.

ஞாயிறு, ஜனவரி 22, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!

Tamil-flag
லக உருண்டை சுழலத் தொடங்கிய நாள் தொட்டு இல்லாத புதுமையாக முதன் முறையாய்க் காளைகளைக் காப்பாற்றப் புலிகள் களமிறங்கியிருக்கின்றன தமிழ் மண்ணில்!

2017 சனவரி 8 அன்று சென்னை மெரினாவில் தொடங்கிய எழுச்சிப் பேரலை தமிழ்நாடு முழக்கப் பரவி, இப்பொழுது உலகம் முழவதும் ஆழிப் பேரலையாய் விண்ணைத் தொட்டு வீசிக் கொண்டிருக்கிறது! தமிழர்கள் மட்டுமில்லை மலையாளிகள், மகாராட்டிரர்கள், வெள்ளையர்கள், அராபியர்கள் எனப் பிற மாநிலத்தினர் முதல் வெளிநாட்டினர் வரை மனித இனம் மொத்தமும் இன்று தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்கிறது!


“இனப்பற்று, மொழிப்பற்று என்று பேசியதெல்லாம் அந்தக் காலம். ஆங்கில வழியில் படித்து, அயல்நாட்டுக்காக இங்கிருந்தே பணி செய்யும் உலகமயமாக்கல் காலக்கட்டம் இது. இனி அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை” என்று ஆட்சியாளர்கள் இறுமாந்திருந்த வேளையில் அதுவரை இல்லாத பேரெழுச்சியாய் உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள் ஈழத்துக்காகப் போராடிய இளைஞர்கள்.

அது நடந்த மிகக் குறுகிய காலக்கட்டத்துக்குள், தமிழினப் படுகொலை போன்ற தலை போகிற பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல தமிழர்களின் ஒரு சிறு பண்பாட்டு அடையாளத்துக்கு ஊறு நேர்ந்தாலும் சரி, விட மாட்டோம் என இதோ களத்தில் வந்து நிற்கிறார்கள் தமிழ்ப் பிள்ளைகள்! இதுநாள் வரையில் நம் இனத்துக்காகவும் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் போராடிய அத்தனை பேரும் நெஞ்சுயர்த்திப் பெருமிதம் கொள்ள வேண்டிய தறுவாய் இது!

ஆனாலும் “நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் ஜல்லிக்கட்டுக்குப் போய் இவ்வளவு பெரிய போராட்டம் தேவையா?” என்கிற கேள்வி இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லாத் தளங்களிலும். முட்டாள்தனம்!

ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் இருப்பது பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பால் அரசியல்! அதைக் குறி வைத்துத்தான் உயிர்கள் மீதான இரக்கம் எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன பீட்டா போன்ற முதலைகள். இந்தப் பிரச்சினை மட்டும் அவர்களுக்கு சாதகமாக முடிந்து விட்டால் நாட்டு மாடுகளின் இனமும் அவை தரும் பாலும் அழிந்து கலப்பினப் பசும்பால் மட்டுமே இங்கு கிடைக்கும் என்கிற சூழல் உருவாகும். அப்படி நடந்தால், நாளடைவில் மொத்தத் தமிழ்நாடும் நோய்களின் கூடாரமாக மாறி விடும்! இதை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மட்டும் சொல்லவில்லை, மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். கலப்பினப் பசுக்களின் பால் உண்மையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் நஞ்சு என அவர்கள் எச்சரிக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, இதோ ஒரு விழியம்!

செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு - ஓர் அரசியல் விளையாட்டு! | மச்சி! நீ கேளேன்! - 7

Jallikkattu - A Political Game

மு.கு: என்னதான், தமிழ்நாடே திரண்டு சல்லிக்கட்டுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உணர்வுள்ள ஒரு மாபெரும் இளைஞர் கூட்டத்தைத் தவிர, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் இதன் தீவிரத்தை உணரவில்லை என்பதே உண்மை. அப்படிப்பட்ட நண்பர்களுக்காகவே இந்தப் பதிவு!...

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்துக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அரசியல் விளையாட்டு இருக்கிறதே... மிகக் கண்ணறாவி!

"சாதாரண ஒரு விளையாட்டுதானே! அதற்குப் போய் எதற்கு இவ்வளவு பிரச்சினை? நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டுப் போக வேண்டியதுதானே?" என்கிறார்கள் நம் நண்பர்கள் சிலர். ஏன், அதையே இப்படி நினையுங்களேன், "சாதாரண ஒரு விளையாட்டுதானே? அதற்குப் போய் இவ்வளவு பிரச்சினை எதற்காக? எப்போதும் போல நடத்த விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் விடாப்பிடியாக முடக்க முயல்கிறார்கள்?" இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், இந்த விளையாட்டைத் 

திங்கள், ஜனவரி 09, 2017

இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?

Tanjore farmers in the clutches of death

ந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய அன்று ஒருநாள் மட்டும் உயிரிழந்த உழவர்களின் எண்ணிக்கை எட்டு!

விவசாயிகள் உயிரிழப்பு என்பது பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், தங்க விலை நிலவரம் போல அன்றாடச் செய்தியாகி விட்டது. வாரத்துக்கு ஒருவர், ஓரிரு நாட்களுக்கு இருவர் என்று தொடங்கியது இன்று ஒரு நாளுக்கு எட்டுப் பேர், பத்துப் பேர் என்பதில் வந்து நிற்கிறது!

ஒரே நாளில் பத்துப் பேர் சாவது என்பது சாதாரண விதயமில்லை. “இந்த நாடு மனிதர்கள் வாழத் தகுதியில்லாதது. இந்த நாட்டை ஆள்பவர்கள் அடிப்படை மனிதநேயம் கூட இல்லாதவர்கள். எனவே வேறு வழியின்றிச் செத்துத் தொலைகிறோம்” என்பதுதான் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த நாட்டுக்கு அவர்கள் சொல்லிச் செல்லும் செய்தி. ஒரு நாட்டின் குடிமகன் தொடர்ந்து அந்நாட்டில் உயிர் வாழ முடியாமல், நாட்டை விட்டு வெளியேறவும் வழியில்லாமல் ஒரேயடியாக உயிரையே விட்டு விடுவது என்பதுதான் அந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்படுகிற உச்சக்கட்ட அறைகூவல். அதை விடத் தலைக்குனிவு ஒரு நாட்டுக்கு வேறு எதுவும் கிடையாது. ஆனால், நடுவண், மாநில அரசுகள் இந்தப் பெருங் கொடுமையை ஏதோ மட்டைப் பந்தாட்டம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதற்கு ஒரு நாடு, அரசு, மக்களாட்சி எல்லாம்?

நடுவணரசைப் பொறுத்த வரை, கொள்ளிவளித் (மீதேன் வாயு) திட்டம், பாறைவளித் (Shell gas) திட்டம், கெயில் திட்டம் என அவர்களின் மலைவிழுங்கிக் கனவுகள் பலவற்றுக்கும் பெரும் தடையாய் இருப்பவர்கள் தஞ்சை வேளாண் பெருமக்கள்தாம். எனவே, ஏற்கெனவே அண்ணன் எப்பொழுது சாவான், திண்ணை எப்பொழுது காலியாகும் எனக் காத்திருக்கும் அவர்களுக்கு நம் உழவர்கள் சாவது பற்றி எந்த வருத்தமும் இருக்க முடியாதுதான். ஆனால், தமிழ்நாடு அரசு கூட இதில் பாராமுகமாக இருப்பதுதான் தாள இயலாத கொடுமை! இதோ ஏறக்குறைய நூறு உழவர்கள் செத்து விழுந்த பிறகுதான் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவே குழு அனுப்பியிருக்கிறது மாநில அரசு. நாட்டு மக்களின் உயிர் விதயத்தில் இதை விட மெத்தனப் போக்கு இருக்க முடியுமா?

தெரியாமல்தான் கேட்கிறேன், நடுவணரசாவது காவிரிப் பிரச்சினை, ஈழப் பிரச்சினை என வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் நாளை விழிக்க இயலும். ஆனால், அ.தி.மு.க-வினரே நீங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நாளைக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் வாக்குக் கேட்டுப் போவீர்கள்? முழுப் பழியையும் கருநாடகத்தின் மீதே சுமத்தி விடலாம் என நினைக்காதீர்கள்! அது நடக்கவே நடக்காது.

தமிழ்நாடு அரசே!...

டெல்டா விவசாயிகளின் இன்றைய நிலைமைக்குக் கர்நாடகம் காவிரித் தண்ணீர் தராததுதான் முதன்மைக் காரணம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தமிழ்நாட்டு அரசு ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மை. பருவ மழை தமிழ்நாட்டை மட்டுமில்லை கருநாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மற்ற தென் மாநிலங்களையும் சேர்த்துத்தான் வஞ்சித்திருக்கிறது. ஆனால், அங்கெல்லாம் உழவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாகச் செத்துச் சாம்பலாகவில்லை. எனில், அந்த மாநிலங்கள் அந்தளவுக்கு முன்கூட்டி நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன எனப் பொருள். ஆனால் இங்கு, மொத்தப் பயிரும் கருகி, உழவர்களெல்லாரும் தற்கொலை செய்து கொண்டு சாகும் வரை கைகட்டிக் கொண்டிருந்து விட்டு, காவிரி நீர் இல்லாததால்தான் இப்படி நடந்தது என்றால் யார் நம்புவார்கள்? தஞ்சையிலிருந்து கண்காணாத் தொலைவிலிருக்கும் எனக்கே இது தெரியும்பொழுது களத்திலிருக்கும் அந்த வேளாண் பெருமக்கள் எப்படி நம்புவார்கள்?

எனவே, முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்கள் இனி புதிதாக உழவர்கள் யாரும் உயிரிழக்காமலாவது தடுக்க முன்வர வேண்டும்! நடுவணரசும் மாநில அரசும் நினைத்தால் ஒரே ஓர் அறிக்கை மூலம் உழவர் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்! ஆம், இப்பொழுது தேவைப்படுவது ஒரே ஓர் அறிக்கைதான்!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்