tag:blogger.com,1999:blog-5821890028959566290.post2516295577327067193..comments2024-02-25T12:51:17.552+05:30Comments on அகச் சிவப்புத் தமிழ்: இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்இ.பு.ஞானப்பிரகாசன்http://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5821890028959566290.post-28045058827583034242016-06-15T21:54:31.867+05:302016-06-15T21:54:31.867+05:30மிகச் சரியான கேள்வியைத் தொடுத்திருக்கிறீர்கள் நண்ப...மிகச் சரியான கேள்வியைத் தொடுத்திருக்கிறீர்கள் நண்பரே! என் மனதிலும் வெகு நாட்களாக இருந்து வரும் கேள்விதான் இது. ஆனால், கட்டுரையின் நீளம் கருதித் தவிர்த்துவிட்டேன். யாராவது இதைக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். இத்தனை நாட்கள் கழித்து நீங்கள்தான் அதை நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள். அதற்காக முதலில் நன்றி!<br /><br />முற்காலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தவிர மற்றவர்களுக்குக் கல்வி முற்றிலுமாகவே இல்லாமல் போனதுதான் இன்று இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டினால் இன்று முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்படும் பாதிப்பு என்பது விரும்பிய துறையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போவது மட்டும்தானே தவிர அவர்களின் கல்வி உரிமை இதனால் எந்த இடத்திலும் பறிக்கப்படவில்லை. கல்வியில் நாட்டமில்லாமல் போகும் மனநிலையையும் அவர்களிடம் தோற்றுவிக்கவில்லை. எனவே, அப்படி ஒரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />அப்படியை ஏற்படுதாக இருப்பினும், இன்றைய நிலைமையில், நம் சமூகத்தில் முதல் தலைமுறை மாணவர்களும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுமே இன்றும் நிறைந்திருக்கும் சூழலில் அப்படியொரு திருப்பம் ஏற்படக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வாய்ப்பு இல்லை.<br /><br />அதே நேரம், இப்படியெல்லாம் சொல்வதால் இட ஒதுக்கீட்டைக் காலகாலத்துக்கும் தொடர்ந்து நிரந்தரமாக நடைமுறைப்படுத்தியபடியே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் என நினைத்து விடாதீர்கள்! எல்லா வகுப்பினரும் கல்வி, பொருளாதாரம், சமூக நிலை ஆகியவற்றில் தன்னிறைவை எட்டிய பிறகு கண்டிப்பாக இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே முறை! ஆனால், அப்படியொரு நிலைமை ஏற்பட அனைவருமே பாடுபட வேண்டும்! பின்தங்கிய வகுப்பினரைக் கைதூக்கி விட ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற வரையில் முயற்சி எடுக்க வேண்டும்! அதே நேரம், சாதிகளை ஒழிக்கவும் தங்களால் இயன்ற அளவு ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்! அப்பொழுதுதான் இட ஒதுக்கீடு இனி தேவையில்லை எனும் நிலைமையை நம் சமூகம் விரைவில் எட்ட முடியும்.<br /><br />தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட சமூக வலைத்தளப் பொத்தான்களை அழுத்துவதன் மூலம் உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! வணக்கம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49524741728749752172016-06-14T10:59:35.389+05:302016-06-14T10:59:35.389+05:30அனைவருக்கும் புரியும்படி மிகசிறப்பாக தெளிவுபடுத்தி...அனைவருக்கும் புரியும்படி மிகசிறப்பாக தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்.தமிழ் சமூகத்தில் உங்களை போன்ற அறிவு நுட்பம் கொண்டவர்கள் இன்னும் பெருகவேண்டும்<br /><br /> இருந்தாலும் என் சில கருத்துக்க்கள்,<br /><br />ஓட்ட பந்தயத்தில் ஒட முடியாதவருக்கு தேவையான உடல் வலிமைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வது இன்னும் உகந்ததாக இருக்குமே (ஊட்டசத்து உணவுகள்,பாதுகாப்பு பொருள்கள் போன்று..).ஆனால் ஓடி முன்னால் வர வேண்டியது அவரவர் பொறுப்பு.<br /><br />அது போல படிக்க முடியாத சூழலில் இருக்கும் நபர்களுக்கு அவர்கள் தங்களை படிப்பில் மேம்படுத்தி கொள்ள(இட ஒதுக்கீடு தேவைபடாத சூழலில் உள்ளவர்களை போல்) என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம். (இலவச உணவு,இலவச கல்வி,இலவச உபகரணங்கள்,சிறப்பு பயிற்சி,கூடுதல் வகுப்புகள்,இலவச உண்டு உறைவிட பள்ளி இன்னும் பல) ஆனால் தேர்வில் சிறப்பாக செயலாற்றி முன்னே வரவேண்டியது சம்பந்தபட்ட மாணவருக்கு உரியது.<br /> இப்படி செய்யாவிடின் எத்தனை காலத்துக்கு இட ஒதுக்கீடு தொடரும் என தெரியாது.முன்பு அவர்களை அவர்களை அடிமை படுத்தியதற்கு தண்டனை இப்போது அனுபவிக்கிறோம் (வரலாறு திரும்புகிறது)இதேபோல் சில காலங்கள் கழித்து வரலாறு திரும்பாதா..?vinhttps://www.blogger.com/profile/13289114940620953171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-11221748392605543252015-10-05T19:17:30.332+05:302015-10-05T19:17:30.332+05:30இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கக் கோரிக்கை விடுக்க...இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கக் கோரிக்கை விடுக்கும் உங்கள் சிந்தனை சரியா தவறா என எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை, இட ஒதுக்கீட்டை ஏற்கவே செய்யாதவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத்தான் இந்தப் பதிவே தவிர, மற்றபடி இட ஒதுக்கீடு தொடர்பான இத்தகைய நுட்பமான விதயங்களில் எனக்கு அறிவு போதாது. மற்றபடி, இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதோடு, அனைவருக்கும் அது போய்ச் சேர வேண்டும் எனவும் விரும்பும் உங்கள் நல்லுள்ளத்துக்கும், ஏழ்மை - உயர்வு மனப்பான்மை முதலானவை குறித்த உங்கள் உறுதியான தெளிவான கருத்துக்களுக்கும், இன்னொருவர் உதவியோடாவது இதற்குக் கருத்துரைக்க வேண்டும் எனும் அளவுக்கு இந்தப் பதிவுக்கு நீங்கள் தந்த பெருமதிப்புக்கும் என் பணிவார்ந்த நன்றி! வணக்கம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-49798312994000733912015-10-05T19:17:13.894+05:302015-10-05T19:17:13.894+05:30//அவர்களை நாம் ஏன் உயர்வாக கருத வேண்டும்// - சாதி ...//அவர்களை நாம் ஏன் உயர்வாக கருத வேண்டும்// - சாதி என்கிற அடையாளத்தை நாம் ஏற்றிருக்கும் வரை அவர்களை நாம் உயர்வாகக் கருதித்தான் ஆக வேண்டும்! அந்த அமைப்பு முறை அப்படித்தான் இருக்கிறது.<br /><br />//முன்னேறியபின் பெரும்பாலோர் உயர் சாதியாக கருதிக் கொள்ளும் இனப் பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகவே உள்ளது.உருவாகும் அடுத்த சந்ததியனர் இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற முனைகின்றனர். உண்மையான ஏழைகளும் தாழ்த்தப் பட்டோரும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள் அல்லவா?// - இப்படி எங்கும் நிகழ்ந்ததாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது பெற்றோர் ஒப்புதலுடன் நடைபெறும் காதல் மணங்களைப் பற்றி எனில், அஃது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட நிலைமைகளிலும் அந்த முதல் தலைமுறை இணைவு என்பது பல்லாண்டுக்கால அடக்குமுறைக்கான பதிலீடாக இருக்குமென நான் கருதவில்லை. இத்தனை காலமாக அடக்கி வைக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒரே ஒருவர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரால் குருதியுறவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதால் இத்தனை ஆண்டுக்கால அடக்குமுறைக்கான இழப்பீடாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தர மறுப்பது சரியாகுமா என்ன?<br /><br />//பிற்பட்டோரில் பலரும் முற்பட்டோருக்கு இணையாக ஏன் அதற்கு மேலாகவே தேர்வுகளில் மதிப்பெண் பெறுகிறார்கள் . இவர்களின் பெற்றோரும் வசதியானராகவே இருக்கும் பட்சத்தில் சலுகைகளை மற்றவர் பெற விட்டுக் கொடுப்பதுதானே நியாயமானது// - இட ஒதுக்கீட்டை ஒருமுறை பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பெறுவது பற்றி நீங்கள் முன்பு எழுப்பிய கேள்விக்கான என் பதிலே இதற்கும். மேலும், இப்படி விட்டுக் கொடுப்பது என்பது அவரவர் தனிப்பட்ட நிலைமையைப் பொறுத்தது. யார் யார் அப்படி இருக்கிறார்கள் என நாம் துல்லியமாகக் கண்டறிந்து சட்டத்தை இயற்றவோ திருத்தவோ இயலாது. சட்டம் என்பது பெரும்பான்மை நிலைமைகளின் அடிப்படையை வைத்து மட்டுமே உருவாக்கப்படவும் திருத்தப்படவும் முடியும்.<br /><br />//முற்பட்ட இனத்தவர் என்று குறிப்பிடும் பலரும் ஆதி காலத்தில் இருந்தே வசதி படைத்தவர்களாகவோ நில உடமைக்காரர்களாகவோ மன்னர்களாகவோ இருந்ததில்லை.தங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே பொருளாதரத்தில் உயர்ந்த ஆதிக்க சாதியினரிடத்தில் அடிபணிந்தே வாழ்க்கை நடத்தி வந்தனர்.அவர்களை நம்பியே இவர்களுடைய பிழைப்பு நடந்தது. கோவில்களில் பணிபுரியும் பலர் நாம் காண்பிக்கும் ஐந்துக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்துபவர்களாகத் தானே காண முடிகிறது// - உண்மைதான். ஆனால், அவர்கள் தங்களுடைய அந்த நிலைமையை மாற்றிக் கொள்ளக் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் சாதி என்பது. அஃது எந்த அளவுக்கு அவர்களுக்குப் பலன் அளித்து மற்றவர்களைச் சீரழித்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே, அதனால் ஏற்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு ஏற்றத்தாழ்வுகளை நீக்க இட ஒதுக்கீடு தேவைப்பட்டது. இப்பொழுதும் அது தேவைப்படுகிறது என்பது காரண ஏரணங்களுடன் பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.<br /><br />//அவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வது அவர்களின் பிழை நாம் அவர்களை தாழ்வாகவும் கருதமுடியும்// - அது முடியாது. ஏன் என்பது முந்தைய பதிலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் நம்மைத் தாழ்வானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதற்காகப் பதிலுக்கு நாம் அவர்களைத் தாழ்வாகக் கருதுவது மனிதநேயமாகாது. அனைவரும் நிகர் எனும் நிலையை எட்டுவதே ஒழுங்கான மனித சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்! அதற்கான ஒரு வழிதான் இட ஒதுக்கீடும்!<br /><br />//பெரும்பாலான துறைகளில் உயர் அலுவலர் பதவியில் முற்பட்ட இனத்தவரிக் காணபது மிக அரிதாகவே உள்ளது . கல்வித் துறையில் ஒருவர் கூட இருப்பதாக தெரியவில்லை .தமிழ் நாட்டை சேர்ந்த ஐ ஏ., எஸ் அதிகாரிகளிலும் முற்பட்டவரின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டுவது அரிது// - இருக்கலாம். ஆனால், நான் கூறுவது அரசுத்துறையை மட்டுமில்லை, தனியார் துறைகளிலும் சேர்த்து. "அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள்" எனும் வரியை மேற்கோள் காட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ள நீங்கள் அதிலுள்ள 'சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும்' எனும் குறிப்பைக் கவனிக்க வேண்டுகிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-52587697811008386432015-10-05T19:16:14.831+05:302015-10-05T19:16:14.831+05:30கிருஷ்ணமூர்த்தி அவர்களே! தங்கள் முதல் வருகைக்கு மு...கிருஷ்ணமூர்த்தி அவர்களே! தங்கள் முதல் வருகைக்கு முதலில் என் அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்!<br /><br />தங்கள் விரிவான நடுநிலையான கருத்துக்கள் கண்டேன். அருமை! நன்றி! ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன்.<br /><br />படேல் இனத்தவரின் போராட்டம் பற்றிச் செய்தியாக அறிவேனேயன்றி அவர்களின் நிலைமை பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் நிலையில் அவர்களும் இட ஒதுக்கீட்டுக்கு உரியவர்களே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.<br /><br />இட ஒதுக்கீடு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் அதைப் பெறுவதால் தங்கள் சமூகத்திலேயே பிறர் முன்னேற அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்கிற உங்கள் குற்றச்சாட்டை இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் தலைவர்கள் சிலரும் கூட இதற்கு முன் கூறியிருக்கிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் சமூகவியலாளர்களில் சிலர் இதை ஏற்கிறார்கள் சிலர் மறுக்கிறார்கள். அவரவர் தரப்பைப் பார்க்கையில் இருவர் கூறுவதுமே சரி என்பது போலத்தான் தென்படுகிறது. எனவே, இஃது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது. இது குறித்துப் பதிலளிக்கும் அளவுக்கு இது தொடர்பாக நான் இன்னும் தெளிவு பெறவில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்!<br /><br />தாழ்த்தப்பட்ட சாதியினர் எவ்வளவுதான் முன்னேறினாலும் முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குப் போய்ப் பெண் கேட்டு விட முடியாது எனில், இட ஒதுக்கீடு இதற்கான தீர்வு இல்லைதானே என்று கேட்டிருக்கிறீர்கள். ஆம்! கண்டிப்பாக இல்லைதான். அதைத்தான் நான் பதிவிலும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறேன். சாதியைக் காரணம் காட்டித் தாழ்த்தி வைக்கப்பட்டவர்களை மேலே கொண்டு வரத்தான் இட ஒதுக்கீடே தவிர, சாதியையோ சாதி ஏற்றத்தாழ்வையோ ஒழிப்பதற்கான திட்டம் இல்லை அது. முன் எப்பொழுதையும் விட சாதி தற்பொழுது பன்மடங்கு வீரியத்துடன் பேருருக் கொண்டு வரும் வேளையில் இனியாவது சாதியை ஒழிக்கத் தனிச் சட்டங்களை நாம் இயற்றியே ஆக வேண்டும்! அதற்கான என் சிந்தனைகள் தனிப் பதிவாக விரைவில்.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-46445590329049292582015-10-04T10:28:05.889+05:302015-10-04T10:28:05.889+05:30ஐயா! அற்புதமாக விவாதித்திருக்கிறீர்கள்
//இட ஒதுக்...ஐயா! அற்புதமாக விவாதித்திருக்கிறீர்கள் <br />//இட ஒதுக்கீடு என்பது ஏழைகளைக் கைதூக்கி விடுவதற்கானதாக இருந்தால், ‘பிற்படுத்தப்பட்டோர் (BC)’ எனும் ஒரு பிரிவை இட ஒதுக்கீட்டின் கீழ்க் கொண்டு வர வேண்டிய தேவையே இல்லையே. ஏனெனில், இந்தப் பிரிவில் வருகிற பெரும்பாலோர் நாடார், நாயக்கர், கவுண்டர், மணியக்காரர் என ஆண்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாகப் பண்ணையார்களாகவும், சமீன்தார்களாகவும், ஊரை ஆளும் தலைவர்களாகவும் இருந்த, இருக்கிற இவர்கள் யாரும் வசதியில்லாதவர்கள் கிடையாது. அப்படியிருந்தும், இவர்களையும் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்கக் காரணம், இவர்களும் படிக்காதவர்கள்தான் என்பதால்தான்.//<br />பட்டேல் பிரிவினர் பொருளாதாரம் சார்ந்து முன்னேற்றம் பெற்றிருகிறார்களே தவிர கல்வி தேவைப் படும் உயர் பதவிகளில் இருப்பதாக தெரியவில்லையே. உங்கள் கூற்றுப் படி எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதில் பெரிய பிழை இருப்பதாக தெரிய வில்லையே <br /><br />தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு செய்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதிலும் கூட சலுகை பெற்று முன்னுக்கு வந்தோர் மட்டுமே மீண்டும் மீண்டும் சலுகை பெறுகிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீட்டினால் பலன் அடைந்து பொருளாதார ரீதியில் முன்னேறினாலும் தங்கள் அடுத்த சந்ததியினர் மீண்டும் பலன் பெறவே இட ஒதுக்கீடு ஒழிக்கப் படக் கூடாது என்று விரும்புகிறார்களே தவிர தங்கள் இனத்தின் வளர்ச்சிக்கு இவர்களே தடைக்கற்களாகத் தான் இருக்கிறார்கள் . <br />/தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவுதான் முன்னேறி விட்டாலும் படிப்பு, பணம், செல்வாக்கு எனப் பன்மடங்கு உயர்ந்து விட்டாலும் அதனால் அவர் முற்பட்ட சாதியினரின் வீட்டுக்குப் போய்க் கதவு தட்டிப் பெண் கேட்டு விட முடியாது.//<br />அப்படியானால் இட ஒதுக்கீடு இதற்கான தீர்வு அல்ல என்பது உண்மைதானே.அவர்களை நாம் ஏன் உயர்வாக கருத வேண்டும்.<br />முன்னேறியபின் பெரும்பாலோர் உயர் சாதியாக கருதிக் கொள்ளும் இனப் பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாகவே உள்ளது.உருவாகும் அடுத்த சந்ததியனர் இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற முனைகின்றனர். உண்மையான ஏழைகளும் தாழ்த்தப் பட்டோரும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள் அல்லவா?/<br /><br /> பிற்பட்டோரில் பலரும் முற்பட்டோருக்கு இணையாக ஏன் அதற்கு மேலாகவே தேர்வுகளில் மதிப்பெண் பெறுகிறார்கள் . இவர்களின் பெற்றோரும் வசதியானராகவே இருக்கும் பட்சத்தில் சலுகைகளை மற்றவர் பெற விட்டுக் கொடுப்பதுதானே நியாயமானது.?<br />முற்பட்ட இனத்தவர் என்று குறிப்பிடும் பலரும் ஆதி காலத்தில் இருந்தே வசதி படைத்தவர்களாகவோ நில உடமைக்காரர்களாகவோ மன்னர்களாகவோ இருந்ததில்லை.தங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே பொருளாதரத்தில் உயர்ந்த ஆதிக்க சாதியினரிடத்தில் அடிபணிந்தே வாழ்க்கை நடத்தி வந்தனர்.அவர்களை நம்பியே இவர்களுடைய பிழைப்பு நடந்தது. கோவில்களில் பணிபுரியும் பலர் நாம் காண்பிக்கும் ஐந்துக்கும் பத்துக்கும் பிழைப்பு நடத்துபவர்களாகத் தானே காண முடிகிறது .அவர்கள் தங்களை உயர்வாக கருதிக் கொள்வது அவர்களின் பிழை நாம் அவர்களை தாழ்வாகவும் கருதமுடியும் <br />//அரசின் மிக உயர்ந்த பதவிகளிலும், சமூகத்தின் மதிப்பு மிகுந்த இடங்களிலும் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருக்கவே இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டு முறை உண்மையிலேயே முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பாதிப்பதாக இருந்தால், அந்த சமூகத்தில் இருந்து இத்தனை பேர் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்!//<br />எனக்குத் தெரிந்து பெரும்பாலான துறைகளில் உயர் அலுவலர் பதவியில் முற்பட்ட இனத்தவரிக் காணபது மிக அரிதாகவே உள்ளது . கல்வித் துறையில் ஒருவர் கூட இருப்பதாக தெரியவில்லை .தமிழ் நாட்டை சேர்ந்த ஐ ஏ., எஸ் அதிகாரிகளிலும் முற்பட்டவரின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டுவது அரிது.<br /><br />சமையல் எரிவாய் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று அரசு வேண்டுகோள் விடுப்பது போல இட போதுகீட்டு சலுகைகளை விட்டுக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கலாம். அதன் பலன் இன்னொருவருக்கு கிடைக்கக் கூடும் அல்லவா <br />நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. இட ஒதுக்கீடு உண்மையில் தேவைப்படும் உரியவர்களுக்கு .சேர வேண்டும் என்பதே என் விருப்பம் . ஆண்டாண்டு காலமாக ஏழுமை நிலையில் உள்ளவர்களின் நிலை கட்டாயம் மாறவேண்டும் என்பதில் ஐயமில்லை. முற்பட்ட இனத்தவரும் தங்கள் உயர்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்பதும் கட்டாயமே <br />இதை எழுத உதவிய நண்பருக்கு நன்றி <br />கிருஷ்ணமூர்த்தி <br />சென்னை <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-78061959632062331942015-09-21T20:35:19.802+05:302015-09-21T20:35:19.802+05:30மிக்க நன்றி ஐயா, அம்மணி! பதிலளிக்கத் தாமதமானதற்காக...மிக்க நன்றி ஐயா, அம்மணி! பதிலளிக்கத் தாமதமானதற்காக வருந்துகிறேன்! நீங்கள் இருவரும் இந்தக் கட்டுரையை, - குறிப்பாக, முற்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டால் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது பற்றிய என் விளக்கங்களை - ஏற்றுக் கொண்டது இந்தக் கட்டுரையின் நடுநிலைத்தன்மைக்குக் கிடைத்த நற்சான்றிதழாகக் கருதுகிறேன்!<br /><br />மிக்க நன்றி! மிகுந்த மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-18416962428878216782015-09-19T21:21:59.498+05:302015-09-19T21:21:59.498+05:30இபு ஞா நண்பரே! நாங்களும் தங்களை மதிப்பதால்தானே தங...இபு ஞா நண்பரே! நாங்களும் தங்களை மதிப்பதால்தானே தங்களது கருத்துகளையும், தங்கள் எண்ணங்களையும், பதிவுகளையும் படிப்பதற்கு ஆர்வமுடனும் அதில் அறிவு பூர்வமான கருத்துகள் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தங்களை மிகவும் மதிக்கின்றோம். தாங்களும் எங்களை அதே போன்று எண்ணியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. <br /><br />மாற்றுக் கருத்துகள் என்றில்லை...ஆனால் முற்பட்டோரிலும் மிகவும் திறமை வாய்ந்தவர் ஏழைகளாகவோ, நடுத்தரவர்கத்தினராகவோ இருந்தால் அவர்களால் தங்கள் திறமையை முன்னிறுத்த முடியவில்லை என்பது மட்டுமல்ல வாய்ப்புகளும் நழுவுகின்றன என்பது மட்டுமே வருத்தம் அளிக்கின்றது. மற்றபடி அதற்காக நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்படுபவையே...அருமையான கருத்துகள். வலுவான கருத்துகள். கட்டுரை அருமையான நல்ல விளக்கமான கட்டுரையே நண்பரே.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-55784653896875817142015-09-16T16:35:14.672+05:302015-09-16T16:35:14.672+05:30தங்கள் பாராட்டுக்கள் மிகவும் பெரியவை. அந்தளவுக்கு ...தங்கள் பாராட்டுக்கள் மிகவும் பெரியவை. அந்தளவுக்கு நான் தகுதியுடையவனா எனத் தெரியவில்லை. இருந்தாலும், உங்களைப் போன்றவர்களின் இப்பேர்ப்பட்ட பாராட்டுகளுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்ளத் தொடர்ந்து முயல்வேன்! மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-67546004681926613172015-09-15T19:28:41.017+05:302015-09-15T19:28:41.017+05:30வணக்கம் ஐயா!!! என்னுடைய வினாகளுக்கு தாங்கள் மதிப்ப...வணக்கம் ஐயா!!! என்னுடைய வினாகளுக்கு தாங்கள் மதிப்பளித்து விளக்கியதற்கு முக்க நன்றிகள்!!!! தங்கள் கட்டூரையில் 0%கூட குறை இல்லை!!! நீண்ட நாட்கள் புரியாத கேள்வி இது!! அதனால்தான் கேட்டேன்!! மற்றபடி ஒன்றும் இல்லை!! பதிவுலகத்திற்கு புதியவனான நான் முதன் முதலில் பார்த்தேன்!! அனைத்து பதிவுகளும் நெத்தியடி பதிவுகள்தாம்!! உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும்!!!! நன்றி ஐயா!! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5564047975258576772015-09-15T19:15:27.247+05:302015-09-15T19:15:27.247+05:30தங்கள் வானளாவிய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐய...தங்கள் வானளாவிய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள் ஐயா! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-26676466437016359102015-09-15T19:13:22.939+05:302015-09-15T19:13:22.939+05:30துளசி ஐயா! கீதா அம்மணி! இருவருக்கும் நேச வணக்கம்!
...துளசி ஐயா! கீதா அம்மணி! இருவருக்கும் நேச வணக்கம்!<br /><br />மற்ற யாருடைய கருத்தையும் விட இந்தப் பதிவுக்கு நான் உங்கள் கருத்தைத்தான் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஏன் என்பது தங்களுக்கே தெரியும். "இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டேன்" என்று கூறிய தாங்களே இதை ஏற்றுக் கொண்ட பிறகு வேறு எவன் இதை ஏற்றுக் கொண்டால் என்ன, கொள்ளாவிட்டால் என்ன! தங்கள் வார்த்தைகள் எனக்கு மிக... மிக... மிக நிறைவளிக்கின்றன! மிக்க நன்றி!<br /><br />முற்பட்டோரைப் பார்த்து அந்தக் கேள்வியை எழுப்பும்பொழுது ஆணையாகத் தங்கள் இருவரின் நினைவும் எனக்கு வந்தது. "மற்றவர்கள் உனக்கு முன்னால் அமர்ந்து அசைவம் சாப்பிட்டாலும் முகம் சுளிக்கக்கூடாது" என்றெல்லாம் சொல்லிப் பிள்ளையை வளர்த்த கீதா அம்மணியையும், "சாதிகள் சாகவில்லை பாப்பா! அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா" என்றெழுதிய துளசி ஐயாவையும் மனதில் வைத்துக் கொண்டுதான் நான் அதை எழுதினேன். ஆனால், உங்களைப் போன்றவர்கள் வெகு அரிது. பெரும்பான்மையான மற்றவர்களைப் பார்த்து எழுப்பப்பட்ட கேள்வி அது. எனவே, நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ளவும் இல்லை என்பதை உங்கள் கருத்திலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காகவும் நன்றி!<br /><br />மீண்டும் சொல்கிறேன், இந்தக் கட்டுரையைத் தாங்கள் ஏற்றுக் கொண்டது எனக்குப் பெருத்த மகிழ்ச்சி! இருந்தாலும், மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இருப்பினும் தாங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம். மிக்க நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-29584302384357963362015-09-15T18:59:33.140+05:302015-09-15T18:59:33.140+05:30ஆகா! நீங்கள் இது பற்றி எழுத நினைத்திருந்தீர்களா? த...ஆகா! நீங்கள் இது பற்றி எழுத நினைத்திருந்தீர்களா? தெரியாமல் போய்விட்டதே!<br /><br />//நான் உங்க பதிவை படிக்கவே இல்லை:(( பின்ன நீங்க எழதினபின்ன நான் எழுத எந்த பாயிண்ட் இருக்கபோகுது:))// - இது உங்களுக்கே சற்று மிகையாகத் தெரியவில்லையாம்மா? நீங்கள் இந்தக் கருத்தை இட்டிருக்கும் இதே நாள்தான் 'கீற்'றில் ஓர் அன்பரால் மடக்கப்பட்டு இங்கு வருகிறேன். கிரீமி லேயர் சரியா தவறா என்பது பற்றி நான் இதில் எழுதவேயில்லை. மறந்து விட்டேன். தவிர, கட்டுரையைப் படித்த பின்னும் அதிலிருக்கும் பல கேள்விகளை மீண்டும் பலர் கருத்துரையில் கேட்பதிலிருந்தே தொடர்புடைய பலருக்கு அந்தப் பதில்கள் நிறைவளிக்கவில்லை என்பதை உணர முடிகிறது. எனவே, இதே விதயம் பற்றி இதை விட நன்றாக, முற்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சரிதான் என ஏற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் எழுதுங்கள்! நான் காத்திருக்கிறேன்.<br /><br />//வலைப்பதிவர் திருவிழா போட்டியில் உங்களுக்கு ஏற்ற இரு தலைப்புக்கள் பார்த்தேன். எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!!// - ஆம்! அப்படித்தான் நானும் எதிர்பார்க்கிறேன் சகா! ஆனால், உறுதியாகச் சொல்ல முடியவில்லை. :-) பார்க்கலாம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-29764652333528266102015-09-15T17:04:06.941+05:302015-09-15T17:04:06.941+05:30வணக்கம் நண்பரே
அருமையான அலசலை,
ஆணித்தரமாக,
இதமாக...வணக்கம் நண்பரே <br />அருமையான அலசலை, <br />ஆணித்தரமாக,<br />இதமாகவும்,<br />ஈர்ப்புடனும், <br />உண்மையை,<br />ஊராருக்கு,<br />எல்லா மனிதரையும்,<br />ஏற்றத்தாழ்வின்றி,<br />ஐயமில்லாமல்,<br />ஒலித்தது,<br />ஓங்கிய உங்கள் குரல் முடிவில் கேட்டீர்களே கேள்வி எந்தக் கொம்பனும் இதற்க்கு முன் வரமாட்டான் வாழ்த்துகள் நண்பரே அருமையாக அலசி இருக்கின்றீர்கள் அரசின் கல்வித்துறை குழுவில் இடம் பெறவேண்டியவர் தாங்கள் 80 எமது கருத்து.<br /><br />//இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் நீங்கள் அப்படியொரு சட்டம் கொண்டு வருவதற்குக் காரணமான சாதி அமைப்பைத் தவறு என ஏற்றுக்கொண்டு அதிலிருந்து வெளியே வர முன்வருவீர்களா ?//<br /><br />நெத்தியடி போஸ்ட்<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-45608355869136205832015-09-14T20:04:14.991+05:302015-09-14T20:04:14.991+05:30தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வர...தலைமுறை தலைமுறையாகப் படித்த குடும்பத்திலிருந்து வரும் மாணவரையும், பற்பல தலைமுறைகளாகக் கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இந்தத் தலைமுறையில் முதல் ஆளாகப் படிக்க வரும் மாணவரையும் எப்படி ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தி இந்த சமூகப் போட்டியில் ஓட விட முடியும்? அது எப்படி முறையாகும்? அதனால்தான் இட ஒதுக்கீடு எனும் பெயரால் சிலர் சற்று முன்னே நிறுத்தப்படுகிறார்கள்.// அருமை அருமை! கேள்விகளும் விளக்கங்களும் அனைத்தும் அருமை. முற்பட்டோர் அவர்கள் சாதியிலிருந்து வெளிவருவார்களா என்ற கேள்விக்கு பெரும்பான்மையோரைப் பற்றிச் சொல்ல முடியாது எனினும் வெளிவந்த இருவர் பற்றி தெரியும்....ஒன்று கமல்....மற்றொருவர் எங்கள் தளத்தில்....<br /><br />அருமையான கட்டுரை...வேறு வார்த்தைகள் இல்லை நண்பரே! வேறு வார்த்தைகள் எதற்கு!!!...அக்மார்க்!<br /><br />சாதிகள் ஒழிந்துவிட்டால் இந்தியா முன்னேறி எங்கேயோ சென்றிடும்!! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-71658630119793115192015-09-14T19:58:28.596+05:302015-09-14T19:58:28.596+05:30தமிழ் மணம் 2 பிறகு வருவேன்தமிழ் மணம் 2 பிறகு வருவேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-30194675803977907532015-09-14T18:03:02.691+05:302015-09-14T18:03:02.691+05:30ஹும்ம்ம்ம்!!! நான் இனிக்கு எழுத நினைச்சா டாபிக்கை ...ஹும்ம்ம்ம்!!! நான் இனிக்கு எழுத நினைச்சா டாபிக்கை இப்படி சுட்டுடீங்களே சகா:(((<br />நான் உங்க பதிவை படிக்கவே இல்லை:(( பின்ன நீங்க எழதினபின்ன நான் எழுத எந்த பாயிண்ட் இருக்கபோகுது:)) இப்போ போறேன். மறுபடி வருவேன். வலைப்பதிவர் திருவிழா போட்டியில் உங்களுக்கு ஏற்ற இரு தலைப்புக்கள் பார்த்தேன். எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-5709656004336288022015-09-14T16:32:37.895+05:302015-09-14T16:32:37.895+05:30வணக்கம் ஐயா! தங்கள் முதல் வருகைக்கு என் வரவேற்பை ம...வணக்கம் ஐயா! தங்கள் முதல் வருகைக்கு என் வரவேற்பை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!<br /><br />நீங்கள் கூறுகிறபடி, முற்பட்டவர்கள் பிற்பட்டவர்கள் என அனைவரும் பள்ளியில் ஒன்றாகத்தான் படிக்கிறோம். இருவருக்கும் ஆசிரியர்கள் ஒரே மாதிரிதான் பாடம் நடத்துகிறார்கள் என்பதையும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவரவர் வாழ்க்கை, வசதி, சூழல், பின்புலம் முதலான பல காரணிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்பதை நீங்கள் திறந்த மனதுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! குறிப்பாக முற்பட்ட, பிற்பட்ட குடும்பங்களில் படிப்புக்குத் தரப்படும் முதன்மை மாறுபடுவதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்! இது போல் எத்தனை விதங்களில் எத்தனை எத்தனை வேற்றுமைகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் மேலே விவரித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகும் இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை!<br /><br />மேலும், "திறமைக்கு மதிப்புக் கிடையாதா" என்று கேட்டீர்கள். அதற்கும் முதல் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. தனக்கு உவப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வருகிற ஒருவர் எடுக்கும் நூறு மதிப்பெண்ணும், சரியாகப் படிக்காவிட்டால் மாடு மேய்க்கப் போக வேண்டியிருக்கிற, எந்நேரமும் படிப்பு நிறுத்தப்படுகிற சூழலில் இருக்கிற குடும்பத்திலிருந்து வருபவர் எடுக்கும் ஐம்பது மதிப்பெண்ணும் ஒன்றா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அந்த நூற்றை விட இந்த ஐம்பது பெரியது என்பதை உங்களால் உணர முடிந்தால் திறமை பின்னுக்குத் தள்ளப்படுகிறது என உங்களுக்குத் தோன்றாது.<br /><br />அது மட்டுமில்லாமல், என்னதான் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகப் பாடம் நடத்தினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்வி கற்ற தலைமுறையினராகவே இருப்பவர்களும், முதல் தலைமுறையாகப் படிக்க வருபவர்களும் ஒரே மாதிரியாக அந்தப் பாடத்தை உள்வாங்க முடியுமா என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்!<br /><br />இவை அனைத்தும் மேலே கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருப்பவைதாம். அப்படியிருந்தும் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்கிறீர்கள்!<br /><br />மற்றபடி, ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குளறுபடிகள் எல்லாம் வழக்கம் போலப் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதயம் எனும் பொறுப்பே இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளும் அரசு இயந்திர மெத்தனப் போக்கின் பின்விளைவுகள். அதற்காகச் சட்டத்தைக் குறை சொல்ல முடியுமா ஐயா?<br /><br />இதில் சினம் கொள்ள ஏதுமில்லை. இதை எழுதியவன் எனும் முறையில், இதைப் படிப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது என் கடமை! :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5821890028959566290.post-87166683106444308572015-09-14T14:02:56.146+05:302015-09-14T14:02:56.146+05:30வணக்கம்! நான் தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்கள் ஆ...வணக்கம்! நான் தங்கள் தளத்திற்கு புதியவன்! தங்கள் ஆய்வுகட்டூரை அருமை!!!! எனக்கு சில சந்தேகங்கள்!! முற்பட்டவரோ பிற்பட்டவரோ! இருவரும் பள்ளியில் ஒன்றாகத்தான் படிக்கிறேம்!! ஆசிரியர் இருவருக்கும் ஒரேமாதிரிதான் பாடம் நடத்துகிறார்!!! இருவருக்கும் தேர்ச்சி மதிப்பண் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது (1-12 வகுப்புவறை)<br />இதில் சலுகயையே இட ஒதுக்கீடே இல்லை!! ஆனால் வேலை என்னும் போதும் மட்டும் ஏன் இந்த ஒதுக்கீடு?? இதில் அறிவு திறமை என்பதற்கல்லாம் மதிப்பு கிடையாதா??? 2013 ல் நடந்ந ஆசிரியர் தகுதி தேர்வில் எத்தனை குளறுபடிகள் நடந்தது?? முதலில் 90மார்க் எடுத்தவர்களுக்குதான் வேலை என்றார்கள்!!! இதில் இட ஒதுக்கீடு பிரச்சினை என்றுகோர்ட் தலையிட்டதும்! அரசு தரப்பில் திறமைமிக்கவர்களை உருவாக்கும் ஆசிரிய பணியில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு இடமில்லை என்றார்கள்! அடுத்த தேர்வில் 85மதிப்பண் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலை உன்டு என்றார்கள்!! (பாராளுமன்ற தேர்தலை வைத்து) அனைவருக்கும் எப்படி வேலை கொடுப்பார்கள்?? பிறகு எப்படியே வேலைவழங்கிவிட்டார்கள்! பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது!! பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி இதுதான்!! அறிவு தறமைகளில் இட ஒதுக்கீடு எதற்கு???? இது என்னுடைய கேள்விதான்? ஏதும் தவறுஇருப்பின் சினம் கொள்ளாது விளக்கம் அய்யா நன்றி!! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.com