.

செவ்வாய், ஜூன் 25, 2024

தமிழோடு ஓர் இன்மாலைப்பொழுது!

Me with Tamil Scholar MuthuNilavan Aiya

நேற்று (24.06.2024) இதே நேரம் சுவைத்த அந்தத் தித்திப்பு இன்னும் கூட இனித்துக் கொண்டே இருக்கிறது நெஞ்சில். ஆம், தமிழறிஞர் நா.முத்துநிலவன் ஐயாவுடன் கழிந்தது நேற்றைய இன்மாலைப் பொழுது!

தமிழ் வலைப்பூக்கள் திசையெட்டும் மணம் பரப்பிக் கொண்டிருந்த 'தமிழ்மணம்' காலத்திலிருந்தே ஐயாவுடன் பழக்கம் உண்டு. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தப் பழக்கம் அடிக்கடி தொலைபேசும்  வழக்கமாயிற்று. குறிப்பாக, போன ஆண்டு 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் அவர் எழுதிய, இன்னும் மிகச் சில நாட்களில் புத்தகமாக வெளியாக இருக்கிற 'தமிழ் இனிது' தொடர் எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.

இந்தச் சிறுவனையும் மதித்து, அந்தத் தொடரை எழுத இருப்பதை மகிழ்வுடன் அவர் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் அதன் மூன்றாம் வாரத்தில் என்னுடைய கட்டுரையைப் பற்றியும் என் பெயருடன் குறிப்பிட்டிருப்பதை முன்கூட்டியே சொல்லி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்! அதுவும் போதாதென்று ஒவ்வொரு வாரமும் கட்டாயம் படித்துக் கருத்துரைக்க அழைப்பு விடுத்தார்.

சில வாரங்களுக்கு மேல் என்னால் குறிப்பிட்ட நாளில் இதழை வாங்க இயலாமல் போக, "நான் வாரந்தோறும் படமெடுத்து அனுப்பி வைக்கிறேன், நீங்கள் படித்துக் கருத்துச் சொல்லுங்கள்" என்றதெல்லாம் அவர் பெருந்தன்மையன்றி வேறென்ன?

ஒவ்வொரு வாரமும் நாளிதழ் கைக்கு வந்த உடனே, எல்லாருக்கும் முன்னதாக எனக்குப் படமெடுத்து அனுப்பி வைப்பார். நான் ஒரு கருத்துச் சொல்ல, அவர் அதற்கு விளக்கம் சொல்ல, அது என் மரமண்டைக்கு எட்டாமல் போனால் தனது மும்முரமான எழுத்து - சமுகப் பணிகளுக்கு இடையிலும் என்னை அழைத்து அது பற்றிப் பேசியும் புரிய வைப்பார்.

இப்படி நாங்கள் தமிழ் இனிது தொடர் பற்றி எழுதிய கருத்துரையாடல்களைத் தொகுத்தாலே அது ஒரு குட்டிப் புத்தகம் அளவுக்கு வரும். அவ்வளவும் காலத்தால் அழிந்து விடாமல் என் வாட்சாப் கணக்கில் உடுக்குறியிட்டு உறங்குகின்றன.

இதையடுத்து ஒரு இனிய நாளில் தன் நூல்களுக்குப் பிழைதிருத்தமும் செய்து தர ஐயா அழைத்தார். கூடவே, கரும்பு தின்றால் மட்டும் போதாது கூலியும் வாங்கிக் கொண்டே ஆக வேண்டும் என்றார். கசக்கவா செய்யும்? இதோ, அந்தப் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு சூழலில்தான் நேற்று இந்தச் சந்திப்பு! சிறு வயதில் லியோனியின் பட்டிமன்றங்களிலும் இணைய வலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்தவரை நேற்றுத்தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன்! "வணக்கம்! வணக்கம்!!" என்று இரு கை கூப்பி வருகை தந்தவர் சட்டென எனக்கு அருகில் அமர விரும்பித் தரையிலேயே உட்கார்ந்து கொண்டதும் திக்கென்றது! மெத்திருக்கையிலோ நாற்காலியிலோ உட்காரச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காத அவரது எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது!

வந்து அமர்ந்தவுடன் என் இரு கைகளையும் வாஞ்சையுடன் பற்றிக் கொண்ட அவருடைய தமிழ்க் கரங்களின் கதகதப்பு இன்னும் நீங்கவில்லை!

என்னென்னவோ பேசினோம்!

சகா மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் கவிதை...

எங்கள் இருவரைப் போலவே  இன்றும் விட்டுக் கொடுக்காமல் வலைப்பூ எழுதி வரும் தோழர் Kasthuri Rengan அவர்களின் கணினித் திறமை...

புதுக்கோட்டை கணினிப் பயிற்சிப் பட்டறையில் இவர்கள் இளைய மகள், எங்கள் அன்புச்செல்லம் மகிமா கலந்து கொண்டது...

புகழ் பெற்ற நாளிதழில் அண்மையில் பாராட்டப் பெற்ற நம் அன்புக் கவிஞர் ரேவதி ராம்...

வீதி கலை இலக்கியக் களம் முதற்கொண்டு பல நல்ல முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டு இன்று சென்னையில் உயர்பதவியில் வீற்றிருக்கும் நா.அருள்முருகன் ஐயா...

ஐயாவின் நூல்களுக்கு அட்டைப்படம் முதல் திரைப்படக் காட்சிகளின் வரைகலை வரை அனைத்திலும் தமிழோவியம் தீட்டும் டிராட்ஸ்கி மருது அவர்கள்...

அரசியல் தலைவர்கள்...

அரசு அதிகாரிகள்...

அரசு இயங்கும் விதம்...

தமிழ்...

எனக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் நிறையப் பேசினோம்! இன்னும் இருக்கிறது பேசவும் இணைந்து பயணிக்கவும் நிறையவே!

நனி நன்றி ஐயா!😊💖💐

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரிய மனிதர். இருவரின் சந்திப்பும் மகிழ்வினை அளிக்கிறது. வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் பொறுத்தருள வேண்டும் ஐயா! இப்பொழுதுதான் நீங்கள் கருத்திட்டிருப்பதைக் கவனித்து வெளியிட்டேன். மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்