நாளில் நாம் ஏந்தும் வெளிச்சம் வெறும் சென்னைக் கடற்கரையோடு அடங்கி விடுவதில்லை; மறக்கடிக்கப்படும் அந்த மாபெரும் கொடுமை மீதான பேரொளியாய் எட்டுத் திக்கிலும் எதிரொளிக்கிறது!

ஏந்தியிருக்கும் நம் கைகளை மட்டும் அது சுடுவதில்லை, வாய்மையின் பெருநெருப்பாய் எங்கெங்கோ யார் யாருக்கோ சுடுகிறது!

காரணம், நாம் ஏற்றும் ஒவ்வொரு மெழுகுத்திரியும் தம் மக்கள் வாழ்வில் இருள் போக்கத் தம்மையே அழித்துக் கொள்ளும் விடுதலைப்புலிகளின் மறுவடிவமாய்த் திகழ்கின்றன!

அவற்றின் உச்சியில் ஒளிவிடும் ஒவ்வொரு சுடரும் ஈழ நிலப்பரப்பின் நெருப்பு வரைபடமாய்த் தகதகக்கின்றன!

கை நிறைய நாம் அள்ளித் தூவும் பூவிதழ்கள் ஒவ்வொன்றும் அந்த மண்ணெங்கும் சிதறிப் பெருகிய நம் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளாய்ப் பரவிப் படர்கின்றன!

இதற்காக நாம் அலையலையாய்க் கூடும் விதமும் இடமும் அதிகார மட்டத்தைத் தவிடு தின்ன வைத்த தைப்புரட்சிக்கு மீண்டும் கட்டியம் கூறுகின்றன!


ஆம்! நினைவேந்துதல் மட்டுமே இனப்படுகொலைக்கெதிரான நடவடிக்கை இல்லைதான்; ஆனால் அதுவும் ஒரு நடவடிக்கைதான்!

அஞ்சலி செலுத்துவதால் மட்டும் நடந்த கொடுமைக்குத் தீர்வு கிடைத்து விடாதுதான். ஆனால், தீர்வு கிடைக்க இதுவும் ஒரு வழிமுறைதான்!

அதுவும் “இன்றைய பா.ஜ.க-வுக்கும் அ.தி.முக-வுக்கும் அன்றைய காங்கிரசும் தி.மு.க-வுமே தேவலாம்” என மீண்டும் நம் மக்கள் சொந்தப் பிள்ளைகளின் இறைச்சி தின்று கொழுத்த விலங்குகளின் காலிலேயே விழ ஆயத்தமாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில், நடந்த அந்தப் பெருங்கொடூரத்தை மீளவும் நினைவூட்டும் இந்த ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் இன்றியமையாத விழிப்புணர்வுப் பொறி!

காங்கிரசோ, பா.ஜ.க-வோ, தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ இந்திய தேசிய அமைப்பில் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைப்பாடு ஒன்றுதான் என்று பின்மண்டையிலடித்துப் புரிய வைக்கும் விதமாய்ப் போன முறை நடந்த கைது நடவடிக்கையின் இந்த முதலாம் ஆண்டு நினைவுகூரல், “காங்கிரசு எனும் ஒரு கட்சி செய்த கொடுமைக்கு இந்தியா எனும் மொத்த நாட்டின் மீதே ஏன் பழி சுமத்துகிறீர்கள்” என்று கேட்கும் ஒவ்வொருவருக்குமான விடை கூறல்! 


ஆகவே தமிழ் மக்களே!
வாருங்கள் கூடுவோம் தமிழர் கடற்கரையில்!
செலுத்துவோம் அஞ்சலி தமிழர் நினைவலையில்! 
Tamil genocide memorial event invitation 2018
படங்கள்: நன்றி ௧, ௩) மே பதினேழு இயக்கம், ௨) கண்ணோட்டம் இணைய இதழ். 


தொடர்புடைய பதிவுகள்:
மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!
தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!
தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?
தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, இந்த நினைவேந்தல் நிகழ்வு குறித்த செய்திகள் பெருவாரியான மக்கள் பார்வைக்குச் செல்ல நீங்களும் உதவலாம். 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. முள்ளிவாய்க்கால் மண்ணில்
    நானும்
    செத்துப் பிழைத்தேன்...
    அங்கே
    இன அழிப்புத் தான்
    பொதுமக்கள் தான் சாவு!
    மறக்க முடியுமா மே 18!
    தமிழினத்தை அழிக்க முயலும்
    எந்த இனமும் வாழ இயலாதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அந்த நேரம் நீங்கள் அங்கே இருந்தீர்களா! அந்தக் கொடுமையைப் பார்த்தீர்களா! தமிழ் மண்ணில் நடந்த அந்தப் பெருங்கொடுமையிலிருந்து தப்பிய வெகு சிலரில் ஒருவரா நீங்கள்! இத்தனை நாள் நான் அறியாமல் போய்விட்டேனே! தகவலுக்கு நன்றி ஐயா! என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன் தமிழினத்துக்கு நடந்த கொடுமையை! கடைசிச் சொட்டுக் குருதி உள்ள வரை குரல் கொடுக்கத் தவறவும் மாட்டேன்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்