.

சனி, டிசம்பர் 17, 2016

தமிழ்நாட்டை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காத தனித் தலைவி!

Jayalalitha
ஜெயலலிதா! – ஆயிரக்கணக்கான ஆண் விண்மீன்கள் ஒளி வீசிய அரசியல் வானில் ஒற்றைப் பெண்ணாய் உலா வந்த நிலா!

இவரைப் பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால் அடுக்கிக் கொண்டே போகலாம். அகந்தை அரசியல், அடாவடி ஆட்சி, பழிவாங்கும் போக்கு, பொதுமக்களை நடத்திய முறை, நேர்மை அலுவலர்களைப் பந்தாடிய விதம், ஊழல் குற்றச்சாட்டுகள், இன்னும் எத்தனையோ...

ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. அதுதான், அடுத்தவர்களிடத்தில் தமிழ் மக்களை விட்டுக் கொடுக்காத இவருடைய குணம்!

கன்னடர் என்று முத்திரை குத்தினோம். ஆனால், மற்ற யாரை விடவும் காவிரிப் பிரச்சினையில் இவர்தான் ஈடு இணையற்ற கடுமை காட்டினார்.

1993-இல் காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதில் தொடங்கி, கடைசியாக 2013-இல் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது வரை காவிரிப் பிரச்சினையில் ஒருபொழுதும் கருநாடகத்துக்காக விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை உறுதி காத்தவர் ஜெயலலிதா. கன்னடர்கள் இவர் படத்தையும் கொடும்பாவியையும் கொளுத்திக் கொந்தளிக்கும் அளவுக்கு அவர்களின் வெறுப்பை அறுவடை செய்தார். எந்த அளவுக்குக் கன்னடர்கள் இவரை வெறுத்தார்கள் என்பது குறிப்பிட்ட நேரத்தில் கீச்சகத்தில் (twitter) வலம் வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையிலும் மலையாளிகளிடம் தமிழர் உரிமையைச் சொட்டுக் கூட விட்டுத் தரவில்லை ஜெயலலிதா அவர்கள்.

அணை வலுவிழந்து விட்டது, நீர் தேக்கும் அளவைக் குறைத்தே ஆக வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையாள மாநிலமும் மல்லுக்கட்டியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உண்மை நிலையை எடுத்துக்காட்டி, கேரள அரசு அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் செய்த எல்லாச் சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கினார். அணையின் நீர்த் தேக்க அளவான 142 அடியில் ஓர் அங்குலம் கூடக் குறைய விடாமல் இறுக்கிப் பிடித்தார். தவிர, “இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால்தான் இனி புதிய அணைகள் கட்ட முடியும். கேரள அரசு தன் முடிவைத் தமிழ்நாடு அரசு மீது திணிக்க முடியாது. அணைக்கு நடுவண் தொழில்நுட்பப் படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றெல்லாம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைப் பெற்று இனி எக்காலத்திலும் முல்லை பெரியாறு அணை விதயத்தில் கேரளம் வாலாட்ட முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமையை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.

வழக்கு, நீதிமன்றம் போன்றவற்றில் மட்டுமில்லை, முல்லை பெரியாறு அணை பற்றிப் பொய்ப் பரப்புரை செய்ய வந்த ஒரு திரைப்படத்தைக் கூட விட்டு வைக்கவில்லை ஜெ அவர்கள்.

Jayalalitha in anger
முல்லை பெரியாறு அணை பற்றி ‘டேம் 999’ என்று பொய் மூட்டையாக ஒரு திரைப்படத்தை எடுத்து அதைத் தமிழ்நாட்டிலேயே திரையிடவும் மலையாளிகள் முயன்றபொழுது, அதைத் தடை செய்தார். தணிக்கைத்துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை அரசு எப்படி வெளியிட மறுக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டபொழுது, “என் மாநிலச் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றால் தடை போடத்தான் செய்வேன்” என்று சீறினார்.

‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’யான இந்திரா காந்தியே அரசியல் சூழல்களுக்குப் பணிந்து கச்சத் தீவைத் தாரை வார்த்து விட்ட நிலையில், இந்தத் ‘தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணி’ அதை மீட்க உச்சநீதிமன்றம் வரை போனார். அண்டை நாட்டு உறவு, வெண்டைக்காயின் வரவு என்றெல்லாம் நடுவண் அரசுகள் கதை பேச, இதே போன்ற வேறொரு சிக்கலில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி “நீங்கள் கச்சத் தீவைக் கொடுத்ததே சட்டப்படி செல்லாது” என்று கடைக்காலிலேயே கை வைத்தார்!

பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியர்களின் உடலையே வேதிக் குவியலாக மாற்றியது போதாதென்று, அடுத்ததாக நம் மரபணுவையே மாற்ற மரபணு மாற்றப் பயிர்களைப் பரப்புவதற்கு நடுவண் காங்கிரசு அரசு துடித்தபொழுது அதைத் தமிழ்நாட்டுக்குள் காலடி வைக்கவே இடம் தராமல் விரட்டியடித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில், தமிழினத் தலைவர் என்று புகழப்பட்ட கருணாநிதியும் பிரபாகரனின் நண்பர் என்று கூறப்படும் எம்.ஜி.ஆரும் கூடச் செய்யாததை ஜெயலலிதா செய்தார். ‘தனி ஈழத்துக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார்! ‘இலங்கையை நட்பு நாடு எனச் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று நடுவணரசுக்கே அறிவுரை கூறினார். போதாததற்கு, ‘தமிழர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை போட வேண்டும்’ என்றும் தனித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

ஜெயலலிதாவின் இந்த வரலாறு காணா நடவடிக்கைகளைப் பார்த்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளனும் தமிழினப் படுகொலையை முன்னின்று நடத்தியவனுமான கோத்தபயா இராசபக்ச, “ஜெயலலிதா இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு வருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. தமிழகம் என்பது இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலம்தான். ஆனால், இந்தியா போன்ற நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்றெல்லாம் படபடத்தான்.

இப்படி, எழுத்தளவிலான முயற்சிகளோடு நின்று விடாமல், அடுத்து செயல் அளவிலும் சிங்கள நாட்டின் சிண்டை உரசினார் ஜெயலலிதா. “தமிழ்நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அமைப்பாளர்கள் என யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறிக் கலந்து கொள்வதாக இருந்தால் இங்கு நடத்த விட முடியாது!” என்று கொந்தளித்தார். ஐ.பி.எல் ஆட்சிமன்றக் குழு இவருக்குப் பணிந்து இலங்கையைச் சேர்ந்த யாரையும் அந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

இவை மட்டுமல்லாமல், எந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தான் தடை கொண்டு வந்ததாகக் காலமெல்லாம் பெருமை பேசினாரோ, அதே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இராஜீவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், “இப்படிப்பட்ட நிலையில் நடுவணரசின் கருத்தைக் கேட்டு விட்டுத்தான் மாநில அரசு விடுதலை செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் இருப்பதால் கேட்கிறேன். மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்க வேண்டும்! இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும்” என்று தடாலடியாக நடுவணரசுக்கே கெடு வைத்தார். ஆனால், சட்டத்துக்கே புறம்பாக, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து எழுவர் விடுதலைக்கு இடைக்காலத் தடை பெற்றது சோனியா தலைமையிலான நயவஞ்சக நடுவணரசு.

Chief Minister Jayalalitha

இப்படி, சிங்களக் காடையர் முதல் வடநாட்டு ஆரியர் வரை, சித்தராமையா முதல் கோத்தபயா வரை யாரிடமும் தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்காத முதல்வராகத் திகழ்ந்தார் ஜெயலலிதா அவர்கள். ஒரு தலைவருக்குண்டான அடிப்படைத் தகுதியே அதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும் சரி, ஒற்றையாட்சித் தலைவராக (சர்வாதிகாரியாக) இருந்தாலும் சரி, ஆட்சியாளர் என்பவர் ஒருபொழுதும் மக்களை விட்டுக் கொடுத்து விடக்கூடாது! அதுதான் இன்றியமையாதது! தனிப்பட்ட முறையில் அவர் எப்படி மக்களை நடத்துகிறார் என்பது வேறு; ஆனால், வெளியாட்களிடத்தில் தன் மக்களை விட்டுத் தராமல் சரியான பிரதிநிதியாக நடந்து கொள்ள வேண்டும்! அப்படிப்பட்டவர்தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும்! அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நிகரான ஒரு (தமிழ்) மக்கள் பிரதிநிதி தமிழ்நாட்டில் வேறு யாருமே இப்பொழுது இல்லை என்றால் அது மிகையாகாது.

ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், தொடக்கக் காலத்தில் ஜெயலலிதா பல தவறுகளை இழைத்தவர்தாம். இந்தியாவில் அடைக்கலம் தேடி வரும் மற்ற நாட்டு மக்களெல்லாரும் மகிழ்ச்சியாகவும் விடுதலையாகவும் வாழ்கையில், ஈழத் தமிழர்கள் மட்டும் இன்றும் தனியாக முகாம்களில் சிறை வைக்கப்பட்டுக் குற்றவாளிகளைப் போலக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றால் அதற்கு ஜெ-வும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாதுதான். ஆனால், ஒரு வகையில் பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலான நடவடிக்கைதான் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

இராஜீவ் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் தனி ஈழக் கோரிக்கைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் பேராதரவு இருந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பின் நிலைமை அப்படியே தலைகீழானது. இராசீவ் கொடூரமாகக் கொல்லப்பட்ட விதமும் அதனால் தமிழ்நாட்டின் மீது விழுந்த பழியும் சேர்ந்து மக்களின் சிந்தனையையே முடக்கி விட்டதால் விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இங்குள்ள மக்கள் வெறுக்கும் அளவுக்குப் போனார்கள். அதனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டு முதல்வராக வந்த ஜெயலலிதாவும் மக்கள் எண்ணத்தை எதிரொலிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

ஆனால், 2011-இன் நிலைமையே வேறு. இராசீவைக் கொன்றது விடுதலைப்புலிகள்தானா என்பதே சரியாகத் தெரியாத நிலையில், அப்படிப்பட்ட ஐயத்துக்குரிய குற்றச்சாட்டை முன்னிட்டுத் தங்கள் கண்ணெதிரிலேயே மொத்த இனமும் கொன்று குவிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கதறித் துடித்து வந்த நேரம் அது. ஒரே ஒரு மனிதனின் உயிரை விட இலட்சக்கணக்கான மக்களின் உயிரும் மானமும் வாழ்வும் வருங்காலமுமே பெரிது என்பதை உணர்ந்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த வேளை அது. எனவே, அந்த நேரத்தில் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா மக்களின் அன்றைய மனநிலைக்கேற்ப மாறி நடந்தார். ஜெயலலிதா தமிழினத் தலைவர் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு முதல்வர் மட்டும்தான். ஆகவே, தமிழ்நாட்டு மக்களின் அவ்வப்பொழுதைய மனநிலைகளுக்கேற்ப அவர் நடந்து கொண்டார்.

ஆம்! ஜெயலலிதா சிறந்த தலைவரோ இல்லையோ, அருமையான அரசியலாளரோ இல்லையோ, நல்ல ஆட்சியாளரோ இல்லையோ, ஆனால் மிகச் சிறப்பான மக்கள் பிரதிநிதி, தமிழர் பிரதிநிதி! மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பதிலும், அதன் மூலம் தேசிய இனங்களுக்கு இந்தியாவில் இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதிலும் காங்கிரசை விடப் பத்து மடங்கு தீவிரமாகச் செயல்படும் பா.ஜ.க போன்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் இன்றைய நாளில் நமக்குத் தேவை இப்படி எதற்காகவும் அசைந்து கொடுக்காத ஒருவரின் தலைமைதான். இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஜெ அவர்களை நாம் இழந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழ் இனத்துக்குமே கூட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் அணுவளவும் ஐயமில்லை!

காவிரி தந்த கலைச்செல்வியாய்த்
தமிழ்நாட்டுக்குள் நுழைந்தவரே!
காவிரியைத் தந்த புரட்சித்தலைவியாய்
மண்ணைவிட்டு மறைந்தவரே!
ஒருபொழுதும் எவரிடத்தும் எங்களை
எதற்காகவும் விட்டுத் தராத தங்களை
போற்றிச் செலுத்துகிறோம் அஞ்சலி! - இது

சனி, நவம்பர் 26, 2016

மாவீரர் திருநாள் என்பது என்ன?


Salutation!

மாவீரர் திருநாள் என்பது என்ன? ல்லறைகளில் மலர் வளையம் சார்த்துவதா? கண்ணீருடன் மெழுகுத்திரி ஏந்துவதா? ஈகியரின் படங்களுக்குப் பூமாலை போடுவதா? அவர்தம் வீரம் பற்றி இணையத்தில் பாமாலை பாடுவதா? உண்ணாநிலை இருப்பதா? ஊர்வலம் நடப்பதா? அல்லது, சமூக ஊடகங்களில் மேதகு.பிரபாகரன் அவர்களின் படத்தை நம் படமாய் ஒருநாள் வைத்துக் கொள்வதா?...

இதுவா அஞ்சலி?... இதற்காகவா அவர்கள் உயிர் நீத்தார்கள்?... இவற்றையெல்லாம் எதிர்பார்த்தா அந்த சந்தனப் பேழைகள் சாவினைத் தழுவினர்?...

இல்லை; கண்டிப்பாக இல்லை! மாவீரர் ஒருவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்பது அவர் எந்தக் காரணத்துக்காக உயிரை நீத்தாரோ அந்தக் குறிக்கோளை அவருக்காக நாம் நிறைவேற்றி வைப்பதுதான்!

“எங்களுக்காக, இந்த சமூகத்துக்காக இன்னுயிர் தந்தவனே/ளே! இதோ, உன் குறிக்கோளை உன் தம்பி, தங்கைகள் வென்றெடுத்து விட்டதைப் பார்!” என்று பெருமையோடு இந்தப் புனித நாளில் நாம் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால், அது மரியாதை!... அதுதான் மரியாதை!!

ம்! தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பது தொடரட்டும்!தே நேரம், முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்ன செய்தோம் என்பதையும் சிந்திப்போம்!...

இனப்படுகொலையாளர்களைச் சிறையில் தள்ளுவதற்கான கோரிக்கைக்கு வலுச் சேர்ப்போம்! கூடவே, ஏற்கெனவே சிறையில் வாடும் இராசீவ் படுகொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதும் நம் கடமையே என்பதை உணர்வோம்!...

மிழினத் தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்குக் காலம் பதில் சொல்லட்டும். ஆனால், அவர் திரும்பி வந்து, இத்தனை நாட்களாக என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் அதற்கு நாம் என்ன பதில் சொல்து என்பதற்கும் ஆயத்தமாவோம்!...

கடமைகள் நிறைய இருக்கின்றன நண்பர்களே! வெறுமே போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் உணர்ச்சி வசப்படுவதாலும் உரக்கப் பேசுவதாலும் எதையும் உருப்படியாகச் செய்து விட முடியாது. சட்ட முன்னெடுப்புகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என நாம் முழுமையாய்ப் பயன்படுத்தாத பல வாய்ப்புகள் இன்னும் திறந்தே கிடக்கின்றன!

சிந்திப்போம்! செயல்படுவோம்! சிறப்படைவோம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழர்! 💪
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! 🙏
தமிழ்ப் பெருந்தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப்
பணிவன்பார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹

 
🌸 🌸 🌸 🌸 🌸
படம்: நன்றி ஈழப் பார்வை.
விழியம்: நன்றி வாகை தொலைக்காட்சி.

திங்கள், அக்டோபர் 24, 2016

My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!


கொட்டும் காவிரி

My dear Karnataka people, Greetings from my heart!

The Natural Law says Water extinguishes the fire. But, now, the water itself flares in between our two States. What an Irony!

Without contemplating the reason behind your persistence to deny water to Tamilnadu vehemently this time, compared to earlier times, the politicians and media over here are portraying you as bad people by exaggerating, your denial of water, again and again. In the same way, when Kannadiga friends also write in Social Medias about Tamils and Tamilnadu expressing their views on this issue, it’s quite obvious that the same situation prevails over there too. 

So, this is a small effort undertaken on behalf of the Tamil people to bring certain facts without political drama and media politics to your - the people of Karnataka - direct notice. Kindly read this people’s letter thoroughly, written by the people, for the people.

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு?



Burnt by Kannadigas and Crushed by Tamils

கன்னடர்கள் எரித்ததும் தமிழர்கள் உடைத்ததும்
ந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால் கேரளாவில் உள்ள தமிழ்ப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் நடத்தித் தங்கள் வீரத்தைக் காட்டுவது; தமிழர்கள் கூலிக்குச் செம்மரம் வெட்டினால் அவர்களையே வெட்டிக் கொன்று போடுவது; இவைதாம் தமிழர்களிடம் பக்கத்து மாநில மக்கள் காலங்காலமாக நடந்து கொள்ளும் விதம். ஆனால், இத்தனைக்கும் பதிலடியாக ஒருமுறையாவது தமிழர்கள் இங்குள்ள அண்டை மாநிலத்தவர்கள் மீது ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டதுண்டா?... 

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

உங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


Innocent Girls who lost their lives because of Men's Cruelty

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றன. அதுவும், கேள்விப்படும்பொழுதே பதறிக் கைவிரல்களை நடுங்கச் செய்யும் அளவுக்குக் கொடூரமான வன்முறைகள்!

தில்லியில் ஜோதிசிங் (நிர்பயா), கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிசா, சேலத்தில் வினுப்பிரியா, சென்னையில் சுவாதி எனப் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த சில காலமாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நாகரிகம் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மண்ணில் அதே ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயகரமான சூழலில் இன்றைய பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், நாம் வாழும் சமூகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மாறிய பின்பும் இதே சமூகத்தில் வாழும் நாம் நம் பெண் / ஆண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்படி என்ன மாற்றத்தை வளர்ப்பு முறையில் கொண்டு வந்தோம்?...

வெள்ளி, ஜூலை 01, 2016

உங்கள் இ.பு.ஞானப்பிரகாசனின் கீச்சுக்கள்! - 2



இதோ, என் கீச்சுக்களில் (tweets), தேர்ந்தெடுத்த ௨௫ (இருபத்தைந்து) மட்டும் இரண்டாம் பாகமாக உங்கள் பார்வைக்கு... மறுகீச்சுக்கு... உடுக்குறிக்கு! இவற்றைப் படித்த பின்னும் இதன் முந்தைய பாகத்தைப் படிக்க உங்களுக்குத் துணிவு இருந்தால் செல்லுங்கள் இங்கே!

திங்கள், ஜூன் 06, 2016

நானும் இனி இலட்சாதிபதி!

ம் நண்பர்களே!

இதோ, உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ ஒரு இலட்சம் சொடுக்குகளைத் (Hits) தாண்டி இப்பொழுது வெற்றிநடை போடுகிறது!

இதற்கு முழுக் காரணம் வாசகர்களாகிய நீங்கள்தாம்! தளத்தின் உறுப்பினர்கள், தமிழார்வம் உள்ள அன்பர்கள், இனப்பற்றுள்ள இளைஞர்கள், சமூக அக்கறை கொண்ட தோழர்கள், வலையுலக உறவுகள், வழிகாட்டும் ஆன்றோர்கள் என நீங்கள் எல்லோரும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.

கூடவே, தளத்தின் தேடுபொறி உகப்பாக்கத் தரத்தை (SEO Standard) மேம்படுத்திப் பார்வைகளைக் கூட்டும் பல்வேறு வகைச் செருகு நிரல்கள் (plug-ins), அவற்றின் ஆக்குநர்கள், சமூக ஊடகங்கள், அவற்றிலுள்ள குழுக்கள், திரட்டிகள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories), இவற்றை நடத்துபவர்கள் ஆகியோரையும் நன்றியோடு இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்!

இந்த மகிழ்ச்சியான தறுவாயில் இது பற்றிச் சில புள்ளிவிவரத் தகவல்களை உங்கள் ஆர்வமிகு பார்வைக்கு முன்வைக்க விழைகிறேன்!
 

மொத்தச் சொடுக்குகள் = 1,00,035
மொத்தப் பதிவுகள் = 80
அதற்கான காலம் = 3 ஆண்டுகள், 1 மாதம், 4 நாட்கள்
(1130 நாட்கள் | 23.4.2013 - 26.5.2016)

ஆக, சொடுக்குகளின் சராசரி:

ஆண்டுக்கு
33,345 சொடுக்குகள்
மாதத்துக்கு
2,703 சொடுக்குகள்
வாரத்துக்கு
621 சொடுக்குகள்
நாளுக்கு
88 சொடுக்குகள்
பதிவுக்கு
1250 சொடுக்குகள்

இப்படி, என்னை இலட்சாதிபதியாக்கிய உங்கள் அனைவருக்கும் என் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்து அகம் மிக மகிழ்கிறேன்!
 
தொடர்ந்து வருகை புரியுங்கள்! உங்கள் செம்மாந்த கருத்துக்களை அளியுங்கள்! உங்கள் நண்பன் இன்னும் சிறந்த படைப்புகளைத் தமிழ்த்தாயின் மலரடியில் படையலிட உதவுங்கள்! 

வாழ்க தமிழ்!
 வெல்க தமிழர்!

பி.கு: “மூன்று ஆண்டுகளில் ஒரு இலட்சம் சொடுக்குகள் என்பதெல்லாம் ஒரு சாதனையா?” என்று சிலர் கேட்கலாம். அப்படிப்பட்ட நண்பர்களும் நமக்கு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு வார்த்தை. இது மற்றவர்களைப் போல் வாரத்துக்கு இரண்டு பதிவு, அன்றாடம் ஒரு பதிவு என்று எழுதும் தளம் இல்லை. இந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக மாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே போட்டு எட்டிய எண்ணிக்கை இது. 

இந்த வலைப்பூவின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் இதன் வளர்ச்சி, உங்கள் மகிழ்ச்சி இரண்டையும் பெருக்கலாமே!
 

வியாழன், மே 26, 2016

மாற்று அரசியல் தோற்று விட்டதா? - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல்!


Is Alternate Politics Failed?

தேர்தல் - 2016 (பகுதி - 5) 

யிர் போகும் தறுவாயில் கிடைத்த சஞ்சீவினி மூலிகையைச் சுருட்டிப் ‘பீப்பீ’ ஊதியிருக்கிறார்கள் தமிழ் மக்கள்! மாற்று அரசியல் முயற்சிகளுக்கு மக்கள் அளித்த தோல்வியைத்தான் சொல்கிறேன்.

மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்பது ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்த அளவுக்கு இழிவான படுதோல்வியை அடையும் என்று யாருமே நினைக்கவில்லை. மேலும், புதிதாக யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், வழக்கம் போல அ.தி.மு.க தோற்றுத் தி.மு.க ஆட்சி அமையும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, முதன் முறையாக இந்தத் தடவை அரசியல் நோக்கர்களின் கணிப்பு பலித்துத் தொலைத்தது!

இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்ன? மக்களுக்கு உண்மையிலேயே கருணாநிதி, ஜெயலலிதா தவிர வேறு யாரையுமே பிடிக்கவில்லையா? அல்லது, மக்கள் நலக் கூட்டணியால் விளைந்த விபரீதமா இது? பார்க்கலாம் வாருங்கள்!

அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் காரணமே தி.மு.க-தான்! தி.மு.க-காரரே வாய் தவறி ஒப்புக் கொண்ட உண்மை - விழியச் (video) சான்றுடன்!

புதன், மே 18, 2016

தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?


Tamil Genocide Remembrance

தோ இதோ என ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன!
ஆம்! தமிழினப் படுகொலை நடந்து இன்றோடு ஏழு ஆண்டுகள் ஆகின்றன!

வழக்கம் போல் தமிழ் உணர்வுள்ள தோழர்களும் தலைவர்களும் இந்த ஆண்டு நினைவு நாளையும் செவ்வனே கடைப்பிடிக்க ஏற்பாடு செய்வார்கள் என நம்புகிறேன். ஆனால் அதே நேரம், இனப்படுகொலைக்கு நினைவேந்தல் மட்டுமே தனி ஈழத்தைப் பெற்றுத் தந்துவிடாது, வேறு சில இன்றியமையாக் கடமைகளும் இருக்கின்றன என்பதை இந்த எழுச்சி நாளில் பணிவன்போடு நினைவூட்ட விரும்புகிறேன்.

இன அளவில் செய்ய வேண்டியவை...

செவ்வாய், மே 10, 2016

தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016


Atrocities of DMK and ADMK

தேர்தல் - 2016 (பகுதி - 4) 

தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க டாஸ்மாக் கொண்டு வந்தது அ.தி.மு.க! தமிழினப் படுகொலை நேரத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்றால், அந்தப் படுகொலைக்கு மூலக் காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கொண்டு வந்தவர் -இன்றும் அதற்காகப் பெருமையடித்துக் கொள்ளும்- ஜெயலலிதா! ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தன் கையில் இருந்தபொழுது அதை சாமர்த்தியமாகக் கை கழுவியது தமிழினத்தலைவரின் அரசு என்றால், ஒருபுறம் அவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டே மறுபுறம் சாகக் கிடந்த தகப்பனாரைப் பார்ப்பதற்குக் கூட நளினிக்குச் சிறைவிடுப்பு (parole) தரக்கூடாதென்று உயர்நீதிமன்றத்தில் வாதாடியது ஈழத்தாயின் அரசு!

இவை மட்டுமா? மின் தட்டுப்பாடு, வேளாண்துறைச் (agriculture) சீரழிவு, தமிழ் மீனவர் மீதான தாக்குதல்கள், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நசுக்கப்படுதல், அணு உலைத் திட்டம் - நுண்நொதுமித் (நியூட்ரினோ) திட்டம் எனப் பேரழிவுத் திட்டங்கள் திணிக்கப்படுதல், அண்டை மாநிலங்கள் - நடுவணரசு முதல் உலக நாடுகள் வரை யாருமே தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத நிலைமை, இயற்கைச் சமநிலையின் சீர்குலைவு என இவ்வளவுக்கும் காரணம், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத தி.மு.க, அ.தி.மு.க அரசுகளே இங்கு திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வருவது. எனவே, இத்தனை பிரச்சினைகளும் தீர வேண்டுமானால் அதற்கு உடனடித் தேவை ஆட்சி மாற்றம்! யாருக்கு வாக்களித்தால் அந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இந்தத் தேர்தலின் ஒரே கேள்வி! பதில்?...

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்