.

வெள்ளி, ஜூலை 27, 2018

வீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா? (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு!

Doorstep Aadhaar Enrollment Service

டிப்படையில் நான் ஆதார் அடையாளத் திட்டத்துக்கு எதிரி. எனக்கு மட்டுமில்லை, அனைவரும் ஆதார் அட்டை பெற்றுக் கொண்டாக வேண்டும் எனும் அரசின் இந்தக் கட்டாயப் போக்கு பெரும்பாலும் யாருக்குமே பிடிக்கவில்லை. வெறுமே பெயர், ஊர், படம் ஆகியவை மட்டும் என்றால் கவலையில்லை; மாறாகக் கைக்கோடுகள் (finger impression), கருவிழிக் கோடுகள் (Iris impression) போன்ற உயிரியளவியல் தகவல்கள் (biometric informations) வரை நம்மைப் பற்றிய அடிப்படை விவரங்களையே ஒட்டுமொத்தமாக ஒப்படைப்பது என்பது நம்மையே நாம் இன்னொருவருக்கு எழுதித் தருவதற்குச் சமம்.

அதுவும் அரசிடம் இந்தத் தகவல்களைத் தருவது என்றால் கூடப் போனால் போகிறது என அரை மனதாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டைக்காக நம்மைப் பற்றிய இத்தகவல்களையெல்லாம் திரட்டுவது ஒரு தனியார் நிறுவனம்! ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அளித்து விட வேண்டும் என அரசு வற்புறுத்துவது வெட்ட வெளிப்படையான தனிமனித அத்துமீறல்! இது உலகின் மிகப் பெரிய உயிரியளவியல் அடையாளத் திட்டம் (World’s Largest Biometric ID program) என்கிறது மத்திய அரசு. ஆனால் இது உலகின் மிகப் பெரும் பட்டப்பகல் தகவல் கொள்ளை (World’s Largest Daylight Data Robbery) என்பதுதான் சரி. “உன்னைக் கொள்ளையடிக்க ஒரு நிறுவனத்தைப் பணியமர்த்தியிருக்கிறேன். அதற்கு ஒத்துழைப்புக் கொடு” என அரசே மக்களை வெளிப்படையாக மிரட்டும் செயல் இது.

ஆனால் இப்படி ஆயிரம்தான் சொன்னாலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடெங்கும் எவ்வளவுதான் பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமே திரும்பத் திரும்பச் சொன்னாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தவே இன்றியமையாத ஒன்றாக ஆதார் அட்டை இன்று மாற்றப்பட்டிருக்கிறது என்பதே கண்கூடான உண்மை!

வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டுமா – ஆதார் அட்டை கொடு! எரிவளி மானியம் (LPG subsidy) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! வாடிக்கையாளர் அடையாள நிரலக அட்டை (SIM) வேண்டுமா - ஆதார் அட்டை கொடு! அவ்வளவு ஏன், சாக வேண்டுமா – அதற்கும் ஆதார் அட்டை கொடு என்கிறது இந்நாடு. எனவே எதிர்காலத்தில் பாதிப்பு வருகிறதோ இல்லையோ, நிகழ்காலத்தில் சிக்கலின்றி வாழ வேண்டுமே என்பதற்காகவாவது மக்கள் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், இப்படி ஏற்றுக் கொண்டு போவதில் பெரும்பான்மை மனிதர்களுக்கு இடைஞ்சல் ஏதும் இல்லை. முதியவர்களும் மாற்றுத் திறனாளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் இதற்காகப் படும் பாடுகள்தாம் கொடுமை! நாட்டில் முதியவர்கள் எத்தனையோ கோடிப் பேர் இருக்கிறார்கள். முதுமை காரணமாகக் கண் சரியாகத் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாதவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், தமது கை – கால் – பார்வை போன்றவற்றைத் தமது விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாதவர்கள், படுக்கையை விட்டே எழ இயலாதவர்கள் என எத்தனையோ வித விதமான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.

ஆனால், “நீ எப்படி வேண்டுமானால் இருக்கலாம். உனக்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அதெல்லாம் உன் தனிப்பட்ட சிக்கல். ஆதார் அட்டை பெற்றாக வேண்டும் என்றால் பெற்றாகத்தான் வேண்டும். இல்லாவிட்டால், நீ செத்தால் உனக்கு இறப்புச் சான்றிதழ் கூடக் கிடையாது” என்கிறது மத்திய அரசு. எனவே, உடற்கழிவு வெளியேறுவதைக் கூட உணர முடியாத முதியவர்கள், சிறு அதிர்வு ஏற்பட்டால் கூடப் பெரும் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் போன்றோரைக் கூட ஆதார் மையங்களுக்கு எப்பாடு பட்டாவது இட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

நானும் வீட்டை விட்டு வெளியேற இயலாத அளவுக்கு மாற்றுத் திறனாளி என்பதால் எனக்கும் இதே சிக்கல். சொல்லப் போனால், ஆதார் திட்டம் அமல்படுத்தப்படும் முன்பே அது பற்றி ஆனந்த விகடனில் படித்து விட்டு, “இது மிகவும் ஆபத்தான திட்டம். இதில் யாரும் பதிவு செய்து கொள்ளாதீர்கள்!” என்று அனைவரையும் எச்சரித்துக் கொண்டிருந்தவன் நான்; (வழக்கம் போல், என் பேச்சை யாரும் கேட்கவில்லை என்பது தனிக்கதை :-)). ஆனால் குடிமகனுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறக்கூட இனி ஆதார் இன்றியமையாதது என்றவுடன் ஆதார் அட்டை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கும் ஏற்பட்டது.

எனக்காக ஆதார் சேவையை வீட்டுக்கே வரவழைக்க என் அப்பாவும் தம்பியும் பல வகைகளிலும் முயன்றார்கள். ஆனால் அரசுப் பொறி அணுவளவும் அசையவில்லை. அட்டவணையிடப்பட்ட தனியார் வங்கி (Scheduled Bank) ஒன்று எனக்காக இச்சேவையை அளிக்க முன்வந்தது. ஆனால் 1500 ரூபாய் வாங்கிக் கொண்டு சென்ற அவர்களை அதன் பிறகு பிடிக்கவும் முடியவில்லை; ஆதாரும் கிடைக்கவில்லை!

என்னைப் போல் இப்படி எத்தனை பேர் எவ்வளவு தொகைகளை ஏமாந்தார்களோ தெரியாது. ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தி இரும்புச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசு என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையோ,
முதியவர்களையோ நினைத்துப் பார்த்துச் சிறப்பு ஏற்பாடு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆதார் சேவை இணையத்தளத்தில் (uidai.gov.in) ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொள்வதற்காக (Aadhaar Enrollment) விண்ணப்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளதுதான். ஆனால் அதன் மூலம் விண்ணப்பித்தால் ‘உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது’ என்று காட்ட மட்டும்தான் செய்கிறதே தவிர, அதன் பிறகு யாரும் தொடர்பு கொள்வதோ வீட்டுக்கு வருவதோ இல்லை.

மாநில அரசும் இதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஏற்பாடு ஏதும் செய்யாவிட்டாலும், போனால் போகிறது எனச் சென்னையில் மட்டும் இதற்காக ஒரு சிறப்புச் சேவையை வழங்கி வருகிறது. ஆம்! தமிழ்நாடு அரசு தனது அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் (Arasu Cable TV Corporation) மூலம் நடமாடும் ஆதார் சேவை (Mobile Aadhaar Service) வசதியை வழங்கி வருகிறது.


இப்படி ஒரு வசதி இருப்பதே ஏறத்தாழ யாருக்கும் தெரியாது. இந்தச் சேவையைப் பெற, சென்னையில் உள்ள அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்துக்கு விண்ணப்பதாரரின் உடல்நிலை – அவர் ஏன் ஆதார் மையத்துக்கு நேரில் செல்ல இயலவில்லை என்பதை – பற்றிச் சுருக்கமாக விளக்கி, அதன் காரணமாக வீட்டுக்கு வந்து ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து தரும்படி கோரி ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். பின்னர், குறிப்பிட்ட அலுவலகத்தின் இலவசத் தொடர்பு எண்ணிலும் அழைத்து விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு நினைவூட்ட வேண்டும். சில மாதங்களில் விண்ணப்பம் ஏற்கப்பட்டுச் சேவை வீடு தேடி வரும்; வந்தது!

இந்தச் சேவையில் மடிக்கணினி, படக்கருவி (camera), கைக்கோடுகள் – கருவிழிக் கோடுகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கான கருவிகள், அச்சுக்கருவி (printer) என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கே வந்து ஆதார் அட்டைக்குப் பதிவு செய்து கொண்டு போகிறார்கள். ஒளிப்படம் (photo), பதிவு எண் (enrollment number) முதலான இன்ன பிற விவரங்கள் அடங்கிய சீட்டும் உடனே தந்து விடுகிறார்கள். இதற்கெனத் தனியாகக் கட்டணமும் கிடையாது; இது முழுக்க முழுக்க இலவசச் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்தின் இலவசத் தொடர்பு எண்: 1800 425 2911 என்பதை அழையுங்கள். அல்லது, 044-2843 2911 எனும் அலுவலக எண்ணிலும் அழைக்கலாம். நேரில் அணுக:

தமிழ்நாடு அரசுக் கேபிள் டி.வி கார்ப்பரேஷன் லிமிடெட்,
துகார் டவர்ஸ்,
34 (123), 6ஆவது தளம்,
மார்ஷல் சாலை,
எழும்பூர்,
சென்னை – 600 008. 

தனிமனித உரிமைக்கு எதிரான ஆதார் அடையாளத் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற முயலாவிட்டாலும், குறைந்தது, மாற்றுத் திறனாளிகளையும் முதியவர்களையும் எண்ணிப் பார்த்து இப்படி ஒரு சேவையை வழங்கவாவது முன்வந்த தமிழ்நாடு அரசுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கும் அதே நேரம், இந்தச் சேவையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்!

பி.கு: ஒரு வழியாக, ஆதார் அட்டை பெறுவதே ஆபத்து; அது வேண்டா என்று சொல்லிக் கொண்டிருந்த என்னை, முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி வரும் ஆதார் பதிவுச் சேவையைத் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்துமாறு கோரச் செய்து விட்டார்கள்! மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு (NEET) கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்களை “இதற்கான தேர்வு மையத்தைத் தமிழ்நாட்டிலேயே ஒதுக்க வேண்டும்” என்று வேண்டச் செய்ததைப் போல்! இன்னும் இப்படி எத்தனை சாதனைகளைப் படைக்கக் காத்திருக்கிறதோ நம் மோதி அரசு! 

(நான் ‘கீற்றுஇதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி இந்தி நியூசு 18.  

தொடர்புடைய பதிவுகள்:
அந்த ஒரு துளி!


இந்தப் பதிவைப் பகிர்ந்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு நீங்களும் உதவலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. எல்லாம் நம் தலையெழுத்து எனச் சொல்லி மனதை ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! முதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு நன்றி! வெகு நாட்கள் கழித்து மீண்டும் நீங்கள் பதிவுலகுக்கு வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி!

      //எல்லாம் நம் தலையெழுத்து எனச் சொல்லி மனதை ஆறுதல்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்// - ஐயோ! எனக்குத் தலையெழுத்து மீது நம்பிக்கை இல்லையே! என்ன செய்வது!! :-))

      நீக்கு
  2. இதுதான் நம் கையறு நிலை. இப்படியே நாமிருக்க வேண்டும் என்பதுதான் அரசு அதிகாரத்தின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நன்றாகச் சொன்னீர்கள் கவிஞரே! ஆனால் அந்த விருப்பமும் எதிர்பார்ப்பும் தூள் தூளாகும் நாள் ஒன்றும் வரும் என நம்புகிறேன்! தங்கள் உணர்வார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! இந்தியாவிலேயே இல்லாத உங்களுக்கு இது புரிகிறது. ஆனால் இங்கேயே வாழ்பவர்களுக்குப் புரியவில்லையே! என்ன செய்ய!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்