tag:blogger.com,1999:blog-5821890028959566290.post8893518891436299465..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: இதுதான் ரஜினி அரசியலா? இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-30321650708643641062018-01-29T15:25:44.448+05:302018-01-29T15:25:44.448+05:30ஓ, கீதா சகோ! உங்கள் பதிவில் நான் குறுக்கிட்டு விட்...ஓ, கீதா சகோ! உங்கள் பதிவில் நான் குறுக்கிட்டு விட்டேனோ! அடடா! இருந்தாலும், அதற்காக நீங்கள் பதிவை நிறுத்தாமல், வெளியிடப் போவதாகச் சொன்னது குறித்து மகிழ்ச்சி! கண்டிப்பாக இது பற்றிய உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்! பாராட்டுக்கு மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-14178070152629493242018-01-29T15:23:35.769+05:302018-01-29T15:23:35.769+05:30துளசி ஐயா, கீதா சகோ இருவருக்கும், தங்கள் கருத்துரை...துளசி ஐயா, கீதா சகோ இருவருக்கும், தங்கள் கருத்துரையை இவ்......வளவு தாமதமாக வெளியிடுவதற்காக மிகுந்த வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துக் கொண்டு [இந்த சனவரியை மன்னிப்பு மாதமாக அறிவித்து விடலாம் போல :-)] என் மறுமொழியைத் தொடங்குகிறேன்.<br /><br />ஐயா! கீதையை நானும் படித்ததில்லை. கீதை மட்டுமில்லை திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியம் என எதுவும் படிக்காத தற்குறி நான். இருந்தாலும், எதையும் நாம் நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்வதை விட வல்லுநர்கள் ஆராய்ந்து எழுதி வைத்திருப்பவை சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. அந்த அடிப்படையில்தான் கீதை பற்றிய மேற்படி கருத்துக்களையும் எழுதியுள்ளேன். தவறாக நினைக்க வேண்டா!<br /><br />அடுத்ததாக, "இந்து மதம் மட்டும் இறைவனால் எல்லாம் நடக்கிறது என்று சொல்லவில்லை. எல்லா மதங்களும் அதைத்தான் சொல்லுகின்றன" என்ற தங்கள் கருத்திலிருந்து சிறுவன் சற்று மாறுபடுகிறேன்.<br /><br />தமிழ்ச் சமயத்தைப் பொறுத்த வரை, கடவுள் என்பவர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர்தாம். எடுத்துக்காட்டான முறையில் வாழ்ந்த அல்லது உயரிய காரணத்துக்காக உயிர் விட்ட மனிதர்களைத் தெய்வமாக வழிபடுவதுதான் தமிழர் சமயம். இதைத்தான் என் முந்தைய பதிவான "’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு" எனும் பதிவிலும் எழுதியிருந்தேன். எனவே, தமிழர் சமயத்தைப் பொறுத்த வரை, கடவுள் என்பவர் எல்லாம் வல்ல ஆண்டவர் இல்லை. உலகையோ இன்ன பிறவற்றையோ படைத்தவர் இல்லை. உலக நிகழ்வுகள் எல்லாமே கடவுள் அருளால் நடப்பவை எனும் கோட்பாடு தமிழர் சமயத்தில் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட வரிக்கு முந்தைய பத்திக்கு முன் பத்தியில் இதைக் குறிப்பிட்டும் காட்டியிருக்கிறேன். ஒருவேளை இரண்டுக்குமான வேறுபாட்டை நான் சரிவரச் சொல்லவில்லையோ!<br /><br />"எந்த மதம் பேசினால் என்ன மக்களின் நாயகனாக இருக்கிறாரா? மக்களுக்காகச் செய்கிறாரா...மக்கள் இவரை ஏற்றுக் கொள்கின்றனரா என்று பார்ப்போம்" என்று குறிப்பட்டிருந்தீர்கள். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன் ஐயா! ஆனால், மத்தியில் நடப்பவற்றையெல்லாம் பார்த்தால், ரஜினி போல இந்து சமயச் சார்புள்ள ஒருவர் இங்கு ஆட்சிக்கு வந்தால் அதை வைத்தே தமிழர்களை மொத்தமாகப் பண்பாட்டுரீதியாக அழித்து விடுவார்களோ எனக் கவலையாயிருக்கிறது. அதனால்தான் இவ்வளவு எச்சரிக்கைகளை விடுக்க வேண்டியிருக்கிறது.<br /><br />மற்றபடி, தான் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக - அதாவது அரசியலுக்கு வருவது பற்றி உறுதியாகவே - ரஜினி அறிவித்து விட்டார் ஐயா! அதில் எந்த ஐயமும் இல்லை. தற்பொழுது கட்சி தொடங்குவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் கூடப் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். பார்ப்போம், என்னதான் நடக்கிறது என.<br /><br />தங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-29747942232551356912018-01-17T15:04:09.904+05:302018-01-17T15:04:09.904+05:30நல்ல அலசல். கீதையை நாம் முழுமையாகப் படிக்கவில்லையே...நல்ல அலசல். கீதையை நாம் முழுமையாகப் படிக்கவில்லையே...அதனால் படிக்காமல் சொல்லத் தெரியவில்லை அதைப் பற்றி. அடுத்து இந்துமதம் மட்டும் இறைவனால் எல்லாம் நடக்கிறது என்று சொல்லவில்லை. எல்லா மதங்களும் அதைத்தான் சொல்லுகின்றன. அது இந்தியா இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம் பேர் இருப்பதால் அது முன்னிறுத்தப்ப்டுகிறதோ என்று தோன்றுகிறது. <br /><br />இதை எல்லாம் விடுங்கள். மாற்றங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்...அது ஒன்றுதான் மாறாதது... இதற்கும் அப்பாற்பட்டு முதலில் அவர் நல்லது செய்கிறாரா என்று பார்ப்போம். எந்த மதம் பேசினால் என்ன மக்களின் நாயகனாக இருக்கிறாரா? மக்களுக்காகச் செய்கிறாரா...மக்கள் இவரை ஏற்றுக் கொள்கின்றனரா என்று பார்ப்போம். (அவரது ரசிகர்களைச் சொல்லவில்லை....பொதுமக்களைக் குறிப்பிடுகிறோம்..)..ஆனால் அவர் முழுமையாக இறங்கிவிட்டாரா என்ன? உறுதியாகச் சொன்னது போல் தெரியவில்லையே! (வழக்கம் போல்...இத்தனை நாள் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வருவேன் ஆனா வரமாட்டேன்னு சொன்னவர் இப்ப அடுத்த கட்டத்திற்குத்தானே வந்திருக்கார். அதாவது அரசியலுக்கு வருவேன்னு...ஆனால் எப்போ? எப்படி? வந்துவிட்டேன் என்று உறுதியாகச் சொல்லவில்லை அல்லவா!!!!!!!!)<br /><br />கீதா: அக் கருத்துடன்... / ஆனால், கட்சிக்குப் பெயர் சூட்டு விழாக் கூட நடத்தும் முன்பே தேர்தல்... வாக்குறுதி... ஆட்சி... அரியணை... என ரஜினி முழுக்க முழுக்க முதல்வர் நாற்காலியைக் குறி வைத்தே இறங்குவது என்ன வகையான அரசியல்? முதலில், இதற்குப் பெயர் அரசியலா? அரசியல் என்பது மக்களுக்குத் தொண்டு செய்வது இல்லை; சமூகத்துக்காக உழைப்பது இல்லை; வெறுமே தேர்தலில் நிற்பதும், ஆட்சிக்கு வருவதும்தாம் என்ற//<br /><br />ஆஹா! சகோ நான் ஒரு பதிவு பாதி எழுதி வைத்திருந்தேன். அதில் இதே அர்த்தத்தில் இவ்வளவு அழகாக இல்லை எனது அறிவிற்கு எட்டியபடி எழுதியுள்ளேன்... சரி இங்கு வேண்டாம் பதிவாகவே வெளியிடுகிறேன்...விரைவில்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-73162601477114778762018-01-14T18:37:38.494+05:302018-01-14T18:37:38.494+05:30ஓ! தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! பாராட்ட...ஓ! தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா! பாராட்டுக்கு மிகுந்த நன்றி! ஆம், தாங்கள் சொல்வது போல் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னவோ, நல்லது நடந்தால் சரி.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-50489570429314144442018-01-10T16:45:18.054+05:302018-01-10T16:45:18.054+05:30இப்பதிவினை ஒரு நல்ல அலசல் பதிவாகக் காண்கிறேன். முழ...இப்பதிவினை ஒரு நல்ல அலசல் பதிவாகக் காண்கிறேன். முழுக்க முழுக்க அனைத்து நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் சில மாற்றங்கள், நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன. அவற்றில் இதுவும் அடங்கும் என நினைக்கிறேன். வெற்றிடம், ஆன்மிக அரசியல் என்பனவற்றுக்கெல்லாம் அப்பால் அவரை மக்கள் ஏற்கின்றார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். <br />Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-25739134589665398472018-01-10T15:49:40.928+05:302018-01-10T15:49:40.928+05:30உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே...உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து வாருங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய கட்டுரையின் முடிவில் உள்ள சமூக ஊடகங்களின் பொத்தான்களை அழுத்துங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84101820831402124652018-01-10T15:46:07.880+05:302018-01-10T15:46:07.880+05:30ரஜினி பற்றிய கட்டுரைக்கு அவர் பாணியிலேயே கருத்தா? ...ரஜினி பற்றிய கட்டுரைக்கு அவர் பாணியிலேயே கருத்தா? நல்லது!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-43495845634464972022018-01-10T14:59:17.247+05:302018-01-10T14:59:17.247+05:30அரசியல் செய்வது, ஆட்சியைப் பிடிப்பது ஆகிய இரண்டும்...அரசியல் செய்வது, ஆட்சியைப் பிடிப்பது ஆகிய இரண்டும் வேறு வேறு என்று சுட்டிக்காட்டியது மட்டுமின்றி அரசியலுக்கு வருவது என்பதே ஆட்சிக்கு வருவதுதான் என நினைப்பது அடிப்படை அரசியல் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனம் என்று கூறியதையும் பாராட்டுகிறேன். ரஜினி பற்றிய சிறப்பான கட்டுரை. நன்றி <br />iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-44670406729469327952018-01-09T22:18:42.634+05:302018-01-09T22:18:42.634+05:30ஆண்டவன் தான் தீர்மானிக்கவேண்டும் யார் எதைச்செய்வார...ஆண்டவன் தான் தீர்மானிக்கவேண்டும் யார் எதைச்செய்வார்கள் என்ற அரசியல்ப்பாதையை!தனிமரம்.https://www.blogger.com/profile/00701466022606531244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-84201053508955138562018-01-09T21:46:00.855+05:302018-01-09T21:46:00.855+05:30அறச்சீற்றமும் தமிழுணர்வும் மிகுந்த உங்கள் கருத்துக...அறச்சீற்றமும் தமிழுணர்வும் மிகுந்த உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி நண்பரே!<br /><br />ரஜினி நெய்யில் பொரித்தெடுக்கப்பட்டவரா என்கிற உங்கள் பகடி செம்மை! ஆனால, பா.ச.க தூண்டுதலால்தான் இரசினி அரசியலுக்கு வருகிறார் என்பது பொருந்தவில்லை. காரணத்தைக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.<br /><br />தொடர்ந்து வருக! உங்கள் செம்மையான கருத்துக்களைத் தருக!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-69784166039133949912018-01-09T21:41:19.743+05:302018-01-09T21:41:19.743+05:30முதன் முதலாக வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஐ...முதன் முதலாக வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா! உங்கள் பாராட்டுக் கண்டு மகிழ்ச்சி! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-48912947504094531312018-01-09T12:07:59.162+05:302018-01-09T12:07:59.162+05:30ரஜினி ஒரு அரைவேக்காட்டு அரசியல் தலைமையென்றால் அதை ...ரஜினி ஒரு அரைவேக்காட்டு அரசியல் தலைமையென்றால் அதை தூபம் போட்டு திணிக்கின்ற தமிழருவி மணியன் ஒரு கைதேர்ந்த சந்தர்ப்பவாதி. ஏன் தமிழகத்தில் தமிழின நலன்சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் சீமான் என்ன நல்லவரில்லையா, ரஜினி நெய்யில் பொரித்தெடுக்கப்பட்டவரா? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க தூண்டில் புழுவாக பா.ச.க.வால் கொக்கப்பட்ட புழுதான் ரஜினி. இவர் பருப்பு இப்போதல்ல எப்போதும் தமிழகத்தில் வேகாது.sathyahttps://www.blogger.com/profile/12025339715241214913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-37194513807422603452018-01-08T18:03:09.376+05:302018-01-08T18:03:09.376+05:30ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான் என்னும் ...ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்யறான் என்னும் வசனம் நினைவுக்கு ஒரு கருத்தை ஏற்கிறேன் அரசியலுக்கு வருவதென்றால் ஆடிசியி அமர்வதா என்னும் கேள்வி சரியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com