.

சனி, செப்டம்பர் 19, 2015

இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!



Tamils take over the internet!

கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1)
 
ணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம்.

ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்.

கணித்தமிழ் முன்னோடிகளான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, மா.ஆண்டோ பீட்டர் போன்றோர் முதல் இன்றைய வலைப்பதிவர்கள் வரை அனைவருமே தன்னார்வமாக, எந்த விதப் பொருளாதார நோக்கமும் இன்றியே இவை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்படி மக்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு துறை எத்தனை காலத்துக்கு நீடிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆங்கிலம், பிரெஞ்சு என மற்ற மொழிகள் கணினித்துறையிலும், இணையத்துறையிலும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு, இப்படியெல்லாம் நம் மொழியும் மிளிர வேண்டும் எனும் அவாவினால் இன்று நாம் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடலாம். ஆனால், அப்படி மற்ற மொழிகளுக்கு இணையாக எல்லா வகைகளிலும் தமிழும் கணித்துறையில் வளர்ந்த பிறகு, தொடர்ந்து கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கெனப் பொருளாதார அடிப்படை ஒன்று இருத்தல் இன்றியமையாதது.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் என எழுத்துத்துறை சார்ந்த பயனர்களுக்கு மட்டுமேயானதாகக் கணித்தமிழ்ப் பயன்பாடு சுருங்கி விடாமல், தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகப் பெருவளர்ச்சி பெற வேண்டுமானால் இதழ்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றைப் போல் இணையமும் முழுமையான ஓர் ஊடகமாக உருவெடுத்தாக வேண்டும்! சுருக்கமாகச் சொன்னால், கணித்தமிழின் எதிர்காலம் இணையத்தமிழின் வளர்ச்சியைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இத்தனை ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கணித்தமிழ் தொடர்ந்து வருங்காலத் தலைமுறைகளாலும் பயன்படுத்தப்பட வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இணையத்தை நாம் முழுமையான ஊடகமாகக் கட்டியெழுப்ப வேண்டும்! இயல், இசை, நாடகம் என மற்ற தமிழ்த் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவாவது அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பது போல் நான்காம் தமிழ் எனப் போற்றப்படும் கணித்தமிழ்த்துறையிலும் வருவாய் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்! எதையுமே பொருளியல் (materialistic) கண்ணோட்டத்துடனே அணுகப் பழகி விட்ட இன்றைய உலகில் இதன் முதன்மைத்தனம் (importance) எத்தகையது என்பது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை.

இணையத்தமிழ் முழுமையான ஊடகமாக வளர்ச்சியுற வேண்டுமானால், முதலில் அதற்கான வணிகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊடக வணிகத்தின் வருமான வாயிலே விளம்பரங்கள்தாம். ஆனால், இணையத்தில் தமிழுக்கான விளம்பர வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்ற உடனடித் தீர்வு, நிலையான தீர்வு என இரண்டு தீர்வுகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் மேலான பார்வைக்கு இங்கே முன்வைக்கிறேன்!

உடனடித் தீர்வு!

பெரிதாக ஒன்றுமில்லை; கூகுள் ஆட்சென்சு பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு அந்நிறுவனத்திடம் விண்ணப்பிப்பதுதான் இதற்கான உடனடித் தீர்வாக நான் முன்மொழிய விரும்புவது.

இப்படிச் சொன்னதும் சிலர் முகம் சுளிக்கலாம். ‘மற்ற மொழிகளையெல்லாம் கூகுள் தானாக முன்வந்து ஆட்சென்சு பட்டியலில் சேர்த்திருக்கும்பொழுது, தமிழர்களாகிய நாம் மட்டும் அதைக் கேட்டுப் பெறுவது நன்றாக இருக்குமா?’ என்று அவர்கள் நினைக்கலாம். அதுவும் தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் இப்பொழுது கூகுளின் தலைமைச் செயலாளராக (CEO) வீற்றிருக்கும் நேரத்தில் இப்படி நாம் இதை விண்ணப்பித்துப் பெற்றால், தமிழர் ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழர்கள் வருமானம் பார்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று மற்ற மொழியினர் நினைப்பார்கள் என்றும் சிலர் கருதலாம்.

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இல்லாவிட்டால், நாம் இப்படிக் கேட்டுப் பெறுவது இழிவானது. ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தும், மாநில மொழியாக இருக்கிற ஒரே காரணத்தால் நம் மொழிக்குரிய இடம் மறுக்கப்படுமானால் அதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தவறு?

அண்மையில், இந்தி கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே! இந்தி என்ன, தமிழை விட இணையத்தில் முந்தி நிற்கிறதா?

உலகத்திலேயே ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான இணையத்தளங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ்!2 இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக இணையத்தில் அடியெடுத்து வைத்த மொழியும் தமிழே!3 அப்படிப்பட்ட தமிழை விட்டுவிட்டு கூகுள் இந்திக்கு ஆட்சென்சு பட்டியலில் இடம் கொடுக்க ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்கிற தவறான பரப்புரையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், தகுதியுள்ள தமிழைப் புறக்கணித்து, ஏதோ சில தவறான காரணங்களின் அடிப்படையில் இந்திக்கு கூகுள் முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், நமக்குரிய இடத்தை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை தோழர்களே!

வடநாட்டு அரசியலாளர்கள் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணாக, மாநில மொழி4 ஒன்றை இந்நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்துவதுதான் கூகுள் மட்டுமன்றி எல்லா இணையச் சேவை நிறுவனங்களிலும் அண்மைக்காலமாக இந்தி முதன்மை பெற்று வரக் காரணம். அப்படி முறைகேடான வழியில் அவர்கள் தம் மொழியை வளர்த்துச் செல்லும் நிலையில், தகுதியிருந்தும் நாம் வாளாவிருந்தால் இளித்தவாயர்களாகத்தான் வரலாற்றில் இடம் பெறுவோம்.

எனவே, உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!

தமிழ் வலைப்பதிவர்களில் மிகப் பெரும்பாலோர் கூகுளுடைய ‘பிளாகர்’ சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள்5. கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் தமிழர்களிடையில் சங்கம், மாநாடு போன்றவை இல்லாத நிலையில், கூகுளின் தமிழ்ப் பயனர்களில் பெரும்பாலானோர் ஒன்று கூடும் நிகழ்வாகத் திகழ்வது வலைப்பதிவர் திருவிழாக்கள்தாம். ஆக, புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாதான் இதற்கான பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை!

நிலையான தீர்வு!

கூகுள் ஆட்சென்சு போலவே தமிழுக்கென விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாக இருக்கும்.

இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவுடைய தமிழ்நாட்டிடம், எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட உலகளாவிய தமிழினத்திடம் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள் எண்ணற்ற அளவில் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இணையத்தில் விளம்பரப்படுத்த நமக்கென இணைய விளம்பரச் சேவை நிறுவனம் ஒன்று கட்டாயம் தேவை! ஆனால், இந்திய இணைய விளம்பர நிறுவனங்கள் எல்லாமே மகாராட்டிர, ஆந்திர, கருநாடக மாநிலத்தவருடையவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழில்தான் மிகுதியான இணையத்தளங்கள் இருக்கின்றன எனில், தமிழ் இணையத்தளங்களுக்கென விளம்பர நிறுவனம் தொடங்குவது எவ்வளவு பெரிய வருவாய் வாய்ப்பு என்பதைத் தமிழ் இளைஞர்களும், தமிழ்நாட்டு நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

கணித்தமிழ் முயற்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் பேராதரவு அளித்து வரும் தமிழ்நாடு அரசு இந்த வகைத் தொழில் முனைவுகளையும் முன்னெடுக்க ஊக்குவித்தல் வேண்டும்! இப்படியொரு கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் இணைந்து நடாத்தும் ஒரு போட்டியில் தெரிவிப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன்!

ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் முழுமையான இணைய ஊடகத்தை உருவாக்குவோம்!
கணித்தமிழ் முயற்சிகளை நிலையாக்குவோம்!
தமிழை என்றும் அழியா மொழியாக்குவோம்!


சான்றுகள்:

2. அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் திசம்பர் 2004-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த 'நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி' எனும் கட்டுரை.

3. தமிழின் சிறப்புகள் – தினத்தந்தி.

4. இந்தியாவின் அலுவல் மொழிகள் – தமிழ் விக்கிப்பீடியா.

5. தமிழ்ப்புள்ளி வலைப்பூக்கள் திரட்டி – நீச்சல்காரன். 

படம்: நன்றி கம்ப்யூட்டர் பிரம் வில்லேஜ்.

க்கட்டுரை என் சொந்தப் படைப்பே எனவும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்டது” எனவும் உறுதிமொழி அளிக்கிறேன். மேலும், இது “இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதிமொழிகிறேன்.

❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

47 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா!! தங்கள் கூறிய இரு தீர்வுகளும் தமிழுக்கும் தமிழனுக்கும் மிக மிக அவசியமானது போட்டியில் வெற்றி பெற நன்றிகளும் வாழ்த்துகளும்! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே! நீங்களும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற என் அன்பான நல்வாழ்த்துக்கள்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  2. உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!-----நல்ல யோசனை...வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் வழிமொழிதலுக்கும் மிக்க நன்றி நண்பரே! கோரிக்கையை வலைப்பதிவர் சங்கம் கண்டிப்பாய் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறேன்!

      நீக்கு
  3. ஆஹா!!! ஐடியா சூப்பரா இருக்கே சகா. நானும், கஸ்தூரியும் ஆங்கிலத்துக்கு இப்படிadd sense இருக்கு என்று விவாத்திருக்கிறோம். ஆனா தமிழுக்கே அப்படி வந்தா எப்படி இருக்கும்!!! அப்படி என்ன இருக்கு அந்த blog ல, facebook மாதிரி லைக் உண்டா??? பரபரப்பு உண்டா என ஏளனமாய் நினைக்கும் சிலரிடம் இருந்து நம்மைப் போன்றோர் தப்பிக்கக்கூடும்.
    நானும் பலதடவை என் நண்பர்களுடன் விவாத்திருக்கிறேன். வலைப்பூ ஒரு தேர்ந்த இலக்கிய பயிற்சிக்கூடம் என. அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அதெல்லாம் சரி, facebook பக்கத்திலும் எழுதுங்கப்பா, அப்போதான் பலருக்கும் உங்க எழுத்து சென்றடையும் என அறிவுரை கூறுவார்கள்:)
    தரவுகள் சேகரித்த விதம் நேர்த்தி!! சொற்கள் பட்டை கத்தரித்தார் போல அத்தனை கச்சிதம்!!
    இரண்டுமே அட்டகாசமான தீர்வு சகா! உங்கள் கனவு நனவாகட்டும்! வெற்றிபெற பதிவர் விழாக்குழு சார்பாக என் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகா!

      வலையுலகை மதிக்காதவர்களிடமிருந்து நாம் தப்பிப்பதா? அட, என்ன சகா! ஆட்சென்சு மட்டும் வரட்டுமே; அப்புறம் பாருங்கள், அப்படிப்பட்டவர்களில் எத்தனை பேர் முகநூலை விட்டுவிட்டு இங்கு வருகிறார்கள் என.

      உங்கள் குறிப்பார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் மிகுந்த நன்றி! நான் போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டியதே நீங்கள்தாம். எனவே, பரிசு கிடைத்தால் அந்தப் பெருமையில் உங்களுக்கும் பங்குண்டு!

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழானவன் அவர்களே! தங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  5. ஆஹா நாங்கள் எதிர்பார்த்தோம். தாங்கள் எழுதுவீர்கள் என்று போட்டிக்கு. நிச்சயமாக வெல்வீர்கள்! வாழ்த்துகள்! அருமையான கட்டுரை....நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் எதிர்பார்த்தீர்களா! மைதிலி அவர்களும் இப்படித்தான் சொன்னார். அதனால்தான், இதில் எழுதலாமா வேண்டாவா என்று இருவேறு மனநிலையில் இருந்த நான் எழுதி விடுவது என்று தீர்மானித்தேன். இப்பொழுது நீங்கள் இருவரும் கூட அப்படி எதிர்பார்த்ததாகச் சொல்வது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. யார், என்ன எனவே தெரியாமல், முகம் கூடப் பார்த்திராத ஒருவரிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்கும் உங்கள் உள்ளங்கள் உயர்வானவை! உங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!

      நீக்கு
  6. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ் தான் கோலோச்சுகின்றது பதிவுலகில். இன்னும் நல்ல ஆரோக்கியமான எழுத்தாளர்கள் வரவேண்டும் என்பதே அவா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா, அம்மணி! ஆங்கிலத்தில் இருப்பது போலத் தமிழிலும் இதற்கென நாம் பொருளாதார அடித்தளத்தை உருவாக்கினால் கண்டிப்பாக உங்களுடைய, நம்முடைய அந்த அவா நிறைவேறும்! அந்த நாள் தொலைவில் இல்லை எனவே நம்புகிறேன்!

      நீக்கு
  7. சகா! உங்க பதிவோட லிங்க் கை bloggersmeet2015@gmail.com என்கிற ஐ.டி.க்கு மெயில் ல அனுப்பிவிட்டீர்களா? உங்க படைப்பு இன்னும் பதிவர் விழா பக்கத்தில் அப்டேட் பண்ணப்படவில்லையே!! அதனால் தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்றிரவுதான் அனுப்பினேன் சகா! 'பதிவர் விழா' பக்கத்தில் வெளியாகி விட்டது! ஆனால், தலைப்பு தரப்படவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். போட்டிக்கான நெறிமுறைகளில் 'இணைப்பை மட்டுமே மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்' என்று அவ்வளவு அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்ததால்தான் இணைப்பை மட்டும் அனுப்பினேன். இப்பொழுது என்னவென்றால் இப்படிச் சொல்கிறார்கள். சரி, எல்லா விவரங்களோடும் இன்னொரு முறை அனுப்பி வைக்கிறேன். அக்கறையுடன் கேட்டதற்கு நன்றி சகா!

      நீக்கு
  8. இந்தியில் ஆட்சென்ஸ் வந்ததற்கான காரணமாக அவர் குறிப்பிடுவது பயனர்களின் எண்ணிக்கை. இதர பரப்புரை காரணமல்ல என்றே எண்ணுகிறேன்.http://adsense.blogspot.in/2014/12/adsense-now-speaks-hindi.html
    த.இ.க. மூலம் கூகுளுக்கு அரசுமுறை கோரிக்கை வைக்கவுள்ளார்கள். அதற்குமுன் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கையையும் வாசகர்களையும் அதிகரிக்க அனைத்து செயல்திட்டங்களும் தொடங்கவுள்ளன.

    ஆக்கப்பூர்வக் கருத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தாங்கள் அளித்துள்ள சுட்டியில் உள்ள அறிவிப்பைப் படித்துப் பார்த்தேன். நான் இந்தக் கட்டுரையை எழுதும் முன்பு, இணையத்தில் தமிழ், இந்தி ஆகியவற்றின் பயன்பாடு பற்றி எவ்வளவோ தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. பிறகுதான், ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழ்தான் இணையத்தில் முந்தி நிற்கிறது என்பதை மட்டும் அடிப்படைக் காரணமாக வைத்து மேற்படி கட்டுரையை எழுதி முடித்தேன். எனவே, எனக்குக் கிடைக்காத அந்த விதயம் தொடர்பான ஒரு முதன்மையான தகவலை எனக்கு அனுப்பி வைத்ததற்காக என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்!

      ஆனால் ஐயா, அந்த அறிவிப்பில் தாங்கள் பார்த்தீர்களானால், இந்தி இணையத்தில் நிறைய பேரால் பயன்படுத்தப்படுகிறது என எந்த இடத்திலும் - ஆம், அப்படி எந்த இடத்திலுமே - குறிப்பிடப்படவில்லை.

      உலகம் முழுக்க 50 கோடி பேர் இந்தி பேசுகிறார்கள், இணையத்தில் "தரமான ஆக்கங்கள் வளமாக" அம்மொழியில் கிடைக்கப் பெறுகின்றன என்கிற காரணங்களால், மேலும் தரமான ஆக்கங்களை அம்மொழியில் ஊக்குவிக்கும் வகையிலும், வெகு வேகமாக வளர்ந்து வரும் இணையப் பயனாளர்களோடு தொடர்பு கொள்ள விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையிலும் அம்மொழிக்கு ஆட்சென்சு வழங்கப்படுவதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வரிகள் பின்வருமாறு:

      "With over 500 million speakers around the world, a wealth of quality Hindi content is available on the web. We’re excited to launch AdSense Hindi language support today to help fuel even more quality content creation on the web, and to help advertisers connect with a rapidly growing online audience."

      இதையேதான் நான் கட்டுரையிலும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். "ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்" என்று நான் பதிவிலேயே சொல்லியுள்ளேன். இந்திக்கான ஆட்சென்சு அறிவிப்பிலும் கூகுளே இணைய இந்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைக் காட்டாமல் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையைக் காட்டியிருப்பது என்னுடைய இந்தக் கூற்றுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது என்பதைத் தாங்கள் கவனிக்க வேண்டுகிறேன்!

      அடுத்ததாக, அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தரம் பற்றிய குறிப்பு. தமிழிலும் உச்சத்தரம் வாய்ந்த படைப்புகள் இணைய உலகில் கொட்டிக் கிடக்கின்றன என்பதை நான் கூறித் தாங்கள் அறிய வேண்டியதில்லை. ஆனானப்பட்ட சுஜாதா முதல் சமகாலப் பெரிய எழுத்தாளரான எஸ்.ரா வரை ஏறத்தாழ எல்லாரும் இணையத்தில் பங்களிக்கிறார்கள். நூல்களில் கூட இதுவரை ஆவணமாகாத எத்தனையோ அரிய கலை - தகவல் - இலக்கியக் கருவூலங்கள் இன்று இணையத்தில் நம் விரல் நுனியில் இருக்கின்றன. மேலும், தரம் என்பது அந்தந்த மொழியின் வளர்ச்சி, சரக்கு ஆகியவற்றைப் பொறுத்தும் மாறுபடும். அப்படிப் பார்த்தாலும் தமிழே இந்தியை விட முந்தி நிற்கும் என்பது என் நம்பிக்கை.

      மூன்றாவதாக, தாங்கள் குறிப்பிட்டுள்ள, கூகுளின் அறிவிப்பிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'பயனர் எண்ணிக்கை' விதயம். மேற்படி, அறிவிப்பிலேயே 'a rapidly growing online audience' எனும் வரி ஓர் இணையப் பக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ளது (linked). அந்தச் சுட்டியை அழுத்திப் பார்த்தால், திடுக்கிடச் செய்யும் உண்மை ஒன்று வெளிவருகிறது. இந்தியாவின் மொத்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அங்கே காட்டப்பட்டுள்ளது.

      இதில், திடுக்கிட என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? ஐயா! வளர்ந்து வரும் இந்திய இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை என்பது தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், காஷ்மீரி, பஞ்சாபி, ஒரியா, கன்னடம் என 22 மொழிப் பயனர்களையும் உள்ளடக்கியது இல்லையா? அவ்வளவையும் சேர்த்து இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையாக ஒரே மொத்தமாகக் காட்டி, "அதனால், வளர்ந்து வரும் இந்திய இணையப் பயனாளர்களோடு தொடர்பு கொள்ள விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையில் இந்திக்கு ஆட்சென்சு கொடுக்கிறோம்" என்று கூறியிருப்பது எப்பேர்ப்பட்ட அட்டூழியம்!!! சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

      நீக்கு
    2. தாங்களும் தங்கள் கருத்தில் பயனர்களின் எண்ணிக்கை காரணமாகத்தான் ஆட்சென்சு கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேற்படி, கூகுள் ஆட்சென்சு அறிவிப்பிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பயனர் எண்ணிக்கை என்று அங்கே காட்டப்பட்டிருப்பதோ இந்திய இணையப் பயனாளர்கள் அனைவரின் எண்ணிக்கையை!! இந்திய இணையப் பயனாளர்கள் அனைவருமே இந்தியிலா இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை மொழிகளில் இணையத்தளங்கள் இங்கு இருக்கின்றன! கூகுள் மட்டுமே பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் தன் சேவைகளை இங்கு வழங்கி வருகிறது. அப்படியிருக்க, ஏதோ இந்தியப் பயனர்கள் அனைவருமே இணையத்தில் இந்தியில்தான் இணையத்தளங்களை வைத்திருக்கிறார்கள் / படிக்கிறார்கள் என்பது போல இந்தியப் பயனர்கள் அனைவரின் எண்ணிக்கையையும் இந்திக்கு மட்டுமேயான எண்ணிக்கை போலக் காட்டி அந்த மொழிக்கு ஆட்சென்சு வழங்குவது எவ்வளவு பெரிய துரோகம்!!!

      ஆக, தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்தும் சரி, அதற்குச் சான்றாகத் தாங்கள் எடுத்துக் காட்டியுள்ள இணைப்பும் சரி, மேற்படி கட்டுரையில் நான் தெரிவித்திருக்கும் கருத்துக்களை மேலும் வலுச் சேர்ப்பவையாகத்தான் அமைந்திருக்கின்றன என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறி இப்படியோர் உதவிக்கும், தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கூறுகிறேன்!

      கணித்தமிழுக்காக அரிய பல சேவைகளைச் செய்து வரும் தாங்கள் என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்!

      நீக்கு
  9. அய்யா வணக்கம். கட்டுரைக்கு ஒரு தலைப்பு வைக்கலாமே?
    பார்க்க -http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுரைக்குத் தலைப்பு இல்லையா? முதலில், தலைப்பு இல்லாமல் பிளாகரில் பதிவு வெளியிட இயலுமா?

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! பலித்தால் மகிழ்வேன்! நீங்களும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற என் அன்பான நல்வாழ்த்துக்கள்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  11. முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன் ஐயா
    இனி தொடர்வேன்
    வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தின் தமிழ் வலைப்பூக்கள் பலவற்றிலும் நான் தங்களைப் பார்த்திருக்கிறேன் ஐயா! மூத்தவரும், வலையுலகில் எனக்கு முன்னவருமாகிய தாங்கள் என் வலைப்பூவுக்கு வரத் தொடங்கியிருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  12. "உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!" என்ற வேண்டுதலை நானும் வரவேற்கிறேன்.
    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் வலையுலகில் மிகவும் புகழ் பெற்றவரான தங்கள் வருகைக்கு என் அன்பார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா! என் கருத்தை ஏற்றுக் கொண்டமைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! விரைவில் உங்கள் மேற்படி பதிவைப் படிக்க வருகிறேன்! அழைத்தமைக்கு நன்றி!

      நீக்கு
  13. வணக்கம் நண்பரே சிறப்பாக அலசி இருக்கின்றீர்கள் தங்களின் கோரிக்கை உடனடியாக முன் வைக்க வேண்டியதே போட்டியில் வெற்றி பெற எமது மனப்பூர்வமான வாழ்த்துகள்.
    தமிழ் மணம் - 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே! பரிசு தருகிறார்களோ இல்லையோ, வலைப்பதிவர் திருவிழாவினர் என் கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்தினால் அதுவே எனக்குப் போதும்! மிக்க நன்றி! வணக்கம்!

      நீக்கு
  14. உங்கள் கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன் !
    கூகுள் சரியான மதிப்பை தமிழுக்கு வழங்கும் என்று நினைக்கிறேன் !
    உங்கள் அருமையான சிந்தனை ,இன்னும் பலரையும் சென்றடைய என்னாலான சிறிய உதவி ...தமிழ்மண ஏழாவது வாக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்கும் வழிமொழிவுக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  15. நிச்சயம் உங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன்..முயற்சிப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகழ் பெற்ற பதிவரான தாங்கள் முதல் முறையாக என் தளத்துக்கு வந்திருப்பது கண்டு மகிழ்கிறேன்! என் உளமார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தங்கள் வரவேற்புக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  16. மனங்கவரும் கட்டுரை.
    வலைப்பதிவர் சந்திப்பில் கூகில் அட்சென்ஸ் பற்றிய தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமதிப்பிற்கும் ரசனைக்கும் உரிய அப்பாத்துரையார் அவர்களுக்கு நேச வணக்கம்! நான் பலமுறை தங்கள் 'மூன்றாம் சுழி'க்கு வந்து தங்கள் கதைகளைப் படித்துத் துய்த்துள்ளேன். நீங்கள் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பதையும் அறிவேன். அப்பேர்ப்பட்ட தாங்கள் என் தளத்துக்கு வருகை தந்திருப்பதும், என் கட்டுரையைப் பாராட்டியிருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன! மிக்க நன்றி! தாங்கள் தொடர்ந்து வர வேண்டும்! தங்கள் செம்மையான கருத்துக்களைத் தர வேண்டும்!

      நீக்கு
  17. ஐயா வணக்கம்.

    மிகத்தாமதமாக வருகிறேன் பொறுத்தாற்றுக.

    இருகாரணங்கள்.

    ஒன்று. ஒரு பயிற்சி முகாம்.

    இரண்டு. சட்டென மறுமொழியொன்றை இட்டுப்போக முடியாத தங்களின் பதிவுகள்.

    இப்பதிவினை முன்பே படித்து விட்டேன்.

    இணையத் தமிழை அதன் படைப்பாளர்களை உயர்த்தப் பயன்படும் சேவை ஒன்றிற்காகக் குரல் கொடுப்பது என்னும் தீர்மானத்தின் வாயிலாகப் பதிவர் திருவிழாவின் செயல்நோக்கங்களை இன்னும் உயர்வான மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லல் குறித்த தங்களின் கட்டுரை அருமை.

    போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! பெரிய வார்த்தைகள் வேண்டா! தாமதம் ஒரு விதயமே இல்லை. தாங்கள் வந்தாலே போதும் எப்பொழுது வேண்டுமானாலும்!

      //சட்டென மறுமொழியொன்றை இட்டுப்போக முடியாத தங்களின் பதிவுகள்// - மிக்க மகிழ்ச்சி ஐயா!

      தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  18. சகோதாங்கள்இக்கட்டுரையைஎழுதியதன் நோக்கமேவரவேற்கக்கூடிய ஒன்றாக
    உள்ளது, தங்களின் கோரிக்கை நிறைவேரவும் போட்டியில் வெற்றிபெறவும் விழாக்குழுவின்சார்பில் வாழ்த்துக்கள்முகநூல்பற்றிதெரியாதவர்கள் இல்லை எனலாம் ஆனால் வலைத்தளம்பற்றித்தெரிந்தவர்கள் குறைவாகத்தான் உள்ளனர்
    கோரிக்கையைவைக்க இதைவிடவேறு நல்லவாய்ப்பு கிட்டுமா? சகோ.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி சகோ! விழாக் குழுவின் சார்பில் வாழ்த்து தெரிவித்திருப்பதால் நீங்களும் அக்குழுவினரில் ஒருவர் என நினைக்கிறேன். எனில், நான் பதிவில் கேட்டுள்ளபடி கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்ற உங்களைப் போன்றோர் கண்டிப்பாக முயற்சி எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி!

      நீக்கு
  19. இணையத் தமிழின் முன்னேற்றத்துக்கு நீங்கள் சொல்லியிருக்கும் உருப்படியான யோசனைகள் மிகவும் வரவேற்கத்தக்கன. பாராட்டுக்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை வெளியிடத் தாமதமானதற்காக வருந்துகிறேன்! உங்கள் வரவேற்புக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  20. //...அவ்வளவையும் சேர்த்து இந்தியப் பயனர்களின் எண்ணிக்கையாக ஒரே மொத்தமாகக் காட்டி, "அதனால், வளர்ந்து வரும் இந்திய இணையப் பயனாளர்களோடு தொடர்பு கொள்ள விளம்பரதாரர்களுக்கு உதவும் வகையில் இந்திக்கு ஆட்சென்சு கொடுக்கிறோம்" என்று கூறியிருப்பது எப்பேர்ப்பட்ட அட்டூழியம்...
    அருமையான பின்னூட்டம். நீச்சல்காரன் கொடுத்த சுட்டி முன்னமே உங்களுக்குத் தெரிந்திருந்தால், பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியவை பதிவிலேயே வந்திருக்கும். இந்திக்கு முதலாக ஆட்சென்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பது பதிவர் விழாவில் கலந்து கொண்ட பிறகுதான் தெரியும். விழாவில் உரைத்ததுபோல் இந்தியில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியை சோதனை ஓட்டமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழுக்கு வரும்போது குறைகள் களையப்பட்டு கூடதல் வசதிகளுடன் மேம்பட்டு வருமென நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழரே! பதிவை மட்டுமன்றி, அது தொடர்பான கருத்துக்களையும் படித்து நீங்கள் வழங்கியுள்ள இக்கருத்து மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தவிர, " நீச்சல்காரன் கொடுத்த சுட்டி முன்னமே உங்களுக்குத் தெரிந்திருந்தால், பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லியவை பதிவிலேயே வந்திருக்கும்" என்ற உங்கள் கருத்து என் நெஞ்சைத் தொடுகிறது. மிக்க நன்றி!

      நீங்கள் கூறியது போல விக்கிப்பீடியா இரவிசங்கர் அவர்களின் கருத்தையே தற்சமயத்துக்கான ஆறுதலாக எடுத்துக் கொண்டு நானும் உங்களோடு காத்திருக்கிறேன்.

      உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  21. பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு
  22. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த நல்வரவு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்