.

வியாழன், அக்டோபர் 31, 2019

இனியாவது சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

Last kisses to Sujith with tears
போய்விட்டான் சுர்ஜித்!

தனக்காக மேலே எத்தனை இலட்சம் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை கோடி விழிகள் கண்ணீரை வடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை நூறு கரங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன...

எப்படிப்பட்ட ஓர் அன்புலகம் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது...

என எதையுமே பார்க்காமல் போய்விட்டான் சுர்ஜித்!

ஆனால் போனவன் சும்மா போகவில்லை. இக்கட்டான பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கு உருப்படியாக இன்னும் எதையுமே கண்டுபிடிக்காத சமூகம் இது எனும் உண்மையை நம் முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

அறிவியலாளர்களும் தொழில்நுட்பர்களும் சந்திராயன் போன்ற திட்டங்களின் மூலம் நமக்கு நிலவைக் காட்டி நாட்டுப்பற்றுச் சோறூட்டிக் கொண்டிருக்கும் வேளையில் “கொஞ்சம் குனிஞ்சு உங்க காலுக்குக் கீழே பாருங்கடா” என்று நம் பின்னந்தலையில் அடித்து விட்டுப் போயிருக்கிறான்.

பெருநிறுவனப் பணமுதலைகளுக்கான கண்டுபிடிப்புகளே மக்களுக்கான பெருமிதமாகவும் நம்ப வைக்கப்படும் இத்திருநாட்டில் மக்களுக்கான உண்மையான அறிவியலும் தொழில்நுட்பமும் குறித்த கேள்விகளை எழுப்ப வைத்து விட்டு மறைந்திருக்கிறான்.

அவனுடைய இப்பேர்ப்பட்ட உயிர் ஈகம் (தியாகம்) பயனின்றிப் போகக்கூடாது!

இதுவரை எத்தனையோ குழந்தைகளின் உயிரை ஆழ்துளைக் கிணறுகள் பலி வாங்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தைக்குக் கிடைத்த அளவுக்குப் பரவலான கவனம் இதுவரை வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இந்த ஒரு மீட்புப் பணியில் கையாளப்பட்ட அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இதுவரை வேறெங்கும் கையாளப்பட்டதாகவும் தெரியவில்லை. இவை எதுவும் வீணாகக்கூடாது! எனவே நடந்த இந்த மீட்புப் பணி முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்!

சிறுவன் கிணற்றில் விழுந்த அந்த முதல் நொடியிலிருந்து உயிரற்ற நிலையில் அவன் மீட்கப்பட்ட கடைசி நொடி வரையில் என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன என்பது ஒன்று விடாமல் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்!

எத்தனை விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

எத்தனை விதமான கருவிகள் கொண்டு வரப்பட்டன?

என்னென்ன விதமான செயல்நுட்பங்களும் (technique) தொழில்நுட்பங்களும் முயன்று பார்க்கப்பட்டன?

அவையெல்லாம் என்னென்ன காரணங்களால் தோல்வியடைந்தன?

வேறு எந்த விதமான கருவிகள் / தொழில்நுட்பங்கள் இருந்திருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும்?

இவை அத்தனையும் விரிவாக நுட்பமாகப் பதிவாக வேண்டும்!

இத்தோடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதுவரை ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் இன்ன பிற இக்கட்டான பகுதிகளிலிருந்தும் குழந்தைகளை மீட்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் இதே போல் விரிவாகத் திரட்டப்பட்டு மொத்தமாக ஓர் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியோருக்கான மீட்பு நடவடிக்கை பற்றிய மொத்த அறிவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இனி ஒரு குழந்தைக்கு இப்படி நடந்தால் குழந்தையின் விவரங்கள், சூழலின் விவரங்கள் போன்றவற்றை அந்த இணையத்தளத்தில் உள்ளிட்டு அதே போல் முன்பு மாட்டிய குழந்தையை எப்படி மீட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விரைவாகக் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒருவேளை அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சூழலிலான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் ஏன் தோல்வியடைந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அத்தகைய முயற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரத்தைக் குறைக்க முடியும்.

எத்தனையோ புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் சுர்ஜித் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன என ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்றவர்களால்தாம் முயன்று பார்க்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கென முழுமையான ஒரு மீட்புத் திட்டம் (well-designed plan) வடிவமைக்கப்பட்டால்தான் அதற்கான பயிற்சிகளை மீட்புக் குழுவினருக்கு வழங்கவும் முடியும். அப்படி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட முறையான திட்டம் என இதுவரை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே உடனடியாகத் தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். இதில் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், அறிவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், குழந்தை உளவியலாளர்கள், மண்ணியலாளர்கள், நீரியலாளர்கள், தீயணைப்புத்துறை போன்ற பேரிடர் மேலாண்மை வீரர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் என அனைத்துத் தரப்பு வல்லுநர்களும் இடம்பெற்றுத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்தும் குழந்தைகளை மீட்பதற்கான முழுமையான ஒரு மீட்புத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கப்பட்டவுடன் தீயணைப்புத்துறையினருக்கும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் அதைச் செயல்படுத்துவதற்கான முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்கள் சிலரும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் சிலரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை மீட்கும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டு இயந்திர மனிதர்களே கூட உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை இவை அத்தனையும் வெறும் போல்மப் படைப்புகளாகத்தாம் (prototypes) இருக்கின்றன. இந்தத் துயரத் தோல்விக்குப் பிறகாவது அரசு இனியும் இது போன்ற முயற்சிகளைக் கிடப்பில் போட்டு வைக்காமல் உடனடியாக இவை அனைத்தையும் முறையாக ஆராய்ந்து தகுதியுள்ளவற்றுக்கு ஏற்பிசைவு வழங்கி ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தலா ஒரு கருவி எப்பொழுதும் ஆயத்தமாக இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னால், துணை முதல்வர் உறுதியளித்தது போல் உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு சரியான முறையில் மூடப்பட வேண்டும்.

ஆனால் இஃது அவ்வளவு எளிதான வேலை இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மாநிலம் முழுக்க இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதாக நீரியல் வல்லுநர் எஸ்.ஜனகராஜன் கூறுகிறார். எனவே அரசு மட்டுமே முயன்று இவை அனைத்தையும் கண்டறிந்து விட முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால் அதற்கான காலமும் வெகுவாக நீடிக்கும். எனவே பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் தமிழ்நாட்டில் எங்கே இருந்தாலும் உடனடியாக மக்கள் அதை அரசுக்குத் தெரிவிக்க அழைப்பு மையம் ஒன்றையும் அதற்கான இலவச அழைப்பு எண் ஒன்றையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

எப்படியாவது தன்னை அம்மா மடியில் சேர்த்து விடுவார்கள் என்று நம்மை நம்பிக் காத்திருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கடைசி வரை காப்பாற்றாமலே விட்ட நாம் அந்தக் கொடும்பெரும் துரோகத்துக்குக் கழுவாய் தேடவாவது இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்! அப்படிச் செய்தால்தான் இனியாவது நம் சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்யுமா அரசு?
❀ ❀ ❀ ❀ ❀
Make Sujith death will be the last
நன்றி: தினச்செய்தி.
படம்: நன்றி www.ripbook.com

தொடர்புடைய வெளியிணைப்புகள்:
ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்? சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?
`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

இந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து இன்னொரு சுஜித்துக்கு இப்படி ஆகாமல் தடுக்க நீங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. நல்ல தெளிவான, நுணுக்கமான பதிவு. நல்ல ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள். செயலாக்கப்பட வேண்டியவையும் கூட.

    அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு பதியப்பட்டுள்ளது. அப்போது மக்கள் எடுத்த உறுதி மொழியை இன்று வரை தொடர்கிறார்கள்.

    மக்களிடத்திலும் விழிப்புணர்வு வேண்டும்.

    வாழ்த்துகள் நண்பர்/சகோ இபுஞா

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை வலையுலகின் பக்கம் பார்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ! கருத்தை வெளியிடத் தாமதமானதற்கு வருந்துகிறேன். நேற்றுக் கூடப் பேசினோமே, நீங்கள் சொல்லவில்லையே! உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இப்பொழுது சென்னை மாநகரில் உள்ள திறந்திருக்கும் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றைக் கணக்கெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சில மாவட்டங்களில் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்குப் பரிசு அறிவித்திருக்கிறார்கள். அமைச்சர் விசய பாசுகர் அவர்கள் திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் பற்றி மக்கள் தகவல் அளிப்பதற்காகக் குறுஞ்செயலி (app) ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்போம்! எல்லாவற்றுக்கும் இங்கே ஓர் உயிர் தேவைப்படுகிறது இல்லையா?

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்