.

செவ்வாய், மார்ச் 21, 2017

கொலையா பலியா? – தமிழ் மீனவர் பிரிட்ஜோவுக்கு நடந்த கொடுமையின் உண்மைக் காரணம்!


The Tamil fisherman Bridjo who killed by SL navy
 
மீண்டும் ஒருமுறை கடலன்னைக்குக் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு தமிழ் உயிர்!

வயிற்றுப்பாட்டுக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் அடிப்பது, உதிரம் சொட்டும்படி காயப்படுத்துவது, வலைகளை அறுத்து எறிவது, படகுகளைப் பிடித்துச் செல்வது, கை கால்களை முடமாக்குவது, நச்சுமீனின் முள்ளால் நாக்கில் குத்துவது, அம்மணமாக்கி விரட்டுவது, பாலியல் வன்கொடுமை செய்வது என விதவிதமாக சித்திரவதைப்படுத்துகின்றனர்.

வற்றையெல்லாம் பற்றித் தமிழர்கள் நாம் முறையிட்டால் இத்தனை கொடுமைகளுக்கும் சேர்த்து இந்திய அரசிடமிருந்து வரும் ஒரே பதில்...

வெள்ளி, மார்ச் 10, 2017

நெடுவாசல்! – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்!

Save Neduvasal
நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் தமிழர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நான் ‘கீற்று’ மின்னிதழில் எழுதிய கட்டுரை...
 மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறி நிற்கிறது தமிழ் மண்! இம்முறை, நாட்டின் தலைவாசல் எடுத்திருக்கும் தவறான முடிவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருப்பது தமிழ்நாட்டின் எளிய சிற்றூரான நெடுவாசல்! 

H.Raja
பா.ஜ.க., சார்பில் பல அரிய கருத்துக் கருவூலங்களைத் தொடர்ந்து அள்ளி அள்ளி வழங்கி வரும் எச்.ராஜா, இந்தப் பிரச்சினை குறித்தும் திருவாய் மலர்ந்திருக்கிறார் - இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாரும் பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள் என்று. ஆனால், போராட்டக்காரர்களைப் பார்த்து அதே பா.ஜ.க-வினர் கேட்கும் கேள்வி என்னவெனில், “இந்த நீரகக் கரிமத் (Hydro Carbon) திட்டத்தைத் தமிழ்நாட்டில் மட்டுமா கொண்டு வருகிறோம்? இந்தியா முழுக்க 31 இடங்களில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படிப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்படுவது போல ஏன் எதிர்க்கிறீர்கள்?” என்பது.

பா.ஜ.க-வினரின் இந்தக் கேள்வியிலேயே எச்.ராஜாவின் குற்றச்சாட்டு எவ்வளவு தவறு என்பதற்கான சான்றும் அடங்கியுள்ளது.

வெள்ளி, பிப்ரவரி 24, 2017

காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!



“1947-இலிருந்து இன்னிய தேதி வரைக்கும் எத்தனை அரசியல்வாதிங்க மேல எத்தனை எத்தனை கேஸ் போட்டிருப்பாங்க! எவனாவது ஒரு அரசியல்வாதி தண்டனைய அனுபவிச்சிருப்பானா? கேஸ் முடியிற வரைக்கும் நல்லா ஆண்டு அனுபவிச்சுச் செத்தும் போயிருவான்... கேஸ் பைல்ல மூட்டைப்பூச்சிதான் குஞ்சு பொரிக்கும்!”

‘முதல்வன்’ திரைப்படத்தில் சுஜாதா அவர்கள் எழுதிய உரையாடல்! அவருடைய நினைவு நாள் வருகிற இதே பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இதைத்தான் நினைவுபடுத்துகிறது!

ஞாயிறு, ஜனவரி 22, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!

Tamil-flag
லக உருண்டை சுழலத் தொடங்கிய நாள் தொட்டு இல்லாத புதுமையாக முதன் முறையாய்க் காளைகளைக் காப்பாற்றப் புலிகள் களமிறங்கியிருக்கின்றன தமிழ் மண்ணில்!

2017 சனவரி 8 அன்று சென்னை மெரினாவில் தொடங்கிய எழுச்சிப் பேரலை தமிழ்நாடு முழக்கப் பரவி, இப்பொழுது உலகம் முழவதும் ஆழிப் பேரலையாய் விண்ணைத் தொட்டு வீசிக் கொண்டிருக்கிறது! தமிழர்கள் மட்டுமில்லை மலையாளிகள், மகாராட்டிரர்கள், வெள்ளையர்கள், அராபியர்கள் எனப் பிற மாநிலத்தினர் முதல் வெளிநாட்டினர் வரை மனித இனம் மொத்தமும் இன்று தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்கிறது!


“இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசியதெல்லாம் அந்தக் காலம். ஆங்கில வழியில் படித்து, அயல்நாட்டுக்காக இங்கிருந்தே பணி செய்யும் உலகமயமாக்கல் காலக்கட்டம் இது. இனி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை” என்று ஆட்சியாளர்கள் இறுமாந்திருந்த வேளையில் அதுவரை இல்லாத பேரெழுச்சியாய் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் ஈழத்துக்காகப் போராடிய இளைஞர்கள்.

அது நடந்த மிகக் குறுகிய காலக்கட்டத்துக்குள், தமிழினப் படுகொலை போன்ற தலை போகிற பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல தமிழர்களின் ஒரு சிறு பண்பாட்டு அடையாளத்துக்கு ஊறு நேர்ந்தாலும் சரி, விட மாட்டோம் என இதோ களத்தில் வந்து நிற்கிறார்கள் தமிழ்ப் பிள்ளைகள்! இதுநாள் வரையில் நம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் போராடிய அத்தனை பேரும் நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொள்ள வேண்டிய தறுவாய் இது!

ஆனாலும் “நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் ஜல்லிக்கட்டுக்குப் போய் இவ்வளவு பெரிய போராட்டம் தேவையா?” என்கிற கேள்வி இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லாத் தளங்களிலும். முட்டாள்தனம்!

ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருப்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பால் அரசியல்! அதைக் குறி வைத்துத்தான் உயிர்கள் மீதான இரக்கம் எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன பீட்டா போன்ற முதலைகள். இந்தப் பிரச்சினை மட்டும் அவர்களுக்கு சாதகமாக முடிந்து விட்டால் நாட்டு மாடுகளின் இனமும் அவை தரும் பாலும் அழிந்து கலப்பினப் பசும்பால் மட்டுமே இங்கு கிடைக்கும் என்கிற சூழல் உருவாகும். அப்படி நடந்தால், நாளடைவில் மொத்தத் தமிழ்நாடும் நோய்களின் கூடாரமாக மாறி விடும்! இதை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மட்டும் சொல்லவில்லை, மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். கலப்பினப் பசுக்களின் பால் உண்மையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் நஞ்சு என அவர்கள் எச்சரிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, இதோ ஒரு விழியம்!

செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7

Jallikkattu - A Political Game

மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு!...

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!

"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத் 

திங்கள், ஜனவரி 09, 2017

இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?

Tanjore farmers in the clutches of death

ந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!

விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!

ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?

நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.

தமிழ்நாடு அரசே!...

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?

எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!

சனி, டிசம்பர் 17, 2016

தமிழ்நாட்டை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காத தனித் தலைவி!

Jayalalitha
ஜெயலலிதா! – ஆயிரக்கணக்கான ஆண் விண்மீன்கள் ஒளி வீசிய அரசியல் வானில் ஒற்றைப் பெண்ணாய் உலா வந்த நிலா!

இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் பந்தாடிய விதம், ஊழல் குற்றச்சாட்டுகள், இன்னும் எத்தனையோ...

ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. அதுதான், அடுத்தவர்களிடத்தில் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத இவருடைய குணம்!

கன்னடர் என்று முத்திரை குத்தினோம். ஆனால், மற்ற யாரை விடவும் காவிரிப் பிரச்சினையில் இவர்தான் ஈடு இணையற்ற கடுமை காட்டினார்.

1993-இல் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதில் தொடங்கி, கடைசியாக 2013-இல் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது வரை காவிரிப் பிரச்சினையில் ஒருபொழுதும் கருநாடகத்துக்காக விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை உறுதி காத்தவர் ஜெயலலிதா. கன்னடர்கள் இவர் படத்தையும் கொடும்பாவியையும் கொளுத்திக் கொந்தளிக்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை அறுவடை செய்தார். எந்த அளவுக்குக் கன்னடர்கள் இவரை வெறுத்தார்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் கீச்சகத்தில் (twitter) வலம் வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையிலும் மலையாளிகளிடம் தமிழர் உரிமையைச் சொட்டுக் கூட விட்டுத் தரவில்லை ஜெயலலிதா அவர்கள்.

அணை வலுவிழந்து விட்டது, நீர் தேக்கும் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையாள மாநிலமும் மல்லுக்கட்டியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உண்மை நிலையை எடுத்துக்காட்டி, கேரள அரசு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் செய்த எல்லாச் சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கினார். அணையின் நீர்த் தேக்க அளவான 142 அடியில் ஓர் அங்குலம் கூடக் குறைய விடாமல் இறுக்கிப் பிடித்தார். தவிர, “இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால்தான் இனி புதிய அணைகள் கட்ட முடியும். கேரள அரசு தன் முடிவைத் தமிழ்நாடு அரசு மீது திணிக்க முடியாது. அணைக்கு நடுவண் தொழில்நுட்பப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெற்று இனி எக்காலத்திலும் முல்லை பெரியாறு அணை விதயத்தில் கேரளம் வாலாட்ட முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமையை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.

வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றில் மட்டுமில்லை, முல்லை பெரியாறு அணை பற்றிப் பொய்ப் பரப்புரை செய்ய வந்த ஒரு திரைப்படத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ஜெ அவர்கள்.

Jayalalitha in anger
முல்லை பெரியாறு அணை பற்றி ‘டேம் 999’ என்று பொய் மூட்டையாக ஒரு திரைப்படத்தை எடுத்து அதைத் தமிழ்நாட்டிலேயே திரையிடவும் மலையாளிகள் முயன்றபொழுது, அதைத் தடை செய்தார். தணிக்கைத்துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரசு எப்படி வெளியிட மறுக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டபொழுது, “என் மாநிலச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றால் தடை போடத்தான் செய்வேன்” என்று சீறினார்.

‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’யான இந்திரா காந்தியே அரசியல் சூழல்களுக்குப் பணிந்து கச்சத் தீவைத் தாரை வார்த்து விட்ட நிலையில், இந்தத் ‘தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி’ அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை போனார். அண்டை நாட்டு உறவு, வெண்டைக்காயின் வரவு என்றெல்லாம் நடுவண் அரசுகள் கதை பேச, இதே போன்ற வேறொரு சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி “நீங்கள் கச்சத் தீவைக் கொடுத்ததே சட்டப்படி செல்லாது” என்று கடைக்காலிலேயே கை வைத்தார்!

பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியர்களின் உடலையே வேதிக் குவியலாக மாற்றியது போதாதென்று, அடுத்ததாக நம் மரபணுவையே மாற்ற மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதற்கு நடுவண் காங்கிரசு அரசு துடித்தபொழுது அதைத் தமிழ்நாட்டுக்குள் காலடி வைக்கவே இடம் தராமல் விரட்டியடித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில், தமிழினத் தலைவர் என்று புகழப்பட்ட கருணாநிதியும் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் எம்.ஜி.ஆரும் கூடச் செய்யாததை ஜெயலலிதா செய்தார். ‘தனி ஈழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்! ‘இலங்கையை நட்பு நாடு எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நடுவணரசுக்கே அறிவுரை கூறினார். போதாததற்கு, ‘தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை போட வேண்டும்’ என்றும் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஜெயலலிதாவின் இந்த வரலாறு காணா நடவடிக்கைகளைப் பார்த்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளனும் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்தியவனுமான கோத்தபயா இராசபக்ச, “ஜெயலலிதா இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு வருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. தமிழகம் என்பது இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்றெல்லாம் படபடத்தான்.

இப்படி, எழுத்தளவிலான முயற்சிகளோடு நின்று விடாமல், அடுத்து செயல் அளவிலும் சிங்கள நாட்டின் சிண்டை உரசினார் ஜெயலலிதா. “தமிழ்நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அமைப்பாளர்கள் என யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறிக் கலந்து கொள்வதாக இருந்தால் இங்கு நடத்த விட முடியாது!” என்று கொந்தளித்தார். ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு இவருக்குப் பணிந்து இலங்கையைச் சேர்ந்த யாரையும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இவை மட்டுமல்லாமல், எந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தான் தடை கொண்டு வந்ததாகக் காலமெல்லாம் பெருமை பேசினாரோ, அதே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், “இப்படிப்பட்ட நிலையில் நடுவணரசின் கருத்தைக் கேட்டு விட்டுத்தான் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் இருப்பதால் கேட்கிறேன். மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்க வேண்டும்! இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும்” என்று தடாலடியாக நடுவணரசுக்கே கெடு வைத்தார். ஆனால், சட்டத்துக்கே புறம்பாக, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடை பெற்றது சோனியா தலைமையிலான நயவஞ்சக நடுவணரசு.

Chief Minister Jayalalitha

இப்படி, சிங்களக் காடையர் முதல் வடநாட்டு ஆரியர் வரை, சித்தராமையா முதல் கோத்தபயா வரை யாரிடமும் தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்காத முதல்வராகத் திகழ்ந்தார் ஜெயலலிதா அவர்கள். ஒரு தலைவருக்குண்டான அடிப்படைத் தகுதியே அதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, ஒற்றையாட்சித் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்தாலும் சரி, ஆட்சியாளர் என்பவர் ஒருபொழுதும் மக்களை விட்டுக் கொடுத்து விடக்கூடாது! அதுதான் இன்றியமையாதது! தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்! அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகரான ஒரு (தமிழ்) மக்கள் பிரதிநிதி தமிழ்நாட்டில் வேறு யாருமே இப்பொழுது இல்லை என்றால் அது மிகையாகாது.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், தொடக்கக் காலத்தில் ஜெயலலிதா பல தவறுகளை இழைத்தவர்தாம். இந்தியாவில் அடைக்கலம் தேடி வரும் மற்ற நாட்டு மக்களெல்லாரும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் வாழ்கையில், ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றும் தனியாக முகாம்களில் சிறை வைக்கப்பட்டுக் குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு ஜெ-வும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், ஒரு வகையில் பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலான நடவடிக்கைதான் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

இராஜீவ் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனி ஈழக் கோரிக்கைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் பேராதரவு இருந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழானது. இராசீவ் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதமும் அதனால் தமிழ்நாட்டின் மீது விழுந்த பழியும் சேர்ந்து மக்களின் சிந்தனையையே முடக்கி விட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இங்குள்ள மக்கள் வெறுக்கும் அளவுக்குப் போனார்கள். அதனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வராக வந்த ஜெயலலிதாவும் மக்கள் எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

ஆனால், 2011-இன் நிலைமையே வேறு. இராசீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தானா என்பதே சரியாகத் தெரியாத நிலையில், அப்படிப்பட்ட ஐயத்துக்குரிய குற்றச்சாட்டை முன்னிட்டுத் தங்கள் கண்ணெதிரிலேயே மொத்த இனமும் கொன்று குவிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கதறித் துடித்து வந்த நேரம் அது. ஒரே ஒரு மனிதனின் உயிரை விட இலட்சக்கணக்கான மக்களின் உயிரும் மானமும் வாழ்வும் வருங்காலமுமே பெரிது என்பதை உணர்ந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த வேளை அது. எனவே, அந்த நேரத்தில் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா மக்களின் அன்றைய மனநிலைக்கேற்ப மாறி நடந்தார். ஜெயலலிதா தமிழினத் தலைவர் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர் மட்டும்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்களின் அவ்வப்பொழுதைய மனநிலைகளுக்கேற்ப அவர் நடந்து கொண்டார்.

ஆம்! ஜெயலலிதா சிறந்த தலைவரோ இல்லையோ, அருமையான அரசியலாளரோ இல்லையோ, நல்ல ஆட்சியாளரோ இல்லையோ, ஆனால் மிகச் சிறப்பான மக்கள் பிரதிநிதி, தமிழர் பிரதிநிதி! மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், அதன் மூலம் தேசிய இனங்களுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதிலும் காங்கிரசை விடப் பத்து மடங்கு தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இன்றைய நாளில் நமக்குத் தேவை இப்படி எதற்காகவும் அசைந்து கொடுக்காத ஒருவரின் தலைமைதான். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஜெ அவர்களை நாம் இழந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்குமே கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் அணுவளவும் ஐயமில்லை!

காவிரி தந்த கலைச்செல்வியாய்த்
தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவரே!
காவிரியைத் தந்த புரட்சித்தலைவியாய்
மண்ணைவிட்டு மறைந்தவரே!
ஒருபொழுதும் எவரிடத்தும் எங்களை
எதற்காகவும் விட்டுத் தராத தங்களை
போற்றிச் செலுத்துகிறோம் அஞ்சலி! - இது

சனி, நவம்பர் 26, 2016

மாவீரர் திருநாள் என்பது என்ன?


Salutation!

மாவீரர் திருநாள் என்பது என்ன? ல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா? கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா? ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா? அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா? உண்ணாநிலை இருப்பதா? ஊர்வலம் நடப்பதா? அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரபாகரன் அவர்களின் படத்தை நம் படமாய் ஒருநாள் வைத்துக் கொள்வதா?...

இதுவா அஞ்சலி?... இதற்காகவா அவர்கள் உயிர் நீத்தார்கள்?... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்?...

இல்லை; கண்டிப்பாக இல்லை! மாவீரர் ஒருவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது அவர் எந்தக் காரணத்துக்காக உயிரை நீத்தாரோ அந்தக் குறிக்கோளை அவருக்காக நாம் நிறைவேற்றி வைப்பதுதான்!

“எங்களுக்காக, இந்த சமூகத்துக்காக இன்னுயிர் தந்தவனே/ளே! இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார்!” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை!... அதுதான் மரியாதை!!

ம்! தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பது தொடரட்டும்!தே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம்!...

இனப்படுகொலையாளர்களைச் சிறையில் தள்ளுவதற்கான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்போம்! கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம்!...

மிழினத் தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும். ஆனால், அவர் திரும்பி வந்து, இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு நாம் என்ன பதில் சொல்து என்பதற்கும் ஆயத்தமாவோம்!...

கடமைகள் நிறைய இருக்கின்றன நண்பர்களே! வெறுமே போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் உரக்கப் பேசுவதாலும் எதையும் உருப்படியாகச் செய்து விட முடியாது. சட்ட முன்னெடுப்புகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என நாம் முழுமையாய்ப் பயன்படுத்தாத பல வாய்ப்புகள் இன்னும் திறந்தே கிடக்கின்றன!

சிந்திப்போம்! செயல்படுவோம்! சிறப்படைவோம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்! 💪
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! 🙏
தமிழ்ப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப்
பணிவன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹

 
🌸 🌸 🌸 🌸 🌸
படம்: நன்றி ஈழப் பார்வை.
விழியம்: நன்றி வாகை தொலைக்காட்சி.

திங்கள், அக்டோபர் 24, 2016

My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!


கொட்டும் காவிரி

My dear Karnataka people, Greetings from my heart!

The Natural Law says Water extinguishes the fire. But, now, the water itself flares in between our two States. What an Irony!

Without contemplating the reason behind your persistence to deny water to Tamilnadu vehemently this time, compared to earlier times, the politicians and media over here are portraying you as bad people by exaggerating, your denial of water, again and again. In the same way, when Kannadiga friends also write in Social Medias about Tamils and Tamilnadu expressing their views on this issue, it’s quite obvious that the same situation prevails over there too. 

So, this is a small effort undertaken on behalf of the Tamil people to bring certain facts without political drama and media politics to your - the people of Karnataka - direct notice. Kindly read this people’s letter thoroughly, written by the people, for the people.

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு?



Burnt by Kannadigas and Crushed by Tamils

கன்னடர்கள் எரித்ததும் தமிழர்கள் உடைத்ததும்
ந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கேரளாவில் உள்ள தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடத்தித் தங்கள் வீரத்தைக் காட்டுவது; தமிழர்கள் கூலிக்குச் செம்மரம் வெட்டினால் அவர்களையே வெட்டிக் கொன்று போடுவது; இவைதாம் தமிழர்களிடம் பக்கத்து மாநில மக்கள் காலங்காலமாக நடந்து கொள்ளும் விதம். ஆனால், இத்தனைக்கும் பதிலடியாக ஒருமுறையாவது தமிழர்கள் இங்குள்ள அண்டை மாநிலத்தவர்கள் மீது ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?... 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்