.

திங்கள், மே 05, 2014

உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்!


Aga Sivappu Thamizh - The Blog must read by every Tamil!

நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது இரண்டாம் ஆண்டில்!

ஆம்! முதன்முதலில் என் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 12.11.2012 அன்று அவர் கையால் நிறுவப்பட்ட இந்த வலைப்பூ, கடந்த ஆண்டு என் தம்பியின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 23 அன்று தன் முதல் பதிவை வெளியிட்டது.

அந்த இனிய நாளை இப்பொழுது நான் நினைவு கூர்கிறேன்.

அந்த வலைப்பூ வெளியீட்டு நிகழ்வையே ஒரு குட்டி நூல் வெளியீட்டு விழா போலத்தான் நாங்கள் அரங்கேற்றினோம்.

தளத்தின் முதல் பதிவை என் தம்பி ஜெயபாலாஜி வெளியிட, தளத்தின் தலையாய பகுதியான ‘பற்றி’ பக்கத்தை (About page) என் அப்பா இளங்கோவன் அவர்கள் வெளியிட்டார். தளத்தின் பெருமையைப் பறைசாற்றும் முதன்மை உறுப்பான பக்கப் பார்வைகள் செயலியை (Pageviews Widget) என் பாட்டி சொக்கம்மாள் அவர்கள் நிறுவ, தளத்தின் முதல் கருத்தைப் பதிவு செய்தார் என் அம்மா புவனேசுவரி அவர்கள். (ஆனால், அதற்குள்ளாகவே நண்பர் கிங் விஸ்வா முதல் ஆளாகக் கருத்திட்டு விட்டது மறக்க முடியாத நட்பின் இனிமை!).

‘பற்றி’ பக்கத்தில் தளம் குறித்து எழுதிய பாவைப் (poetry) பாராட்டி ‘எதிர்வினைகள்’ பட்டியில் (Reactions Bar) வாக்களித்ததன் மூலம் என் சித்தி குணலட்சுமி அவர்கள் முதல் ஆளாகத் தளத்துக்கு ‘விருப்பம்’ தெரிவிக்க, முதல் பதிவுக்கான வாக்கை அளித்துத் தளத்தின் இடுகைக்கான முதல் ‘விருப்ப’த்தைப் பதிவு செய்தார் சித்தப்பா மோகன்குமார் அவர்கள்.

அப்படித் தொடங்கிய இந்த வலைப்பூவுக்கு இந்த ஓராண்டில் நீங்கள் அளித்திருக்கும் வளர்ச்சி பற்றி இதோ உங்கள் மேலான பார்வைக்கு:

மொத்தப் பதிவுகள்: 30

மொத்தக் கருத்துக்கள்: 171 (என் பதில்கள் உட்பட | பிளாக்கர் கருத்துப்பெட்டி + முகநூல் கருத்துப்பெட்டி)

மொத்தப் பார்வைகள் (Total Pageviews): 24,000+ (சராசரியாக ஒரு நாளுக்கு 65 பார்வைகள்)

மொத்த அகத்தினர்கள் (Followers): 266 (சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து)

வருகையாளர்களை அழைத்து வருவதில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் தளங்கள்:


தளங்கள்
பார்வைகள்

3274

1394

787

578

477

399

210

160

144

114




உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:






‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:


நாடுகள்
பார்வைகள்
இந்தியா
12989
அமெரிக்கா
3352
இரசியா
1477
ஐக்கிய அரபு நாடுகள்
716
இலங்கை
546
சிங்கப்பூர்
497
இங்கிலாந்து
472
கனடா
463
ஆத்திரேலியா
366
பிரான்சு
292



நினைவில் கமழும் நிகழ்வுகள்!

Memories are fragrancing in the Heart Flower!

'தமிழ்மணம்' திரட்டியில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘அகச் சிவப்புத் தமிழ்’ 806ஆவது இடத்தைப் பிடித்தது அதன் வளர்ச்சி குறித்துக் கிடைத்த முதல் மகிழ்ச்சி! (தரவரிசையின் கடைசி எண் 1077).

அடுத்து, ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?’ பதிவு அடைந்த பெரும் வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. ஒரே நாளில் 250-க்கு மேல், ஒரே மாதத்தில் 1500-க்கு வாரத்தில் 3500-க்கு மேல் எனப் பக்கப் பார்வை எண்ணிக்கையில் எகிறியடித்த இந்தக் கட்டுரை. அந்த ஒரு வாரத்துக்குள் 591 முகநூல் விருப்பங்களையும் பெற்றது.* (கூகுள்+, கீச்சுப் பகிர்மான எண்ணிக்கைகள் தனி!). இன்றும் 4200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்வையிடப் பெற்று இந்தப் பதிவு முதலிடத்தில் இருக்கிறது! பார்வை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க, தமிழ் ஆர்வலர்கள் பலரின் பாராட்டுக்களையும் இக்கட்டுரை பெற்றதுதான் பெருமை தரும் நிகழ்வு.

அடுத்தது, நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞரும், முன்னோடிப் பதிவருமான ‘மாதவிப்பந்தல்கண்ணபிரான் (கே.ஆர்எஸ்) அவர்களே வந்து இழிவானதா இனப்பற்று? எனும் என் பதிவைப் படித்துவிட்டு ஆதரவாகக் கருத்தளித்தது. நான் இன்றும் நினைத்து மகிழும் நிகழ்வு அது!

இதற்கடுத்ததாக, என் வலைத்தொழில்நுட்ப ஆசான் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்களே வந்து முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்! என்கிற என் தொழில்நுட்பப் பதிவைப் பாராட்டி எழுதியது பெருமிதம் பொங்கிய தறுவாய்!

இதுவரை பார்த்த பதிவுகள் அளவுக்குப் பக்கப் பார்வைகளையோ, முன்னோடிகளின் பாராட்டையோ அவ்வளவாகப் பெறாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் என் உள்ளத்துக்கு மிக மிக நிறைவை அளித்தவை,

தமிழினப் படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசு சுமத்திய அபாண்டக் குற்றச்சாட்டை உடைக்கும் வகையிலான ஆணித்தரமான ஒரு வாதத்தை 2009இலிருந்தே நான் நண்பர்களிடம் கூறிக் கொண்டுதான் இருந்தேன். அதை ஒரு முறை ‘தோழமை’ மடலாடற்குழுவிலும் பதிவு செய்திருந்தேன். அதை மேற்கண்ட பதிவு மூலம் இணையத்தில் நிலையாகக் காட்சிக்கு வைத்தது, தமிழன் எனும் முறையில் நான் என் இனப் போராளிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஓரளவாவது நிறைவேற்றினேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தது.

சிறுவர் இலக்கியம் அழிந்தால் தமிழ் மொழியே அழியும் எனும் கருத்தை நான் வெகு காலமாகவே கூறி வருகிறேன். இது பற்றி நான் எழுதிக் கொடுத்த சொற்பொழிவைத் தோழர் பிரகாஷ் அவர்கள் மேடையேற்றியபொழுது அவர்தம் கல்லூரித் தமிழாசிரியர் அதைப் பாராட்டியது, அதே கருத்தைக் ‘கல்கி’ இதழ் ஆசிரியருக்கு எழுதி அனுப்பி, அவர்கள் நடத்தும் ‘கோகுலம்’ சிறுவர் இதழை முன்னேற்றச் சில நடவடிக்கைகள் எடுக்குமாறு நான் அளித்த பரிந்துரைகளை ஏற்று அவரும் அவற்றுள் சிலவற்றை முயன்று பார்த்தது ஆகியவையெல்லாம் அந்தக் கருத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிகள்! அப்படிப்பட்ட அந்த வெகுநாள் கருத்தை மேற்கண்ட இரண்டாவது இடுகை மூலம் நிலையாகப் பதிவு செய்தது, என் தாய்மொழிக்கு என்னாலான ஒரு சிறு தொண்டைப் புரிந்த நிறைவைத் தந்தது.

நன்றி!

Thanks!

இணையப் பெருஞ்சோலையில் நேற்று முளைத்த இந்தச் சிறு (வலைப்)பூவையும் பொருட்படுத்தி, இந்தச் சிறுவனின் கருத்துக்களைக் கூட மதித்து வந்து படித்த, வாக்களித்த, பகிர்ந்த அனைவர்க்கும் முதலில் வானளாவிய நன்றி!

தளத்தை வடிவமைக்கும்பொழுது மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களை அரும்பாடுபட்டுச் சரி செய்தளித்த நண்பர்கள் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா, ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித், ‘ஒன்லைன் பதில்!’ அப்துல் பாசித் ஆகியோருக்கு நன்றி!...

வலைப்பூ நடத்துவது பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத நான் இன்று மற்றவர்களுக்கு வலைப்பூ வடிவமைத்துத் தருமளவுக்கு முன்னேற இன்றியமையாக் காரணிகளாய் விளங்கிய பிளாக்கர் நண்பன், கற்போம், பொன்மலர், தங்கம்பழனி வலைத்தளம், வந்தேமாதரம் ஆகிய தளங்களுக்கு நன்றி!...

(முதலாமாண்டு நிறைவு பற்றிய இந்தப் பதிவை எப்படி எழுத வேண்டும் என்பது கூட ‘பிளாக்கர் நண்பன்’ தளம் பார்த்துக் கற்றதுதான்!)

வலைத்தளத்துக்கான இலச்சினை (Logo), பதாகை (Banner) இரண்டையும் வரைந்து கொடுத்த நண்பர் கண்ணதாசன் அவர்கள், அதற்கு இறுதி வடிவம் கொடுத்த, மைத்துனரும் பிறவித் தோழருமான பிரகாஷ் அவர்கள் இருவருக்கும் நன்றி!...

‘அகச் சிவப்புத் தமிழ்’ப் பதிவுகளைப் பார்த்து விட்டு முகநூல், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் என்னோடு இணைந்த புதிய நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக- ஒரு பதிவு விடாமல் படித்துப் பாராட்டியும், கருத்து தெரிவித்தும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் ந.சக்கரவர்த்தி, திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் நன்றி!...

முதன்முதலாகத் தன் தமிழ்விடுதூது வலைப்பூவில், படிக்க வேண்டிய தளங்கள் பட்டியலில் தமிழ் நூலகம், மாதவிப் பந்தல், முதலான போற்றுதலுக்குரிய தளங்களின் வரிசையில் ‘அகச் சிவப்புத் தமி’ழையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய, நான் கொஞ்சம் தளர்ந்து போன ஒரு நேரத்தில் தானே முன்வந்து ஆறுதலளித்த நண்பர் சக்திவேல் காந்தி அவர்களுக்கு நன்றி!...

நான் வலைப்பதிவு தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களில் தெறித்த தமிழுணர்வைப் பாராட்டி இணைய இதழ்களில் அவற்றை வெளியிட்டு ஊக்குவித்தவரும், கருத்துரீதியாக, தகவல்ரீதியாக நான் ஏதும் தவறு செய்தால் உடனுக்குடன் வழிகாட்டுபவருமான ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு நன்றி!...

வலைப்பூ தொடங்கியதாகச் சொன்ன உடனே ஓடோடி வந்து முதல் ஆளாகக் கருத்திட்ட நண்பரும், முன்னோடிப் பதிவருமான கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி!...

தொடங்கியவுடனே முதல் ஆட்களாக வந்து உறுப்பினர்களாகி நம்பிக்கையூட்டிய நண்பர்கள் ரமேஷ் கருப்பையா, வெற்றிப்பேரொளி சோழன், கார்த்திகைப் பாண்டியன், தமிழ்நாடன், யாழ்காந் தமிழீழம், அப்துல் பாசித் (பிளாக்கர் நண்பன்) ஆகியோருக்கு நன்றி!...

தளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூகவலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு நன்றி!...

தளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கு நன்றி!...

இடுகைகளுக்கான படங்களை வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு நன்றி!...

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாக்கருக்கு நன்றி!...

இன்று நான் இப்படி நான்கு பேர் படித்துப் பாராட்டும் அளவுக்கு எழுதக் கற்றிருக்கிறேன் என்றால் அதற்கு எல்லா வகையிலும் இன்றியமையாக் காரணிகளாகத் திகழும் என் குடும்பத்தினர், உறவினர்கள் எனும் சொல்லால் நான் குறிப்பிட விரும்பாத வீட்டுக்கு வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என்றே அழைக்க விரும்புகிற பெருமக்கள், நெஞ்சம் நிறைந்த நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் முத்தாய்ப்பான நன்றி!...

காணிக்கை

My Grandpa R.KulaSekaran

எனக்கு...

கண்ணதாசன் பாடல்களில் செறிந்த கவித்துவத்தை வரி வரியாக விளக்கி...

திராவிட இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பொதிந்திருந்த நியாயத்தைப் புரிய வைத்து...

வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைக் கதை கதையாக எடுத்துக் கூறி...

தமிழன் எனச் சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமிதத்தை உணர்வித்து...

எனது இன்றைய தாய்மொழிப்பற்று, இனப்பற்று, ரசனை, படைப்புணர்வு, சமூக அக்கறை அனைத்துக்கும் மூல முதற் காரணமான என் தாத்தா ஆர்.குலசேகரன் அவர்களுக்கு இந்த வலைப்பூவின் இந்த முதலாமாண்டுச் சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

பி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்! 

படங்கள்: நன்றி Fraja algerie, பூரியம்

*தகவல் பிழையும் விடுபாடும் பின்னர் அறிந்து திருத்தப்பட்டது. 

இந்தப் பதிவைக் கீழ்க்காணும் சமூக வலைத்தளங்களிலும், திரட்டிகளிலும் பகிர்வதன் மூலம் உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் பன்மடங்காகப் பெருகுமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. நன்றி அம்மணி! தளத்தில் முதல் பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்த நீங்கள் இந்தப் பிறந்தநாள் பதிவுக்கும் வந்து வாழ்த்து தெரிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி... அனைவரையும் குறிப்பிட்டதும் காணிக்கையும் சிறப்பு...

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. அருமை! அற்புதம்! கொண்டாட்டம்!:)

    நான் தான் காலந் தாழ்த்தி வந்துட்டேனோ?:) பயணத்தில் இருக்கேன்:) அதனாலென்ன?
    மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

    தாத்தா ஆர்.குலசேகரன் போற்றி!

    கோழியர் கோன் குடை "குலசேகரன்" சொல்
    அந்த நற்றமிழ் பத்தும் வல்லார், நண்ணார் நரகமே!:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யோ!! இந்த அளவுக்கு வாழ்த்துவீர்கள் பாராட்டுவீர்கள் என எதிர்பார்க்கவேயில்லை ஐயா! அதுவும் என் தாத்தாவின் பெயருக்கு ஆழ்வார் பாசுரத்தையெல்லாம் எடுத்துக்காட்டி நீங்கள் பாராட்டியிருப்பது கண்டு தலைகால் புரியவில்லை! மிக்க நன்றி ஐயா! பெருமகிழ்ச்சி எனக்கு!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்