.

ஞாயிறு, ஜனவரி 13, 2019

சூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது!

Farmers are the Real Heroes
ம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் வெயில், மழை போன்ற இயற்கைக் கூறுகளை நம்பி உழவுத்தொழில் செய்தோம்; அதனால் அவற்றின் மூலம் கிடைத்த விளைச்சலைச் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினோம். ஆனால் இன்று நம் வேளாண்மை முழுக்க முழுக்கச் செயற்கைப் பாசன முறைகளை நம்பித்தான் இருக்கிறது. குறிப்பாக, காவிரி! அந்தக் காவிரி நீர் - காவிரி மேலாண்மை ஆணையம் - நமக்குக் கிடைக்கக் காரணம் நம் அய்யாக்கண்ணு ஐயா முதலான உழவர் பெருமக்களும் அவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களும்தாம்.

என்னதான் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்து வாதாடினாலும் அப்படி வழக்குத் தொடுக்கவும் அந்த வழக்கின் பின்னுள்ள வலியை நீதிபதிகள் உணர்ந்து ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பளிக்கவும் காரணமாக இருந்தவை நம் உழவர் பெருமக்கள் கடந்த ஆண்டு நடத்திய பதற வைக்கும் போராட்டங்கள்தாம்.

ஆம்! இன்று நமக்குக் கிடைக்கும் இந்தச் சோறும் நீரும் இயற்கை நமக்கு அளித்த கொடைகள் அல்ல. இயற்கை நமக்களித்த இவற்றின் மீதான நம் உரிமையை நிலைநாட்ட நம் உழவர்கள் உயிரை இழந்து, மண்ணில் புதைந்து, ஆடை துறந்து, மானம் மறந்து பெரும் போராட்டங்கள் மூலம் வென்றெடுத்தவை. ஆனாலும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முடிந்த பாடில்லை.

சாணவளித் (மீத்தேன்) திட்டம், நீரகக் கரிமத் (ஹைட்ரோ கார்பன்) திட்டம், கெயில் திட்டம், சல்லிக்கட்டுத் தடை எல்லாம் போய் இப்பொழுது எட்டு வழிச் சாலைத் திட்டம், உயரழுத்த மின்கோபுரத் திட்டம் போன்றவை புதிதாகக் கிளம்பியிருக்கின்றன. எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தம் கொடுத்து எப்படியாவது உழவர்களை அவர்களின் நிலங்களிலிருந்து வெளியேற்றி விட வேண்டும் என மத்திய - மாநில அரசுகள் முயல்வது பச்சையாகத் தெரிகிறது!

இந்தச் செயற்கைப் பேரிடர்களெல்லாம் போதாதென, ஒரே நாளில் வேளாண்குடிகளின் வாழ்க்கை மொத்தத்தையும் வாரி வாயில் போட்டுக் கொண்ட கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் வேறு. இவ்வளவையும் தாங்கிக் கொண்டு இன்றும் நமக்காக ஏர் பிடிக்கும் உழவர் பெருமக்களை நினைத்தால் நெஞ்சம் விம்முகிறது!

உண்மையில் நம் தமிழ் உழவர்கள் ஒவ்வொருவரும் படை வீரர்களை விடப் பன்மடங்கு தீரம் மிகுந்தவர்கள். படை வீரர்கள் கூடச் சொந்த நாட்டின் பின்புல வலிமையைக் கொண்டு ஒரே ஓர் எதிரி நாட்டைத்தான் எதிர்த்துப் போராடுவார்கள். ஆனால் நம் உழவாண்மைத் தோழர்களோ சொந்த நாட்டை மட்டுமில்லாது அதற்குப் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையும், இவற்றுக்கும் பின்னால் அணிவகுத்திருக்கும் உலகின் பணக்காரப் பெருமுதலைகளையும் ஒரே நேரத்தில், எந்தப் பின்புலமும் இல்லாமல் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்!

எட்டு வழிச் சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளைப் பார்த்து "நிலத்தை விட்டு வெளியேறாவிட்டால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்" என மழிதகட்டைக் (பிளேடு) குரல்வளையில் வைத்துக் கொண்டு நரம்பு புடைக்கக் கத்திய அந்த உழவர் மகளை மறக்க முடியுமா? உதிரம் சிந்தாத இந்தப் போர், உதிரம் சிந்தும் உண்மைப் போரை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

இப்படிப் பெரும் போர் நடாத்தி, அரும்பாடுபட்டு நமக்கு ஒவ்வொரு நெல்மணியையும் விளைவித்துத் தரும் நம் வேளாண் பெருமக்கள்தாம் நமக்கு உண்மையில் சூரியனையும் வேறெந்த இயற்கை ஆற்றலையும் விட மேலானவர்கள்; வணங்கத் தக்கவர்கள்!

எனவே பெய்தும் கெடுத்துப் பெய்யாமலும் கெடுக்கும் இயற்கையை விட்டுவிட்டு தன்னையே விதைத்து நமக்கு உணவிடும் உழவர்களை நினைத்துக் கொண்டாடுவோம் இந்தப் பொங்கலை! தமிழர் திருநாளை!

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த
போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி விகடன்.

தொடர்புடைய பதிவுகள்: 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்