.

செவ்வாய், டிசம்பர் 22, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்!



Why Don't Ban PETA India

மிழர்களின் மொழி, பண்பாடு, மரபுசார் அடையாளங்கள் போன்றவற்றை அழிப்பதென்றால் அவனவனுக்கு சர்க்கரைப் பொங்கலாய்த் தித்திக்கிறது! அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது பெடா இந்தியா (PETA India) எனும் அமைப்பு.

செவ்வாய், டிசம்பர் 15, 2015

இயற்கைப் பேரழிவும் வரலாற்றுப் பேரிழிவும்



Humanity blossomed by floods

ருப்பதிலேயே மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய இயற்கைச் சீற்றம் மழை! காரணம் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போலத் திடீரெனத் தாக்கக்கூடியது இல்லை அது. எப்பொழுது பெய்யும், எப்படிப் பெய்யும் என எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு வெகு பொறுமையாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தப்பலாம். ஆனால், அதைக் கூட ஒழுங்காகக் கையாளத் தெரியாத அரசால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர் கடந்த வார வெள்ளத்தின்பொழுது!

போனது போகட்டும், அல்லல்பட்டு நிற்கும் மக்களைக் காப்பாற்றவாவது செய்தார்களா

வெள்ளி, நவம்பர் 27, 2015

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன்!



Tamil Marty's Day - 2015

‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலை ஈழத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!

புதன், நவம்பர் 11, 2015

அந்த ஒரு துளி!



Boy in wheelchair watching something sad
மழையில் கொட்டமிடும்
நண்பர்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
சக்கர நாற்காலிச் சிறுவனின்
பாதத்தை முத்தமிடுகிறது
எங்கிருந்தோ தெறித்து விழும்
ஒற்றை மழைத்துளி! 

(நான் 0..௨0௫ (9/11/2015) அன்றைய கீற்று இதழில் எழுதியது).

❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ரிவர்வியூ சர்ச்

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!


புதன், அக்டோபர் 21, 2015

காந்தியவாதி டேவிட் ஐயாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி என்ன?



David Aiya - Gandhiyan Activist


ழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது.

காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் பதிலாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் டேவிட் ஐயா கடந்த 11.10.2015, ஞாயிறு அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார்.

ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என அன்பொழுக அழைக்கப்படும் சாலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள் எழுபதுகளில், அன்றைய ஈழத் தமிழ் மண்ணிலே காந்திய வழியில் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். “தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தகுதியானவர்களாக மாறுவதுதான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வின் முதல் படி” என்று நம்பியவர் விடுதலை, தனி ஈழம் போன்ற சர்ச்சைக்குரிய எந்த நோக்கமும் இன்றி வெறுமே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் நண்பர்கள் மருத்துவர் ராஜசுந்தரம், அவர்தம் மனைவியார் முதலான சிலருடன் சேர்ந்து வேளாண் கல்விப் பண்ணை அமைத்தார்; நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கினார்; கல்விக் குடில்கள் திறந்தார்; காந்தியையும் காந்தியத்தையும் முதன்மையாகக் கொண்டு பாடத்திட்டம் வகுத்தார்; பெண்களுக்கும் சிறாருக்கும் அந்த காந்தியக் கல்வியைப் புகட்டினார்; இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்பும் படிப்பும் அளித்தார்; குழந்தைகளுக்குப் பாலும், பால் மாவும் இலவசமாக வழங்கினார்; ஒவ்வோர் ஊரிலும் ஒரு பெண்மணியைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்பித்து அவர்கள் மூலம் அந்தந்த ஊர்களில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் எல்லா ஊர்களிலும் கல்வித்தரத்தை உயர்த்தத் தொலைநோக்குத் திட்டம் தீட்டினார்.

ஆனால், இப்படி முழுவதும் மக்கள் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிய

திங்கள், அக்டோபர் 12, 2015

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



US - Srilanka - UN
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக் குறித்துப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளோடு இணைந்து இலங்கையே விசாரித்தால் போதும்! - ஐ.நா-வில் தீர்மானம்


உலகின் பிற நாடுகளில்

சொந்த நாட்டு மக்கள் மீது

அந்த நாடே இராணுவம் ஏவினால்

அதற்குப் பெயர் ‘இனப்படுகொலை’!

ஆனால்,

அதுவே எங்களுக்கு நடந்தால்

திங்கள், அக்டோபர் 05, 2015

புறப்படுவோம் புதுக்கோட்டை நோக்கி! வாரீர்! வாரீர்!!


Welcome

வானறிந்ததனைத்தும் தானறிந்த தமிழின் தங்கப் பிள்ளைகளே! அனைவருக்கும் நேச வணக்கம்!

ஓலையிலும் பாறையிலும் வடித்தும், யாழிலும் பறையிலும் இசைத்தும், மேடையிலும் திரையிலும் நடித்தும் தீராத நம் தமிழமுதை இந்த முத்தமிழையும் தாண்டி, இற்றை நாளுக்கேற்பக் கணினியிலும் கைக்கருவிகளிலும் வளர்க்கும் நான்காம் தமிழ்க் காலக்கட்டம் இது. அந்தப் புதிய தாய்த்தமிழைப் புதியதாய் நாளும் மெருகூட்டும் வலைப்பதிவுலகம் இதோ நான்காம் முறையாக ‘வலைப்பதிவர் திருவிழா’க் காண்கிறது!

இந்த முறை தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் வலைப்பதிவர்களோடு கைகோத்திருப்பதை வலையுலகிற்குத் தமிழ்நாடு அரசு அளித்த ஏற்பிசைவாகவே (recognition) கருதலாம்.

அதுவும் இந்த முறை ஐம்பெரும் வகைகளில் (genres) படைப்பிலக்கியப் போட்டிகள், அவற்றுள் பரிசு பெறக்கூடியவற்றை ஊகிக்கும் வாசகர் போட்டிகள் என சங்கர் படப் பாணியில் பரிசு மழை கொட்டும் பிரம்மாண்டப் பெருவிழாவாய் அரங்கேற இருக்கிறது பதிவர் திருவிழா!

இது போக, சிறந்த பதிவர்களுக்கான விருதுகள், புதிய பதிவர்களுக்கான அறிமுகங்கள், பா - ஓவியக் கண்காட்சிகள், நூல் வெளியீடுகள் என நிகழ்வுகளும் நிறைய!

தவிர, விழாவில் இந்த முறை கலந்து கொள்ளப் போகிறவர்கள் வலைப்பதிவர்கள் மட்டுமில்லை, தமிழ் இணையக் கல்விக்கழக உதவி இயக்குநர் முனைவர்.மா.தமிழ்ப்பரிதி அவர்கள், புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் முனைவர்.நா.அருள் முருகன் அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள், தமிழின் பெருமைக்குரிய இணைய அறிவுக் களஞ்சியமாம் தமிழ் விக்கிப்பீடியாவின் இந்திய விக்கி மீடியாத் திட்ட இயக்குநரும் முன்னோடி வலைப்பதிவரும் நம் நண்பருமான திருமிகு.அ.இரவிசங்கர் அவர்கள், சமகால எழுத்தாளர்களுள் தலைசிறந்த ஒருவராய்த் திகழும், எஸ்.ரா என நாமனைவரும் அன்பொழுக அழைக்கும் முனைவர்.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என முதன்மையான தமிழ்ப் பெருமக்களும் இன்னும் வெளியுலகத் தமிழ் சான்றோர்களுக்கே சவால் விடக்கூடிய வலையுலகப் பேரறிஞர்களும் எனத் தகைசால் தமிழர்கள் ஏராளமானோர் திரண்டு கலந்து கொள்ளும் இவ்வின்விழாவில் நீங்களும் கலந்து கொள்ளுமாறு அன்பர்கள், நண்பர்கள், சக பதிவர்கள், அகச் சிவப்புத் தமிழ் நேயர்கள் என அனைவரையும் அழைப்பிதழ் வைத்து இரு கரம் கூப்பி அகமும் முகமும் மலர அழைக்கின்றேன்!


Bloggers Meet - 2015 Invitation (front)
Bloggers Meet - 2015 Invitation (back)

நாள்: ௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015); ஞாயிற்றுக்கிழமை.

இடம்: ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
       பீ வெல் மருத்துவமனை எதிரில், 

ஆலங்குடி சாலை, 

புதுக்கோட்டை.

 

புதுக்கோட்டை வாருங்கள்!

புது மலர்ச்சி காணுங்கள்! 


என்றும் நட்புடன் உங்கள்:    
Sign

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி இலால்பேட்டை சிராச், வலைப்பதிவர் விழாக் குழுவினர்.

குறிப்பு: வலைப்பதிவர் அல்லாதோரும் பரிசு பெறும் வகையில் வலைப்பதிவர் விழாக் குழுவினர் நடத்தும் புதுமையான பொதுப் போட்டி! முதல் பரிசு உரூபாய் பத்து ஆயிரம்!! தட்டிச் செல்ல அழுத்துங்கள் இங்கே!
 

சனி, செப்டம்பர் 19, 2015

இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!



Tamils take over the internet!

கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1)
 
ணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம்.

ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்.

கணித்தமிழ் முன்னோடிகளான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, மா.ஆண்டோ பீட்டர் போன்றோர் முதல் இன்றைய வலைப்பதிவர்கள் வரை அனைவருமே தன்னார்வமாக, எந்த விதப் பொருளாதார நோக்கமும் இன்றியே இவை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்படி மக்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு துறை எத்தனை காலத்துக்கு நீடிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆங்கிலம், பிரெஞ்சு என மற்ற மொழிகள் கணினித்துறையிலும், இணையத்துறையிலும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு, இப்படியெல்லாம் நம் மொழியும் மிளிர வேண்டும் எனும் அவாவினால் இன்று நாம் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடலாம். ஆனால், அப்படி மற்ற மொழிகளுக்கு இணையாக எல்லா வகைகளிலும் தமிழும் கணித்துறையில் வளர்ந்த பிறகு, தொடர்ந்து கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கெனப் பொருளாதார அடிப்படை ஒன்று இருத்தல் இன்றியமையாதது.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் என எழுத்துத்துறை சார்ந்த பயனர்களுக்கு மட்டுமேயானதாகக் கணித்தமிழ்ப் பயன்பாடு சுருங்கி விடாமல், தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகப் பெருவளர்ச்சி பெற வேண்டுமானால் இதழ்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றைப் போல் இணையமும் முழுமையான ஓர் ஊடகமாக உருவெடுத்தாக வேண்டும்! சுருக்கமாகச் சொன்னால், கணித்தமிழின் எதிர்காலம் இணையத்தமிழின் வளர்ச்சியைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இத்தனை ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கணித்தமிழ் தொடர்ந்து வருங்காலத் தலைமுறைகளாலும் பயன்படுத்தப்பட வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இணையத்தை நாம் முழுமையான ஊடகமாகக் கட்டியெழுப்ப வேண்டும்! இயல், இசை, நாடகம் என மற்ற தமிழ்த் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவாவது அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பது போல் நான்காம் தமிழ் எனப் போற்றப்படும் கணித்தமிழ்த்துறையிலும் வருவாய் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்! எதையுமே பொருளியல் (materialistic) கண்ணோட்டத்துடனே அணுகப் பழகி விட்ட இன்றைய உலகில் இதன் முதன்மைத்தனம் (importance) எத்தகையது என்பது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை.

இணையத்தமிழ் முழுமையான ஊடகமாக வளர்ச்சியுற வேண்டுமானால், முதலில் அதற்கான வணிகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊடக வணிகத்தின் வருமான வாயிலே விளம்பரங்கள்தாம். ஆனால், இணையத்தில் தமிழுக்கான விளம்பர வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்ற உடனடித் தீர்வு, நிலையான தீர்வு என இரண்டு தீர்வுகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் மேலான பார்வைக்கு இங்கே முன்வைக்கிறேன்!

உடனடித் தீர்வு!

பெரிதாக ஒன்றுமில்லை; கூகுள் ஆட்சென்சு பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு அந்நிறுவனத்திடம் விண்ணப்பிப்பதுதான் இதற்கான உடனடித் தீர்வாக நான் முன்மொழிய விரும்புவது.

இப்படிச் சொன்னதும் சிலர் முகம் சுளிக்கலாம். ‘மற்ற மொழிகளையெல்லாம் கூகுள் தானாக முன்வந்து ஆட்சென்சு பட்டியலில் சேர்த்திருக்கும்பொழுது, தமிழர்களாகிய நாம் மட்டும் அதைக் கேட்டுப் பெறுவது நன்றாக இருக்குமா?’ என்று அவர்கள் நினைக்கலாம். அதுவும் தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் இப்பொழுது கூகுளின் தலைமைச் செயலாளராக (CEO) வீற்றிருக்கும் நேரத்தில் இப்படி நாம் இதை விண்ணப்பித்துப் பெற்றால், தமிழர் ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழர்கள் வருமானம் பார்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று மற்ற மொழியினர் நினைப்பார்கள் என்றும் சிலர் கருதலாம்.

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இல்லாவிட்டால், நாம் இப்படிக் கேட்டுப் பெறுவது இழிவானது. ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தும், மாநில மொழியாக இருக்கிற ஒரே காரணத்தால் நம் மொழிக்குரிய இடம் மறுக்கப்படுமானால் அதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தவறு?

அண்மையில், இந்தி கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே! இந்தி என்ன, தமிழை விட இணையத்தில் முந்தி நிற்கிறதா?

உலகத்திலேயே ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான இணையத்தளங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ்!2 இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக இணையத்தில் அடியெடுத்து வைத்த மொழியும் தமிழே!3 அப்படிப்பட்ட தமிழை விட்டுவிட்டு கூகுள் இந்திக்கு ஆட்சென்சு பட்டியலில் இடம் கொடுக்க ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்கிற தவறான பரப்புரையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், தகுதியுள்ள தமிழைப் புறக்கணித்து, ஏதோ சில தவறான காரணங்களின் அடிப்படையில் இந்திக்கு கூகுள் முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், நமக்குரிய இடத்தை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை தோழர்களே!

வடநாட்டு அரசியலாளர்கள் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணாக, மாநில மொழி4 ஒன்றை இந்நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்துவதுதான் கூகுள் மட்டுமன்றி எல்லா இணையச் சேவை நிறுவனங்களிலும் அண்மைக்காலமாக இந்தி முதன்மை பெற்று வரக் காரணம். அப்படி முறைகேடான வழியில் அவர்கள் தம் மொழியை வளர்த்துச் செல்லும் நிலையில், தகுதியிருந்தும் நாம் வாளாவிருந்தால் இளித்தவாயர்களாகத்தான் வரலாற்றில் இடம் பெறுவோம்.

எனவே, உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!

தமிழ் வலைப்பதிவர்களில் மிகப் பெரும்பாலோர் கூகுளுடைய ‘பிளாகர்’ சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள்5. கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் தமிழர்களிடையில் சங்கம், மாநாடு போன்றவை இல்லாத நிலையில், கூகுளின் தமிழ்ப் பயனர்களில் பெரும்பாலானோர் ஒன்று கூடும் நிகழ்வாகத் திகழ்வது வலைப்பதிவர் திருவிழாக்கள்தாம். ஆக, புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாதான் இதற்கான பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை!

நிலையான தீர்வு!

கூகுள் ஆட்சென்சு போலவே தமிழுக்கென விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாக இருக்கும்.

இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவுடைய தமிழ்நாட்டிடம், எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட உலகளாவிய தமிழினத்திடம் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள் எண்ணற்ற அளவில் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இணையத்தில் விளம்பரப்படுத்த நமக்கென இணைய விளம்பரச் சேவை நிறுவனம் ஒன்று கட்டாயம் தேவை! ஆனால், இந்திய இணைய விளம்பர நிறுவனங்கள் எல்லாமே மகாராட்டிர, ஆந்திர, கருநாடக மாநிலத்தவருடையவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழில்தான் மிகுதியான இணையத்தளங்கள் இருக்கின்றன எனில், தமிழ் இணையத்தளங்களுக்கென விளம்பர நிறுவனம் தொடங்குவது எவ்வளவு பெரிய வருவாய் வாய்ப்பு என்பதைத் தமிழ் இளைஞர்களும், தமிழ்நாட்டு நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

கணித்தமிழ் முயற்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் பேராதரவு அளித்து வரும் தமிழ்நாடு அரசு இந்த வகைத் தொழில் முனைவுகளையும் முன்னெடுக்க ஊக்குவித்தல் வேண்டும்! இப்படியொரு கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் இணைந்து நடாத்தும் ஒரு போட்டியில் தெரிவிப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன்!

ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் முழுமையான இணைய ஊடகத்தை உருவாக்குவோம்!
கணித்தமிழ் முயற்சிகளை நிலையாக்குவோம்!
தமிழை என்றும் அழியா மொழியாக்குவோம்!


சான்றுகள்:

2. அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் திசம்பர் 2004-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த 'நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி' எனும் கட்டுரை.

3. தமிழின் சிறப்புகள் – தினத்தந்தி.

4. இந்தியாவின் அலுவல் மொழிகள் – தமிழ் விக்கிப்பீடியா.

5. தமிழ்ப்புள்ளி வலைப்பூக்கள் திரட்டி – நீச்சல்காரன். 

படம்: நன்றி கம்ப்யூட்டர் பிரம் வில்லேஜ்.

க்கட்டுரை என் சொந்தப் படைப்பே எனவும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்டது” எனவும் உறுதிமொழி அளிக்கிறேன். மேலும், இது “இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதிமொழிகிறேன்.

❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

திங்கள், செப்டம்பர் 14, 2015

இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்


Godfathers of Reservation in India

குஜராத்தில் படேல் இனத்தினர் நடத்திய கலவரம் மீண்டும் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ள இவ்வேளையில்… என நான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினால் அது பொய்யாகி விடும்!

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் எப்பொழுதுமே இங்கு நடந்தபடிதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்களாகத் தங்களைக் கருதுபவர்களும் சரி, அந்தத் திட்டத்தினால் பலனடைபவர்களும் சரி, இட ஒதுக்கீட்டை இழிவான ஓர் ஏற்பாடாகத்தான் பார்க்கிறார்கள்.

இன்றுதான் என்றில்லை, இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது முதலே அது இப்படிக் கொஞ்சம் கீழ்ப் பார்வையில்தான் அணுகப்படுகிறது என்பதை நம் தாத்தா-பாட்டிகள், அப்பா-அம்மாக்கள் போன்ற முந்தைய தலைமுறையினர் இது பற்றிப் பேசும்பொழுது அறியலாம்.

ஊடகம் என்பது அரசு – தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே இருந்த காலத்தில் பொதுமக்களிடம் இப்படி ஒரு கருத்து நிலவியது பெரிய பாதிப்பை சமூக அளவில் ஏற்படுத்தவில்லை (அல்லது அப்படி ஏற்பட்டது வெளியில் தெரியவில்லை). ஆனால், சமூக வலைத்தளங்கள் கோலோச்சும் இக்காலக்கட்டத்தில் ஊடகம் என்பது ஒவ்வொரு தனி ஆளுடைய கையிலும் இருக்கிறது. தனி ஒரு மனிதர் நினைத்தால் கூடத் தன் கருத்தை உலகமெங்கும் ஒரே நேரத்தில் பார்வைக்கு முடிகிற இற்றை நாளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையே தீர்மானிக்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்ற விதயங்கள் பற்றிப் பொதுமக்களிடம் தவறான புரிதல் இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதன் கண்கூடான எடுத்துக்காட்டுதான் படேல் இனத்தினரின் கலவரம்.

சூலை மாதம் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துடையவர்களை ஒரே மாதத்தில் திரட்டி, நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய அளவுக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை அடுத்த ஆகஸ்டிலேயே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக வலைத்தளங்கள்.

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக எத்தனையோ போராளிகளும் அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் பற்றி மொத்த சமூகமும் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதை இனியும் வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; இது பற்றி இன்றைய படித்த இளைஞர்கள் எழுப்பும் கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்குப் பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை இனியாவது சமூக ஆர்வலர்களும், தலைவர்களும், அறிஞர் பெருமக்களும், அரசும் உணர வேண்டிய தறுவாய் இது!

சமூகத்தின் மீது அக்கறை உள்ளவன் எனும் முறையில், இட ஒதுக்கீடு பற்றிக் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விளக்கங்களை இங்கு முன்வைக்கிறேன்.

திங்கள், ஆகஸ்ட் 10, 2015

ஏன் இயலாது மதுவிலக்கு? – தடைகளைத் தகர்க்கும் வகைகளும், அமல்படுத்தும் முறைகளும்




Students Struggle

மூகநலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்த காந்தியவியலாளர் ஒருவரின் உயிர்த்தீ இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது!

நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்! தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார் அவர்கள்; இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி அவர்கள்; அவ்வளவு ஏன், இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கூட சங்கரலிங்கனார் அவர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரிசையில் மதுவிலக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தித் தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவியலாளர் சசிபெருமாள் அவர்கள்!

இன்றில்லை, நேற்றில்லை, ௪௬ (46) ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ
Gandhist Sasiperumal
அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள் ஐயா. இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் ஈந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. குறைந்தது, அவரது இந்த ஈகைச் (தியாகம்) சாவு குறித்து நம் முதல்வர் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடும்பத்தினரையும் அரசு கைது செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டது அட்டூழியத்தின் உச்சம்!

ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் ஈகை, மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம்.

ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக நினைத்த மாத்திரத்தில்

ஞாயிறு, ஜூலை 12, 2015

தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைப்பது இப்பொழுது நம் கையில்! - தமிழர்களே! கைவிட்டு விடாதீர்கள்!




நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!

உங்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை; இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து நம் யாருக்கும் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த உலகத்தின் அத்தனை கோடி கண்களுக்கும் முன்னதாகத்தான் அந்தச் சகிக்க முடியாத கொடுமை அரங்கேறியது. ஆனால், அதை இனப்படுகொலையாக இல்லாவிட்டாலும், குறைந்தது போர்க் குற்றமாக ஏற்கக் கூட இன்று வரை எந்த நாடும் முன்வரவில்லை. சரி, என்னதான் நடந்தது என விசாரிக்கவாவது செய்யுங்கள் என்றால் அதற்கும் இது வரை எந்த ஒரு முயற்சியும் முன்னெடுக்கப்படாமலே இதோ ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டன.

நடந்தது இனப்படுகொலையோ, போர்க் குற்றமோ, போரோ, எவ்வளவுதான் குறைத்துச் சொல்வதாக இருந்தாலும் அங்கே ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்கொரு நீதி விசாரணை வேண்டும்! சிங்கம், புலி, குரங்கு, கோட்டான், மயில், மந்தி என அஃறிணை உயிரினங்கள் கொல்லப்பட்டால் கூட அது குறித்து முறையாக விசாரித்துக் குற்றவாளியைத் தண்டிக்கும் இந்த நாகரிக சமூகத்தில் ஒன்றரை இலட்சம் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது பற்றி விசாரிக்காமல் இருப்பதை விட அட்டூழியம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, நடந்த கொடுமைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாகவே தமிழர்களாகிய நாம் பல வகைகளிலும் போராடி வருகிறோம்.

இந்நிலையில்தான், இது பற்றிப் ‘பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை’ கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகளாவிய கையொப்ப இயக்கம் (signature campaign) ஒன்றைத் தொடங்கியுள்ளது. குறைந்தது பத்து இலட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கும் இந்த முயற்சி தொடங்கி வாரக்கணக்கில் ஆகியும் இது வரை ஏழு இலட்சம் கையொப்பங்கள் மட்டும்தான் பதிவாகியுள்ளன!

செந்தமிழ்ச் சொந்தங்களே! சிந்தித்துப் பாருங்கள்! உலகெங்கும் பத்துக் கோடிப் பேரைக் கொண்ட இனம் என மார் தட்டும் நாம், இணையத்தில் இரண்டு கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், வெறும் பத்து இலட்சம் கையொப்பங்களைத் திரட்ட முடியாவிட்டால் - அதுவும் இனத்தின் வரலாறு காணாத பேரழிப்புக்கு நீதி கோரும் இந்த இன்றியமையாத கோரிக்கைக்காகவே திரட்ட முடியாவிட்டால் - அதை விட மானக்கேடு நமக்கு வேறு என்ன இருக்க முடியும்? இதற்காகக் கூட ஒன்று சேராவிட்டால் நாம் வேறு எதற்காக ஒன்றுபடப் போகிறோம்?

நண்பர்களே! இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில் (வரும் சூலை 15 கையொப்பமிடக் கடைசி நாள்) இந்தக் குறுகிய காலக்கட்டத்துக்குள் நமக்குத் தேவைப்படுவதோ மேலும் மூன்று இலட்சம் கையொப்பங்கள்! ஆனால், காலம் இன்னும் கடந்து விடவில்லை. நாம் நினைத்தால் இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தள வசதிக்கு இந்தச் செய்தியை இரண்டே நாளில் உலகம் முழுக்கப் பரப்ப முடியும்! 

தோழர்களே! கை கொடுங்கள்! நீங்கள் செய்ய வேண்டியவையெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று – கீழ்க்காணும் சுட்டியைச் (link) சொடுக்கி நீங்களும் உங்கள் கையொப்பத்தை உடனடியாகப் பதிவு செய்ய முன் வாருங்கள்!

சொடுக்குக: http://www.tgte-icc.org/

இரண்டாவது, இந்தச் செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி அவர்களையும் கையொப்பமிடச் செய்யுங்கள்!

தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும், இந்த முயற்சி இன்னும் பெரிதாக வெற்றியடையாததைப் பார்த்தால், இது பற்றி நம் மக்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்குமோ எனத் தோன்றுகிறது. எனவே, இது பற்றிச் சில விளக்கங்களை இங்கே அளிக்க விரும்புகிறேன்!

இப்படிப்பட்ட முயற்சிகள் பலனளிக்குமா?

ஏற்கெனவே இது போன்ற சில கையொப்ப இயக்கங்கள் நடத்தப்பட்டதும், பின்னர் அவை என்ன ஆயின என்றே தெரியாமல் போனதும் உண்மைதான். ஆனால், இந்த முறை, இந்தக் கையொப்ப இயக்கத்தை நடத்துவது நாடு கடந்த தமிழீழ அரசு! ஈழத் தமிழர்களுக்காக வெளிநாடு வாழ் தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு அமைச்சரவை, பிரதமர் முதலியோருடன் ஓர் அரசு போலவே கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஓர் இயக்கம். இதற்கான உறுப்பினர்கள் கூடப் பன்னாட்டு அளவில் தேர்தல்கள் நடத்தி முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களே ஈழத் தமிழர்கள்தாம் என்பதால் ஐ.நா-விடம் நேரிடையாகக் கோரிக்கை விடுப்பது முதலான முயற்சிகளை முன்னெடுக்க இவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அமைப்பினரே நேரடியாக இந்தக் கையொப்பங்களை ஐ.நா-வில் தாக்கல் செய்ய இருக்கின்றனர். எனவே, “அட, எப்போ பார்த்தாலும் இவங்களுக்கு இதே வேலையாப் போச்சுப்பா” எனச் சலித்துக் கொள்ளாமல், இந்த முறை இந்தக் கையொப்ப இயக்கத்தில் நீங்கள் தாராளமாக நம்பிக்கையுடன் கையொப்பமிடலாம் தோழர்களே!

இதில் கையொப்பமிடுவதால் ஏதேனும் சட்டச் சிக்கலோ ஆபத்தோ வருமா?

இப்படி ஓர் ஐயமும் நம் மக்களுக்கு இருக்கலாம். ஈழப் பிரச்சினை மிகவும் நுட்பமான சட்டச் சிக்கல்கள் நிறைந்தது என்பதால், ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் கோரிக்கைகள் மீதும் எவ்வளவுதான் பரிவும் ஆதரவும் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் பொதுவெளியில் அவற்றைக் காட்டிக் கொள்ளப் பெரும்பாலோர் தயங்குகின்றனர். ஆனால், இந்தக் கையொப்ப இயக்கத்தைப் பொறுத்த வரை, இது வெளிப்படையாக, உலகளாவிய அளவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஆத்திரேலியா, கனடா, மலேசியா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்தும் இது வரை இலட்சக்கணக்கானோர் கையொப்பமிட்டு விட்டார்கள். ஆனால், எந்த நாட்டு அரசிடமிருந்தும் இது வரை இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இதை நடத்தும் இயக்கம் எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட இயக்கமும் கிடையாது. எனவே, இதில் கையொப்பமிடுவதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை!

கையொப்பம் இடுவது எப்படி?

மிகவும் எளிது!

1. முதலில், மேற்கண்ட சுட்டியைச் (http://www.tgte-icc.org) சொடுக்குங்கள். இணையத்தளப் பக்கம் ஒன்று வரும்.

2. அந்தப் பக்கத்தில் ஒரு படிவம் இருக்கும். அதில் முதல் கட்டத்தில் உங்கள் பெயரை நிரப்புங்கள்.

3. அடுத்த கட்டத்தில், உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்தால் கொடுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்.

4. அடுத்த கட்டத்தை அழுத்தினால் ஒரு பட்டியல் திறக்கும். அதில் உங்கள் நாட்டைத் தேர்வு செய்யுங்கள்.

5. அதற்கு அடுத்து ஓர் எண் இருக்கும். அதை அடுத்து உள்ள கட்டத்தில் அந்த எண்ணை நிரப்புங்கள்.

6. இப்பொழுது Submit பொத்தானை அழுத்துங்கள்.

அவ்வளவுதான், தமிழ் இனத்துக்கான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய பத்து இலட்சம் பேரில் நீங்களும் ஒருவராக ஆகி விட்டீர்கள்!

கையொப்ப இயக்கம் பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு அமைச்சரின் நேர்காணல்

தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட நம் அண்ணன் – தம்பிகள் சிந்திய குருதிக்கு...

தமிழச்சியாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக நட்ட நடுத்தெருவில் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நம் அக்கா – தங்கைகள் வடித்த கண்ணீருக்கு...

தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிறக்க இருந்த ஒரே காரணத்துக்காக வயிற்றிலேயே அழிக்கப்பட்ட நம் கருக் குழந்தைகளின் உலகறியாக் கதறலுக்கு...

நீதி வேண்டும்!...

நியாயம் வேண்டும்!...

நீங்கள் மனம் வைத்தால் அது கிடைக்கும்!

மனம் வைப்பீர்களா?... 

(நான் அகரமுதல தனித்தமிழ் இதழில் எழுதியது சில மாற்றங்களுடன்.)

❀ ❀ ❀ ❀ ❀ 

படம், விழியம்: நன்றி நாடு கடந்த தமிழீழ அரசு

அருள் கூர்ந்து இந்தப் பதிவைப் பரப்பி இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி வெற்றியடைய உதவுங்கள்! 

திங்கள், ஜூன் 15, 2015

கொள்கையா தமிழர் நலனா, எது முக்கியம்? - சீமானிடம் சில கேள்விகள்!


Senthamilar Seemaan

பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தலைவர் செந்தமிழர்.சீமான் அவர்களுக்கு நேச வணக்கம்!

ஈழ இனப்படுகொலை காலத்திலிருந்து உங்கள் தமிழ்ப் பற்றுத் தெறிக்கும் உரைகளை மிகுந்த ஆர்வத்துடனும் வியப்புடனும் கேட்டு வருபவன் நான். அரசியலில் புதுக் குருதியாக ஊற்றெடுத்திருக்கும் உங்களை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். தமிழர் பிரச்சினைகளில் உங்கள் நிலைப்பாடுகள் பலவும் எனக்கு மிகவும் பிடிக்கும்; ‘திராவிட எதிர்ப்பு’ உட்பட.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் உங்கள் நேர்காணல் பார்த்தேன்.

புதன், ஜூன் 03, 2015

மச்சி! நீ கேளேன்! - 6 | த(க)ற்காலப் பயணம்!


Stone Age

ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் கடந்த இதழில் (13.4.15) பார்த்தோம். அந்த உணர்வு இல்லாவிட்டால்?... அது பற்றி இந்தப் பகுதியில் கொஞ்சம் பார்ப்போமா மச்சி?

ஞாயிறு, மே 17, 2015

தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!





நேற்று பார்த்தது போல் இருக்கிறது அந்தக் குருதி கொப்பளிக்கும் காட்சிகளை!

இன்றும் ஓயவில்லை அந்த மரண ஓலமும் அழுகையும்!

இன்னும் காயவில்லை ஒன்றரை லட்சம் பேரைப் பறிகொடுத்த உள்ளக் காயம்!

ஆனால் அதற்குள், இதோ, தமிழினம் அழிக்கப்பட்டு நாளையோடு முழுதாக ஆறு ஆண்டுகள் முடியப் போகின்றன! 

கடந்த (ஐந்தாமாண்டு) நினைவஞ்சலி நாளில் தமிழினப் படுகொலையைப் பின்னின்று நடத்திய காங்கிரசை வீழ்த்திய ஆறுதலுடன் நாம் மெழுகுத்திரி ஏற்றினோம். இந்த ஆண்டோ அதை முன்னின்று நிகழ்த்திய இராசபக்சவையே வீழ்த்திவிட்டு அதைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆக, ஈழப் பிரச்சினையில் ஒவ்வோர் ஆண்டும் ஓரளவாவது முன்னேற்றம் காண்கிறோம் என்பது ஆறுதலானது. ஆனால், இந்தப் பிரச்சினை குறித்த நம் நிலைப்பாடுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை என்பதே உண்மை!

முதலில், இப்பேர்ப்பட்ட பேரழிப்புக்குப் பின் நாம் அடைந்திருக்க வேண்டிய முதன்மையான முன்னேற்றம் ஒற்றுமை!

ஒன்றில்லை, இரண்டில்லை பத்து நாடுகள் சேர்ந்து நம் இனத்தை அழித்திருக்கின்றன. பதினைந்து நாடுகள் அதற்கு ஆதரவாக நின்றிருக்கின்றன. அதாவது, நாம் வாழும் உலகின் ஒரு கணிசமான பகுதியே நம் அழிவை விரும்புகிறது! இப்பேர்ப்பட்ட நிலைமையில் நாம் எந்த அளவுக்கு ஒற்றுமைப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு உறுதியாக ஒருங்கிணைந்து, கைகோத்து நிற்க வேண்டும்? ஆனால், இப்பொழுது வரை, இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிப்பதில் கூட நம்மிடையே ஒற்றுமை இல்லை! சிலர் மே 17, சிலர் மே 18, சிலர் மே 19 என ஆளுக்கொரு நாளில் அஞ்சலி செலுத்துகிறோம். கண்ணெதிரே இனத்தையே பலி கொடுத்த பின்னும் தமிழர் நம் ஒற்றுமை இவ்வளவுதான்!

முன்பை விட இப்பொழுதுதான் இன்னும் சாதியப் பிரிவினைகள் வலுப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் கூடக் கையில் அவரவர் சாதிக் கட்சியை நினைவூட்டும் நிறத்திலான கயிறுகளை அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள் எனத் தெரிய வரும்பொழுது நெஞ்சம் விட்டுப் போகிறது. (நன்றி: ஆனந்த விகடன் இதழ் 26.03.2015).

மக்கள்தான் இப்படி என்றால், இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தலைவர்களோ இதற்கும் ஒரு படி மேலே போய் திராவிடமா, தமிழ் தேசியமா எனக் கருத்தியல் அடிப்படையில் தங்களுக்குள்ளேயே பிரிந்து நிற்கிறார்கள்.

உலகமே தங்களுக்கு எதிராக நிற்கும் நிலையிலும் அந்தப் பாதுகாப்பற்ற நிலைமை பற்றித் துளியும் கவலையில்லாமல் நாம் இன்னும் நமக்குள்ளேயே இப்படி இடையறாமல் அடித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நம்மை விட அடிமுட்டாள்கள் உலகில் வேறு யாராவது இருப்பார்களா?

செய்ய வேண்டியது என்ன? கடமை – ௧ (1)

திங்கள், ஏப்ரல் 27, 2015

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!



Thought of Periyar about Thaali

திராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது”. பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஒரு மரபை எதிர்த்தால் சமூகத்தில் பரபரப்பு ஏற்படத்தான் செய்யும்; அஃது இயல்பு. ஆனால், அந்தப் பரபரப்பையும் தாண்டி இந்து சமய அமைப்புகளிடமும் அந்தக் கட்சிகளிடமும் காணப்படுகிறதே ஒரு பதற்றம், அஃது ஏன்?

தமிழ்நாட்டில் தாலி, கற்பு போன்றவற்றைப் பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுவது வாடிக்கைதான். முன்பு, தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியபொழுது நடந்த ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் எந்தக் கட்சிச் சார்பும் இல்லாமல், பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். ஆனால், இந்தத் ‘தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி’க்கு எதிராக நடக்கும் எல்லாக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இந்து சமய அமைப்புகளால் மட்டுமே நேரடியாக நடத்தப்படுகின்றன என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று!

தாலி என்கிற கோட்பாட்டுக்கு (concept) மக்களிடையே இன்றும் பழைய ஆதரவு அப்படியே இருக்குமானால், முன்பு குஷ்புக்கு எதிராக நடந்தது போல் இப்பொழுதும் பொதுமக்களே திரண்டு வீரமணி அவர்களுக்கு எதிராகவும் திராவிடர் கழகத்துக்கு எதிராகவும் கலகத்தில் இறங்கியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. (நடந்திருந்தால் இன்றைய ஊடகப் பெருவெளிச்சத்திலிருந்து அது தப்பியிருக்காது). நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களும் பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற சமயச்சார்புக் கட்சிகளாலேயே நடத்தப்பட்டிருப்பதும், மக்கள் அமைதி காப்பதும், தாலி இன்று அவ்வளவு ஒன்றும் பெரிய புனிதச் சின்னமாக நம் மக்களால் கருதப்படவில்லை என்பதாகவே எண்ண வைக்கின்றன.

இப்படி, மக்களே அமைதியாக இருக்கும்பொழுது இந்து சமயக் கட்சிகள் மட்டும் இதற்காகக் குதியோ குதி எனக் குதிப்பது அவர்களின் உண்மை முகத்தை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்வதாகத்தான் இருக்கிறது.

Hinduistic Leaders
தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துபவர்களை வக்கிரம் பிடித்தவர்கள் என்றும், தி.க-வினர் அனைவருமே எந்தவிதமான ஒழுக்கமோ கட்டுப்பாடோ இல்லாதவர்கள் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாலியை அகற்றிக் கொண்ட பெண்கள் குடும்பப் பெண்களே இல்லை என்றும், இன்னும் இன்னும் பல்வேறு விதங்களிலும் ஒழுக்கமும் பண்பாடும் மணக்க மணக்கப் பல அருமையான கருத்துக்களைத் திருவாய்மலர்ந்து (!) அருளியிருக்கிறார்கள் இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, இராம.கோபாலன் முதலானோர். தவிர, பெரியார் படத்தைச் செருப்பால் அடிப்பது, அதன் மீது சிறுநீர் கழிப்பது போன்ற அருஞ்செயல்களின் மூலம் இவர்கள் நாகரிகத்தின் உச்சாசக்கட்டத்துக்கே சென்று விட்டார்கள். (பார்க்க: தயவு கூர்ந்து செருப்பால் அடியுங்கள் – தந்தை பெரியார்).

உடனே, “ஏன், பெரியார் மட்டும் ராமரைச் செருப்பால் அடிக்கவில்லையா? பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடவில்லையா? அது மட்டும் நாகரிகமா?” என நம் நண்பர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி! ஆனால், அப்படிக் கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! ராமர், பிள்ளையார் போன்ற கடவுள்

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்