📢 அன்புக்குரிய மாற்றுத்திறனாளித் தோழர்களே!
உங்களுக்கான அஞ்சல் வாக்குப் படிவத்தைத் தாக்கல் செய்து விட்டீர்களா? இதோ நான் செய்துவிட்டேன், பாருங்கள்! 😎
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் போன்றோர் வீட்டிலிருந்தே அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கான வசதி 2019ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வசதியைப் பெற நாம் நமது பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் (BLO) தொடர்பு கொள்ள வேண்டும். 🤙🏽
அவரை எப்படித் தொடர்பு கொள்வது? 📞
அண்மையில் நாம் அனைவரும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்காக (SIR) நம் விவரங்களைப் படிவத்தில் நிரப்பிக் கொடுத்தோம் இல்லையா? அப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்பட்டன என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். அவற்றுள் ஒரு படிவத்தை நிரப்பி அரசிடம் தாக்கல் செய்தோம். இன்னொரு படிவத்தை ஆதாரத்துக்காக நாமே வைத்துக் கொண்டோம். அந்தப் படிவத்தில் தொடக்கத்திலேயே - தாளின் உச்சியில் - அவரவர் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, நீங்கள் 40%க்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்தால் அல்லது 85 வயதுக்கு மேற்பட்ட முதியவராக இருந்தால் அஞ்சல் வாக்களிக்க விரும்புவதாகச் சொல்லி அதற்கான 12D படிவத்தைக் கேளுங்கள்!
நான் கேட்டேன். எங்கள் பகுதி அலுவலர் வீட்டுக்கே வந்து படிவத்தைக் கொடுத்து, நிரப்பிய பின்னர் வீட்டுக்கே வந்து வாங்கிக் கொண்டும் சென்று, படிவத்தை உயரலுவலரிடம் தாக்கல் செய்த பின்னர் என்னைக் கைப்பேசியில் அழைத்து அதைத் தெரிவிக்கவும் செய்தார். அவருக்கு என் அன்பு நன்றி! 🥰
நீங்களும் படிவம் கேட்டு வாங்குங்கள்!
உங்கள் வாக்கைத் தவறாமல் பதிவு செய்யுங்கள்! 👆🏽
வாக்களிப்பது நம் உரிமை மட்டுமில்லை
கடமையும் கூட! 🙏🏽
மேலும் விவரங்களுக்கு இந்தக் காணொளியைப் பாருங்கள் - https://youtu.be/38aDwWHD4Vs?si=sP0lg1LTOS5rR-uU
⚠️ முக்கியக் குறிப்பு: தோழர்களே! இதற்கான கடைசி நாள் ஏப்ரல்3️⃣. அதற்குப் பின் செய்ய முடியாது. ஏப்ரல் 23 அன்றுதானே தேர்தல் என நினைத்துப் பொறுமையாக இருந்து விடாதீர்கள்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!









0 comments:
கருத்துரையிடுக