tag:blogger.com,1999:blog-5821890028959566290.post6761724150277427996..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வுஇ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49832132368065866582022-02-28T21:45:58.052+05:302022-02-28T21:45:58.052+05:30காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் ஐயா!
உங்...காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் ஐயா!<br />உங்கள் அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!<br /><br />நீங்கள் கூறுவது உண்மைதான்! தமிழில் பெயர் வைக்க மக்கள் முன்வருவது பெருமையே! நமக்கு மட்டுமில்லை அவர்களுக்கும் அது பெருமையே! எங்கள் வீட்டில் தம்பிக்குக் குழந்தை பிறந்ததும் நான் நிறைய பெயர்களை எழுதிக் கொடுத்தேன். அவற்றுள் ‘மகிழினி’ எனும் பெயரைத் தம்பியும் தம்பி மனைவியாரும் தேர்ந்தெடுத்தார்கள். தம்பி அதற்கு ஒப்புக் கொண்டார் என நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவரே தமிழ்ப் பற்றாளர்தாம். ஆனால் அவர் மனைவியாரும் அதற்கு ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி! இந்தத் தலைமுறையில் அழகழகான தமிழ்ப் பெயர்களை நம் குழந்தைகள் சூடியிருப்பதைக் கண்டு வருங்காலத்தில் இன்னும் இது போல் அழகுத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டப் பெற்றோர்கள் முன்வருவார்கள் என நம்புகிறேன் ஐயா!<br /><br />உங்கள் தொடர் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-85550411207629765702022-02-28T21:39:43.015+05:302022-02-28T21:39:43.015+05:30காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் நண்பரே!
...காலத்தாழ்ச்சியைப் பொறுத்தருள வேண்டுகிறேன் நண்பரே!<br />உங்கள் அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!<br /><br />சூரியா தமிழ்ப் பெயர்தான் தோழரே! ‘சுள்’ எனும் அடியொற்றிச் ‘சுர்’, ‘சூர்’ ஆகிய சொற்கள் பிறந்தன என்றும் இவற்றில் ‘சூர்’ என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டதே ‘சூரியன்’ என்றும் சொல்வார் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள்.<br /><br />சுள் எனும் சொல்லை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்கள் சூட்டைக் குறிப்பவையாக இருப்பதை நாம் பார்க்கலாம். சுளுந்து (தீவட்டி), சுள்ளி (எரிக்கப் பயன்படும் குச்சி) இப்படி. அதே போல் "சுள்ளுனு வெயில் அடிக்குது", "சுர்ருனு சூடாயிருச்சு" என்றும் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் இல்லையா? சினமும் எப்பொழுதும் நெருப்போடுதான் தொடர்புபடுத்தப்படுகிறது. ஏன், இன்று நாம் பயன்படுத்தும் உணர்படங்களில் (emojis) கூடச் சினத்தைக் குறிக்கும் உணர்படங்கள் சிவந்த முகம், நெருப்பு வெடிக்கும் தலை என வரையப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அவ்வகையில் சினத்தின் காரணமாக எழும் வீரம் கூடச் சூரம் எனப்படுவது அதன் சூட்டுத்தன்மையைக் குறிப்பதாக நாம் கொள்ள முடியும். அவ்வளவு ஏன், சூடு என்பதே கூடச் சுள் எனும் சொல்லின் அடியொற்றிப் பிறப்பதாகத்தானே தெரிகிறது. சுள் > சுடு > சூடு. ளகரத்தோடு மேலும் எழுத்துக்கள் சேரும்பொழுது அது டகரமாகும் இல்லையா? ஆக சூரியன் தமிழ்ச் சொல்லே!<br /><br />என் முயற்சிகளுக்கு நீங்கள் தரும் தொடர் ஆதரவு என்றும் எனக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி தோழரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-77020399656287932892022-02-23T10:45:17.217+05:302022-02-23T10:45:17.217+05:30இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு.
(1) இப்போதெல்...இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. <br />(1) இப்போதெல்லாம் நான் நண்பர்களின் மகன்/மகள்களை இன்னாரின் மூத்த மகன்/மகள், இளைய மகன்/மகள் என்றுதான் கூறி அழைக்கிறேன். எந்தப்பெயரும் மனதில் நிற்கவில்லை. தவிர பல கலப்புச்சொற்களை, எழுத்துக்களைக் கொண்டு உச்சரிக்கமுடியாத அளவில் பெயர் சூட்டுகின்றனர். இவ்வாறு பெயரை வைத்து பெற்றோர் பெருமைப்பட்டுக்கொள்வது இன்னும் வேதனை.<br />(2) என் பேரன்களுக்கு (மூத்த மகனின் மகன்களுக்கு) தமிழழகன், தமிழமுதன் என்று பெயர் சூட்டிய பின்னர் என்னைக் கிண்டலடித்துப் பேசியவர் பலர். இவ்வாறாக பெயர் சூட்ட என் பெரிய மகனும், மருமகளும் ஒத்துக்கொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-40291289309628604382022-02-22T19:13:03.941+05:302022-02-22T19:13:03.941+05:30இக்காலத்திற்கு மிகத் தேவையான, அருமையான ஆய்வுக் கட்...இக்காலத்திற்கு மிகத் தேவையான, அருமையான ஆய்வுக் கட்டுரை தோழரே. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்👏🏼👏🏼<br /><br />ஒரே ஒரு ஐயம் - //எடுத்துக்காட்டாக ஐயனார், சூரியா, நெல்லையப்பன், பெரியநாயகி//<br /><br />இதில் சூரியா வடமொழியன்றோ?தமிழறிவன் AJhttps://www.blogger.com/profile/08156974635114477046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-22131663421534050832022-02-22T17:29:40.878+05:302022-02-22T17:29:40.878+05:30மிக்க நன்றி ஐயா! உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து க...மிக்க நன்றி ஐயா! உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-4700113432541970802022-02-22T06:44:58.482+05:302022-02-22T06:44:58.482+05:30நல்லதொரு ஆய்வு...நல்லதொரு ஆய்வு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com