.

புதன், டிசம்பர் 27, 2017

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்

Vote for Money
 
வாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்...

மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்கள்...

பணத்துக்கு விலை போனவர்கள்...

- இப்படி நாடே திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) மக்களை.

உழைக்கும் மக்களுக்கு நம் நாட்டில் எப்பொழுதுமே மரியாதை குறைவுதான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் கறுப்பர்கள், படிக்காத முட்டாள்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள், நாகரிகம் அறியாதவர்கள், முரடர்கள், ஏமாளிகள், நம்பத்தகாதவர்கள், குடிகாரர்கள்... இன்னும் என்னென்னவோ. இவற்றோடு ‘பணத்துக்கு வாக்களிப்பவர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துச் சொல்வதால் அவர்களுக்குப் புதிதாக எந்த மானக்கேடும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஆம், அவர்கள் பணம் வாங்கினார்கள். பணம் வாங்கிக் கொண்டுதான் தினகரனை வெற்றி பெறச் செய்தார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் அவர்கள் பணத்துக்கு விலைபோனார்கள்!

ஆனால், அம்மக்களின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை நிலைமை என்ன? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இவற்றையெல்லாம் ஆராய வேண்டாவா? இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மக்களாட்சி முறைக்கே அறைகூவல் விடுக்கும் இந்த காசுக்கு வாக்களிக்கும் பிரச்சினையை நாம் சரி செய்ய முடியுமா?

திங்கள், நவம்பர் 27, 2017

மாவீரர் திருநாள் – நாம் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி இதுதான்!

Tamil Eelam National Heroes Day 2017

லகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே!

இன்று மாவீரர் திருநாள்! இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள்! உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள்! உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள்!

இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன? வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும், அறிக்கை விடுத்தும் கண்ணீர் உகுத்தும் – இப்படியேதான் நாம் காலத்தை ஓட்டப் போகிறோமா? இவை தவிர வேறேதும் நம்மால் செய்ய முடியாதா?

தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்பதற்காகத் தங்கள் உயிரைக் காணிக்கையாக்கியவர்கள் மாவீரர்கள். தமிழீழத்தை வென்றெடுத்து அந்த வெற்றியை அவர்களுக்குக் காணிக்கையாக்குவதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

இதோ, சிங்கள வல்லூறுகள் மீண்டும் இன்னொரு தமிழின அழித்தொழிப்புக்குத் திட்டம் தீட்டத் தொடங்கி விட்டன. ‘ஒரே நாடு – ஒரே இனம்’ எனும் தங்கள் நெடுங்காலக் கொள்கையைத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகவே அமலாக்க முயன்று வருகிறது இலங்கைப் பேரினவாத அரசு. இது தமிழினத்தைச் சட்டப்படியாகவே ஒழிப்பதற்கான நடவடிக்கை எனக் கொந்தளிக்கிறார்கள் தமிழ்ப் பற்றாளர்களும், மனிதநேய ஆர்வலர்களும். போர் என்ற பெயரில் பச்சையான இனப்படுகொலையை இலங்கை நடத்தியபொழுதே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு சமூகம், இப்படிச் சட்டத்தின் பெயரால் அதைச் செய்தால் பெயருக்குக் கூடக் கண்டு கொள்ளாது என்பது நாம் அறியாததில்லை. ஆக, இனியும் வெறுமே அஞ்சலிக் கூட்டங்களும் விழிப்புணர்வு மாநாடுகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்திக் கொண்டிராமல் தமிழீழ விடுதலைக்கான அரசியல் – சட்ட முயற்சிகளை வேகப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஈழப் பிரச்சினைக்காகத் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை எனப் பார்த்தால், ஐ.நா–விலும் பன்னாட்டு மனித உரிமை ஆணையத்திலும் இனப்படுகொலை குறித்து நாம் எடுத்துரைத்ததுதான். தமிழர்களுக்காகப் பேச உலகில் எந்த நாடும் இல்லாத நிலையில் பசுமைத் தாயகம், நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற இயக்கங்களும் வைகோ, அன்புமணி இராமதாசு, திருமுருகன் காந்தி போன்ற தனிப்பட்ட மனிதர்களும் மட்டுமே சேர்ந்து இந்த உயரத்துக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றதே பெரிதுதான். கண்டிப்பாக அது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால், இது மட்டும் போதாது; போதவே போதாது!

ஈழத் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கனவு நிறைவேற வேண்டுமானால், அப்படி ஒரு கோரிக்கையை அவர்கள் ஏன் வலியுறுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் பன்னாட்டு சமூகத்தின் முகத்தில் அறையும்படி முன் வைக்க வேண்டும்! அந்தக் கோரிக்கை சரியானதுதான் என்பதற்கான பன்னாட்டு அமைப்பு ஒன்றின் ஏற்பிசைவை (அங்கீகாரம்) நாம் பெற்றாக வேண்டும்! அதற்கு ஒரே வழி, நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவதுதான்!

பெரும்பாலோர், ஒரு நாட்டின் மீது வழக்குத் தொடுக்க இன்னொரு நாட்டினால்தான் முடியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நீதிமன்றத்தில்தான் இப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி இல்லை [பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) என்பது வேறு; பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) என்பது வேறு!). பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பொறுத்த வரை தனி ஒரு மனிதர் கூட அங்கே வழக்குத் தாக்கல் செய்ய முடியும்! (பார்க்க: கீழே உள்ள படம்!) 
How can people report crimes to the ICC?
படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின் மீது சொடுக்குக!
இது குறித்து முழுமையான விவரங்களுக்கு அழுத்துங்கள் இங்கே!

எனவே, இனியும் ஐ.நா–வையோ மனித உரிமை ஆணையத்தையோ நம்பிக் கொண்டிராமல் இனப்படுகொலை குறித்துத் தமிழ் அமைப்புகளே நேரிடையாக வழக்குத் தொடுக்க வேண்டும்!

இதனால் தமிழினத்தை அழித்த இனவெறியர்களுக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நடந்தது இனப்படுகொலைதான் என்பதும், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்பதும் மெய்ப்பிக்கப்படும். அது மட்டும் நடந்து விட்டால் அந்தத் தீர்ப்பை வைத்தே நாம் தமிழீழப் பொதுவாக்கெடுப்புக் கோரலாம். “சொந்த நாட்டு மக்களை அரசே கொன்று குவிக்கும் ஒரு நாட்டில் அந்த மக்கள் எப்படி வாழ முடியும்?” எனப் பன்னாட்டு அவையில் நாம் குரல் உயர்த்திக் கேட்கலாம். “இப்படிப்பட்ட ஓர் அரசமைப்பிடமிருந்து அந்த மக்கள் விடுதலை கோருவதில் என்ன தவறு?” என உலக நாடுகளின் முகத்துக்கு நேராகக் கேள்வி எழுப்பலாம். ஐ.நா–வின் அமைப்புகளுள் ஒன்றான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகு எவனும்/எவளும் அதை எதிர்த்துப் பேச முடியாது. அதன் பின் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எதன் உதவியும் நமக்குத் தேவையும் கிடையாது.

தமிழீழ விடுதலை என்பது கண்டிப்பாக ஆகப் பெரிய இலக்குதான். ஆனால், இயலவே இயலாததில்லை. ஆகவே, தொடர்ந்தும் உலக நாடுகளையும் பன்னாட்டு அமைப்புகளையும் எதிர்பார்க்காமல் தமிழ் அமைப்புகள் நேரிடையாகச் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும்! தமிழினத்துக்கு நடந்த கொடுமையின் தீவிரத்தை வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும்! அதை வைத்து ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் பெருங்கனவை நிறைவேற்ற வேண்டும்! புலிகளின் தாகத்தைத் தணிவிக்க வேண்டும்! 

அதுதான்...
தமிழர்களுக்காகவே தங்கள் வாழ்வைத் தத்தம் செய்த மாவீரர்களுக்கும்
தமிழர்கள் என்பதற்காகவே குருதி தோயக் கொல்லப்பட்ட நம் உயிர்ச் சொந்தங்களுக்கும்
தமிழினத்தில் தோன்றிய காரணத்துக்காக வயிற்றிலேயே வதைபட்ட நம் பிஞ்சுகளுக்கும்
நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! 

International Criminal Court and Tamils

(நான் ‘அகரமுதலதனித்தமிழ் இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧) வாகை தொலைக்காட்சி, ௨) ஜஸ்டிஸ் ஹப், ௩) விக்கிப்பீடியா, ௪) கெட்டி இமேஜசு.

தொடர்புடைய பதிவுகள்:
மாவீரர் திருநாள் என்பது என்ன?

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

திங்கள், அக்டோபர் 23, 2017

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

The Tamil forefathers who fought for the Temple Worship Rights of Non-Brahmins
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள்
முன்குறிப்பு: பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய தமிழ்நாடு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி, பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் ‘தமிழ்க் காப்புக் கழக’த் தலைவரும் ஆட்சித் தமிழறிஞருமான திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா அவர்கள் நடத்திய ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் ஐயா அவர்களால் பாராட்டப் பெற்றதும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் 30.01.2016 அன்று வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கப்பட்டதுமான சிறுவன் என் ஆய்வுக் கட்டுரையை இந்த நேரத்தில் உலகத் தமிழ் நெஞ்சங்களின் மேலான பார்வைக்கு விருந்தாக்க விழைகிறேன்! 

டவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...

கடவுள் மீது அன்பு (பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான் உரிமை! மனச்சான்றுள்ள மனிதர் யாராவது இதை ஏற்க முடியுமா? ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து - வழிபட்டு வருகிறார்கள். ஆம்! பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.

இது சரியா? தமிழர்கள் கடவுளைப் பூசிக்கக்கூடாதா? அப்படிப் பூசிப்பது சமய நம்பிக்கைகளுக்கோ வேறு ஏதேனும் நெறிமுறைகளுக்கோ எதிரானதா? இது பற்றி சமயம் - சட்டம் - வரலாறு - குமுகம் (சமூகம்) - இறையியல் என எல்லாக் கோணங்களிலிருந்தும்  அலசுவதே இக்கட்டுரையின் மைய நோக்கம். கூடவே,

தமிழர்கள் இந்துக்களா?...

தமிழர் சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?...
 
கோயில் பூசை முறைகளை உருவாக்கியவர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா?...

உலகில் எங்குமே இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தெய்வச் சிலைகளுக்குத் துணியாலான ஆடை ஏன்?...

தமிழர்களின் சாவுச் சடங்குகளுக்கும் கோயில் பூசைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

தமிழர் இல்லங்களில் உள்ள ‘நடுவீடு’ என்பது என்ன?...

தமிழர்களின் நடுகல் வழிபாட்டு முறைக்கும் நடுவீட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

இது போன்ற பல்லாண்டுக் காலக் கேள்விகள் அனைத்துக்குமான திடுக்கிடும் விடைகளையும் காணலாம் வாருங்கள்!...

திங்கள், செப்டம்பர் 18, 2017

மருத்துவ நுழைவுத் தேர்வால் (NEET) ஒழியுமா கல்விக் கொள்ளை?

Will NEET Eradicate the Management Quota?

“மருத்துவ நுழைவுத் தேர்வு முறை வந்து விட்டால் தரவரிசைப்படிதான் (rank wise) கல்வியிடங்கள் நிரப்பப்படும். மேலாண்மை ஒதுக்கீடு (management quota) எனும் பெயரில் கல்வியிடங்களை இலட்ச இலட்சமாய் விற்றுக் கொள்ளையடிக்க முடியாது. அதனால்தான் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றை நடத்துபவர்களான எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்வு முறையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்; மாணவர் நலன், அது, இது எனவெல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்” என்பது இந்த நுழைவுத்தேர்வு முறையை ஆதரிப்பவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

வியாழன், செப்டம்பர் 07, 2017

அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி

Anitha - The Brave Girl who fought for Educational Right of Tamils!
நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா!

எந்த அனிதா?...

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!...

தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!...

இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!...

Mark sheet of Anitha the Anti NEET Fighterஉண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மருத்துவர்! நடுவணரசு, மாநில அரசு, நீதித்துறையினர் எனப் பலரும் சேர்ந்து இந்தத் தற்கொலைக்கு அவரைத் தூண்டியிருக்கிறார்கள் என்பதே நாடறிந்த உண்மை! தற்கொலைக்குத் தூண்டுவது சட்டப்படி குற்றம் என்றால் அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய இவர்களுக்கு என்ன தண்டனை? நீலத் திமிங்கல விளையாட்டை உருவாக்கியவனைத் தற்கொலைக்குத் தூண்டுகிற குற்றத்துக்காகச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள். அதே போலத் தற்கொலையைத் தூண்டும் இந்தத் தேர்வை உருவாக்கியவர்களுக்கு என்ன தண்டனை?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள், “எல்லா மாநிலங்களும் மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் ஏன் வழக்காட வந்திருக்கிறது?” என்று.

ஐயா நீதிபதிகளே! இந்நாட்டில் முதன் முதலாக இந்தித் திணிப்பு கொண்டு வரப்பட்டபொழுது எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. தமிழ்நாடு மட்டும் எதிர்த்துப் போராடியது. அன்று முதல் சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேச எதிர்ப்புச் செயலாகத்தான் இது பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை என்ன? இந்தித் திணிப்புக்கு எதிராகக் கருநாடகம் கொடி உயர்த்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு இந்தியில் எழுதிய கடிதத்துக்கு ஒடியாவில் பதில் அனுப்பித் தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார் ஒடிசா நாடாளுமன்ற உறுப்பினர். இந்தி எதிர்ப்பால் தமிழ்நாடு பெற்றவையும் தாங்கள் இழந்தவையும் குறித்து சமூக ஊடகங்களில் புலம்புகிறார்கள் பிற மாநிலத்தவர்கள்.

நாங்கள் காட்டிய எதிர்ப்பு சரி என்பதைப் பிற மாநிலத்தினர் உணர எண்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! அதே போல, இந்த மருத்துவத் தகுதித் தேர்வு முறை தவறு என்பதையும் மற்ற மாநிலங்கள் உணரும் நாள் ஒன்று வரும். ஆனால், அதுவரை நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? முன்கூட்டியே தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் எங்களை, சிந்திக்காத மற்றவர்களோடு சேர்ந்து சிரமப்படச் சொல்வது என்ன நியாயம்?

இப்படிப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது அனிதாவின் உயிரிழப்பு!

ஆனால், இப்படி ஒரு கொடுமைக்குப் பின்னும் இங்கே மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாகச் சல்லியடிக்கும் கும்பல் திருந்தவில்லை. போதாததற்கு, இப்பொழுது அனிதாவையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது அந்த ஈனக் கூட்டம்.

“தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னும் உயரவில்லை. அவர்களை அதற்குத் தகுதிப்படுத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டுக் கல்வி முறையின் தரம் இல்லை. அதனால்தான் விலக்குக் கேட்கிறார்கள்” என்கிறது மேற்படி கும்பல். முட்டாள்களே! நாங்கள் திறமை இல்லாமல் விலக்குக் கேட்கவில்லை. அப்படி ஒரு தேர்வை எழுத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை, அதனால் வேண்டா என்கிறோம், புரிகிறதா?

எந்த விதமான தகுதித் தேர்வும் இன்றி, இன்னும் சொன்னால், தவறான தேர்ந்தெடுப்பு முறையென நீங்கள் காலம் காலமாகத் தூற்றும் இட ஒதுக்கீட்டு முறைப்படிதான் இத்தனை ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மருத்துப் படிப்புக்கான மாணவச் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனாலும், நல்வாழ்வு அளவுகோலில் (Heath parameters) தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறித்தான் இருக்கிறது.

Tamil Nadu's Rank in Economy, Power, Roads and Health

எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்கெடுத்தாலும் கைகாட்டுகிறீர்களே, அந்த குசராத்தையே ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) குசராத்தில் 1000-க்கு 38; தமிழ்நாட்டில் 1000-க்கு 21. பேறுகால இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) குசராத்தில் ஒரு இலட்சத்துக்கு 122; தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்துக்கு வெறும் 79. குசராத்தில் மனிதர்களின் சராசரி வாழ்நாள் 66.8; தமிழ்நாட்டில் 68.9. உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை குசராத்தில் 41.6%; அதுவே தமிழ்நாட்டில் 30.9%.

குசராத்தோடு மட்டுமில்லை கேரளத்தைத் தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தோடு ஒப்பிட்டாலும், ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தாலும் நல்வாழ்வுக் குறியீடுகளில் உயர்ந்துதான் விளங்குவது தமிழ்நாடுதான் (கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது). அட்டவணையைப் பாருங்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! - 2017 (காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் ஒரு மறுவெளியீடு)


நண்பர்களே! நேற்று இரவு பாரதியார் என் கனவில் வந்தார். "மகனே! நம் நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் முன்பே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!’ என்று பாடியவன் நான். இதோ, விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில் அதே பாடலை இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றபடி மாற்றி எழுத விரும்புகிறேன்" என்றார்.

"ஆகா! சொல்லுங்கள் தெய்வமே! நான் எழுதி வெளியிடுகிறேன்" என்றேன்.

அப்படி பாரதியார் சொல்லச் சொல்ல நான் எழுதியதுதான் கீழே நீங்கள் படிக்கப் போகும் ‘சுதந்திரப் பள்ளு-2017’. ஆக, இதன் காப்புரிமை பொறுப்பு எல்லாம் முழுக்க முழுக்க பாரதியாருக்கே! படித்துப் பாருங்கள்!

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)

The New Planet

தோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.

அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.

“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,

“சார்! இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா! இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,

“என்ன சார், சொல்றீங்க! அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா?” என்று கேட்டனர்.

வியாழன், ஜூன் 22, 2017

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?

Kamal haasan's various poses in Tamil Bigg Boss TV show
‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் நிறைந்து கிடக்கின்றன.

‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.

இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.

கமல் காட்டும் முத்திரை

Kamal hassan shows Illuminati sign for Bigg Boss TV show

சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.

செவ்வாய், ஜூன் 06, 2017

இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா?

Cow Politics
ரு காலத்தில் தமிழ்த் திரையுலகைச் சொல்வார்கள், “கதையை நம்பிப் படமெடுக்காமல் சதையை நம்பி எடுக்கிறார்கள்” என்று. இன்று இந்த வருணனை அப்படியே பா.ஜ.க-வுக்குப் பொருந்துகிறது. “அறிவை நம்பி அரசியல் நடத்தாமல் கறியை நம்பி அரசியல் செய்கிறார்கள்!”

பா.ஜ.க., அரசின் இந்த மாடு வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மாட்டினமும் உழவுத்தொழிலும் காக்கப்படும் என இந்து சமய அடிப்படைவாதிகள் பலர் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிக மிகப் பரிதாபகரமானது! காரணம், இந்தச் சட்டத் திருத்தம் மாடுகளை மட்டுமல்லாமல் பார்ப்பனர்களையும் சேர்த்து அழிப்பதற்கானதுதானே தவிர யாரையும் எதையும் காப்பாற்றுவதற்கானது இல்லை.

நினைத்துப் பாருங்கள்! இந்தத் தடை வந்தவுடன் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார்? வேளாண் பெருமக்கள்! என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

“கறவை நின்று போன பழைய மாட்டை விற்றால்தானே நாங்கள் புதிய மாடு வாங்க முடியும்? மாட்டையே விற்க விடாமல் இவ்வளவு கெடுபிடிகளோடு ஒரு சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் எப்படிப் புது மாடு வாங்குவது?” எனக் கேட்கிறார்கள்.

நாட்டில் மாடு வளர்ப்பவர்களே பெரும்பாலும் உழவர்கள்தாம். அவர்களையே புது மாடு வாங்க விடாமல் ஒரு சட்டம் தடுக்கிறது என்றால்,

புதன், மே 31, 2017

தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன? அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல்

Rajini's Political Speech
ஜினிகாந்த்! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியல் வானில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார், மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.

எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால்,

வியாழன், மே 18, 2017

தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!

Eelam Tamil Genocide 8th Memorial
தோ, எட்டாவது ஆண்டும் முடிந்து விட்டது! ஆனால், நடந்த அந்த மாபெரும் கொடுமைக்கான நீதியை நாம் இன்னும் எட்டியபாடில்லை.

தமிழர்களாகப் பிறந்தது தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத ஏதுமறியாப் பொதுமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாய்ச் செத்து மடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் முடிகின்றன. வியட்நாம் போரின்பொழுது, போரின் கொடுமையைக் காட்டும் விதமாக ஒரே ஒரு புகைப்படம் வெளிவந்ததற்கே கொதித்தெழுந்த உலக சமுதாயம், அதுபோல் எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களும் விழியங்களுமே (videos) வெளிவந்தும் இன்று வரை ஈழத் தமிழர்களின் நிலைமையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், என்ன?...

வெள்ளி, மே 12, 2017

மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு (நீட்) – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்

NEET Atrocities

ருத்துவப் பொதுநுழைவுத் தேர்வே கொடுமை என எல்லாரும் புலம்பிக் கொண்டிருக்க, அது நடத்தப்பட்டுள்ள விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது!

நீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு காரணமாகத் தேர்வு வளாக வாசலிலேயே சட்டையைக் கிழித்துக் கொடுத்து விட்டுக் கந்தல்கோலமாகப் போனதைப் பார்த்தோம். இதன் உச்சக்கட்டமாக, கேரளத்தில் மாணவி ஒருவர் சோதனையின் பெயரால் தன் உள்ளாடையைக் கழற்றும்படி பணிக்கப்பட்டிருப்பது நாட்டையே கொதிக்கச் செய்திருக்கிறது!

திங்கள், ஏப்ரல் 24, 2017

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!

4th Birthday of Agasivapputhamizh

கத்திற்கினிய எந்தமிழ்ச் சொந்தங்களே! நேச வணக்கம்!

இதோ, உங்கள் கருத்திற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ தன் நான்காவது பிறந்தநாளை உங்களுடன் கொண்டாட வந்திருக்கிறது. (தொடங்கப்பட்ட நாள்: 23.04.2013) இந்த இனிய தறுவாயில், இந்த நான்காண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்கள் முன் வைக்க விழைகிறேன். முதலில், தளத்தின் நான்காண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள்.
 

பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
24
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
மொத்தம்
93
1045
1,68,392+
2002
பிளாக்கர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட. 

சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

அகச் சிவப்புத் தமிழின் நேச(ர்) நாடுகள் 😜
 

இந்தியா
65592
அமெரிக்கா
50628
ரஷ்யா
7567
பிரான்ஸ்
5112
ஐக்கிய அரபு நாடுகள்
4237

உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவுகளில் முதல் ஐந்து:

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (9570 பார்வைகள்)

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தப் பதிவே முதலிடத்தில் வீற்றிருக்கிறது. அதுவும் முதல் மூன்று ஆண்டுகளில் 4888 பார்வைகளைப் பெற்றிருந்த இப்பதிவு, இந்த ஒரே ஆண்டில் மட்டும் 4682 பார்வைகளை மீண்டும் பெற்று அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. இனியும் இதை முறியடித்து முன் செல்லும் வகையில் ஒரு பதிவை என்னால் எழுத முடியுமா என மிரளுகிறேன்!

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (6652 பார்வைகள்)

கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த இந்த இடுகை, இந்த ஒரே ஆண்டில் கூடுதலாக 4514 பார்வைகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள்! ஓட்டுபவர்கள் யார்? ஏன்? - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள்! (5086 பார்வைகள்)

  கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தப் பதிவு தற்பொழுது மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

மாற்று அரசியல் தோற்று விட்டதா? - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல்! (3496 பார்வைகள்)

  கடந்த ஆண்டு மே மாதம் எழுதப்பட்ட பதிவு இது. ஒரே ஆண்டில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?! (2262 பார்வைகள்)

  கடந்த ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்த கட்டுரை. தற்பொழுது ஐந்தாம் இடத்தில்.

நினைவில் மணக்கும் நிகழ்வுகள் 


The incidents that are fragrancing in my mind

இந்த ஆண்டுப் பதிவுலக அனுபவத்தில் முதன்மையாகக் குறிப்பிட வேண்டியது, தளத்தின் பார்வைகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட எதிர்பாராத உயர்வு. முதல் அட்டவணையில் நீங்களே பார்த்திருப்பீர்கள், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பார்வைகள் எண்ணிக்கை மடங்குக் கணக்கில் உயர்ந்திருப்பதை. மொத்தத்தில் மட்டுமில்லை, தனிப்பட ஒவ்வொரு பதிவு வாரியாகப் பார்த்தாலுமே கூட முன் எப்பொழுதையும் விட இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் பார்வை எண்ணிக்கை பெருகியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் எனக் கணிக்கிறேன். வளரும் பதிவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்கிற நினைப்பில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக நான், மிஞ்சிப் போனால் மாதத்துக்கு இரண்டு பதிவுகள்தாம் எழுதுவேன். ஆனால், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், அதில் யாருக்கு வாக்களிப்பது நல்லதாக இருக்கும் என ஆராயும் வகையில் பதிவுத் தொடர் ஒன்றை எழுத முற்பட, மாதத்துக்கு மூன்று பதிவுகள் என மூன்று மாதங்களுக்கு எழுத வேண்டி வந்தது. சமகால நாட்டு நடப்புப் பற்றிய பதிவுகள், அதுவும் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய தளமான அரசியல் பற்றியவை என்பதால் பார்வை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததைக் காண முடிந்தது. “ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்றில்லாமல் அடிக்கடி பதிவு எழுதுவதுதான் நிறைய பார்வைகளைப் பெறுவதற்கான அடிப்படை வழிமுறை” என்கிற பதிவுலகின் மாறாக் கோட்பாடு என் வரையிலும் மீண்டும் ஒருமுறை உறுதியானது. “தனிப் பதிவுகளை விட, பதிவுத் தொடர் நிறைய பார்வைகளை ஈட்டும்” எனும் பதிவுலக முன்னோடிகளின் வாக்கும் பலித்தது. நானும் இலட்சாதிபதி ஆனேன். இது முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த ஆண்டில் புதிதாக நான் ரெட்டிட் சமூக ஊடகத்திலும் பதிவுகளைப் பகிரத் தொடங்கியது காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு முன் என் ஆருயிர்த் தோழர் அஷ்வின் சத்யா அவர்கள் ரெட்டிட் பற்றி உயர்வாகச் சொல்லியிருந்ததால் சோதித்துப் பார்ப்போமே என்றுதான் பகிரத் தொடங்கினேன். சற்றும் எதிர்பாராத வகையில் பார்வை எண்ணிக்கை எகிறியது!

ஆனால், குழப்பம் என்னவென்றால், பிளாகர் கணக்கின் டிராபிக் மூலங்கள் (Traffic Sources) பகுதியில் ரெட்டிட் ஒருமுறை கூடக் காட்டப்படவில்லை. பழைய பதிவுகளாக இருந்தால் கூட ரெட்டிட்டில் பகிர்ந்த சில மணி நேரங்களில் குறிப்பிட்ட பதிவின் பார்வை எண்ணிக்கை வெகுவாக உயர்கிறது. ஆனாலும், டிராபிக் மூலங்களில் ரெட்டிட்டின் பெயரைக் காணவில்லை. ஆக, ரெட்டிட் மூலமாகக் கிடைக்கும் பார்வைகள் அந்தந்த இணைப்புகளின் கணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன எனத் தோன்றுகிறது. ரெட்டிட் மட்டுமில்லை, இணையத்தில் கொஞ்சம் உலவியதில் வேறு சில தளங்கள் கூட அகச் சிவப்புத் தமிழின் பதிவுகளைப் (எனக்குத் தெரியாமலே) பகிர்வது தெரிய வந்தது.

‘இப்படி பல தளங்கள் நமக்குத் தெரியாமல் நம் வலைப்பூவின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்க, நாமோ டிராபிக் மூலங்கள் பட்டியலில் காட்டப்படும் தளங்கள் மட்டும்தான் முன்னேற்றத்துக்குக் காரணம் என நம்பி, ஆண்டுதோறும் புள்ளிவிவரம் வெளியிடுகிறேன் எனும் பெயரில் குறிப்பிட்ட சில தளங்களுக்கே மறுபடி மறுபடி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறோமே! இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!’ என்று தோன்றியது. அதனால்தான் இந்த முறை, மிகுதியான பார்வையாளர்களை அழைத்து வரும் முதல் பத்துத் தளங்களின் பட்டியலை நான் வெளியிடவில்லை. பட்டறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் முகநூல் குழுக்கள், கூகுள் குழுக்கள், கூகுள் தேடுபொறி, தமிழ்மணம், ரெட்டிட் ஆகியவை முறையே வெகுவான பார்வையாளர்களை அழைத்து வருவதாகச் சொல்லலாம்.

இதே போல், பார்வை எண்ணிக்கை தொடர்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு நிகழ்வையும் கவனிக்க முடிந்தது. தேர்தல் பதிவுத் தொடரில் எழுதப்பட்ட ‘விஜயகாந்த் எனும் படச்சுருள்!...’ கட்டுரை, வெளியான ஒன்றரை மாதத்திலேயே 4600-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, அதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக எழுதப்பட்ட எல்லாப் பதிவுகளையும் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தது. ஆனால், அதன் பின் இந்த ஆண்டில் தளம் 75,000 பார்வைகளுக்கு மேல் பெற்றும் இந்தப் பதிவு மட்டும் முன்னை விட மிக மிகக் குறைவான பார்வைகளையே பெற்று தன் இடத்திலிருந்து ஒரு படி இறங்கியிருக்கிறது.

அதே சமயம், தளம் தொடங்கிய முதல் ஆண்டில் எழுதப்பட்ட ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?...’ கட்டுரை, ஏறத்தாழ இத்தனை ஆண்டுகளில் பெற்ற மொத்தப் பார்வைகளின் அளவுக்கு இந்த ஒரே ஆண்டில் மீண்டும் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

ஆக, அந்தந்த நேரத்து சமூகப் பரபரப்புக் காரணமாக வரவேற்பு பெறும் பதிவுகள் அந்தப் பரபரப்பு போன பின் யாராலும் விரும்பப்படுவதில்லை; அதே நேரம், மிகவும் சிந்தித்து எழுதப்படுகிற, எக்காலத்துக்கும் பொருத்தமான பதிவுகள் என்றென்றும் நம் தளத்துக்குத் தொடர்ச்சியான வருகைகளைப் பெற்றுத் தருகின்றன என்பதை இதிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘தரமே எல்லாவற்றுக்கும் காரணம்’ (Content is King) எனும் கோட்பாடு எவ்வளவு உண்மையானது என்பதை அனுபவரீதியாக உணர்கிறேன்.


அடுத்ததாக, தளத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டுகளை விடப் பின்பற்றுவோர் ஒரு மடங்கு கூடுதலாக உயர்ந்தது. ஆனால், முன் எப்பொழுதையும் விட மிகக் குறைவான பதிவுகளையே எழுதியும் இந்த ஆண்டு மறுபடியும் ஒரு மடங்கு கூடுதலாக ‘அகத்தினர்’ எண்ணிக்கை முன்னேறியுள்ளது. குறிப்பாக, டுவிட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ‘ஆயிரத்தைத் தாண்டி விட்டது’ என்பதைப் பெருமகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Agasivapputhamizh twitter followers count has been crossed 1K


ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!’ பதிவுக்கு நண்பர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் அளித்த கருத்துரையைத்தான் இவ்வாண்டு பெற்ற பாராட்டுகளிலேயே மிகவும் பெரியதாக உணர்கிறேன். “இனி நடைபெறும் சல்லிக்கட்டுப் போட்டிகள் சாதிப் பாகுபாடற்ற புதிய சல்லிக்கட்டுகளாக இருத்தல் வேண்டும்” என நான் வலியுறுத்தியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் பாராட்டியிருந்தது தமிழ்ப் பற்றாளன் என்பதையும் தாண்டி சரியான மனிதன் நான் என்பதற்கான ஏற்பிசைவாக அமைந்ததை மகிழ்வோடு நினைவு கூர்கிறேன்!

இதே பதிவின், இதே கருத்தைப் புகழ் பெற்ற கவிஞர் ‘புதிய மாதவி’ சங்கரன் அவர்களும் பாராட்டியிருந்தது எதிர்பாராத பூரிப்பை அளித்தது!

இதே போல், இதற்கு முன்பு ‘My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!’ இடுகையில் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா, ‘மனப் புழுக்கம் தீர்த்த பதிவு’ என ஆழமிகு சொற்களால் பாராட்டியிருந்ததும் மறக்க முடியாத ஒன்று.

இவ்வாண்டில் எழுதிய ‘காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!’ கட்டுரையை முதலில் வெளியிட்ட ‘கீற்று’ இதழ் அதைத் தன் முகப்புப் பக்கத்திலேயே தொடர்ந்து மக்கள் பார்வைக்குத் வைத்தது இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.


The Agasivapputhamizh article which is showcased in 'Keetru' e-zine's home page

மகிழ்ச்சிக்குரிய அடுத்த செய்தி, வெகு காலமாக நினைத்துக் கொண்டிருந்தது போலத் தளத்தின் அடைப்பலகையை (template) இந்தாண்டு மாற்றி விட்டேன். முன்பு போல் இல்லாமல் கணினி, கைக்கணினி (tablet), கைப்பேசி என எந்தக் கருவியிலிருந்து பார்த்தாலும் அந்தந்தக் கருவிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இந்தப் புதிய வடிவம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்து நான் குறிப்பிட விரும்பும் நிகழ்வு, சக பதிவருடன் இணைந்து ஒரு பதிவை எழுதிய புதிய அனுபவம்.

கடந்த அக்டோபரில், பல ஆண்டுகளுக்குப் பின் காவிரிப் பிரச்சினை மீண்டும் பூதகரமாக வெடித்தது. கருநாடகத்தில் தமிழர்களும் தமிழர் உடைமைகளும் தாக்கப்பட்டனர். அவ்வேளையில், காவிரிப் பிரச்சினையில் தமிழர் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். ஆனால், எனக்கோ ஆங்கிலம் தெரியாது; கன்னடர்களுக்குத் தமிழ் தெரியாது.

அந்த நேரத்தில்தான் என் உதவிக்கு வந்தார் ‘தில்லையகத்து கிரானிக்கிள்சு’ கீதா அவர்கள்! தமிழ் மக்கள் சார்பாகக் கன்னட மக்களுக்கு நான் எழுதிய அந்த மடலை மிக அழகாக, மூலக் கட்டுரையின் கனிவு – சீற்றம் என எதுவுமே துளியும் குறையாமல் நறுக்குத் தெறிக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தார். அதுதான் ‘My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!’ என்கிற பதிவு.

மூலக் கட்டுரையில் நான் எந்தெந்த வரிகளை, எந்தெந்தக் கருத்துக்களை எங்கே எப்படி எழுதியிருந்தேனோ, அவை அனைத்தையும் அப்படிக்கு அப்படியே வரவழைத்து, அதே நேரம் ஆங்கில மொழியின் நடையும் அழகும் மிளிர கீதா அவர்கள் மொழிபெயர்த்த விதம் பெரிதும் வியப்புக்குரியது! இவ்வளவு ஆங்கிலப் புலமையை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பதிவு எழுதாமல் தமிழில் எழுதும் அவரது தாய்மொழிப் பற்று நிகரற்றது!

மூன்றாம் பிறந்தநாள் பதிவில், நான் பெரிதும் மதிக்கும் ரசிக்கும் ஜோசப் விஜு ஐயா பதிவு எழுதுவதை நிறுத்தியது பற்றி மிகவும் வேதனையோடு குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆண்டு அந்த வேதனையைப் போக்கும் விதமாய் அவர் மீண்டும் தன் விசைப்பலகையைத் திறந்தது குறித்து எனக்கு அலைபுரளும் மகிழ்ச்சி!

அதே பிறந்தநாள் பதிவில், இடையில் பதிவு எழுதுவதை நிறுத்தியிருந்த ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் மீண்டும் எழுதத் தொடங்கியதை மகிழ்வுடன் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதற்குப் பின் அவர் முற்றிலுமாகவே எழுதுவதை நிறுத்தி விட்டது எனக்கு அளவிலாத ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது; அளித்துக் கொண்டிருக்கிறது!

பதிவுலகில் நான் பார்த்த மிகச் சிறந்த படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் அவர்களில் மைதிலி கண்டிப்பாக முதல் வரிசையில்தாம் இருப்பார். என்றாவது ஒருநாள் மீண்டும் அவர் தன் எழுத்து வீச்சுக்களைத் தொடங்குவார் என நான் திடமாக நம்புகிறேன்!

அடுத்தபடியாக நான் குறிப்பிட விரும்புவது நாம் யாரும் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒரு கசப்பான நிகழ்வு!

பதிவுலகிலுள்ள அனைவருக்கும் எனக்கும் மிக இனிய நண்பர் கில்லர்ஜி அவர்கள் தம் தங்கையாரை இந்த ஆண்டு இழந்தது. தாமதமாகத்தான் இந்தத் துயரச் செய்தி எனக்குத் தெரிய வந்தது. அதற்குள் நண்பர், கொஞ்சம் மனம் தேறிப் பதிவுகள் எழுதும் அளவு வந்து விட்டார். அப்படிப்பட்ட நிலையில், ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று மீண்டும் அவர் மனப்புண்ணைக் கிளற நான் விரும்பாமையால் நான் அவரைத் தொடர்பு கொள்ளவேயில்லை. ஏற்கெனவே ஆருயிர் மனைவியைப் பறிகொடுத்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் அந்த அன்புள்ளம், இப்பொழுது தங்கையையும் இழந்து எவ்வளவு துடிக்கும் என்பதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அவருக்கு இந்தக் காயமாவது ஆறட்டும் எனக் கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல!

இறுதியாக, சக பதிவர்களுடன் அண்மைக்காலமாக நட்பு கொஞ்சம் வளர்ந்திருப்பதைக் குறிப்பிட விழைகிறேன்.

‘தமிழ் வலைப்பதிவகம்’, ‘கணினித் தமிழ்ச் சங்கம்’ ஆகிய வாட்சப் குழுக்கள் மூலம் பதிவுலக அன்பர்களைத் தொடர்பு கொள்வது இப்பொழுது மிகவும் எளிதாகியுள்ளது. இடுகைகளைப் பொத்தாம் பொதுவாக இல்லாமல், குறிப்பாகப் பதிவர்களின் பார்வைக்கு எனத் தனிப்படக் கொண்டு செல்வது இதனால் ஏதுவாகி உள்ளது. அதிலும், ‘கணினித் தமிழ்ச் சங்கம்’ குழு மூலம் எழுத்தாளர் அண்டனூர் சுரா, நட்புமிகு ‘தேன்மதுரத் தமிழ்’ கிரேசு, பதிவுலக ஆசிரியர் முத்துநிலவன் ஐயா போன்றோரோடு அளவளாவிய நிகழ்வுகள் நினைவிலாடுகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் முத்துநிலவன் ஐயாவோடு ஏற்பட்டுள்ள நெருக்கம் சுவையானது.

நன்றியோ நன்றி!

இணையத்தில் எத்தனையோ தமிழ் வலைப்பூக்கள் பூத்துக் குலுங்குகையில், இந்தச் சிறு மலரையும் தேடி வந்து தேன் குடிக்கிற, மகரந்தம் பரப்புகிற நேசத் தமிழ்ப் பட்டாம்பூச்சிகள்...

பல வழிகளிலும் இந்தப் பூவைத் தொடர்ந்து தாங்கும் காம்புகளான புதிய, பழைய அகத்தினர்கள்...

அகச் சிவப்புத் தமிழைத் தங்கள் வலைப்பூவில் பட்டியலிட்டு தங்கள் நேயர்களுக்கும் என் எழுத்தை விருந்தாக்கும் என் வலையுலகத் தோழர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளைத் தெரிவித்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற ‘கீற்று’ இதழ் ஆசிரியர்கள் நந்தன், இரமேஷ், ‘அகரமுதல’ இதழ் ஆசிரியர் திருவள்ளுவர் இலக்குவனார் ஐயா...

வெட்ட வெட்டத் துளிர்க்கும் வாழை எனத் தெரியாமல் என்னை மீண்டும் மீண்டும் தாக்கும் இனிய எதிரிகள்...

ஒரு மூலையில் இருக்கும் இந்த வலைப்பூவையும் இணையச்சரத்தில் தொடுத்தெடுத்து மக்கள் பார்வை கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் ஏற்ற இறக்கம் அறிந்து மெருகேற்ற உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வளர்க்க நமக்கு இந்த அரிய சேவையைத் தொடர்ந்து இலவசமாக வழங்கி வரும் பிளாகர் என அனைவருக்கும்...


Thank you so much!

காணிக்கை!


மாய உலகின் பறக்கும் கம்பளங்களில்

மிதந்து கொண்டிருந்தவன் கையில்

திருக்குறளைக் கொடுத்து

சிறுவர் இலக்கியம் சுவைக்கும் வயதில்

அறிவியல் நூல்களை அளித்து

படிக்கும் பழக்கம்

முளைக்கும் பருவத்திலேயே

சரியான திசையை

எனக்குக் காட்டிய

என் மாமா

கு.மணிவண்ணன் அவர்களுக்கு

இந்த ஆண்டின் வலையுலக வெற்றியைக்

காணிக்கை ஆக்குகிறேன்! 

My Uncle Mr.K.Manivannan

படங்கள்: நன்றி fotographic1980 at freedigitalphotos.net, பிக்சபே, கீற்று, காம்னா.வெப்துனியா.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூவின் வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் பன்மடங்காகப் பெருக உதவலாமே!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்