.

புதன், மார்ச் 24, 2021

அதோ, அவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்! - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை

Modi with Edappadi Palanisamy and O.Panneerselvam
ன்புத் தமிழ் நெஞ்சங்களே!
அதோ அவர்கள் வருகிறார்கள்!
நம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
யார் அவர்கள்?...
கொஞ்சம் நன்றாகப் பாருங்கள்!

திருவள்ளுவர் மீது காவிக்கறை பூசியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
பெரியார் சிலையின் தலையை உடைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் உயர்நீதி மன்றத்தையே மயிரென்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

சல்லிக்கட்டுப் போராட்டத்தில்
நம் பிள்ளைகளை அடித்து நொறுக்கியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை அனிதாவின்
தற்கொலையைக் கொச்சைப்படுத்தியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்குத்
தமிழகத்திலேயே தடை கேட்டவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“கேந்திரிய வித்தியாலயப் பள்ளிகளில்
தமிழுக்கு இடமில்லை” என்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

குழந்தை ஆசிபாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை சுனோலினை வாயில் சுட்டுக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
செய் சிரீராம் என்று சொல்ல மறுத்தவனை
உயிரோடு கொளுத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக
மனிதனை அடித்துக் கொன்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

“தமிழ்நாட்டை இருவேறு மாநிலங்களாகப் பிரித்துக் காட்டுவோம்” என்று
சூளுரைத்திருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழை விட சமற்கிருதமே மூத்தது” என்று
நாடாளுமன்றத்திலேயே நாக்கூசாமல் புளுகியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்” என்று
தமிழ் மண்ணிலேயே கொக்கரித்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி வளாகத்துக்குள்
குண்டு வீசுவோம் என்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இருமொழிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு
இந்தித் திணிப்புக்குப் பட்டுக் கம்பளம் விரித்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்து
நம் அரசுக் கல்லூரிகளில் நமக்கே இடமின்றிச் செய்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உச்சநீதி மன்றமே சொன்ன பின்னும்
ஏழு தமிழர் விடுதலையை வேண்டுமெனவே இழுத்தடிப்பவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
முகிலன், பியூஷ் மானுஷ் என்று
சூழல் காக்கப் போராடியவர்களையெல்லாம்
சித்திரவதை செய்து முடக்கியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

தேசியக் கல்விக் கொள்கை என்று சொல்லி
நம் குழந்தைகளின் கல்வியில்
மண்ணள்ளிப் போட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
ஒரே நாடு - ஒரே வரி என்று
ஒரேயடியாக நம் சிறு-குறு தொழில்களுக்கெல்லாம்
மூடுவிழா நடத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நமது மாநில அரசுப் பணியிடங்களையெல்லாம்
வடமாநிலத்தவர்களுக்கு வாரி இறைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இசுலாமிய உடன்பிறப்புகளையெல்லாம்
குழந்தை குட்டியோடு சிறையில் தள்ளக்
கட்டடம் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

ஊருக்கே சோறிட்ட உழவன் வீட்டுச் சோற்றுப் பானையை
எட்டு வழிச் சாலைக்காக எட்டி உதைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நாடாளுமன்றத்தின் முன் நம் வேளாண் பெருமக்களை
ஆடையின்றி ஓட விட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மொத்த நாட்டு விலைவாசியையும் தீர்மானிக்கும் உரிமையை
எண்ணெய் நிறுவனங்களுக்கே எழுதிக் கொடுத்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மூன்று வேளை உணவு கூட இனி
பணம் படைத்தவனுக்கே என்று
வேளாண் சட்டத்தைத் திருத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!

இவர்களுக்கு வாக்களிப்பதா?!
இன்னும் ஒரு வாய்ப்பளிப்பதா?!
தமிழ்நாட்டுப் பெருமக்களே!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
நாம் வாழ வேண்டுமானால்
இவர்களைத் தோற்கடிக்க வேண்டும்! – அதற்கு
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நான் சொல்லத் தேவையில்லை – ஏனெனில்
அஃது உங்களுக்குத் தெரியாததில்லை!

ஏப்ரல் 6, 2021-தான்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!...
வாக்குரிமையே வாழ்வுரிமை!
சிந்தித்துச் செயல்படுவோம்!
நம் பிள்ளைகள் எதிர்காலம்
இன்னும் நம் விரல்நுனியில்! 

 (நான் ‘கீற்று’ இதழில் 24.03.2021 அன்று எழுதியது)

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி ஏ.என்.ஐ.

கவிதையின் கருத்து சரியானது எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளை அழுத்தி மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம் வரலாற்று முக்கியம் மிக்க இந்தத் தேர்தலில் நல்லாட்சி மலர உதவுங்கள்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்