.

திங்கள், ஜூலை 22, 2013

தமிழ்த்தாயின் தூவல் உடைந்துவிட்டது! – கவிஞர்.வாலிக்கு ஒரு கண்ணீர்க் கவிதாஞ்சலி



Kavingyar.Vaali

இயைபின் கொற்றவனே! 
தன்னிகர் அற்றவனே! 
உனைப்போல் எழுத இங்கு 
ஏது மற்றவனே! 
நீ இன்றித் தமிழன் இனி 
ஏதுமற்றவனே!

உனக்கு இரங்கல் பா எழுதவா 
வலைப்பூ தொடங்கினேன் 
என்று 
எனக்குள்ளாக அழுது - மன 
மூலையில் முடங்கினேன்! 
ஆனால் 
நடமாடிய தமிழே! 
உனக்கே இரங்கல் பா 
எழுதாததற்கு 
நான் கற்ற தமிழ் 
எனக்கெதற்கு?

சிலப்பதிகாரம், 
மணிமேகலை... 
என 
புதுக்கவிதையால் நீ 
புதுப்பிக்க வேண்டிய 
பழந்தமிழ்க் கருவூலங்கள் 
இன்னும் எவ்வளவோ 
இருக்க 
அதற்குள் என்ன அவசரம் 
இறக்க? 
எப்படி மனம் வந்தது 
தமிழுலகைத் 
துறக்க? 
இனி எங்கு போவோம் 
அப்படியொரு தமிழைச் 
சுவைக்க?!

கருணாநிதியுடன் ஒரு கையைக் 
குலுக்கிக் கொண்டே 
பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியதைக் 
கண்டித்து 
மறுகையால் 
பாட்டெழுதிய 
தமிழ்ப் பொற்செண்டே! 
நீயன்றோ 
உண்மைக் கவி! 
உனையிழந்து 
இனி என் செய்யும் 
தமிழ்ப் பெரும் புவி?!

விருப்ப மொழியாய்த் 
தமிழ் படிக்கும் 
காலத்தில் 
அதை 
விருப்பு மொழியாய் 
ஆக்கியது 
உன் தமிழ்! 
இனி எங்களுக்கு 
எங்கு கிடைக்கும் அந்தச் 
செந்தமிழ்?!

‘முக்காலா முக்காபுலா’ 
‘கலாசலா கலசலா’ 
என்றெல்லாம் 
இளைஞர்களுக்கு வைப்பாய் 
சொக்குப்பொடி மருந்து 
பின்னர் 
‘முன்பே வா! அன்பே வா’ 
‘நங்காய்! நிலாவின் தங்காய்!’ – என்று 
அவர்களுக்குப் படைப்பாய் 
இலக்கிய விருந்து!

இப்படித் 
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது 
வாலி பாணி! 
உனக்குப் பின்னே 
இந்தச் 
சேவை செய்ய 
யாரும் 
பிறக்கும் முன்னே 
போகலாமா 
வாலிபா நீ?

தீர்ந்து விட்டதா 
இதற்குள் 
உன் மை? 
சொல்லியிருந்தால் 
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்! 
இது உண்மை!

வந்திருக்கலாம் 
உன் உடலுக்கு 
முதுமை! 
ஆனால் 
உன் எழுத்திலே 
தீரவில்லையே இன்னும் அந்த 
இளமை! 
அதற்குள் நீ 
ஓய்வெடுத்துக் கொண்டதென்ன 
புதுமை!

பாடியிருக்கலாமே 
காலனை நோக்கி 
அறம்? 
காட்டியிருப்பானே 
அவன் உனக்குப் 
புறம்!

மறந்ததேன்? – எங்களைப் 
பிரிந்ததேன்?

நீ போனாலும் 
உன் படைப்புகள் இருப்பதாக 
ஆறுதல் கொள்வதா? 
அதைப்போல் வேறு 
மடத்தனம் உள்ளதா?

நீ எழுதியவையெல்லாம் அமுதம்தான் 
மறுக்கவில்லை; 
ஆனால் 
சுரபியே போய்விட்டதே 
அதுதானே 
பொறுக்கவில்லை!

பார்வதியை வேண்டினாய் 
கவிதையில் ஒருமுறை 
“திருஞான சம்பந்தன் 
அருந்தியது போக 
மிச்சத்தை எனக்குக் கொடு” 
என்று! 
நினைவை அது 
தீண்டுகிறது இன்று

சம்பந்தன் அருந்தியது 
உமையவள் 
கிண்ணத்தில் தந்த ஞானப்பால்; 
ஆனால் 
எங்கள் வாலிநீ பருகியதோ 
தமிழ்த்தாய் 
மடியமர்த்தி ஊட்டிய சொந்தப்பால்! 
அப்பேர்ப்பட்ட உனக்கும் 
இறப்பு என ஒன்றிருக்கும் – என 
நினைக்கவில்லை இதுவரைக்கும்!

ஆனால் 
அது நடந்தே விட்டது! 
உயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது! 
கடைசியில் 
தமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது!


*********

பெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி அவர்களின் பாடல்களைப் படித்து மகிழ: http://www.tamilpaa.net/tamil-lyricist-list/vaali 

படம்: நன்றி http://www.moviegallary.in/ 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமதிப்பிற்குரிய மூத்த வலைப்பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பணிவன்பான வணக்கங்கள்!

      உங்களைப் பற்றி அறிவேன். புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பவர், நல்ல வலைப்பூக்களைத் தொடர்ந்து கண்காணித்துத் தவறாமல் கருத்திட்டு ஊக்கமளிப்பவர் நீங்கள். புதிய பதிவர்களுக்கு முன்னோடியான நீங்கள் என்னைத் தொடர்வதாகச் சொல்லியிருப்பது எனக்கு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (38) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிதை (18) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (30) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (8) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (4) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்